Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூலிகை நுளம்புத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வியாழன் 11-01-2007 23:17 மணி தமிழீழம் [மோகன்]

மூலிகை நுளம்புத்திரி

யாழ் சிவலிங்கம் புளியடிப்பகுதியை சேர்ந்த 19 அகவையுடைய செல்வி அருமைநாயகம் தேவகி என்ற யுவதி மூலிகைகளை மூலமாக கொண்டு நுளம்புத்திரி ஒன்றை தயாரித்துள்ளார்.

ஏ-9 பாதை மூடியதை தொடர்ந்து குடாநாட்டில் நுளம்புத்திரி ரூ100க்கு விற்பனை செயவதாகவும் இவற்றை கொள்வனவு செய்ய சாதரண மக்களால் இயலாமல் உள்ளமையால் மக்கள் நுளம்புக்கடிக்கு உள்ளாவதாகவும் இதனால் மலேரியா, சீக்குன்குனியா போன்ற நோய்களுக்கு உள்ளாவதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை இவர் தயாரித்த இந்த நுளம்புத்தரி 5 மணிநேரம் அணையாது புகையக்கூடியதாகவும் இதனை இவர் வேப்பிலை, வேப்பம் பட்டை, வேப்பம் வித்து, துளசி, இலுப்பை விதை ஆகிய மூலப்பொருட்கள் கொண்டு தயாரிப்பதாகவும் மேலும் அறியமுடிகிறது.

5 மணிநேரம் எரியும் இம் நுளம்புதிரி 5ரூபாவிற்கு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது. இதனை குடிசைக் கைத்தொழிலாக செய்வதற்கு லயன்ஸ் கழகம் உதவி செய்வதாக மேலும் அறியமுடிகிறது.

பதிவு.கொம்

எமது சொந்த உற்பத்தியில் நாம் வாழ வேண்டிய காலம் வந்து விட்டது எனவே இந்த மகள் மட்டும் அல்ல நாம் ஒவ்வொருவரும் திறமை சாலிகள் தான் எனவே நம்மில் இருக்கின்ற விடையங்களை வெளிக்கொணர வேண்டும் "வாழ்க தமிழ் வளர்க மக்கள் மேம்பாடு"

நன்றியுடன் எமது அந்த மகளுக்கு வாழ்த்துக்கள்

இப்படிக்கு நாதன் தோமஸ்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன் கையே தனக்குதவி.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் பாராட்டக்கூடிய விசயம்

வாவ்வ்வ்வ்..... இன்றைய கால கட்டத்தில் மிக ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரு செய்தி!!! நாளுக்கு நாள் தமிழ் மக்களின் அழிவிற்குள்ளும் ஓர் ஆறுதலான செய்தி!!!

:angry:

Edited by மோகன்

தமிழ் ஈழம் கிடைத்தபின் தமிழனின் முன்னேற்ரம் அபாரமாக இருக்கும்

வீ.வீ.சிவா

முயற்சி திருவினையாக்கும்

சிறப்பான பாராட்டுதலுக்குரிய செயல், இது போன்று தர்சார்புடைய முயற்ச்சிகளை ஆதரித்து வளர செய்யவேண்டும். ஆதரித்து வளர செய்தால் அவரவர் ஆற்றுவர் அரும்பணிகள்.

அருமையான முயற்சி அச் சகோதரிக்கு என் பாராட்டுக்கள்

இப்படி தன்னிரைவு காணும் நிலை வரவேண்டும் எங்கட புலம் பெயர் உறவுகள் தம் தொழில்சார் தேர்சியை தமிழீழத்தின் தன்னிறைவுக்கும் கட்டுமானத்துக்கும் பயன் படுத்தவேண்டும் .அவர்கள் முழு நேரமாக வேலை செய்யத்தேவையில்லை ஒரு தொழில் சார்தேர்ச்சி அடைந்தவர்கள் தம்நாட்டின் பிரதேச ரீதியாக ஒரு குடையின் கீழ் வந்து தமக்கு என கால ஆட்டவணையை தயாரித்து ஒருவர் அல்லது இருவர் 2 கிழமையோ அல்லது 1 மாதமோ ஈழத்துக்கு சென்று அங்கு தகுதியானவர்களுக்கு தம் பயிற்சியை மேற்கொளச்செய்தி எம்மவரை தொழில் ரீதியாக தேர்ச்சி அடையச்செய்ய முடியும் ஒரு 24 தொழில் சார் நிபுனர்கள் ஒன்று சேர்ர்ந்து ஒவ்வொரு வருடமும் 2 கிழமைகளாக ஒரு 3 வருடம் பயிற்சி கொடுத்தால் இவர்களிடம் பயிற்சி எடுத்தவர்களாலே மற்றவர்களையும் பயிற்றுவிக்கலாம் நாடு சுதந்திரம் அடைந்தவுடன் எமக்கு தொழில் சார் நிபுணர்களின் பற்றாக்குறை நிச்சயம் நிலவும் இப்ப இருந்தே தூர நோக்கு சிந்தனையோடு செயற்பட்டால் ஒரு சீராக எம் நாட்டை கட்டி எழுப்பலாம்.

சுதந்திரம் அடைந்த கிழ்க்கு திமோர் எமக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டு.இன்னும் சிவில் நிவாகத்தை கூட கொண்டு நடத்தமுடியாமல் திண்டாடுகிறனர்.புலிகள் சிறந்த நிர்வாகிகள் அவர்களுடம் புலம் பெயர் உறவுகளும் கைகொடுத்தால் 30 அல்லது 40 வருடங்களில் சிங்கப்பூராக எம் நாட்டை கட்டி எழுப்பலாம்

Edited by ஈழவன்85

ஏ9 பாதையை பூட்டிவுடன் உணவில்லையே என்று தமிழர்கள் ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டனர். இருந்தும் கூட தாம் இவ்வளவு நாளும் சிங்களவரிடம் கையேந்திதான் வாழ்ந்து கொண்டிருந்தோம் என்பது பலருக்குப் புரியவில்லை. தெற்கில் உற்பத்தி செய்து வடக்கில் விற்று சிங்களவர் முன்னேறிக் கொண்டிறுக்கின்றனர்.

எம்மிடம் என்ன வளம் இல்லை ? ஏன் இந்த சோம்பேறித்தனம். எல்லோரும் அலுவலகங்களில் தான் சொகுசாக வேலை பார்க்க வேண்டும் என்பதில்லை.

நுளம்புத்திரி தயாரித்த பெண்ணைப் போல், இருக்கும் வளங்களை பயன்படுத்தி சொந்தக்காலில் நிற்க முயற்சிக்க வேண்டும்.

கொடுர முகம் கொண்ட சிங்கள அரசு பல தடைகளை போட்ட போது

சைய்க்கிள் டைனமோவில் கரண்ட் எடுத்து செய்திகள் கேட்டோம், மண்னனைக்கு பதிலாக தேங்காய் காச்சி எண்னை எடுத்து விளக்கும் எரித்தோம்(முதல் தன்னியை விட்டு விட்டு அதுக்கு மேலே தேங்காய் என்னையை விட்டு வீட்டுக்கு வெளிச்சம் கொடுத்தார்கள் இப்படி பல கண்டுபிடிப்புக்கள்.

ஆனா ஒன்று மட்டும் நிச்சயம் தமிழீழம் கிடைத்த பின் நாங்கள் சிங்களவனின் தயவை வேண்டி நிக்க தேவை இல்லை எமது புலம் பெயர்ந்த நாட்டு மக்களின்

பொருளாதார மூதலீடும் திறமைகளும் தமிழீழ மக்களின் திறமைகளும் இனைந்து

நல்ல ஒரு வளமான தமிழீழம் உருவாகும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சிறப்பான பாராட்டுதலுக்குரிய செயல், இது போன்று தர்சார்புடைய முயற்ச்சிகளை ஆதரித்து வளர செய்யவேண்டும். ஆதரித்து வளர செய்தால் அவரவர் ஆற்றுவர் அரும்பணிகள்.

சுதந்திரம் அடைந்த கிழ்க்கு திமோர் எமக்கு ஒரு மோசமான எடுத்துக்காட்டு.இன்னும் சிவில் நிவாகத்தை கூட கொண்டு நடத்தமுடியாமல் திண்டாடுகிறனர்.புலிகள் சிறந்த நிர்வாகிகள் அவர்களுடம் புலம் பெயர் உறவுகளும் கைகொடுத்தால் 30 அல்லது 40 வருடங்களில் சிங்கப்பூராக எம் நாட்டை கட்டி எழுப்பலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.