Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிராமப் பஞ்சாயத்தின் குரூர கன்னித்தன்மை சோதனை: 48 மணி நேரத்தில் திருமணம் ரத்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Groom terminates marriage after wife fails 'virginity test’

கிராமப் பஞ்சாயத்தின் குரூர விர்ஜினிட்டி டெஸ்ட்... 48 மணி நேரத்தில் திருமணத்தை ரத்து செய்தனர்!

மும்பை: மகராஷ்டிர மாநிலத்தில் திருமணம் முடிந்த தம்பதிக்கு குரூரமான முறையில் கன்னித்தன்மை சோதனை நடத்தி, மணமகள் ஏற்கனவே கன்னி கழிந்தவர் என்று கூறி, திருமணம் நடந்த 48 மணி நேரத்திற்குள்ளாகவே அதை ரத்து செய்து அராஜகமாக நடந்து கொண்டுள்ளது ஒரு கிராமப் பஞ்சாயத்து. 

நாசிக்கில் கடந்த மே.22-ந் தேதி திருமணம் ஒன்று நடந்தது. முதலிரவுக்கு முன்பாக கிராமப் பஞ்சாயத்துக் குழு மணமகனிடம் வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொடுத்துள்ளனர். முதலிரவு முடிந்ததும் அதை மீண்டும் தங்களிடம் கொண்டுவரும்படி பஞ்சாயத்தார் கூறியுள்ளனர். 

அதன்படி, மணமகன் முதலிரவு முடிந்த பின்னர் தனது வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொண்டுவந்து தலைவர்களிடம் காட்டி உள்ளார். அதைப் பார்த்த அந்த கேடு கெட்ட பஞ்சாயத்துக் குழுவினர், அதில் ரத்தக் கறை இல்லையே என்று கூறி, மணமகள் கன்னித்தன்மையற்றவர் என்று கூறி திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

இதனால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். சமரசக் கூட்டத்திற்கு கோரிக்கை வைத்தனர். அக்கூட்டத்தில் சமரசம் ஏற்படவில்லை. இதையடுத்து மணமகள் வீட்டார் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது. மணமகள் போலீஸ் ஆக வேண்டும் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனால், அவர் சைக்கிள் ஓட்டுதல், நீளம் தாண்டுதல், மற்றும் கடின பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. 

கன்னித்தன்மை சோதனை என்ற பெயரில் கிராமப் பஞ்சாயத்தால் நடந்து கொண்ட அநாகரீக முறைக்கும், திருமணத்தைப் பிரித்து வைத்த கொடும் செயலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் சாதி பஞ்சாயத்து மற்றும் ஊர்பஞ்சாயத்து எந்த வடிவிலும் செய்ல்படக்கூடாது என தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில், இது போன்ற குரூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தற்ஸ் தமிழ்.

பாஞ்சாயாத்து.... தீர்ப்பை மாத்திச் சொல்லுய்யா.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
34 minutes ago, தமிழ் சிறி said:

நாசிக்கில் கடந்த மே.22-ந் தேதி திருமணம் ஒன்று நடந்தது. முதலிரவுக்கு முன்பாக கிராமப் பஞ்சாயத்துக் குழு மணமகனிடம் வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொடுத்துள்ளனர். முதலிரவு முடிந்ததும் அதை மீண்டும் தங்களிடம் கொண்டுவரும்படி பஞ்சாயத்தார் கூறியுள்ளனர். 

அதன்படி, மணமகன் முதலிரவு முடிந்த பின்னர் தனது வெள்ளை நிற படுக்கை விரிப்பை கொண்டுவந்து தலைவர்களிடம் காட்டி உள்ளார். அதைப் பார்த்த அந்த கேடு கெட்ட பஞ்சாயத்துக் குழுவினர், அதில் ரத்தக் கறை இல்லையே என்று கூறி, மணமகள் கன்னித்தன்மையற்றவர் என்று கூறி திருமணத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர். 

இதுக்கு நம்ம குஷ்புவை பஞ்சாயத்து சொல்ல விடணும். சுகாசினியும் ஓகே :cool:

இந்திய காட்டுத் தர்ப்பார்!

  • கருத்துக்கள உறவுகள்


படுக்கை விரிப்பை எதுக்கு கேட்டாங்க பன்னாடைங்க என்று அவங்க எதிர் பார்த்த மாதிரி சாயத்தினை பூசி அனுப்பி இருக்கலாமே.

ஆகவே, இந்த விசயத்தில் தெரிந்தே நடந்து கொண்ட மாப்ளை வீட்டுக்காரர் தான் இதுக்கு பொறுப்பு சொல்லணும். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
On 6/1/2016 at 0:54 PM, தமிழ் சிறி said:

பாஞ்சாயாத்து.... தீர்ப்பை மாத்திச் சொல்லுய்யா.....

நீங்க என்னடா சொல்லறது பஞ்சாயத்து.

இப்ப சொல்லுறம் பாரு தீர்ப்பு!!

  • பெண்ணுக்கு கன்னி கழிக்க முடியாத நிலைமையில் இருந்த, பொண்ணு மேலேயே நாசூக்கா குற்றம் சாட்டி, தன் பிரச்னையை மறைக்க முனைந்த, மாப்பிள்ளையுடன் வாழ்வதிலும் பார்க்க, அந்த பொண்ணு தாய், தகப்பன் கூட இருப்பது நல்லது.
  • ஆகவே இந்த ரத்தினை நாம் வரவேற்கிறோம்.
  • கருத்துக்கள உறவுகள்

இதுமாதிரியான வழக்கம் இலங்கையில் இஸ்லாமிய சமூகத்திடம் உள்ளது. இப்படியான கன்னித்தன்மைப் பரிசோதனையை இஸ்லாமிய மதபோதகர்களே இதே முறைமையில் உறுதிப்படுத்துவதாக எனக்கு ஒரு முஸ்லீம் சகோதரி சொன்னதோடு மட்டுமல்லாமல் அவளுடைய நண்பிக்கு இப்படியான இக்கட்டு நேர்ந்தவேளையில் அதாவது மணமகன் மணமகள் இருவரும் திருமணத்திற்குமுன்பே காதலர்களாக உறவு வைத்திருந்துள்ளார்கள் திருமணவேளையில் மதப்பெரியவர்களால் கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டபோது மணமகன் பிளேடால் தன்னைக்காயப்படுத்தி அதன் மூலம் மணமகளை இத்தகைய இக்கட்டு நிலையில் இருந்து காப்பாற்றியதாகவும் சொன்னாள்...... இன்னும் உலகம் இப்படியும் இருக்கு:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வல்வை சகாறா said:

இதுமாதிரியான வழக்கம் இலங்கையில் இஸ்லாமிய சமூகத்திடம் உள்ளது. இப்படியான கன்னித்தன்மைப் பரிசோதனையை இஸ்லாமிய மதபோதகர்களே இதே முறைமையில் உறுதிப்படுத்துவதாக எனக்கு ஒரு முஸ்லீம் சகோதரி சொன்னதோடு மட்டுமல்லாமல் அவளுடைய நண்பிக்கு இப்படியான இக்கட்டு நேர்ந்தவேளையில் அதாவது மணமகன் மணமகள் இருவரும் திருமணத்திற்குமுன்பே காதலர்களாக உறவு வைத்திருந்துள்ளார்கள் திருமணவேளையில் மதப்பெரியவர்களால் கன்னித்தன்மை பரிசோதிக்கப்பட்டபோது மணமகன் பிளேடால் தன்னைக்காயப்படுத்தி அதன் மூலம் மணமகளை இத்தகைய இக்கட்டு நிலையில் இருந்து காப்பாற்றியதாகவும் சொன்னாள்...... இன்னும் உலகம் இப்படியும் இருக்கு:rolleyes:

இந்த விடயம் குறித்து முன்பும் பேசி இருக்குறோம். இலங்கையில் எல்லா சமூகங்களிலும் உள்ளது. ம்.ம்ம்ம் யாழில் கொஞ்சம் படிப்பு அறிவு கூடவாகையால் இது குறைவு அல்லது இல்லை.

எனது டாக்டர் நண்பர், இந்த விடயமாக, கண்டி வைத்தியசாலையில், கன்னித்திரை மீள் அறுவைசிகிச்சை செய்ய, மேல் தட்டு சிங்கள பெற்றோர் தமது மகள் மாரை ரகசியமா கூட்டி வருவது குறித்து சொன்னார். 

ஒன்று கன்னித்தன்மை கழிந்த பெண்ணாகவோ, அல்லது விளையாட்டுத் துறை சார்ந்த, அப்பாவி பெண் பாதிப்புக்கு ஆளாகக் கூடாது என்றோ செய்கிறார்கள். விடயம் ரகசியமாக இருக்கும் என வேறு சமூக வைத்தியர்களை நாடுவார்களாம்.

இது ரகசியமான பரகசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.