Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதன் பின்னணி என்ன?'

Featured Replies


'குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதன் பின்னணி என்ன?'
 
 

article_1463721495-000.jpgஅழகன் கனகராஜ்

பொலிஸாரின் தீவிரமான  நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், குடாநாட்டின் குற்றச்செயல்கள் அதிகரித்து இருப்பதன் பின்னணி என்ன என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். இவ்வாறு, குடாநாட்டைப் பதற்றமான நிலையில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வினவினார்.நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் 23இன் கீழ் 2இன் கீழ் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'யாழ். குடாநாட்டில் போதைவஸ்து பாவனை மற்றும் கடத்தல் சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள், கொலை, கொள்ளை, அச்சுறுத்தல்கள், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் போன்ற சமூக சீர்கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. காவல் துறையினரின் பல்வேறு நடவடிக்கைகள், இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையிலும், இவ்வாறான சம்பவங்கள் குறைவின்றி அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பில், ஏற்கெனவே, நான், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு, மேற்படி குற்றச்செயல்களைக்  கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதிலளிக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னரும், யாழ். குடாநாட்டில் அவ்வாறான செயற்பாடுகள் குறைவின்றித் தொடர்ந்ததையே காணக்கூடியதாக இருந்தது.

யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்திருந்த நிலையில், நான் உட்பட பல்வேறு அரசியல் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், நீதிபதிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், பல்வேறு அழுத்தங்களை முன்வைத்துவந்த நிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ரொக் டீம்' என்ற குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இச்சம்பவங்களுடன், வேறு குழுக்கள் அல்லது நபர்களுக்கும்; தொடர்புகள் இருக்குமாயின், அவர்களையும் உடனடியாக கைது செய்வதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அரசாங்கம் அறியத்தர வேண்டும்' என்று அவர் மேலும் கோரினார்.

- See more at: http://www.tamilmirror.lk/172642#sthash.sj2hXLXH.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

குற்றச் செயல்களுக்காக இந்திய தேசமே தேடும் ஒருவருக்கு அமைச்சுப் பதவி கொடுத்து அவரை இந்தியப் பிரதமருக்கே கைலாகு கொடுக்கவைத்த சிறிலங்கன் அரசு குற்றவாளிகளை மேலும் உருவாக்குமா..? அழிக்குமா...??

இந்தப் பெருமகன் விதைத்த விதைகளே 30 ஆயிரம்வரை வளர்ந்து ஓட்டுப்போட்டு மகிழ்ந்ததை, சென்ற தேர்தல் வெளிக்கொணர்ந்து காட்டியது. 
 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, நவீனன் said:

'குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதன் பின்னணி என்ன?'
 
 

article_1463721495-000.jpgஅழகன் கனகராஜ்

பொலிஸாரின் தீவிரமான  நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், குடாநாட்டின் குற்றச்செயல்கள் அதிகரித்து இருப்பதன் பின்னணி என்ன என்று, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பினார். இவ்வாறு, குடாநாட்டைப் பதற்றமான நிலையில் வைத்திருப்பதன் நோக்கம் என்ன என்றும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வினவினார்.நாடாளுமன்றம் நேற்றுக் காலை 10.30க்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், கூடியது. அவையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் 23இன் கீழ் 2இன் கீழ் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கூறியதாவது,

'யாழ். குடாநாட்டில் போதைவஸ்து பாவனை மற்றும் கடத்தல் சம்பவங்கள், வாள்வெட்டுச் சம்பவங்கள், கொலை, கொள்ளை, அச்சுறுத்தல்கள், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் வன்முறைகள் போன்ற சமூக சீர்கேட்டுச் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. காவல் துறையினரின் பல்வேறு நடவடிக்கைகள், இவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்ற நிலையிலும், இவ்வாறான சம்பவங்கள் குறைவின்றி அதிகரித்து வருகின்றன.

இது தொடர்பில், ஏற்கெனவே, நான், நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு, மேற்படி குற்றச்செயல்களைக்  கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பதிலளிக்கப்பட்டது. இருப்பினும், அதன் பின்னரும், யாழ். குடாநாட்டில் அவ்வாறான செயற்பாடுகள் குறைவின்றித் தொடர்ந்ததையே காணக்கூடியதாக இருந்தது.

யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அதிகரித்திருந்த நிலையில், நான் உட்பட பல்வேறு அரசியல் பிரதிநிதிகளும், சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள், நீதிபதிகள் போன்ற பல்வேறு தரப்பினரும், பல்வேறு அழுத்தங்களை முன்வைத்துவந்த நிலையில், குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 'ரொக் டீம்' என்ற குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இச்சம்பவங்களுடன், வேறு குழுக்கள் அல்லது நபர்களுக்கும்; தொடர்புகள் இருக்குமாயின், அவர்களையும் உடனடியாக கைது செய்வதற்கு எத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது பற்றி அரசாங்கம் அறியத்தர வேண்டும்' என்று அவர் மேலும் கோரினார்.

- See more at: http://www.tamilmirror.lk/172642#sthash.sj2hXLXH.dpuf

இவை எல்லாம் குற்ற செயல்களா ???
வாசிக்கவே தடுமாற்றமாக இருக்கிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் தறிகெட்டதுகளுக்கு வெளிநாட்டுக்காசு வருமானமும், நிதிநிறுவனங்களது செல்வாக்கும்தான் குற்றச்செயல்கள் அதிகரிக்கக்காரணம். முதலில் யாழ் குடாநாட்டிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் (?) தேடி வருவோரைக் கட்டுப்படுத்தவேண்டும். இல்லாதுவிடின் குடாநாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியாது. தற்போது அரசியல்தஞ்சம் தேடி வரும் வடபகுதி இளைஞர்களில் எண்பதுவீதமானவர்கள் சமூகக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள்

நான் இவர்களில் அனேகமானவர்களுடன் உரையாடியுள்ளேன் அவர்களில் அனேகர் புலம்பெயர்ந்து வந்தாலும் வன்முறை உணர்வினைத் தூக்கிஎறிந்துவிட்டுவரவில்லை.

உதாரணத்துக்கு ஒருவிடையம்

இப்படி ஒரு போக்கிலி நான் வாழும் நாட்டுக்கு அண்மையில் வந்து,

இந்த நாட்டிலேயே புலம்பெயர் தமிழர்களது பிள்ளைகளாய் பிறந்து, கல்விகற்று, சிறு சிறு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து தற்போது மிகப்பெரிய நிறுவனமாக வளர்ந்திருக்கும் நிறுவனத்தில் வேலையின் அடிப்படையிலான வதிவிடவிசாவுக்காக வேலைக்குச் சேர்ந்து முதல் தவணையாக ஒருவருட வதிவிட விசா பெற்றபின்,

விசா பெறுவதற்காக பணம் லஞ்சமாகக் கேட்டார்கள் என பொலீசுக்குப் போவன் என வெருட்டுது, முடிவாய் நீ போலீசுக்கோ ஆமிக்கோ போ எனக்கூறி கலைபட்டதுதான் அந்த ஜந்து சாதிச்ச விடையம்.

அவ்வளவுக்கும் வரிகள் மற்றும் இதர பிடிமானங்கள்போக அது எடுத்த மாசச்சம்பளம் ஆயிரத்து நாணூறு யூறோக்கள்.

Edited by Elugnajiru

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.