Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ஒரு கோழிக்குஞ்சு தன் தாய் கோழியை பார்த்து கேட்டது. 
ஏம்மா... இந்த மனிதர்களுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள்  இருக்கின்றன? 
 கோபால்.👨
 முருகன். 👨
 பழனிச்சாமி 👨
 மாயாண்டி 👨
 முருகேசன். 👨
 ஆனால்  நமக்கு மட்டும் "கோழி" 🐔என்ற  ஒரே பெயர் மட்டும் கூப்பிடுகிறார்கள். 
அதற்கு தாய்கோழி 🐔:
மனிதர்களுக்கு  பல பெயர்கள் உள்ளன. 
ஆனால் மனிதன் செத்தபிறகு அவனுக்கு  ஒரே பெயர் " பிணம் "💀💀💀💀💀💀💀
ஆனால் நாம் செத்தபிறகு  நமக்கு பல பெயர்கள் :
சிக்கன் 65.
சிக்கன் புலாவ்
சில்லி சிக்கன் 
சிக்கன் வறுவல்
சிக்கன் தந்தூரி
கார்லிக் சிக்கன்
ஜிஞ்சேர் சிக்கன்
பெப்பேர் சிக்கன்....
🥙பெயர், பதவி, முக்கியமல்ல.. செயல்பாடு, பயன்பாடு வாழ்வில் முக்கியம்..👍

  • 2 weeks later...
  • Replies 313
  • Views 62.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • அன்புத்தம்பி
    அன்புத்தம்பி

    ஒரு குடும்ப தலைவர் இறந்து விட்டார். அவருக்கு வயது 40 கூட ஆகவில்லை. அவரது மனைவி, 9 வயதான மகன், பெற்றோர் அனைவரும் உடலின் அருகே அமர்ந்து கதறி அழுது கொண்டிருந்தனர்.

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    படித்ததில் பிடித்த...  உண்மைக் கதை. உலகில் சூரியன் முதலில் உதிக்கும் நாடு நியூசிலாந்து, கடைசியாக உதிக்கும் இடம்... அமெரிக்கா நாட்டில் உள்ள, சமோவா தீவுகள். அதற்காக அமெரிக்கா பெரிதாக கவலைப்பட்டதாக

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

    உருப்படாதவன்.  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

ப்ளாக் டீயும்... ப்ளாக்கான திருமணமும்.

அன்றொரு நாள்
பெண் பார்க்க எல்லாரும் குடும்பத்தோட பொண்ணு வீட்டுக்கு போயிருந்தோம்.
ஒரு தட்டு நிறைய மிக்ஸர், முறுக்கு, நெய் பிஸ்கெட்டு, முட்டை பிஸ்கட்.
இன்னொரு தட்டுல சிக்கென் கட்லெட், பருப்பு வடை, பழ, பஜ்ஜி.!
குடிக்க காப்பியா டீயான்னு அவங்க கேட்க...
எல்லாரும் டீ, காப்பி ன்னு ஆர்டர் பண்ண...
நான் மட்டும் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு
"அய் லைக் ப்ளாக் டீ " ன்னு சொல்ல....
டீயும் வந்துச்சு...
எல்லோருக்கும் என்னையும் பிடித்து போக...,
பெண்ணை எங்க வீட்டிலும் பிடித்து போக...
கூச்சத்தை கலைத்து பழ, பஜ்ஜியை ஒரு கடி கடித்து...,
ப்ளாக் டீயை வாயருகே கொண்டு சென்று குடிக்க முற்பட்டேன்..
எங்க அக்கா பையனுக்கு என்ன தோணிச்சோ...
திடீர்ன்னு,
"மாமா....
சோடா ஊத்தலையா"ன்னு கேட்க..
Rest is History.....
ப்ளாக் டீயும்... ப்ளாக்கான திருமணமும். 

  • கருத்துக்கள உறவுகள்
நீதிபதி தன் மனைவியிடம் சொன்னார்,
"என் வாழ்நாளில் நான் வழக்கறிஞராக இருந்தபோதும் பிறகு நீதிபதியாக வந்தபோதும் இப்படி ஒரு வழக்கை நான் சந்தித்தது இல்லை,
அப்படி ஒரு வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு வந்தது"
மனைவி கேட்டார்:-
அப்படி என்ன வழக்கு சொல்லுங்கள்!!
அதற்கு நீதிபதி சொன்னார்:-
வயதான தந்தை தன் மகனைப் பற்றி வழக்கு பதிவு செய்தார்.
அதில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால்,
"என் மகன் எனக்கு பணம் தருவதே கிடையாது,
எனவே மாதம் ஒரு முறையாவது அவன் எனக்கு பணம் கொடுக்க வேண்டும்!!
உடனே அந்த முதியவரின் மகனை அழைத்து நான் (நீதிபதி) கேட்டேன்,
இவர் உங்களின் தந்தையா.??
என்று கேட்டேன்!!
அதற்கு அவர்:-
ஆம் இவர் என் தந்தை தான் என்று சொன்னார்!!
அப்போது நான் அவரிடம் (மகனிடம்) கேட்டேன்,
உங்களின் தந்தை குறிப்பிடுவது போல் மாத மாதம் அவருக்கு பணம் கொடுப்பதில் உங்களுக்கு என்ன சிரமம்.??
ஏன் அப்படி கொடுப்பதில்லை.??
அதற்கு அவர் (மகன்) சொன்னார்:-
ஐயா, அவர் பணக்காரர்.
அவருக்கு வருமானம் அதிகமாக வருகிறது.
அவர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
அவருக்கு ஓய்வூதியம் வருகிறது.
அதனால்தான் நான் என் தந்தைக்கு பணம் கொடுக்கவில்லை.
இவர் (என் தந்தை) இப்படி வழக்கு தொடுத்திருப்பது எனக்கு வியப்பாக உள்ளது!!
நான் முதியவரிடம் கேட்டேன்.
உங்களுக்கு பணம் உள்ளது,
மாதா மாதம் ஓய்வூதியமும் வருகிறது,
வரவை விட உங்களின் செலவு குறைவாகத்தானே இருக்கிறது.??
என்று கேட்டேன்!!
அதற்கு அந்த பெரியவர்:-
ஆம் எனக்கு பணம் போதிய அளவில் உள்ளது.
இருந்தாலும் என் மகன் மாதா மாதம் எனக்கு குறைந்தபட்சம் 100 ரூபாயாவது கொடுக்க வேண்டும்.
அதுவும் என் மகன் நேரில் வந்து என்னிடம் கொடுத்து,
குறைந்தபட்சம் ஒரு நாளாவது என்னிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்!!
நானும் பெரியவர் சொன்னபடியே அவரின் மகனிடம் நீங்கள் உங்கள் தந்தைக்கு பணம் கொடுத்து,
ஒரு நாள் அவரிடம் தங்கி விட்டு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டேன்!!
நீதிமன்றத்தை விட்டு நான் வெளியில் வந்ததும் அந்த முதியவரை தனியாக அழைத்து,
உங்களிடம் பணம் அதிகமாக இருந்த போதும் உங்கள் மகனிடம் ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு,
அந்த முதியவர் சொன்னார்,
எனக்கு இருப்பதோ ஒரே ஒரு மகன்.
நானும் என் மனைவியும் என் சொந்த ஊரில் வசிக்கிறோம்,
மாதம் ஒரு முறையாவது என் மகனை பார்க்கின்ற வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று கருதினேன் என்று கண்கள் கலங்கியபடி சொன்னார்......
Voir la traduction
 
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

409717626_1585878045517743_2132391997270

முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது.
"இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்...
நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம்.
நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் .
இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் .
நான் இறந்து விட்டால்...
என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை.
எனவே
எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும்.
அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.
வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பகதிற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள்
மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.
என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால்...
தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்."
இப்படிக்கு மீனாள் ராமசாமி.
என்று எழுதி இருந்தது.
சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர்.
தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டிருந்தது.
'யார் இந்த மீனாள் ராமசாமி? '
என்று அறிந்து கொள்ள காப்பக மேனேஜருக்கு, ஆவல் அதிகரித்து வந்தது.
'ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும்' என்று நினைத்தார்.
ஆனால், வேலைப் பளு காரணமாக
முடியவில்லை.
அன்று ஞாயிற்றுக்கிழமை...
'இன்று, கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார்.
அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.
சின்ன கட்டிடம்...
வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது.
பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது.
எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.
"நீங்கள் தானே மீனாள் ராமசாமி?”
என்று கேட்டார்.
“ஆமாம் தம்பி! நீங்கள் யார்? “ என்று கேட்டார்.
விவரங்களைச் சொன்னார்.
“அப்படியா தம்பி
ரொம்ப சந்தோஷம்...
உட்காருங்க.
ஏதாவது சாப்பிடுகிறீர்களா?”
என்று இருக்கையைக் காண்பித்தார்.
“ஒன்றும் வேண்டாம்
தண்ணீர் மட்டும் கொடுங்கள்”
தண்ணீர் கொடுத்தபடியே,
“நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்...
ஆரம்பித்தில், இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் .
பிறகு இரண்டு, மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம்.
எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும்.
கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள்.
நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம்.
எங்களுக்கு குழந்தைகள் இல்லை...
எனவே, அதிகம் செலவுகள் இல்லை.
அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம்.
வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்...
அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார்.
எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்”
என்று விபரமாகச் சொல்லி
முடித்தார்.
இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது.
“இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.
“சரிங்க ஐயா,
உங்களைப் பார்க்க வந்தேன்.
வேறு விஷயம் இல்லை...
கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார் மானேஜர்.
சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது .
அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது .
வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும்
“நான்கு கொடுங்கள் ஐந்து கொடுங்கள் "
என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.
ஆச்சரியம் என்னவென்றால், அங்கு
கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லை.
வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக்
கொண்டார்கள்.
பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை.
இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள்.
“கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே?
யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “
என்று கேட்டார் மானேஜர்.
“இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
அப்படியே இருந்தாலும் போனால் போகிறது.
காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்”
“இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்”
என்று சொன்னார்.
மானேஜருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
'இப்படியும் மனிதர்களா?' என்று வியப்படைந்தார்.
மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார்.
மாதங்கள் போனது.
கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை.
'என்ன விஷயம்?' என்று அவருக்குப் புரியவில்லை.
காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள்.
மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள்.
எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
மீனாட்சி அம்மாள் மட்டும் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள்.
அதே கல்லாப்பெட்டி .
எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள்.
சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்...
மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை.
உள்ளே நுழைந்த போது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள்.
மேனேஜருக்கு புரிந்து விட்டது.
விசாரித்ததில்...
அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம்.
அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம்.
இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி.
“உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.
“தெரியும் “என்று சொன்னார்.
“நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றார்.
“இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்து விட்டது.
எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன்.
அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானே தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன்.
அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும்.
அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும்.
என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.
இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.
“சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்”
என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள்.
இப்போது அவர்களுக்குபுரிந்து விட்டது...
*இந்த உலகம் எப்படி பட்டது * என்று...
எதையும் பெறுவதை விட...
*கொடுப்பதில் தான்... *
*ஆனந்தம்,*
*அமைதி,*
*திருப்தி*
*நிம்மதி* உள்ளது.
இதை புரிந்து கொண்டால் நாமும் புத்திசாலி தான்.
நன்றி!
Singaravelu Balasubramaniyan
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
முன்னொரு காலத்தில் ஜப்பான் நாட்டில் சட்டம் ஒன்று நடைமுறையில் இருந்தது.*
அதாவது வேலை செய்ய முடியாத முதுமைப் பருவத்தினை அடையும் வயதானவர்களை தூக்கிச் சென்று, மலைப் பகுதியில் விட்டு விட வேண்டும்.
இதனால் வயதானவர்களைப் பராமரிக்க வேண்டிய சுமை நாட்டு மக்களுக்கு இல்லை என்பது அரசனின் எண்ணம்.
அந்தச் சட்டம் நடைமுறையில் இருந்த போது ஒரு தந்தையும் மகனும் ஒருவரிடம் ஒருவர் மிகுந்த அன்பு கொண்டவர்களாக விளங்கினர்.
நாளடைவில் அந்த‌த் தந்தை வேலை செய்ய இயலாத முதுமைப் பருவத்தை அடைந்தார்.
ஆதலால் அந்நாட்டின் சட்டப்படி அவரை மகன் மலைப்பகுதியில் கொண்டு விட்டு விட வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானான்.
தந்தையைப் பிரிய அவனுக்கு மனமே வரவில்லை.
எனினும் அரச தண்டனைக்குப் பயந்து அவன் தன்னுடையத் தந்தையை மலைப்பகுதிக்கு முதுகில் சுமந்து சென்றான்.
மலைப்பகுதியை அடைந்த போது அவனுடைய மனம் மிகவும் வருந்தியது. ஆதலால் அவன் தந்தையை தன்னுடனே அழைத்துக் கொண்டு திரும்பி வீட்டிற்கு வந்து விட்டான்.
வீட்டின் பின்பகுதியில் தந்தையை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்தான். மிகவும் ரகசியமாக அவருக்கு உணவளித்து வந்தான்.
சாம்பல் கயிறு.
ஒரு நாள் அரசன், தன் மக்களின் அறிவுத் திறனை சோதிக்க எண்ணி, போட்டி ஒன்றை அறிவித்தான்.
சாம்பலால் திரிக்கப்பட்ட கயிறினை கொண்டு வர வேண்டும் என்பதே அப்போட்டியாகும்.
போட்டியைக் கேட்டதும் எல்லோரும் சாம்பலால் எவ்வாறு கயிறு திரிக்க இயலும் என்று எண்ணினர். யாராலும் சாம்பல் கயிறு உருவாக்க முடியவில்லை.
அரசனின் போட்டி பற்றி அந்த‌ மகன் தன் தந்தையிடம் தெரிவித்தான்.
போட்டியைக் கேட்ட தந்தை, மகனிடம் பெரிய தாம்பாளத்தில் கயிறினை முறுக்கி வைத்து, அதனை எரியச் செய்தால் சாம்பலால் திரித்த கயிறு கிடைக்கும் என்றார்.
மகனும் தந்தை கூறியபடி தாம்பாளத்தில் கயிறினை வைத்து எரித்தான். கயிறு எரிந்து சாம்பாலான பின்பும் அதே கயிறு வடிவில் இருந்தது. இதனை அரசனிடம் காண்பித்து பரிசினைப் பெற்றான்.
அடி எது? நுனி எது?
ஒரு மாதம் கழித்து அரசன் இரண்டாவது போட்டியை அறிவித்தான்.
அரசன் ஒரு மரக்கொம்பைக் கொடுத்து இதனுடைய அடிப் பாகம் மற்றும் நுனிப் பாகத்தைக் கண்டு பிடிக்குமாறு மக்களுக்கு ஆணையிட்டான்.
கிட்டத்தட்ட இரு பகுதியும் ஒன்றாகத் தெரிந்ததால் யாராலும் அடி எது? நுனி எது? என்று சொல்ல முடியவில்லை.
மகன் தந்தையிடம் அரசனின் கேள்வியைக் கேட்டான்.
தந்தை மரக்கொம்பை தண்ணீரில் போட்டால், அது லேசாக சாய்வாக மூழ்கும்; அப்போது கீழ் நோக்கி இருக்கும் பகுதி அடி, மேல் நோக்கி இருக்கும் பகுதி நுனி என்றார்.
மகனும் தந்தை கூறியவாறே அரசனுக்குச் செய்து காண்பித்து இம்முறையும் பரிசினைப் பெற்றான்.
தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம்.
அரசன் மூன்றாவது போட்டியை மிகவும் கடுமையானதாக வைத்தான்.
அதாவது தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் ஒன்றினைத் தயார் செய்து வருமாறு மக்களிடம் கூறினான்.
வழக்கம் போலவே எல்லா மக்களும் பின்வாங்கி விட்டனர்.
அரசனின் கேள்வியால் மகன் மிகவும் சோர்ந்து தந்தையிடம் வந்து நடந்ததைக் கூறினான்.
தந்தை அவனிடம் “மேளத்திற்குத் தேவையான தோல்களை எடுத்துக் கொள். மலைப்பகுதிக்குச் சென்று தேனீக்கூடு ஒன்று கொண்டு வா. அதனை உள்ளே வைத்து மேளத்தை தயார் செய்” என்றார்.
மகனும் தந்தை கூறியவாறே மேளத்தை தயார் செய்து அதனை அசைக்காமல் கொண்டு சென்று அரசனிடம் தந்தான்.
அரசன் மேளத்தைக் கையில் எடுத்து மேளத்தை அசைத்தான். மேளத்திற்கு உள்ளே இருந்த தேனீக்கள் அசைவினால் மேளத்திற்குள் இங்கும் அங்கும் பறந்தன. இதனால் மேளத்தில் தட்டாமல் ஒலி உண்டானது.
இதனைக் கண்டு ஆச்சர்யமடைந்த அரசன் “உன்னால் எப்படி மூன்று கேள்விகளுக்கும் சரியான விடைகளை செய்து காண்பிக்க முடிந்தது?” என்று கேட்டான்.
அனுபவம் தந்த பதில்கள்.
“அரசே உங்களுடைய கேள்விகளுக்கு விடை காணும் அளவிற்கு எனக்கு அனுபவம் கிடையாது. என்னுடைய வயதான தந்தை என்னுடன் இருக்கிறார். அவர் மூலமே எனக்குத் தங்களின் கேள்விக்கான பதில் கிடைத்தது.” என்று கூறினான்.
இளைஞனின் பதில் அரசனை நெகிழச் செய்தது.
சிக்கலான பிரச்சினைகளைத் தீர்வு செய்ய‌ வயதானவர்களின் அனுபவம் உதவியாக இருக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொண்டான்.
உடனே அவன் “இனி வேலை செய்ய இயலாத வயதானவர்களை, மலைப்பகுதிக்கு கொண்டு போய் விடத் தேவையில்லை” என்று உத்தரவு போட்டான்.
அதுமுதல் வயதானவர்கள் தங்கள் கடைசிக் காலத்தை பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாகக் கழித்தனர்.
அனுபவ அறிவு என்றைக்கும் விலை மதிப்பில்லாதது என்பதைத் தட்டாமல் ஒலி எழுப்பும் மேளம் கதை மூலம் அறியலாம்.
ஆம்,
வயதான பெரியவர்கள்
வீட்டில் இருப்பதே நமக்கு இறைவன் கொடுத்த அருள் என்று உணர்வோம்.
நம்மை ஆளாக்கிய பெற்றோரின் வயதான காலத்தில் அவர்கள்
நம்மோடு இருப்பதும் அவர்களை பராமரிப்பதும் நமக்கான கடமை மட்டுமல்ல
நமக்கு கிடைத்த அருள் என்று உணர்வோம்.
தொப்புள் கொடியில் இருந்தே தொடங்கிய தாயும்
மார்பிலும் தோளிலும் தூக்கிச் சுமந்து கால் தேய உழைத்து நம்மை உருவாக்கிய தந்தையும் நம்மிடம் நன்றியை எதிர்பார்க்கவில்லை
*என்றாலும் நாம் நன்றியுடன்* *பராமரிக்க வேண்டும்.*
🙏🌷🙏🌷🙏🌷🙏🌷
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

 

கடவுள் ஒரு நாள் கழுதையை படைத்து அதனிடம் சொன்னார்,
“நீ ஒரு கழுதை. காலை முதல் மாலை வரைக்கும் நீ உழைக்க வேண்டும். உன் மேல் சுமைகள் இருக்கும். நீ புல்தான் சாப்பிட வேண்டும்.
உனக்குஅவ்வளவாக அறிவு இருக்காது. நீ 50 வருடங்களுக்கு வாழ்வாய்.
இதற்கு கழுதை சொன்னது
நான் கழுதையாக இருக்கிறேன். ஆனா 50 வருடம் ரொம்ப அதிகம். எனக்கு 20 வருடம் போதும்.”
கடவுள் கழுதையின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து ஒரு நாயை படைத்து அதனிடம் சொன்னார்
“நீ மனிதனின் வீட்டைகாக்கும் காவலன். அவனுடைய அன்பு தோழனாக இருப்பாய். மனிதன் உண்ட பிறகு உனக்கு கொடுப்பான்.
நீ 30 வருடங்களுக்கு வாழ்வாய்.”
இதற்கு நாய் கூறியது,
“கடவுளே, 30 வருஷம் ரொம்ப அதிகம். எனக்கு 15 வருஷம் போதும்”
கடவுள் நாயின் ஆசையை நிறைவேற்றினார்.
அடுத்து கடவுள் குரங்கை படைத்து அதனிடம் சொன்னார்
“நீ ஒரு குரங்கு. மரத்திற்கு மரம் தாவ வேண்டும். நீ வித்தைகள் காட்டி மற்றவர்களை மகிழ்விப்பாய்.
நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.”
இதற்கு குரங்கு கூறியது “20 வருஷம் ரொம்ப அதிகம். 10 வருஷம் போதும்”
கடவுளும் குரங்கின் ஆசையை நிறைவேற்றினார்.
கடைசியாக மனிதனை படைத்து அவனிடம் சொன்னார்.
”நீ ஒரு மனிதன். உலகில் உள்ள ஆறு அறிவு ஜீவன் நீ மட்டுமே. உன் அறிவை கொண்டு மற்ற மிருகங்களை ஆட்சி செய்வாய். உலகமே உன்கையில். நீ 20 வருடங்களுக்கு வாழ்வாய்.”
இதற்கு மனிதன் கூறினான்.
“20 வருஷம் ரொம்ப குறைவு.
கழுதை வேண்டாம் என்ற 30 வருடங்களையும்,
நாய் வேண்டாம் என்ற 15 வருடங்களையும்,
குரங்கு வேண்டாம் என்ற 10 வருடங்களையும்
எனக்கு கொடுத்து விடு”
கடவுள் மனிதனின் ஆசையை நிறைவேற்றினான்.
அன்று முதல்
மனிதன் முதல் 20 வருடங்களை ஜாலியாக வாழ்கிறான் மனிதனாக.
கல்யாணம் செய்து கொண்டு அடுத்த 30 வருடங்களை கழுதை போல் எல்லாம் சுமைகளை தாங்கி கொண்டு, அல்லும் பகலும் உழைக்கிறான்.
குழந்தைகள் வளர்ந்தபிறகு, அடுத்த 15 வருடங்களுக்கு அவன் வீட்டின் நாயாக இருந்து, அனைவரையும் பாதுகாத்து கொள்கிறான். மிச்ச மீதி உள்ளதை சாப்பிடுகிறான்.
வயதாகி, Retire ஆன பிறகு குரங்கு போல் 10 வருடங்களுக்கு மகன் வீட்டிலிருந்து மகள் வீட்டிற்கும், மகள் வீட்டிலிருந்து மகன் வீட்டிற்கும் தாவி, தன் பேரகுழந்தைகளுக்­கு வித்தைகள் காட்டி மகிழ்வித்து மரணிக்கின்றான்.
முடிவில்லா எண்ணங்கள்.........!
  • கருத்துக்கள உறவுகள்

அழைப்பில் அலாதி ஆனந்தம்

author.png கதையாசிரியர்: வளர்கவி
tags.png கதை வகை: ஒரு பக்கக் கதை
category.png கதைத்தொகுப்பு: குடும்பம்
date.png கதைப்பதிவு: February 19, 2024
eye.png பார்வையிட்டோர்: 448 

நினைத்தே பார்க்கவில்லை. இப்படிச் சொல்வார் என்று.

கல்யாணத்துக்குத்தான் அழைக்க வந்தார். ஆனால் சம்பிரதாய அழைப்பாக இல்லாமல் ஒரு சரித்திரப் பதிவாக இருந்தது அவர் அழைத்த விதம்.

என்வீட்டிற்கு வந்தவர் ‘கல்யாணத்துக்குக் கண்டிப்பா குடும்பத்தோட வந்திடணும்., குறிப்பா  உங்க அம்மாவையும்  கூட்டிக்கிட்டுத்தான் வரணும்’ என்றார் உண்மை அன்போடு.

‘அம்மா எதுக்குங்க? அவங்களுக்கு எண்பது வயதாச்சு முடியாதே!’ என்றேன்.

%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%

‘என்ன அப்படிச் சொல்றீங்க?! நாளை நமக்கும் வயசாகாதா என்ன? வயதில்  மூத்தவங்க வாழ்த்தே தனிதான்! கிடைக்க என் குடும்பத்துக்கு கொடுத்து வச்சிருக்கணும்!

உங்களுக்குச் சிரமம்னா… வேணா ‘கேஃப்’ புக் பண்ணி அனுப்பி வைக்கிறேன்!’ என்று சொல்லி நெகிழ்ந்தார். 

ஆயிரம் ரூபாய் மொய் வந்தால் கிடைக்காத ஆனந்தம் அம்மாவை அழைத்து வரச் சொல்லி அவர் பத்திரிக்கை வைத்ததில் எனக்குக் கிடைத்தது.

சொன்னபடி அழைத்துப் போனேன். அம்மாவை அவரே வந்து கைத் தாங்கலாக அழைத்துப் போய் முன் வரிசையில் உட்கார வைத்தும், மாங்கல்யத்தை கொடுத்து வாழ்த்தச் சொல்லி வாங்கீட்டதும், பந்திவரை பவ்யமாய் போலி இல்லாமல் இருந்து உபசரித்ததும் அந்த இளம் தம்பதியினருக்கு  அவர் கற்றுத் தந்த கலாச்சாரப் பதிவாய்  அமைந்தது.

எவ்வளவு சொல்லியும் மொய்கவரை திருப்பித்தந்து எங்களை அனுப்பிவிட்டார்.

நிஜங்கள் இன்னமும் உலகில் நடமாடத்தான் செய்கின்றன. நாம்தான் உலகை ஒழுங்காய் புரிந்து  கொள்வதில்லை. காரணம்…

அழைப்பிதழே இப்போ தெல்லாம் வாட்ஸிப்பில் தானே வருகிறது?! 

வாட்ஸிப்பால் வடுக்கள் பதிகின்றன. நேரில் அழைப்பதே நேசத்தை மெய்ப்பிக்கிறது.

https://www.sirukathaigal.com/ஒரு-பக்கக்-கதை/அழைப்பில்-அலாதி-ஆனந்தம்/

  • கருத்துக்கள உறவுகள்
பிரான்சில் வளர்நிலை 7 இல், தமிழ் கற்றுவரும் மாணவி ஒருவர் என்னிடம் ஒரு கேள்வியினைக் கேட்டார்.
ஆசிரியர், எங்களுடைய அம்மா, அப்பாவிற்கு பெரிதாகப் பிரெஞ்சு மொழி தெரியாது… ஆனால் எங்களை நன்றாகப் படிப்பிக்கவேணும், நல்ல முறையில் எங்களை வளர்க்கவேணும் என்று எப்படியெல்லாம் தெரிஞ்சு வைச்சிருக்கினம்? நான் யோசிச்சு பார்க்கும் போது ஆச்சரியாமாக இருக்குது என்று அந்த மாணவி சொன்னார்.
நான் சொன்னேன். எனக்கு ஆச்சரியமாக இல்லை! உங்கள் பெற்றோர்களுக்கு பிரெஞ்சு மொழி அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனாலும் அவர்கள் பிரான்ஸ் வரும் போது வெறுங்கையோடு வரவில்லை. மிகப்பெறுமதியான தமிழரின் மொழியையும் பண்பாட்டையும் தங்களோடு எடுத்துக்கொண்டுதான் வந்தார்கள். கல்வியின் அருமையை தமிழர்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எதற்கும் பிறரிடம் கையேந்தக்கூடாது தன்மானத்தோடு வாழவேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் தமிழ், பிச்சை புகினும் கற்கை நன்றே என்று விதிவிலக்கையும் சொல்லிக் கொடுத்திருக்குது. கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று சொல்லிக் கொடுக்குது. வாழ்வுக்கு அறநெறியை எடுத்துச் சொல்லும் திருக்குறளை தமிழர் வாழ்கையோடு அனுபவபூர்வமாக கற்றுவருபவர்கள். அதனால் எப்படிச் சிறப்பாக தங்களுடைய பிள்ளைகளை வளர்க்கவேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும் என்றேன்.
தமிழ் என்பது வெறுமனே ஒரு மொழியல்ல; அது தமிழரின் வாழ்வு, எம் மூதாதையரின் உயர்ந்த சிந்தனைகளையெல்லாம் சுமந்து வந்து எங்களுக்கு கற்றுத் தந்து கொண்டே இருக்கின்றது.
இன்று பெப்ரவரி 21. சர்வதேச தாய்மொழிதினம். தமிழாலேயே சிந்திக்கின்றோம், கருத்தினைப் பகிர்கின்றோம், தமிழாலேயே தாலாட்டி சீராட்டி வளர்ந்தோம். தமிழை மறவாதிருப்போம். தமிழே எம் அடையாளம்.
Voir la traduction
  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

spacer.png

கணவனும் மனைவியும் சண்டையிட்டனர், 
மறுநாள் காலையில் அவள் படுக்கையில் இருந்து எழுந்திருக்க மறுத்துவிட்டாள்.
கணவன் எழுந்து, பால் காய்ச்சி, காபி கலந்து, காலை உணவு தயாரித்து, 
குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்தினான். மதிய உணவைக் கட்டிக் கொண்டு,
குழந்தைகளை பள்ளிக்கு விடுவதற்காக கணவர் புறப்படும் போது... 
அவள் சொன்னாள், இன்று ஞாயிற்று கிழமை! 😂

படித்ததில் பிடித்தது.

  • கருத்துக்கள உறவுகள்

மிகப் பிரபலமான ஒரு வரிக்கதை இது. இங்கு களத்தில் முன்னரே இது வந்ததா என்று தெரியவில்லை.

Cuando despertó, el dinosauro todavía estaba allí

(When he awoke, the dinosaur was still there )

என்பதே அகஸ்டோ மான்டெரோசோவின் கதை. ஆங்கிலமொழி பெயர்ப்பு எடித் கிராஸ்மனுடையது.

When I woke up, the dinosaur was still there என இதாலோ கால்வினோ இதே கதையை மொழிபெயர்ப்புச் செய்திருக்கிறார். இது மட்டுமின்றி இதே கதைக்கு நாலைந்து வேறு மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன.

அவன் கண்விழித்துப் பார்த்தபோது டைனோசர் அங்கேயே இருந்தது.

என மொழியாக்கம் செய்யலாம். கதையில் வருவது அவனா, அவளா என மான்டெரோசா சுட்டவில்லை. கவனமாக அதைத் தவிர்த்து எழுதியிருக்கிறார் என்கிறார்கள். ஆனால் பெரும்பான்மை ஆங்கில மொழியாக்கத்தில் அவன் அல்லது அவன்/ அவள் என்றே குறிப்பிடுகிறார்கள்.

லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மிகச்சிறிய கதை என்று இதனைக் கொண்டாடுகிறார்கள். கதையில் வருவது உண்மையான டைனோசரா. அல்லது சர்வாதிகாரம் தான் டைனோசராகச் சுட்டிக்காட்டப்படுகிறதா. எதிர்பாராத நிகழ்வு என்பதன் அடையாளமாக டைனோசரைக் குறிப்பிடுகிறாரா, கதாபாத்திரம் உறங்கும் போது என்ன நடந்தது என இக்கதை குறித்த நிறைய விளக்கங்களை இணையத்தில் காண முடிகிறது.

இக்கதை குறித்து அகஸ்டோ மான்டெரோசோவிடம் கேட்டதற்கு அவர் சொன்ன பதில்

it isn’t a short-story, it is actually a novel.

https://www.sramakrishnan.com/ஒரு-வரிக்கதை/


 

Edited by ரசோதரன்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

440934146_7363872977065816_1582784005758

  · 
செருப்பு தைக்கிறவங்க கிட்ட நாம காட்டுற வீரம் கோழையை விட கேவலமானது..
தெருவுல கீரை விக்கிற பாட்டிகிட்ட
ரெண்டு ரூபா பேரம் பேசி ஜெயிச்சுட்டு 2000 ரூபாய் கோயில் உண்டில போட்றதால எந்த வரமும் கிடைச்சிட போறதில்ல..
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு,
சுமார் எட்டு வருசத்துக்கு முன்னாடி,
நான் ஒரு முறை பேங்க் ல Loan கட்ட போயிருந்தப்ப நடந்த நிகழ்வு இது..
ஒருத்தர் 70 75 வயசு இருக்கும்..
பாத்தா விவசாய கூலி வேலை செய்றவர் மாதிரி இருந்தாரு..கையெல்லாம் காச்சு போயிருந்தது..அவர் Passbook Entry போட்றதுக்காக அரை மணி நேரமா வரிசைல நின்னுட்டு இருந்தார்.
நான் அவர் பின்னாடி நான் நின்னுட்டு இருந்தேன்..
அவரோட வாய்ப்பு வரும் போது,
அவர் Entry போட்றவர் கிட்ட,
"ஐயா.. இந்த புக்ல எவ்வளவு பணம் இருக்குன்னு பாத்து சொல்லுங்க ஐயா..
அப்படியே எழுதி குடுங்கய்யா"
ன்னு சொல்ல,
Bank officer,
"350 ரூபா இருக்கு..
இதுக்கு ஒரு entry வேறயா..
போ..போய் வெளிய ATM ல போட்டுக்கோ - ன்னு கேவலப்படுத்தி"
அனுப்ப,
அந்த அய்யா ATM எதுன்னு தெரியாம அரை மணி நேரம் அலஞ்சுட்டு மறுபடியும் வரிசைல வந்து நிக்கிறாரு..
அந்த Employee,
"யோவ்..மறுபடியும் என்னய்யா நீ வரிசைல நிக்கிற.. போயா.. அந்தப்பக்கம்..னு திட்ட,
அவர் என்ன செய்றதுன்னு தெரியாம திரு திரு முழிச்சிட்டு இருந்தப்ப,
Security வாங்கய்யா ன்னு நான் போட்டுத் தரேன் கூட்டிட்டு போனாரு..
கஷ்டப்படுறவனுக்கத் தான்
அடுத்தவனோட கஷ்டம் புரியுதுல..
அப்பவே,இன்னோருத்தர் வேக வேகமா Manager கிட்ட ஓடிவந்து,
ஐயா..
"ஏன்யா என் பேர Board எல்லாம் போட்டு இருக்கீங்க, வீட்டுக்கு letter வந்துருக்குன்னு" கேட்டார்..
அதுக்கு Manager,
"நீ ரெண்டு மாசம் வட்டி கட்டல..
அதான் போட்டுட்டோம்..னு Cool aa
பதில் சொன்னாரு.."
அந்த மனுஷன்..
எங்கேயோ போய் யார்கிட்டையோ காசு வாங்கி மொத்த கடன் 22000 த்த
மொத்தமா அடச்சிட்டு..
அய்யா..இப்ப என் பேரு அழிங்க அய்யான்னு ஒரு சின்ன கொழந்த மாதிரி கேட்டது..அவங்க இவ்ளோ கஷ்டத்துலயும் அவங்க தன்மானத்தையும் சுயமரியாதையையும் இழக்க தயாரா இல்லன்னு காட்டுது..
(அது வேற யாரும் இல்ல எங்க அப்பா தான்...22000 ரூபா தறி Loan க்கு மானியம் போக வட்டி அது இதுன்னு 28000 ரூபாபாவ கண் கலங்கிக் கிட்டே கட்டுணது எனக்குள்ள இன்னமும் வலிக்கு)
Drainage Clean பண்றவங்களை பாத்தா முகம் சுழிக்கறது,
சர்வர் கிட்ட சவுண்டு விட்றது,
ரோட்டாரம் காய்கறி விக்கவறங்க கிட்ட கறாரா பேசுறது,
நமக்கு கீழ வேலை செய்றவங்கள
ஒருமைல பேசுறது,
இந்த மாதிரி Scene போட்றத எல்லாம் விட்டுட்டு,அவங்களுக்கும் சரிசமமான மரியாதை குடுத்து பழகுவோம்..
இங்க யாரும் மேலயும் இல்ல..
கீழயும் இல்ல.. படிச்சவங்க படிப்புக்கு
ஏத்த வேலை செய்றாங்க..
மித்தவங்க அவங்களுக்கு தெரிஞ்ச வேலய செய்றாங்க..
உழைப்பாளன் கேட்பது தகுந்த ஊதியமும் குறைந்தபட்ச மரியாதை மட்டுமே..
உழைப்பாளனின் வியர்வை மணத்திற்கு இணையான நறுமண பொருள் இன்றுவரை கண்டுபிடிக்க படவில்லை..
உங்களுக்கு மேல இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாதைக்கு
காரணம் பயம்..
உங்களுக்கு கீழ இருக்கிறவங்களுக்கு நீங்க கொடுக்குற மரியாததான் உங்களோட Character.
என்ன வேலைன்னு எல்லாம் பாக்காம வேர்வ சிந்தி உழக்கிறவங்க எல்லாருக்கும் மரியாதை கொடுத்து பழகுவோம்..
முடிஞ்சா அவங்களுக்கு தேவையான உதவிகளை செய்வோம்..
நம்ம கிட்ட அதிகாரம் இருந்ததுன்னா அதை வச்சு இல்லாதவங்களுக்கு என்ன பண்ணி அவங்க வாழ்க்கைத் தரத்த உயரத்தலாம் ன்னு யோசிப்போம்..
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்..✨......!  🙏
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

436367693_3698501237091032_2527442383737

  · 
இந்திரன் மனைவி இந்திராணி ஆசையாக ஒரு கிளி வளர்த்தார். ஒருநாள் அந்த கிளிக்கு நோய்வாய்பட்டது. உடனே இதை இந்திரனிடம் சென்று கிளி இறக்கும் நிலையில் உள்ளது அதைஎப்படியாவது காப்பாற்றுங்கள் கிளி இறந்தால் நானும் சேர்ந்து இறந்துவிடுவேன் என்றாள்,
உடனே இந்திரன், உயிர்களைபடைக்கும் பிரம்மனிடம்  சென்று இதைப்பற்றி கூறினார், அதற்கு பிரம்மன் உயிர்களை படைப்பது நான்தான் ஆனால் அதைக் காப்பது விஷ்னுவின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம் வா நானும் உன்னுடன் வருகிறேன் என்று சென்றனர்,
பின்னர் விஷ்னுவிடம் நடந்ததை கூறினர், அதற்கு விஷ்னு, உயிர்களை எடுப்பது சிவனின் தொழில் எனவே அவரிடம் சென்று முறையிடலாம், வாருங்கள் நானும் உங்களுடன் வருகிறேன் என்று மூவரும் சென்றனர்,
பின்னர், சிவனிடம் நடந்ததை கூறினர், அதற்கு சிவன்,  உயிர்களை எடுக்கும் தொழிலை எமதர்மனிடம் கொடுத்து விட்டேன், வாருங்கள் நானும்வந்து எமனிடம் முறையிடுகிறேன் என்றார்,
நடந்ததை எமனிடம் கூறினர், எல்லா உயிர்களின் ஆயுளையும் ஒரு ஓலையில் எழுதி அதை ஒரு அறையில் கட்டிவிடுவேன் அது என்றைக்கு அறுந்து விழுகிறதோ அன்று இறந்துவிடும், எனவே கிளியின் ஓலையை எடுத்து மாற்றி எழுதலாம் வாருங்கள் என்று அந்த அறைக்கு அழைத்து சென்றார்,
உள்ளே நுழைந்ததும் ஒரு ஓலை அருந்து வழுந்தது அது அந்த கிளியின் ஓலைதான் அதை எடுத்து படித்தனர்
அதில், இந்திரன், சிவன், பிரம்மன், விஷ்னு, எமன் இவர்கள் ஐவரும் ஒன்றாக இந்த அறைக்குள் வரும்போது கிளி இறந்துவிடும் என்று எழுதியிருந்தது,
எனவே படைத்தவன் நினைத்தால்  கூட ஆயுளை மாற்றமுடியாது, வாழும் காலம்வரை சந்தோஷமாக வாழ்வோம்............!  🤣
  • 5 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

447780809_1378645782921767_9104841996507

  · 
மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, வெளிநாடு போக ஆசை வந்தது. ஒரு ஏஜெண்டை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், வெளிநாடு போய் சேர்ந்தது.
வெளிநாட்டில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள்
தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம்,"ஏய்... நான் காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு,மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும்
தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.
அந்த ஊழியர், "உண்மை தான்... நீ காட்டு ராஜா தான்...ஆனால், இங்க குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.
இவ்வளவு தான் வெளிநாட்டு வாழ்க்கை !!!!!!
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, suvy said:

447780809_1378645782921767_9104841996507

  · 
மிருக காட்சி சாலையில் இருந்த ஒரு சிங்கத்துக்கு, வெளிநாடு போக ஆசை வந்தது. ஒரு ஏஜெண்டை பிடித்து, ஒரு வழியாக அந்த சிங்கம், வெளிநாடு போய் சேர்ந்தது.
வெளிநாட்டில் உள்ள பிரபல உயிரியியல் பூங்காவில் அந்த சிங்கத்துக்கு இடம் கிடைத்தது. ஆனால், தினமும் உணவாக வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டது. ஏழு நாட்கள்
தொடர்ந்து வாழைப்பழம் மட்டுமே தரப்பட்டதால், பொறுமையிழந்த சிங்கம், அங்குள்ள ஊழியரிடம்,"ஏய்... நான் காட்டு ராஜா... அங்கு எனக்கு ஆடு,மாடு எல்லாம் கொடுத்தாங்க... ஆனா, நீங்க வெறும் வாழைப் பழம் மட்டும்
தர்றீங்களே...' என, மிரட்டலோடு கேட்டது.
அந்த ஊழியர், "உண்மை தான்... நீ காட்டு ராஜா தான்...ஆனால், இங்க குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.
இவ்வளவு தான் வெளிநாட்டு வாழ்க்கை !!!!!!

வெளிநாடு போக முதல்... என்ன விசாவிலை போறம் என்று  கவனிக்க வேண்டும் மக்காள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:
அந்த ஊழியர், "உண்மை தான்... நீ காட்டு ராஜா தான்...ஆனால், இங்க குரங்கு விசாவில் தான் வந்திருக்கிறாய்... அதனால், வாழைப்பழம் மட்டுமே உனக்கு தர முடியும்...' என்று கூறினார்.
 
இவ்வளவு தான் வெளிநாட்டு வாழ்க்கை !!!!!!

🤣...........

அமெரிக்காவால் வழங்கப்படும் H1-B விசாவிற்கு இது சரியாக பொருந்துகின்றது. இது அமெரிக்காவால் சில வேலைகளுக்காக அதில் சிறப்பு தேர்ச்சி உள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக வேலை விசா. மூன்று வருடங்கங்களுக்கு வழங்கப்படும், பின்னர் இன்னும் ஒரு மூன்று வருடங்களுக்கு நீட்டிக் கொள்ளலாம். எந்த வேலைக்காக வழங்கப்பட்டதோ அந்த வேலையை மட்டுமே செய்யலாம் என்பது இதில் உள்ள நிபந்தனை. 

ஆனால் எங்கேயாவது, எதையாவது படித்து விட்டு இந்த விசாவில் வந்த மிக அதிகமானோர் கணினி துறையில் வேலை செய்தனர். அமெரிக்க அரசும் இதை கண்டும் காணாமல் விட்டுவிட்டது.

பின்னர் ட்ரம்ப் அதிபரானார்.......... படிப்பிற்கும், தேர்ச்சிக்கும், தொழிலுக்கும் சம்பந்தம் இல்லாதவர்களின் விசாக்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டன. 

ஆகப் பகிடி என்னவென்றால், இந்தியா போய் திரும்பி வந்து கொண்டிருந்த சிலரை அதிகாரிகள் இங்கு விமான நிலையத்தில் வைத்து வேலைக்கான நேர்முகத் தேர்வில் கேட்கும் சில டெக்னிகல் கேள்விகளைக் கேட்டது தான்........🤣.   

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்

பாடசாலை சுற்றுலா....... மகாபலிபுரம் வரமாட்டேன்.........!  😂

  • கருத்துக்கள உறவுகள்

 

❤️கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்...
❤️"உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?" என்று...
❤️மகள், "தம்பி வேண்டும்" என்றாள்.
❤️"யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?" என்று தாய் கேட்க, "ராவணனைப் போல் இருக்க வேண்டும்" என்றாள் மகள்.
❤️திடுக்கிட்ட தாய், "உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!" என்றாள்.
❤️"அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? உடன் பிறந்த சகோதரி அவமானப்பட்டாள் என்பதற்காக, ராவணன் தன் அரியணை, ராஜ்ஜியம், உயிர் அனைத்தையும் இழந்தானே! தன் எதிரியின் மனைவியைச் சிறை பிடித்த போதிலும், அவளை ஒரு போதும் தீண்டவில்லையே!
❤️ஆனால் ராமன், யாரோ ஒருவன் சொன்னான் என்பதற்காக, கர்ப்பவதியாக இருந்த தன் மனைவியை ஒதுக்கி வைத்தானே! அவளை தீக்குளித்துத் தன் புனிதத்தை நிரூபிக்கச் செய்தானே!
❤️உனக்கு வேண்டுமானால் ராமனைப் போல் மகன் பிறக்கட்டும். ஆனால் எனக்கு ராவணன் போன்ற சகோதரன் தான் வேண்டும்" என்றாள் மகள்.
❤️தாயால் பதில் கூற முடியவில்லை. அதிர்ந்து போனாள்.
❤️இக்கதை ஒரு விவாதத்தைத் துவக்கலாம். ஆனால் கதையின் உட்பொருளைக் கூர்ந்து நோக்கினால், ஒரு உண்மை புலப்படும்.இவ்வுலகில் நல்லவர், கெட்டவர் என்பது நாம் நம் தனிப்பட்ட அனுமானங்களால் முடிவு செய்வதே.
❤️கேளிக்கைகளில் திளைப்பவன் என்பதால், ஒருவன் கெட்டவன் என்றில்லை.
❤️கோவிலுக்குச் செல்பவன் என்பதால்,
ஒருவன் நல்லவனும் இல்லை.
❤️கோவிலுக்கு வெளியே இருக்கும் ஏழையும் சரி, கோவிலுக்கு உள்ளே இருக்கும் பணக்காரனும் சரி - கேட்பதென்னவோ பிச்சை தான்.
❤️நம் எண்ணங்கள் தராசின் முள் போல் இருத்தல் வேண்டும்...!!
  • கருத்துக்கள உறவுகள்

448758568_883561610483245_87932502925021

கரும்பலகையில் '1000' என்று எழுதிவிட்டு, தன் வகுப்பறையில் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனைப் பார்த்து அவனது கணித ஆசிரியர், "இது எவ்வளவு?" என்று கேட்டார்.
நம்பிக்கையுடன் இருந்தாலும், கேள்வியின் எளிமையைக் கண்டு சற்று அவமானமாக உணர்ந்து, "ஓராயிரம்," என்று அவன் பதிலளித்தான்.
இப்போது ஆசிரியர் கூடுதலாக ஒரு பூஜ்யத்தை அந்த எண்ணின் வலப்பக்கம் '10000' என எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று அவனிடம் மீண்டும் கேட்டார்.
"பத்தாயிரம்," என்று உடனடியாகப் பதில் வந்தது.
இப்போது இன்னொரு பூஜ்யத்தை அந்த எண்ணின் இடப்பக்கம் '010000' என்று எழுதிவிட்டு, அது எவ்வளவு என்று கேட்டார்.
"அதே பத்தாயிரம்" என்று அவன் பதில் கூறினான்.
ஆசிரியர் அவனைப் பார்த்து கண் சிமிட்டிப் புன்னகைத்தவாறே, "ஒரு முக்கியத்துவமற்ற எண் ஒரு முக்கியம் வாய்ந்த எண்ணைப் பின்தொடர்ந்து செல்லும்போது, அதன் மதிப்பு கூடுகிறது.
அதே எண் அந்த முக்கியத்துவம் வாய்ந்த எண்ணிற்கு முன்னால் செல்ல முயற்சிக்கும்போது, அதற்கு மதிப்பேதும் இல்லை.
அது போன்றதுதான் ஆசிரியருக்கும், மாணவனுக்கும் இடையே உள்ள உறவும். ஒரு மாணவன் தன் ஆசிரியரைப் பின்தொடர்ந்து சென்றால், அவனது மதிப்பு கூடுகிறது.
அதுவே தலைகீழாக அமைந்தால்., பதில் உனக்கே தெரியும் என்று முடித்தார்....
முக்கியத்துவத்தையும், மரியாதையையும், சகிப்புத்தன்மையையும் பின் தொடர்ந்து பாருங்கள் நண்பர்களே, மனிதனாய் பிறந்ததற்கான மகத்துவம் புரியும்..♥️🙏
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

449720589_2526853034164960_8000063951976

*பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்குப் புறப்பட்டார்!**
**பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி,உட்கார்ந்து இருப்பதைப் பார்த்தார்!*
*அருகில் சென்று கேட்டார்!* *"நீங்கள் எந்த ஊருக்கு செல்லவேண்டும்?"*
-- "நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன் இன்று பதிலளித்தார்! *இனிமேல் எந்த வண்டியும் கிடையாது; கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.."*
*பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை;* *கவலையுடன் பார்த்தார்,*
*அந்தப் போர்ட்டர்* *கொஞ்சம் கரிசனத்தோடு,* *பெண்மணியைப் பயணிகளின் அறைக்கு அழைத்து சென்றார்!*
*அங்கே இரவை கழிக்கலாம் என்றார்!*
*"உங்கள் மகன் எங்கே இருக்கிறார்? என்ன* *செய்கிறார்?"*
*என்று கேட்டார்!*
*அதற்கு அந்தப் பெண் எனது மகன் இரயில்வே துறையில் வேலை செய்கிறான்!*
"அவரது பெயரைச் சொல்லுங்கள், தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்!
*எனது மகன் பெயர் லால்! எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில் துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள்!*
*மொத்த ஸ்டேஷனும் புரண்டது; எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்!*
*அதைப் பார்த்து, அந்த பெண்ணுக்கு ஒன்றும் விளங்கவில்லை!*
*தன் மகனை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி: நீ இரயில்வேயில் என்ன வேலை பார்க்கிறாய்?*
*அமைச்சர் சொன்னது: ஒரு சிறு, எளிய வேலை அம்மா!*
*எப்பேர்ப்பட்ட மகான்கள் வாழ்ந்திருக்கிறார்கள் !!!*
*படித்ததில் பிடித்தது!*......!
  • கருத்துக்கள உறவுகள்

 

  449334349_7736668293084526_2312832448504
அட ராமா என்னத்த சொல்ல
😄😄😄😄😄😄😄😄😄😄😄
கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.
‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர்.
போனான்.
‘சிட் டவுன்’
உட்கார்ந்தான்.
அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது.
ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள்.
அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார்.
‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார்.
‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ்.
‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’
‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’
நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது.
‘அந்தம்மா பேர் என்ன சார்?’
மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான்.
‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான்.
‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’
உட்கார்ந்தான்.
‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’
‘கேளுங்க சார்’
‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’
‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது.
மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர்.
‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’
‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’
‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’
‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’
‘பின்னே நீங்க?’
‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....!!
😂😂😂😂
இந்த கதையின் நீதி என்ன??
  • கருத்துக்கள உறவுகள்

450516231_8072492009531978_3386562142581

3 j  · 
ஆசிரியர் - "ரணில்! எங்கள் சம்பளத்தை 60,000 ஆக உயர்த்து"
ரணில் - "உனக்கு இப்போ மாசம் எவ்வளவு சம்பளம்?"
ஆசிரியர் - "50,000"
ரணில் - "ஒரு வருஷத்துல எத்தனை நாட்கள்?"
ஆசிரியர் - "365"
ரணில் - "அதுல உனக்கு சனி, ஞாயிறு லீவு. வருஷத்துல 104 நாளைக் கழி"
ஆசிரியர் - "261"
ரணில் - "அதுல தவணைப் பரீட்சை முடிஞ்சதும் வாற லீவு மொத்தம் 10 வாரம், அதுல ஏற்கனவே சனி ஞாயிறு கணக்குல எடுத்ததால அதைக் கழிச்சா 56 நாட்கள் அதை 261ல கழிச்சா எவ்வளவு நாள் வருது?"
ஆசிரியர் - "205"
ரணில் - "அதுல ஒரு 10 பவுர்ணமி நாட்களும் வரும் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"
ஆசிரியர் - "195"
ரணில் - "எல்லோருக்கும் எட்டு மணித்தியாலம் வேலை, உனக்கு மட்டும் ஆறு மணித்தியாலம். அதுல அசெம்ப்ளி, இன்டெர்வல், ஒரு free பாடம். அதுக்கெல்லாம் ஒரு மணித்தியாலத்தைக் கழிச்சா 5 மணித்தியாலம். இப்ப 195 ஐ 5 ஆல பெருக்கி 8 ஆல பிரிச்சு எத்தனை வருதுன்னு சொல்லு"
ஆசிரியர் - "கிட்டத்தட்ட 122 நாட்கள்"
ரணில் - "அதுல ஒரு 8 ஏனைய விடுமுறை நாட்களும் வரும், அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"
ஆசிரியர் - "114"
ரணில் - "அதுல ஒரு 24 விடுமுறை நாட்கள் ஆசிரியர் லீவு எடுக்கலாம் அதையும் கழிச்சா எவ்வளவு நாள் வருது?"
ஆசிரியர் - "90"
ரணில் - "90 ஐ 30 ஆல பிரிச்சு எத்தனை மாசம் வருதுன்னு சொல்லு"
ஆசிரியர் - "கிட்டத்தட்ட 3 மாசம்"
ரணில் - "வருஷத்துக்கு இப்போ உனக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குது?"
ஆசிரியர் - "6 லட்சம்"
ரணில் - "அதை மூன்று மாசத்தால பிரிச்சா ஒரு மாசத்துக்கு இரண்டு லட்சம். ஆமா நீ எவ்வளவு சம்பளம் கேட்டா?"
ஆசிரியர் - "அறுபதாயிரம்"
ரணில் - "அப்போ இரண்டு லட்சத்துல அறுபதாயிரம் போனா மீதி நீ அரசாங்கத்துக்கு கொடுக்க வேண்டியது ஒரு லட்சத்து நாற்பது ஆயிரம்.
அதை எப்போ திருப்பித் தரப்போறா?"
படித்ததில் பிடித்தது😂😁
தரமான பதில் யாருக்கு தரமுடியும் ....
Voir la traduction
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

451665512_122133082004276704_10559801339

‘கத்திரிக்காய் கலர்ல ஒரு புடவை வாங்கிட்டு வாங்க'னு பொண்டாட்டி சொன்னா...
புடவைக்கடைக்குள் நுழைய போன கணவன்,
எதுக்கும் கத்திரிக்காய் என்ன கலர்ன்னு ஒரு தடவை நல்லா பார்த்திட்டு போயிடுவோம்னு
பக்கத்து மார்கெட்டுல நுழைஞ்சான்...
இப்ப அவன் நிலமையை கொஞ்சம்  யோசிங்க.!!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

451665512_122133082004276704_10559801339

‘கத்திரிக்காய் கலர்ல ஒரு புடவை வாங்கிட்டு வாங்க'னு பொண்டாட்டி சொன்னா...
புடவைக்கடைக்குள் நுழைய போன கணவன்,
எதுக்கும் கத்திரிக்காய் என்ன கலர்ன்னு ஒரு தடவை நல்லா பார்த்திட்டு போயிடுவோம்னு
பக்கத்து மார்கெட்டுல நுழைஞ்சான்...
இப்ப அவன் நிலமையை கொஞ்சம்  யோசிங்க.!!

இதுல யோசிக்கிறதுக்கு ஒண்ணுமே இல்லை ....... வேலை இன்னும் சுலபம்......கண்டமேனிக்கு ஒரு புடவையை வாங்கிறது அப்படியே சந்தைக்குள் போய் புடவைக்கு மேட்சாய் ஒரு கத்தரிக்காயையும் வாங்கிக் கொண்டு போய் "அன்பே இதோ நீ விரும்பிய சேலை" கட்டிக்கோ ....  முதலில் என்னை......!  😍

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

விதியே கதை எழுது .........!  😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1532722663719?e=2147483647&v=beta&t=QECK

50 திருமணமான ஆண்களின் கூட்டத்தில்...
"மனைவியிடம் அடி வாங்கியவர்கள் எல்லாம் கை தூக்குங்கள்"
என்று கேட்கப் பட்டது....
 
ஒருவர் தவிர, மற்றவர்கள் எல்லோரும் கைகளை  உயர்த்தினார்கள்.  
கை உயர்த்தாத அந்தக் கணவரை அழைத்து 
"பரவாயில்லையே... உங்கள் மனைவி மிகவும் அனுசரணையானவர் போல", 
நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி என புகழ்ந்தனர்.
 
அதற்கு அவர் சொன்னார்... அட "போங்கப்பா, நீங்க சும்மா வயித்தெரிச்சலை கிளப்பிக்கிட்டு...
நேற்று வாங்கின அடியிலை... கையை தூக்கவே, முடியலேப்பா... என்றார்.
 😂  🤣

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.