Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லை வட்டுவாகலில் மக்களின் காணிகளில் பனைமரங்களை அழிக்கும் இராணுவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முல்லை வட்டுவாகலில் மக்களின் காணிகளில் பனைமரங்களை அழிக்கும் இராணுவம்!

20 பெப்ரவரி 2016

முல்லை வட்டுவாகலில் மக்களின் காணிகளில் பனைமரங்களை அழிக்கும் இராணுவம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகலில் இலங்கை கடற்படையினர் பனை மரங்களை அழிக்கும் செயற்பாட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குளோபல் தமிழ் செய்தியாளர் குறிப்பிடுகின்றார். குறித்த பகுதியில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் பொருட்டே இவ்வாறு பனைமரங்களை அழித்து வருகின்றனர். 

வட்டுவாகலில் தனியாருக்குச் சொந்தமான .379 ஏக்கர் நிலமும் மக்கள் வசித்த அரச காணிகள் 379 ஏக்கர் காணியுமாக மொத்தம் 626 ஏக்கர் நிலத்தில் இலங்கை கடற்படையின் கோத்தபாய முகாம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமளவான நிலப் பகுதிகளில் முட்கம்பி வேலி அமைக்கப்பட்டு கடற்படையினரின் பாதுகாப்பு அரண்களின் கீழ் அபகரிக்கப்பட்டுள்ளது. 

இதனால் சுமார் 500 குடும்பங்கள் தங்கள் வாழிடத்தை இழந்து தவிக்கின்றனர். இந்தக் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டின் பாதுகாப்புக்காக இந்த காணிகளை கடற்படையினர் தமது வசம் வைத்திருப்பதாக தெரிவிக்கின்றனர். 

இந்த நிலத்திற்குரிய மக்கள் நிலமற்றவர்களாக உறவினர் வீடுகளிலும் தெருக்களிலும் அகதிகளாக அலையும் நிலையில் மக்களின் காணிகளில் இராணுவத்தினர் மரக்கறிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு தமது பசியை போக்கி வருகின்றனர். இதுவா நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கை என்று வட்டுவாகல் பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

இதேவேளை இந்தப் பகுதியில் உள்ள பனைமரங்களை கடந்த சில வாரங்களாக அழிக்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுவருவது தொடர்பில் குளோபல் தமிழ் செய்திகள் செய்தி வெளியிட்டிருந்தது. எனினும் பனைமரங்களை அழிக்கும் கடற்படையினரின் செயற்பாடு இன்னமும் நிறுத்தப்படவில்லை என்று அப் பகுதி மக்கள் ஆதங்கமுறுகின்றனர். 

பனைமரங்களையும் வடலிகளையும் தறித்து நெருப்பு வைத்து எரியூட்டும் நடவடிக்கை வட்டுவாகல் முள்ளிவாய்க்கால் வீதியால் செல்லும் மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. நாளும் பொழுதுமாக மிக வேகமாக பனைமரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றது. இதனை தடுத்து நிறுத்தி தமது நிலத்தை பாதுகாக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

போரினால் இப் பகுதியில் உள்ள பனை மரங்கள் பலவும் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது எஞ்சியுள்ள பனைமரங்களையும் படையினர் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப் பகுதியின் நிலம் மற்றும் சூழல் பாதிக்கப்படும் என்றும் வட்டுவாகல் பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 

கோத்தபாய கடற்படை முகாமை விஸ்தரிக்கும் நோக்கிலும் கடற்படையினர் மேலும் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபடவுமே இவ்வாறு பனை மரங்களும் வடலிகளும் அழிக்கப்படுவதாகவும் மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். தமது காணிகளின் மர வளங்களை படையினர் அழிக்க அவர்களுக்கு உரிமை இல்லை என்றும் மக்கள் கூறுகின்றனர். 

இதேவேளை நல்லாட்சியில் தமது காணிகள் விடுவிக்கப்படும் என்று கோரி காத்திருக்கும் நிலையில் அதனை நிரந்தரமாக ஆக்கிரமிக்கும் நோக்கில் கடற்படையினர் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளுவதுடன்  நிலத்தின் வளங்களையும் அழிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக வட்டுவாகல் பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். 

இதேவேளை கோத்தபாய கடற்படை முகாமை அகற்றி தமது காணிகளை தம்மிடம் மீள ஒப்படைத்து தம்மை மீள்குடியேற்றி இழந்த வாழ்வை மீண்டும் பெற அரசும் உரிய அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அம் மக்கள் கோருகின்றனர். 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129187/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இணக்க அரசியல் அவசியமானது! இலங்கை அரசை எதிர்த்து நாம் எதையும் பெற்று விட முடியாது என்று தலைவர் சம்பந்தர் அவர்களே தமிழ் மக்களுக்கு அறிவுரை கூறியுள்ளதை மறந்துவிடலாகாது. :shocked:

இலங்கை இராணுவமும், பனை மரங்களும் என்ற விடயத்திலும், தமிழ் மக்கள் இராணுவத்துடன் இணங்கிச் செயலாற்றினாலே எஞ்சிய பனைமரங்களைப் பாதுகாக்கலாம். :)

  • கருத்துக்கள உறவுகள்

65,000 வீடும் சிங்கள மக்களுக்கு தாரை... எனி.. பனை மரமும் கொடுத்தால் தானே வீடு கட்டி முடியும். எல்லாத்தையும் தாரை வார்க்க என்று வெளிக்கிட்டம்.. உதுகளை கொடுக்காட்டி சிங்களவன் கோவிச்சிட்டானுன்னா.. நல்லிணக்கம்.. இன ஐக்கியம் என்னாகிறது..அதுக்காகத் தானே போராடிச் செத்தனாங்கள். நாங்க யாரு.. சோரம் போக என்றே பிறந்த நாங்கள் எல்லோ..

இதில தமிழ் இன சுபீட்சம் கொண்டு வரப்போகினமாம்.. என்று சிலர் கனவும் காணினம். கனவு காண்பது அவரவர் உரிமை. ஆனால்.. பலிக்கிற கனவாக் கண்டு தொலைத்தால் நல்லா இருக்கும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

 சுரண்டல், அழிப்பு பலவகை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.