Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'ராஜீவ் காந்தி கருப்பா சிவப்பா என்றே தெரியாது... !'- பரோலில் வெளியே வந்த நளினி உருக்கம்! ( படங்கள்)

Featured Replies

'ராஜீவ் காந்தி கருப்பா சிவப்பா என்றே தெரியாது... !'- பரோலில் வெளியே வந்த நளினி உருக்கம்! ( படங்கள்)

 

வேலூர்: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள இன்று பரோலில் வெளியே வந்தார்.

nalini%20600%20%20a.jpg

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் நளினி. இவரது தந்தை சங்கர நாராயணன். ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரான இவர், நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று (23-ம் தேதி) மாலை உடல் நலக்குறைவு காரணமாக 91 வயதான சங்கர நாராயணன் காலமானார். அவரின் உடல், சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் தெருவில் உள்ள அவரது மகன் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டு, இன்று (24-ம் தேதி) அடக்கம் செய்யப்பட உள்ளது.

n2.jpg

தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளவதற்காக, தன்னை பரோலில் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று நளினி சிறைத்துறையிடம் மனு அளித்தார். இதையடுத்து, இன்று காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை 12 மணி நேரம் நளினிக்கு பரோல் வழங்கியுள்ளது சிறைத்துறை.

nalini%20600.jpg

இதை தொடர்ந்து இன்று காலை, வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்து, வேலூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரத்னவேல் அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் பவானிமேரி சப்–இன்ஸ்பெக்டர் லதா மற்றும் துப்பாக்கி ஏந்திய 7 போலீசார் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை கோட்டூர்புரத்திற்கு நளினியை அழைத்து சென்றனர்.

25 ஆண்டுகளுக்கு பின்னர் பரோலில் தனது சகோதரர் இல்லத்திற்கு வந்த நளினி, தனது தந்தையின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, உறவினர்களுடன் துயரத்தை பகிர்ந்து கொண்டார். நளினிக்கு ஆறுதல் கூறவும், அவரது தந்தைக்கு அஞ்சலி செலுத்தவும் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான் உள்ளிட்ட பல தலைவர்களும் வந்திருந்தனர்.

தந்தை சங்கர நாராயணன் இறுதிச் சடங்கு முடிந்ததும், இரவு வேலூர் சிறைக்கு புறப்பட்டு செல்வார்.

இதற்கு முன் பலமுறை பரோலுக்கு நளினி விண்ணபித்தும் பரோல் வழங்கப்படவில்லை. தற்போது, நளினி முதல் முறையாக பரோலில் வெளியே வந்தது குறிப்பிடத்தக்கது.

'ராஜீவ் காந்தி கருப்பா சிவப்பா என்றே தெரியாது!'

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய நளினி, " ராஜீவ் காந்தி கருப்பா சிவப்பா என்றே தெரியாது. ராஜீவ் காந்தி கொலைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. விடுதலையை தவிர வேறு எதை நாங்கள் எதிர்பார்க்க முடியும்?. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட எங்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். சிறை வாழ்க்கை மிகவும் கொடுமையானது. நிறைய துன்பங்களை அனுபவித்துவிட்டோம்.தமிழக அரசு எங்களை விடுதலை செய்யும் என நம்புகிறேன். 27 வருடங்களாக சிறையில் இருக்கும் பெண் நானாகத்தான் இருப்பேன்.

25 ஆண்டுகளுக்கு பின்ன பார்க்கும் சென்னை நிறைய மாற்றங்களை கண்டுள்ளது. இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் பெரும்பாலும் ஹெல்மெட் அணிந்து செல்வதை பார்க்கும்போது சற்று வியப்பாக இருந்தது" என்றார்.

 

http://www.vikatan.com/news/tamilnadu/59548-nalini-came-out-on-parole-after-25-years.art

 Breaking Now
 
சிறையில் இருக்கும் எங்கள் கைகள் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல: நளினி

25 ஆண்டுகாலமாக நான், என் கணவர் மற்றும் 5 சகோதரர்கள் சிறையில் இருக்கிறோம்: நளினி

ராஜிவ் குள்ளமா, கருப்பா, வெள்ளையா எப்படி இருப்பார்னே தெரியாத அப்பாவிகள் நாங்கள் -நளினி

நாங்கள் எந்த குற்றமும் செய்யவில்லை... நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம்- நளினி

 
Read more at: http://tamil.oneindia.com/
  • தொடங்கியவர்
எங்கள் கைகள் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல- 25 ஆண்டு சிறைவாசத்தில் முதல்முறையாக நளினி பேட்டி
 
 
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் எங்களது 7 பேர் கைகளும் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டதல்ல; நாங்கள் எந்த குற்றமும் செய்யாதவர்கள் என 25 ஆண்டுகாலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி முதல் முறையாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி வழக்கில் நளினி, முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேர் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளனர். இவர்களில் நளினியின் தந்தை சங்கரநாராயணன் நேற்று காலமானார்
 

 அவரது உடல் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக நளினிக்கு 12 மணிநேர பரோல் அனுமதிக்கப்பட்டது. இதனடிப்படையில் சென்னை கோட்டூர்புரத்தில் சகோதரர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த தந்தையின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் நளினி.

 

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

25 ஆண்டுகாலமாக நான், என் கணவர் மற்றும் 5 சகோதரர்கள் சிறையில் இருக்கிறோம். நாங்கள் எந்த ஒரு குற்றமும் செய்யாதவர்கள். இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம்.

எங்களுடைய யாருடைய கையும் யாருடைய ரத்தத்தாலும் நனைக்கப்பட்டது அல்ல.

ராஜிவ் காந்தி குள்ளமா, கருப்பா, வெள்ளையா, சிவப்பா என்று கூட தெரியாத அப்பாவிகள் நாங்கள்.

எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கும் 24 வயதாகிவிட்டது. அவள் ஏன் எங்களைப் பிரிந்திருக்க வேண்டும்?

முதலமைச்சர் அவர்கள் எங்கள் 7 பேரையும் நிச்சயம் விடுதலை செய்வார் என நம்பிக்கையோடு வாழ்கிறோம். இவ்வாறு நளினி கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் கொலை  ஹிந்திய சர்வதேசக் கூட்டுச் சதியின் விளைவு. பாவம் அப்பாவிகள் அந்தக் கொலைக்கு குற்றவாளிகளாக்கப்பட்டு சிறையில் கிடப்பதும்.. புலிகள் மீதான அபாண்டப் பழி தொடர்வதும்.

இருந்தாலும் சீமான் போன்ற தன்னலமற்ற தலைவர்கள்.. பெரிய திராவிடக் கட்சியிகள் சந்திக்க.. என்ன சிந்திக்க மறக்க நினைக்கும் இவர்களை சென்று பார்த்து நலம் விசாரிப்பது.. ஆறுதல் அளிக்கும். 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

25 ஆண்டுகளுக்குப் பின் உலகின் காதுகளுக்கு நளினியின் முதல் குரல்!

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம் என பரோலில் விடுதலைபெற்று தந்தையாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வெளியே வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார். இந்திய சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்து வரும் பெண் கைதிகளில், அதிக காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, 25 ஆண்டுகளுக்குப் பின் 12 மணி நேரம் மட்டும் சிறைச்சாலையில் இருந்து பரோலில் வர அனுமதிக்கப்பட்டார். அதுவும், அவருடைய தந்தை சங்கர நாராயணனின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மட்டும்.

   

சங்கரநாராயணன், ஓய்வுபெற்ற போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர். நெல்லை மாவட்டம் வீ.கே.புரத்தில் வசித்து வந்தார். 91 வயதான அவர், கடந்த 23-ம் தேதி மாலை மரணம் அடைந்தார். அவருடைய உடல் சென்னை கோட்டூர்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள நளினியின் அண்ணன் ரவியின் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டது. ரவி, தி.மு.க பிரமுகர் என்பதால், நிறைய தி.மு.க-வினர் நளினியின் வீட்டைச் சுற்றி குழுமியிருந்தனர். தமிழ் உணர்வாளர்கள், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் ம.தி.மு.க-வைச் சேர்ந்த ஏராளமானோர் சங்கர நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மனித நேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா, தடா ரஹீம் உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். வீட்டைச் சுற்றி ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு இருந்தனர். துப்பாக்கி ஏந்திய போலீஸார் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டு இருந்தனர். அத்தனை கெடுபிடிகளையும் தாண்டி, நளினியின் வழக்கறிஞர் புகழேந்தியின் உதவியுடன், நளினியை தனியாகச் சந்தித்துப் பேசினோம்.

பரோல் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்ததா?

பரோல் கிடைக்கும் என்று கடைசி நிமிடம் வரை நம்பவில்லை. என் தந்தையின் உடல்நிலை மோசமானதை அடுத்து, கடந்த ஒரு மாதமாக பரோல் கேட்டுப் போராடினேன். கிடைக்கவில்லை. அவர் இறந்தபிறகுதான், பரோல் கிடைத்துள்ளது.

நீதிமன்றங்களில் உங்கள் விடுதலை குறித்த வழக்கு இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் தமிழக அரசுக்கு நீங்கள் வைக்கும் கோரிக்கை என்ன?

விடுதலையைத் தவிர, வேறு எதை நான் கேட்பேன்? நான், என் கணவர், எங்களோடு சிறையில் இருக்கும் 5 சகோதரர்கள் என்று நாங்கள் யாரும் எந்தக் குற்றமும் செய்யாதவர்கள். அதுதான் உண்மை. எங்கள் கைகள் யாருடைய இரத்தத்திலும் நனைக்கப்படவில்லை. ராஜீவ் கொலைக்கும் இன்று சிறையில் இருக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது.

எனவே, 25 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் எங்களை விடுதலை செய்ய வேண்டும். எனக்கு ஒரு மகள் இருக்கிறாள். அவளுக்கு 25 வயதாகப் போகிறது. திருமணப் பருவத்தில் இருக்கிறாள். எந்தத் தவறும் செய்யாத என் மகள், பெற்றோரைப் பிரிந்து இத்தனை ஆண்டுகளாக ஏன் இருக்க வேண்டும்?

இத்தனை ஆண்டுகளில் சிறைக்குள் நிறையத் துன்பங்களை அனுபவித்து விட்டோம். ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம். முதலமைச்சர் அவர்களைத்தான் நாங்கள் நம்பி இருக்கிறோம். அந்த நம்பிக்கைதான் எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

சிறைக்குள் இருந்து வெளியில் வந்ததும், உலகம் எவ்வளவு மாறி உள்ளது என்பதை உங்களால் உணர முடிந்ததா?

என் தந்தையின் நினைவுகளோடு இருந்ததால், நான் அதைப் பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால், நிறைய மாறிவிட்டது. எல்லோரும் ஒழுங்காக வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் ஹெல்மெட் அணிந்து பைக் ஓட்டுவதைப் பார்த்தேன். அது மகிழ்ச்சியாக இருந்தது.

பிரியங்கா காந்தி உங்களைச் சந்தித்த போது என்ன பேசினார்?

அதை இப்போது சொல்ல முடியாது. ஆனால், அவர் என்னிடம் மிகவும் மிரட்டல் தொனியில் பேசினார். அங்கிருந்து பிரியங்கா கிளம்பும் போது, எனக்கு எந்த வசதியும் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=152229&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சரும் சிறை சென்று மீண்டவர் என்றபடியால் உங்கள் துன்பம் அவர்களுக்கும் புரியும் என நினைக்கிறேன்.

எல்லோரும் விரைவில் விடுதலையாக வேண்டுகிறேன்.

தேர்தலும் நெருங்கிவரும் போது வாக்குகளை அள்ளுவதற்கான தந்திரோபாயமாகவும் விடுவிக்கப்படலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.