Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு ஆளுநரின் உதவியைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு சுமந்திரன் கோரிக்கை!

Featured Replies

வடக்கு ஆளுநரின் உதவியைத் தக்கவைத்துக்கொள்ளுமாறு சுமந்திரன் கோரிக்கை!

அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே செயற்படும் நிலையில், அதற்குப் பாதகமாக யாரையும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண நகரின் அபிவிருத்தி தொடர்பில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூட்டம் நிறைவடைந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

உலகவங்கியால் முக்கிய நகரங்களை அபிவிருத்திசெய்யும் திட்டத்தில் யாழ் நகரமும் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதுகுறித்த இன்றைய கலந்துரையாடல்கள் ஆக்கபூர்வமானதாக அமைந்திருந்தது. இவ்வாறான கூட்டம் நடாத்துவதற்கு பல விமர்சனங்கள் எழுந்துள்ளதால் தான் நேரடியாக எதனிலும் தலையிடப்போவதில்லையென ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் எவ்வாறான அபிவிருத்தி மேற்கொள்ளவேண்டுமென சட்டம் எதுவும் கிடையாது. அதற்கென குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு அபிவிருத்தி தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

வடமாகாண ஆளுநர் ஒரு முற்போக்குவாதி. மிகவும் சாதுரியமாக, எமது நலனுக்காக பல ஆண்டு காலமாக உழைத்த ஒருவர். இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக அதிகார பகிர்வு வேண்டுமென்று ஆதரித்தமைக்காக, மூன்று முறை துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான ஒருவர் மட்டுமன்றி, அவரின் வீடும் எரித்து நாசமாக்கப்பட்டது. இவ்வாறான ஒருவரின் உதவியை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் இருந்தால், எமது இனத்திற்கு நாங்கள் செய்யும் கேடான செயலாக இருக்க முடியும்.

அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயலில் ஆளுநர் செயற்படும்போது, அதற்குப் பாதகமான செயற்பாடுகளையம் சொற்பொழிவுகளையும் மேற்கொள்ளாமல் பொறுப்புணர்வோடு செயற்படுமாறு கோரிக்கைவிடுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=27871

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை இப்ப 40 வருசமா அரசியலில் வழிநடத்தும் பெரிய.. துரை சொல்லிட்டார்... விக்கி ஐயா மூச். சிறீதரன் மூச். 

ஆளுநர்.. இராணுவத்தோடு சேர்ந்து கொண்டு..  செருப்பைக் கழட்டி அடிச்சாலும் வாங்கிக் கிட்டு கிடவுங்க. அது தான் உங்க தலைவிதி.. ஓகே. tw_angry::rolleyes:

1 hour ago, nedukkalapoovan said:

தமிழ் மக்களை இப்ப 40 வருசமா அரசியலில் வழிநடத்தும் பெரிய.. துரை சொல்லிட்டார்... விக்கி ஐயா மூச். சிறீதரன் மூச். 

 

அரசியல் அனுபவம்  -  விக்கி ஐயாவிற்கு எத்தனை வருஷம்?

  • கருத்துக்கள உறவுகள்

சும் மை விட பறுவாயில்லை. விக்கி ஐயாவுக்கு நிறைய அரசியல் தொடர்புகள் இருந்தன. அத்தோடு ஒரு நாட்டில் நீதியரசராகவும் இருந்தவர் பல்வேறு சமூக அரசியல் பிரச்சனைகளை கையாண்ட நீதிபதியும் கூட. சும்.. சம் க்கு வால்பிடிச்ச அனுபவத்தை மட்டுமே அதிகம் கொண்டவர். அதை வைச்சு.. சொந்த வியாபாரத்தைக் கவனிக்கலாமே தவிர.. இனத்துக்கான அரசியலை முன்னெடுக்க முடியாது. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

 குரு சொல்லுறார் சும்மா கேள்விகள் கேட்டு அரசின் நல்லெண்ண நடவடிக்கைகளை குழப்ப வேண்டாமாம். சிஷ்யன் சொல்லுறார் பாதகமான கருத்துக்களை சொல்லி ஆளுனரை குழப்ப வேண்டாமாம். எல்லாரும் பேசாமல் இருங்கோ. அவை சொல்லுறதுக்கும், செய்யிறதுக்கும் தலை மட்டும் ஆட்டினால்ப்போதும். அப்பப்ப இவயின்ர சர்வாதிகாரப் பேச்சுகளுக்கு குறைவில்லை. சுமந்திரன் ஏதோ மக்கள் நலன் காக்க வந்தவர்போல கதையளப்பு. அரசாங்கத்துக்கு சேவகம் செய்ய  வந்து செருகப்பட்டவர். அவர் வேலை முடிஞ்சவுடன் தன்பாட்டில போய்விடுவார். மக்களைப்பற்றியோ, அவர்கள் பிரச்சனை பற்றியோ அவருக்கு கவலையில்லை. தாங்களும் உருப்படியாய் ஒன்றும் கதைப்பதில்லை, மற்றவர்கள் ஏதாவது கதைத்து தங்கட வியாபாரத்தை குழப்பிப்போடுவினம் எண்ட திகிலில மாறி, மாறி அதட்டுகினம்.

11 hours ago, nedukkalapoovan said:

சும் மை விட பறுவாயில்லை. விக்கி ஐயாவுக்கு நிறைய அரசியல் தொடர்புகள் இருந்தன. அத்தோடு ஒரு நாட்டில் நீதியரசராகவும் இருந்தவர் பல்வேறு சமூக அரசியல் பிரச்சனைகளை கையாண்ட நீதிபதியும் கூட. 

நீதிபதியாக இருப்பது வேறு.

அரசியல் தெரிந்திருப்பதும் வேறு.

அரசியல் சாணக்கியம், அனுபவம் இருக்கிறதா என்றால், விக்கி ஐயா சுத்த சூனியம்.

பொறுத்திருந்து பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பெரியார் said:

நீதிபதியாக இருப்பது வேறு.

அரசியல் தெரிந்திருப்பதும் வேறு.

அரசியல் சாணக்கியம், அனுபவம் இருக்கிறதா என்றால், விக்கி ஐயா சுத்த சூனியம்.

பொறுத்திருந்து பாருங்கள்.

சம் பின்கதவால் தள்ளிக் கொண்டு வந்து விட்ட சும் பண்ணுறதைப் பார்க்கிறமாம்.. பொறுமையா இருந்து.. விக்கி ஐயா பண்ணுறதைப் பார்க்கப் பொறுமையாக இருக்க மாட்டமா என்ன. tw_blush:

2 minutes ago, nedukkalapoovan said:

சம் பின்கதவால் தள்ளிக் கொண்டு வந்து விட்ட சும் பண்ணுறதைப் பார்க்கிறமாம்.. பொறுமையா இருந்து.. விக்கி ஐயா பண்ணுறதைப் பார்க்கப் பொறுமையாக இருக்க மாட்டமா என்ன. tw_blush:

இங்கே சம், சும்மின் அரசியல் அனுபவம் பரவாயில்லை.

விக்கி ஐயா ஒரு பூச்சியம் இங்கே.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, பெரியார் said:

இங்கே சம், சும்மின் அரசியல் அனுபவம் பரவாயில்லை.

விக்கி ஐயா ஒரு பூச்சியம் இங்கே.

2016 முடிவுக்குள் தெரிய வரும்.. அதிசய ஆண்டு.. சம் சும் குடுகுடுப்பைப் கும்பலின் அனுபவம்.. பூச்சியமா.. விக்கி ஐயாவின் அரசியல் செயற்பாடுகள் பூச்சியாமான்னு. tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 minutes ago, nedukkalapoovan said:

2016 முடிவுக்குள் தெரிய வரும்.. அதிசய ஆண்டு.. சம் சும் குடுகுடுப்பைப் கும்பலின் அனுபவம்.. பூச்சியமா.. விக்கி ஐயாவின் அரசியல் செயற்பாடுகள் பூச்சியாமான்னு. tw_blush:

நூறுநாள் புளுகுத்திட்டம் வெற்றி...
2015 கடைசியிலை முடிக்கிறம் எண்டதும் வெற்றி மேல் வெற்றி
2016 முடிய இன்னும் 6மாதம் கிடக்கு.....அதுவும் வெற்றியோ வெற்றியாத்தான் இருக்கும்...
பிறகென்ன ....இப்ப அந்தமாதிரி இருக்கிற ரோட்டு கிடங்கும் கிண்டியுமாய் வந்திடும்......திருப்பி அதுக்கு மேலை தார் ஊத்திவிட....பிறகும் அந்தமாதிரித்தான் இருக்கும்tw_blush:

23 minutes ago, nedukkalapoovan said:

2016 முடிவுக்குள் தெரிய வரும்.. அதிசய ஆண்டு.. சம் சும் குடுகுடுப்பைப் கும்பலின் அனுபவம்.. பூச்சியமா.. விக்கி ஐயாவின் அரசியல் செயற்பாடுகள் பூச்சியாமான்னு. tw_blush:

2016 இன் முடிவிலும் சரி, 2020 இன் முடிவிலும் சரி.

ஒரு முடிவும் வராது.  இது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

எல்லாரினதும் செயற்பாடுகள் பூச்சியம்தான்.

நான் சொன்னது அரசியல் அனுபவம் -  விக்கி ஐயாவிற்கு அது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, பெரியார் said:

2016 இன் முடிவிலும் சரி, 2020 இன் முடிவிலும் சரி.

ஒரு முடிவும் வராது.  இது சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

எல்லாரினதும் செயற்பாடுகள் பூச்சியம்தான்.

நான் சொன்னது அரசியல் அனுபவம் -  விக்கி ஐயாவிற்கு அது இல்லை.

பிறகென்ன அரசியல் செய்யிறம். மக்களிடம் பொய் சொல்லி வாக்குச் சேகரிப்பதிலும் நாண்டுக்கிட்டு சாகலாம் சம் சும் கும்பல். உந்தக் பிழைப்புக்கு பிச்சை எடுத்து வாழலாம். ஒரு இனத்தின் அழிப்பினில் எதிரியை பாதுகாத்து பதவி சுகம் அனுபவிக்கும் இந்தத் துரோகங்கள் தான் இவர்களின் அழிவு அரசியல். இதிலும்.. விக்கி ஐயாவின் அரசியல் எவ்வளவோ மேல். சிறுபிள்ளை அரசியல் நடத்த எதுக்கு சம் சும் கும்பல்.. தெரியுதில்ல.. அவை நடத்திற சிறுபிள்ளை அரசியலுன்னு. அப்புறம் என்ன விக்கி ஐயாவோடு புடுங்குப்பாடு. சிறுபிள்ளை அரசியல் நடத்த அரசியல் அனுபவம் எதற்கு. சம் ஒரு வெற்றுவேட்டு.. சும் அதன் வால்பிடி. இதுக்கு ஒரு அனுபவம்.. வேற. அதிலும் விக்கி ஐயாவின் அரசியல் மக்கள் மனங்களையாவது கொஞ்சம் திருப்திப்படுத்துது. உலகத்திற்கு மக்களின் விருப்பை இனங்காட்டுது.. அது மேல் எனலாம்.  tw_blush:

Edited by nedukkalapoovan

5 minutes ago, nedukkalapoovan said:

 

 

5 minutes ago, nedukkalapoovan said:

பிறகென்ன அரசியல் செய்யிறம். மக்களிடம் பொய் சொல்லி வாக்குச் சேகரிப்பதிலும் நாண்டுக்கிட்டு சாகலாம் சம் சும் கும்பல். 

இது எல்லா அரசியல்வாதியும் செய்யும் வழிதான் - ஓட்டுக் கேட்கும்போது.

நான் சொன்னது - அரசியல் அனுபவம்.  

அது விக்கி ஐயாவிற்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பெரியார் said:

இது எல்லா அரசியல்வாதியும் செய்யும் வழிதான் - ஓட்டுக் கேட்கும்போது.

நான் சொன்னது - அரசியல் அனுபவம்.  

அது விக்கி ஐயாவிற்கு இல்லை.

பொய் சொல்வதற்கு அரசியல் அனுபவம் தேவையில்லை. நல்லா பொய் சொல்லத் தெரிந்தால் சரி. விக்கி ஐயாவிற்கு.. அந்த அனுபவம் இல்லை தான். ஆனால் அரசியல் இப்ப அவர் படிச்சிருக்கிறார். அதனால் தான் அவர் வடக்கில் இருக்கிறார்.. வடக்கின் மக்கள் பிரதிநிதி என்ற சாயம் பூசிய சும் தெற்கில் வாழுறார். இது தான் பொய்யர்களின் அரசியலுக்கும் கொஞ்சம் என்றாலும் மக்கள் முன் மெய்யர்களாக அரசியல் செய்பவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு. 

இதில் ஒருவர் 60 வருசகால அரசியல் பழத்தின் புதிய வாரிசாம். கறுமம்.. பொய்யும் பித்தலாட்டமும் தான் அதுங்க அரசியல். இதில ஒரு அனுபவம் வேண்டி வேற. tw_blush:

2 minutes ago, nedukkalapoovan said:

பொய் சொல்வதற்கு அரசியல் அனுபவம் தேவையில்லை. நல்லா பொய் சொல்லத் தெரிந்தால் சரி. விக்கி ஐயாவிற்கு.. அந்த அனுபவம் இல்லை தான். ஆனால் அரசியல் இப்ப அவர் படிச்சிருக்கிறார். அதனால் தான் அவர் வடக்கில் இருக்கிறார்.. 

இப்பதான் அரசியல் படிச்சிருக்கிறாரா?  அப்போ கத்துக்குட்டி என்று சொல்லுங்கள்.

நான் ஏலவே சொன்னேன் - அரசிய அறிவு வேறு என்றும் அரசியல் அனுபவம் என்பது வேறு என்றும்.

பின்னையது அவரிடம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

இப்பதான் அரசியல் படிச்சிருக்கிறாரா?  அப்போ கத்துக்குட்டி என்று சொல்லுங்கள்.

நான் ஏலவே சொன்னேன் - அரசிய அறிவு வேறு என்றும் அரசியல் அனுபவம் என்பது வேறு என்றும்.

பின்னையது அவரிடம் இல்லை.

சம் சும் கும்பலிடம் இல்லாத அளவுக்கு .. மக்கள் எண்ணம் அறிந்த.. அறியும்... அரசியல் அறிவும் இருக்கு..அனுபவமும் இருக்கு விக்கி ஐயாவிடம். சம் சும் கும்பலைப் போல் பொய் பித்தலாட்ட.. சோர அரசியல் அனுபவம் விக்கி ஐயாவிடம் இல்லை. அதனை தமிழ் மக்கள் அரசியலாகப் பார்ப்பதும் இல்லை. துரோகமாகவே பார்க்கிறார்கள். இதனை தாங்கள் விளங்கிக் கொண்டால்.. தெளிவு பிறக்கும். tw_blush:

9 minutes ago, nedukkalapoovan said:

சம் சும் கும்பலிடம் இல்லாத அளவுக்கு .. மக்கள் எண்ணம் அறிந்த.. அறியும்... அரசியல் அறிவும் இருக்கு..அனுபவமும் இருக்கு விக்கி ஐயாவிடம். 

இப்பதான் விக்கியார் அரசியல் படித்தவர் என்று ஒரு போடு போட்டீர்கள்.

அதற்குள் அனுபவமும் வந்து விட்டதா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பெரியார் said:

இப்பதான் விக்கியார் அரசியல் படித்தவர் என்று ஒரு போடு போட்டீர்கள்.

அதற்குள் அனுபவமும் வந்து விட்டதா?

ஆம் அவர் ஆட்சிக்கு வந்து 3 வருசம்.. அரசியல் அனுபவம் கூடப் பெற்றிருக்கிறார். சம் சும் கும்பலை விட அவர் மக்களின் மனதை நெருங்க.. துரிதமாகச் செயற்படுகிறார் பல விடயங்களில். அதுவே அவர் அரசியல் அறிவுக்கு.. சமூக அறிவுக்கு மேலதிகமாக.. விரைந்து அனுபவங்களை பெறுகிறார் என்றும் காட்டுகிறது.tw_blush:

விக்கி ஐயா முள்ளிவாய்க்காலில் இரண்டு தடவை மக்களோடு போய் மக்களுக்காக அஞ்சலி செய்திருக்கிறார். சம் சும் கும்பல்.. சிங்களவனிடம் போய் சொந்த மக்களைக் கொன்ற இராணுவ அணிவகுப்பை பார்த்து கொட்டாவி விட்டு மகிழ்ந்தது தான் செய்த அரசியல். அதுக்கு கிடைத்த பரிசு.. எதிர்கட்சி தலைவர். அதனால் சொந்த மக்களுக்கு ஆற்றிய நன்மை.. பூச்சியம். tw_blush:

21 minutes ago, nedukkalapoovan said:
7 minutes ago, nedukkalapoovan said:

ஆம் அவர் ஆட்சிக்கு வந்து 3 வருசம்.. அரசியல் அனுபவம் கூடப் பெற்றிருக்கிறார். சம் சும் கும்பலை விட அவர் மக்களின் மனதை நெருங்க.. துரிதமாகச் செயற்படுகிறார் 

 

இப்பதான் விக்கியார் அரசியல் படித்தவர் என்று ஒரு போடு போட்டீர்கள்.

அதற்குள் அனுபவமும் வந்து விட்டதா?

அவர் ஆட்சிக்கு வந்து 3 வருசம் என்றும் ....

அஞ்சலி செலுத்தினால் அரசியல் அனுபவம் வருமா?  சிரிப்பாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா அரசியல் படித்திருக்கிறார்... படித்துக் கொண்டிருக்கிறார்.. அரசியல் அனுபவம் பெற்றிருக்கிறார்.. பெற்றுக்கொண்டிருக்கிறார்.. ஆம்... மக்களின் மனங்களை நெருங்குவதே அரசியலின் முதற் தேவை அதை விக்கி ஐயா செய்கிறார்.. இதெல்லாம் சிரிப்பாத்தான் இருக்கும்.. சிங்களவனோடு போய் ஒன்றுக்கிருங்கோ என்று போதிப்பவர்களுக்கு. தமிழன் தன் அரசியல்..தலைவிதியை தானே தீர்மானிக்க பிரியப்படும் நிலையில்.. அவனை சிங்களவனோடு போய் ஒன்றா இரு என்று சொல்லுறவைக்கு தாங்கள் சொல்வது மக்களின் முன் காமடி என்று தெரியாது.மற்றவர்களைப் பார்த்து சிரிக்க வேண்டியான். அந்தளவு தான் அவர்களின் அறிவு. tw_blush:

3 minutes ago, nedukkalapoovan said:

விக்கி ஐயா அரசியல் படித்திருக்கிறார்... படித்துக் கொண்டிருக்கிறார்.. அரசியல் அனுபவம் பெற்றிருக்கிறார்.. பெற்றுக்கொண்டிருக்கிறார்.. 

இப்பதான் படித்தார்
இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறார் - படித்துக் கொண்டிருப்பார்.

அரசியல் அனுபவம்  பெற்றிருக்கிறார்.  பெற்றுக்கொண்டிருக்கிறார்.

சின்னத்தனமாகவே எழுதுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பெரியார் said:

இப்பதான் படித்தார்
இப்போதுதான் படித்துக் கொண்டிருக்கிறார் - படித்துக் கொண்டிருப்பார்.

அரசியல் அனுபவம்  பெற்றிருக்கிறார்.  பெற்றுக்கொண்டிருக்கிறார்.

சின்னத்தனமாகவே எழுதுகிறீர்கள். 

உங்களுக்கு மொழி விளக்கம் குறைவு என்பது நன்கே தெரிகிறது. பாலர் வகுப்பு தாண்டவில்லைப் போலும். தாண்டினால்.. இறந்த காலம்.. நிகழ்காலம் வேறுபாடு தெரிந்திருந்தால்.. எல்லாம் வெளிக்கும். tw_blush:

2 minutes ago, nedukkalapoovan said:

உங்களுக்கு மொழி விளக்கம் குறைவு என்பது நன்கே தெரிகிறது. பாலர் வகுப்பு தாண்டவில்லைப் போலும். தாண்டினால்.. இறந்த காலம்.. நிகழ்காலம் வேறுபாடு தெரிந்திருந்தால்.. எல்லாம் வெளிக்கும். tw_blush:

பாலர் வகுப்பு தாண்டவில்லை என்றால், எனது பின்னூட்டத்திற்கு ஏன் பதில் எழுதுகிறீர்கள்?

 

தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதாமல், பின்னூட்டங்களுக்கு ஒழுங்காகப் பதில் எழுதப் பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெரியார் said:

பாலர் வகுப்பு தாண்டவில்லை என்றால், எனது பின்னூட்டத்திற்கு ஏன் பதில் எழுதுகிறீர்கள்?

தனிப்பட்ட ரீதியில் தாக்கி எழுதாமல், பின்னூட்டங்களுக்கு ஒழுங்காகப் பதில் எழுதப் பாருங்கள். 

திருப்பி திருப்பி ஒன்றையே எழுதிறது பாலர் வகுப்பில் தானே. உண்மையைச் சொன்னால்.. தனிப்பட்ட தாக்குதல் என்கிறீர்கள். மேலே நீங்கள் எங்களை குவாட் செய்து புதிதாக எதனை எழுதி இருக்கிறீர்கள் என்று ஒருக்கால் வாசித்து எழுதவும்.

உங்களின் முட்டாள் தனமான நிலைப்பாடுகளை மக்கள் மீது திணிக்க இங்கு இடமில்லை. அந்த வகையில் உங்களுக்கு எமது அரசியல் விளங்கும் வரை சிலவற்றை சொல்ல வேண்டியே உள்ளது. அது உங்களுக்கு மட்டுமல்ல... உங்களைப் போன்று மாறுவேடத்தில் உள் நுழைந்து.. சிங்களவனுக்கு ஹிந்தியனுக்கு வக்காளத்து வாங்கும் அனைவருக்கும் சமர்ப்பணமாகும்.tw_blush:

 

2 minutes ago, nedukkalapoovan said:

திருப்பி திருப்பி ஒன்றையே எழுதிறது பாலர் வகுப்பில் தானே. உண்மையைச் சொன்னால்.. தனிப்பட்ட தாக்குதல் என்கிறீர்கள். 

 

பாலர் வகுப்பு தாண்டாமல் இருப்பவருக்கு ஏன் நீங்கள் பதில் எழுத்துகிறீர்கள் என்று வினவினேன்?

உங்கள் கமெண்ட்ஸ் எல்லாவற்றையும் பாருங்கள்.  எல்லாரையுமே தனிப்பட்ட தாக்குதல்தான்.

உங்களது கமெண்ட்ஸ் இல் சத்தானது ஒன்றுமில்லை.

6 minutes ago, nedukkalapoovan said:

 

உங்களின் முட்டாள் தனமான நிலைப்பாடுகளை மக்கள் மீது திணிக்க இங்கு இடமில்லை. அந்த வகையில் உங்களுக்கு எமது அரசியல் விளங்கும் வரை சிலவற்றை சொல்ல வேண்டியே உள்ளது. அது உங்களுக்கு மட்டுமல்ல... உங்களைப் போன்று மாறுவேடத்தில் உள் நுழைந்து.. சிங்களவனுக்கு ஹிந்தியனுக்கு வக்காளத்து வாங்கும் அனைவருக்கும் சமர்ப்பணமாகும்.tw_blush:

 

 

எனது கருத்துக்களை நான் யாரின் மீதும் திணிக்கவில்லை. 

உங்களது புலி அரசியல் எனக்குத் தேவை அற்றது. 

சிங்களவன், ஹிந்தியன் -  இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

 இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதால் எனக்கென்ன நன்மை?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.