Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளின் முன்னாள் தளபதி ராம் தடுத்து வைப்பு

Featured Replies

புலிகளின் முன்னாள் தளபதி ராம் தடுத்து வைப்பு
 
 

article_1461559216-tr.jpgபுனர்வாழ்வு பெற்று விடுதலையாகிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான ராம் என்பவர், பயங்கரவாதப் புலனாய்வுப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது கணவன், திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள தமது வீட்டிலிருந்து, இனந்தெரியாதோரினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) கடத்தப்பட்டுள்ளதாக அவரது மனைவி, திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்நிலையிலேயே பொலிஸாரினால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/170606/%E0%AE%AA-%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%A9-%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B5-%E0%AE%AA-%E0%AE%AA-#sthash.49FD0ft8.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போது அவர் தளபதி. இப்ப செல்லாக் காசு. எல்லாம் காலக் கொடுமை. ஆனால் சிலருக்கு.. இன்னும் இவர்களைக் கடத்த வேண்டிய தேவை இருக்குது...!!! நல்லாட்சி ஆயினும்.... சிங்களவர்கள் ஆட்சியில்.. இப்படிக் கடத்தல்கள் நிகழும்... என்பது பொதுவிதி.:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, nedukkalapoovan said:

புலிகள் இருந்த போது அவர் தளபதி. இப்ப செல்லாக் காசு. எல்லாம் காலக் கொடுமை. ஆனால் சிலருக்கு.. இன்னும் இவர்களைக் கடத்த வேண்டிய தேவை இருக்குது...!!! நல்லாட்சி ஆயினும்.... சிங்களவர்கள் ஆட்சியில்.. இப்படிக் கடத்தல்கள் நிகழும்... என்பது பொதுவிதி.:rolleyes:

சிங்கள அரசு கீறிய கோட்டை விட்டு ஒருகாலமும் நகராது. நகருகின்றது போலிருந்தாலும் சுத்தி சுத்தி சுப்பர்ரை கொல்லைக்குள் நின்றே பூப்பறிப்பார்கள். தமிழர்களுக்கான நெளிவு சுழிவு தந்திர தலைவர்களும் அவர்கள் மடியில் சுகம் காண்பவர்கள் ஆச்சே....tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் வைத்தே புலிகளின் முன்னாள் தளபதி ராமிடம் விசாரணை

ramதிருக்கோவில்- தம்பிலுவில் பகுதியில் உள்ள தமது வீட்டில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதி ராம், கிளிநொச்சியில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்றுமுன்தினம் காலையில், புலிகளின் முன்னாள் தளபதி ராம், வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டிருந்தார். இதுதொடர்பாக அவரது மனைவி திருக்கோவில் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இந்த நிலையில், ராம், கடத்தப்படவில்லை என்றும், தீவிரவாத விசாரணைப் பிரிவினால், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக நேற்று சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் அறிவித்திருந்தார்.

திருக்கோவிலில் கைது செய்யப்பட்ட ராம், கிளிநொச்சிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு வைத்தே, அவரிடம் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், ராம் கைது செய்யப்பட்டுள்ளதற்கான காரணத்தை, சிறிலங்கா காவல்துறை இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2016/04/26/news/15586

600 பொலிஸாரின் கொலை உட்பட ராம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளன:

600 பொலிஸாரின் கொலை உட்பட ராம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு உள்ளன:



தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட முன்னாள் தளபதியான எதிர்மன்னசிங்கம் அரிச்சந்திரன் எனப்படும் ராம் என்பவர், பயங்கரவாத விசாரணைப்பிரிவின் (ரி.ஐ.டீ) காவலில் உள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ள நிலையில், அவர்பற்றிய புதிய குற்றச்சாட்டுக்களை பாதுகாப்பு தரப்பினர் முன்வைத்துள்ளனர்.

புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண தளபதியாக இருந்த கருணா அம்மான் (விநாயகமூர்த்தி முரளிதரன்), அவ்வமைப்பிலிருந்து விலகியதையடுத்து, ராம், தனக்குச் சார்பான உறுப்பினர்கள் அடங்கிய குழுவுடன் வன்னியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பிச்சென்றுள்ளார்.

அதன் பின்னரே, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு ஆயுதப் பிரிவுக்குப் பொறுப்பாக பிரபாகரனால், ராம் நியமிக்கப்பட்டார்.

ஆனையிறவு மற்றும் பூநகரி இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவதற்குத் தலைமைவகித்த அவர், கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் குழுவொன்றைக் கடத்தி அதில் 600 பொலிஸாரை படுகொலைசெய்த சம்பவத்துடன் தொடர்புபட்டவர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, யால தேசிய சரணாலயத்தில் இடம்பெற்ற பல்வேறான தாக்குதல் சம்பவங்களுடன் இவர் தொடர்புடையவர் என்றும் அறியமுடிகின்றது.

இராணுவத்தினரால்  2009ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்ட அவர், கிழக்கு மாகாண இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த போது தப்பியோடிவிட்டார். நான்கு நாட்களுக்கு பின்னர் இராணுவத்தினரால் திருகோண மலையில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்ட ராம், 2013ஆம் ஆண்டில் விடுதலையாகி, திருமணம் முடித்த நிலையில், தம்பிலுவில் பிரதேசத்தில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதுடன் விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை; பூர்த்தி செய்து வந்தர்.

இந்த நிலையில் திருக்கோவில் - தம்பிலுவில் பிரதேசத்திலுள்ள அவரது வீட்டிலிருந்த போது  24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று (24), வான் ஒன்றில் வந்த இனந்தெரியாதோர் கடத்தப்பட்டார் என்று அவருடைய மனைவி முறைப்பாடு செய்திருந்தார்.


மறுநாள் அவர் கடத்தப்படவில்லை தம்மால் கைது செய்யப்பட்டதாகவும், தற்போது தடுத்து வைக்கப்பட்டு இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சார் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131491/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.