Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை! : யாழ்.அரச அதிபர்

Featured Replies

பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை! : யாழ்.அரச அதிபர்
 
பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை! : யாழ்.அரச அதிபர்
 
பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தபோது, அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையென பாடசாலையின் அதிபர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக, யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
 
தற்போது பாடசாலைகளில் பாலியல் சம்பந்தமான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதுகுறித்து விளக்கமளிக்கும்போதே யாழ்.அரச அதிபர் மேற்குறித்தவாறு தெரிவித்தார்.
 
பாடசாலைகளில் நடைபெறும் இவ்வாறான சம்பவங்கள் குறித்து பெற்றோர் அல்லது ஆசிரியரிடம் பிள்ளைகள் தெரிவிக்கும்போது, அதனை ஏற்றுக்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென குறிப்பிட்ட யாழ் அரச அதிபர், குற்றச்செயல்கள் மூடி மறைக்கப்படுவதால் குற்றவாளிகளே பாதுகாக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டினார்.
 
அத்தோடு, இவ்வாறான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு எதிராக குரல்கொடுப்பதற்கு, அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.
 
இதேவேளை இவ்வாறான சம்பவங்கள் குறித்து, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தகவல் அறிந்தவர்கள் இரகசியமான முறையில் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்றும், அவை உரிய முறையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென்றும் யாழ்.அரச அதிபர் என்.வேதநாயகன் மேலும் தெரிவித்தார்.

http://onlineuthayan.com/news/14060

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இவர் யார்.. அந்த.. அதிகாரிகளுக்கு அதிகாரி தானே. இவரால அவையை கட்டுப்படுத்த முடியல்லையான்னா.. இவருக்கு மேல உள்ளவைட விடயத்தை பாஸ் பண்ண வேண்டியானே. என்னையா நடக்குது சொறீலங்காவில...  :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, nedukkalapoovan said:

என்னையா நடக்குது சொறீலங்காவில...  :rolleyes:tw_angry:

அங்க இப்படி நடக்குது என்று, இன்று வரும் செய்திகள் எல்லாம் நெடுக்கைக், கடுப்பாக்குது போல கிடக்குதே... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

அங்க இப்படி நடக்குது என்று, இன்று வரும் செய்திகள் எல்லாம் நெடுக்கைக், கடுப்பாக்குது போல கிடக்குதே... :rolleyes:

ஒரு அரச நிர்வாக தலைமைப் பிரதிநிதியே.. அதிகாரிகள் சொல்வழி கேட்கினம் இல்லை என்றப்போ... அந்த நாட்டில் எப்படி சிவில் நிர்வாகம் ஒழுங்காக நடக்க முடியும்.. சொறீலங்காவை புகழ்ந்து தள்ளும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்.. இதனை எல்லாம் ஏன் கவனத்தில் எடுக்கினமில்லை. இதனால் தான் சொறீலங்கா போன்ற நாடுகளில் சமூக வன்முறைகளும் போதைப்பொருள் கடத்தல்களும் ஊழல்களும் நிர்வாக முறைகேடுகளும் குவிந்து கிடப்பதோடு அது மற்றைய நாடுகளாலும் கொப்பி பண்ணப்பட வாய்ப்பளிக்குது. அது ஒட்டுமொத்த உலக சமூகத்தையும் ஆபத்தில் தள்ளிவிடுகுது. இது கடுப்படிக்கிற விசயமல்ல.. ஆபத்தான விசயம் எல்லாருக்கும். tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

2 hours ago, நவீனன் said:

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்தபோது, அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லையென பாடசாலையின் அதிபர் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக, யாழ்.அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் வேதநாயகன் அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.