Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜபக்சேகளுக்கு வருகிறது மிகப்பெரிய தலைவலி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சேகளுக்கு வருகிறது மிகப்பெரிய தலைவலி.

2005ம் ஆண்டு நடாந்த ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார் மகிந்த ராஜபக்சே.

ஆனால் இந்த வெற்றி நேர்மையான முறையில் பெறப்படவில்லை என்பது அன்றிலிருந்து உள்ள குற்றச்சாட்டு.

புலிகளுக்கு பெரும் பணம் கொடுத்து வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பை தடுத்ததே குறைந்தளவு வாக்குகளால் வெற்றி அடைந்தமைக்கு காரணம் என்பதே இந்த குற்றச் சாட்டின் அடிப்படை.

இதை உறுதி செய்ய மூன்று பகுதியினரால் மட்டுமே முடியும். ஒரு பகுதி ராஜபக்சே தரப்பு. இது ஒரு போதும் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை.

அடுத்தது புலிகள் தரப்பு. இதுவும் ஒரு போதும் இது குறித்து அலட்டிக் கொள்ளவில்லை, இப்போது களத்திலும் இல்லை.

ஆகவே, இங்கே இந்த விடயத்தில் தரகு வேலை செய்த மூன்றாவது தரப்பே இப்போது முக்கியம் பெறுகிறது.

எமில் காந்தன்

புலிகளின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினரான இவர் தான், புலித்தேவன் உடன் சேர்ந்து, ராஜபக்சேக்கலின் ஆளான டிரன் அலஸ் எனும் RADA எனும் அரசு அமைப்பின் தலைவருடன் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கின்றனர்.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் 18 கோடி ரூபாய்களை பசில் ராஜபக்ச உள்நாட்டு, வெளிநாட்டு பணமாக, எமில் காந்தனிடம் கையளித்து இருகின்றார்.

முதல் தவணைப் பணத்தினைப் பெற்றுக் கொண்டதும் புலித் தலைமை பகிஸ்கரிப்பினை அறிவிக்க, புதிதாக தெரிவான ஜனாதிபதி ராஜபக்ச, வடக்கு கிழக்கில் வீடு கட்டும் நிதியாமாக, RADA ஊடாக, எமில் உருவாக்கிய சில போலிக் கம்பனிகளுக்கு 75.7 கோடி ரூபாய்களை செலுத்த அங்கீகாரம் வழங்கி, முதல் தவணையாக 13 கோடி செலுத்தப் பட்ட நிலையில், மாவிலாறு மோதல் வெடிக்க, மேல் கொண்டு பணம் செலுத்தாமல் தடை உண்டாகின்றது.

இது குறித்த புலனாய்வுத் தகவல்கள் கொண்ட செய்திகளை 2007 செப்டம்பர் 24ம் திகதிய  சண்டே லீடர் பத்திரிகை வெளியிட, அதன் ஆசிரியர் 2008 ஜனவரியில் கொல்லப்பட்டார்.

டிரன் அலஸ்

பின்னர் மகிந்த கம்பனியினருடன் கருத்து வேறு பாடு அடைந்த டிரன் அலஸ், ஜனவரி 2010 ல், எமில் காந்தனிடம் கொடுக்குமாறு 18 கோடி ரூபாய் பணத்தினை, பசில் ராஜபக்சே தன்னிடம் தந்தாக, பத்திரிகையாளர் முன்னால் தெரிவித்தார்.

டக்லஸ் தேவானந்தா

எமில் காந்தனும், அவருடன் சேர்ந்த 16 பேருமாக, 1998ம் ஆண்டு களுத்துறை சிறைக்கு வந்த முன்னால் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவை சிறையில் தாக்கி கொலை செய்ய திட்டம் தீட்டினர் என கொழும்பு உயர் நீதிமன்றில் குற்றம் சுமத்தப் பட்டு உள்ளது.

இது தொடர்பில் எமில் காந்தன் மீது சர்வதேச பிடி விறாந்தும்  பிறப்பிக்கப் பட்டு அவர் மீது ரெட் நோட்டீஸ் விடுக்கப் பட்டு உள்ளது.

மேலே சொல்லப் பட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த போது, இந்த தாக்குதலில் எமில் காந்தனின் பங்களிப்போ, அவர் ஒரு புலி எனவோ பொலிசாருக்கு தெரிந்திருக்க வில்லை. கொழும்பில் உள்ள ஒரு பெரும் வியாபார நிறுவன சொந்தக் காரர் என்ற வகையில், புலிகளின் புலித் தேவனுடன் தொடர்பு ஏற்படுத்தும் ஒருவராகவே அறியப்பட்டு இருந்தார்.

அதேவேளை மாவிலாற்று பிரச்சனை  தொடங்கி சண்டை ஆரம்பித்ததும், தனக்கு ஆபத்து உண்டாகலாம் என நாட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார் எமில்.

வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு

இவரை வெளிநாட்டு புலனாய்வு அமைப்பினூடாக தொடர்பு கொண்ட இலங்கை அரசின் உயர் பீடம், அவர் நாடு திரும்பி சாட்சியம் அளித்தால், அவருக்கு வேறு வழக்குத் தொல்லைகள் இல்லாமல் செய்வதை உறுதி செய்வதாக தெரிவித்து உள்ளதால், எமில் காந்தன் இரு வாரங்களில் நாடு திரும்ப உள்ளார்.

இதற்கு வசதியாக, எமிலின் சட்டத்தரணி கொழும்பு உயர் நீதிமன்றில், அவர் மீதான சர்வதேச பிடி விறாந்தும்  ரெட் நோட்டீஸ்ம் நீக்கப் பட வேண்டும் என்று கோரியதை தொடர்ந்து, நீதி மன்று அதனை நீக்கி உள்ளது.

இப்போது, டிரன் அலஸ், எமில் காந்தன் ஆகிய தரகர்கள் இருவரும், சான்றுகளுடன், தமது சாட்சியங்களை பொலிசாரிடம் தரப் போகின்றனர்.

பெரும் பிரச்சனை

இது மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட ரீதியிலும், பசில் ராஜபக்ச, PB  ஜெயசுந்தர, லலித் வீரதுங்க ஆகியோருக்கு பெரும் பிரச்சனைகளை உருவாக்கப் போகின்றது என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.

பயங்கரவாதிகளுடன் சேர்ந்து, மக்களின் ஜனநாயக உரிமைகளை தடுத்து, சட்ட ரீதி இல்லா முறையில் பதவியில் அமர்ந்தது, மிகவும் கடுமையான ஒரு குற்றம்.

மேலும் இந்த தவறுக்காக தரப்பட்ட பணம், இலங்கை அரசின் திறை சேரியில் இருந்தே எடுக்கப் பட்டது அடுத்த குற்றம்.

ஆக ராஜபக்சே, அரசியலில் இருந்து ஒதுங்காமல், நாண்டு கொண்டே நின்றதால், அவரை ஒதுக்க இந்த வழியே ஆட்சியாளருக்கு கிடைத்துள்ளது போல் தெரிகிறது.

நமது ஆக்கமுங்கோ

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

யாராப்பா இந்த எமில்காந்தன்??? படம் இருந்தால் போட்டு விடுங்கள் அந்த மூஞ்சியை ஒருக்கால் பார்க்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, ரதி said:

யாராப்பா இந்த எமில்காந்தன்??? படம் இருந்தால் போட்டு விடுங்கள் அந்த மூஞ்சியை ஒருக்கால் பார்க்க வேண்டும்

Namal-Emil-010216-280-seithy.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.