Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விமானத்தில் ’அல்லா-கு-அக்பர்’ என்று கோஷம் எழுப்பியவர் சிறையில் அடைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
201607042005401249_Pak-origin-man-jailed
 
 
லண்டன், 
 
லண்டனை நோக்கி சென்ற விமானத்தில் ’அல்லா-கு-அக்பர்’  மற்றும் 'பூம்' என்று கோஷம் எழுப்பி பயணிகள் மத்தியில் பீதி மற்றும் அச்சத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் சிறையில் அடைக்கப்பட்டார். 
 
கடந்த பிப்ரவரியில் துபாயில் இருந்து பர்மிங்காம் சென்ற எமிரெட்ஸ் போயிங் 777 விமானத்தில் பயணம் செய்த சேஹ்ராஸ் சர்வார் கோஷம் எழுப்பி பயணிகளை அச்சம் அடைய செய்து உள்ளார். பர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் வாதாடிய அரசு வழக்கறிஞர் அலெக்ஸ் வாரென், “விமானம் வானில் பறக்கையில் பயங்கரமான கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. சில பயணிகள் பெரிதும் அச்ச உணர்வுக்கு சென்று உள்ளனர். பிரதிவாதி விமானத்தில் தொடர்ந்து  ’அல்லா-கு-அக்பர்’  என்று மீண்டும், மீண்டும் பலமாக கத்திஉள்ளார். அவரது நடவடிக்கையினால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.
 
விமானம் கடைசியாக தரையிறங்குகையில் பூம் என்று கோஷம் எழுப்பிஉள்ளார்,” என்று கூறிஉள்ளார். 
 
“விமானத்தின் பணியாளர்கள் அவரை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளனர். ஆனால் அவர் தொடர்ச்சியாக அச்சமூட்டும் செயலில் ஈடுபட்டு உள்ளார். இதனால் சிலர் கண்ணீர் விட்டு அழுது உள்ளார், மேலும் விமானத்தில் இருந்த பிற பயணிகள் அவரை வலிமையாக எதிர்க்கொண்டு உள்ளனர். இதனையடுத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டு விமானம் தரையிறங்கியதும் கைது செய்யப்பட்டார்,” என்று தெரிவித்து உள்ளார். 
 
இதனையடுத்து நீதிபதி பிரான்சிஸ் லெயர்ட், தவறாக நடந்துக் கொண்டதற்கும், விமானத்தில் ஆணவமாக செயல்பட்ட சர்வாரை கடுமையாக கண்டித்தார். விமானத்தில் பயணம் செய்கையில் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை கோர்ட்டு மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எந்தஒரு மாற்றமும் கிடையாது, எனவே 10 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கின்றேன்,” என்று நீதிபதி கூறிஉள்ளார். 
 
சர்வாரின் வக்கீல் பால்பீர் சிங் வாதிடுகையில், பூம் என்று கத்தியது முட்டாள்தனமானது என்று ஒத்துக்கொண்டார், பாகிஸ்தானில் பாட்டியின் இறுதி சடங்கிற்கு சென்றுவிட்டு திரும்பிய எனது கட்சிகாரர் அப்செட்டாக இருந்தார் என்று கூறினார். அவருடைய நடவடிக்கைக்கு பயணிகளிடம் மன்னிப்பும் கேட்டுவிட்டார் என்று வாதிட்டார். விமானத்தில் பயந்த சர்வார் பிரார்த்தனை செய்தார், அதனால் அல்லா-கு-அக்பர் என்று கோஷம் எழுப்பிஉள்ளார் என்றும் வாதிட்டார். ஆனால் சர்வாரை விடுதலை செய்யும் போது 12- மாதங்கள் அவரை தொடர்ச்சியாக கண்காணிக்க உத்தரவிடப்படும் என்று கோர்ட்டு கூறிவிட்டது.

http://www.dailythanthi.com/News/World/2016/07/04200552/Pak-origin-man-jailed-for-shouting-Allah-o-Akbar-on.vpf

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழரசு said:
 
..விமானம் வானில் பறக்கையில் பயங்கரமான கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. சில பயணிகள் பெரிதும் அச்ச உணர்வுக்கு சென்று உள்ளனர். பிரதிவாதி விமானத்தில் தொடர்ந்து  ’அல்லா-கு-அக்பர்’  என்று மீண்டும், மீண்டும் பலமாக கத்திஉள்ளார். அவரது நடவடிக்கையினால் விமானத்தில் இருந்த பயணிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகினர்.
 
http://www.dailythanthi.com/News/World/2016/07/04200552/Pak-origin-man-jailed-for-shouting-Allah-o-Akbar-on.vpf

இதே போன்ற அனுபவம் எனக்கும் ஏற்பட்டது..

சென்ற வருடம் காலை பாலைவனத்தில் கண்காணிப்பு வேலைகளை முடித்துவிட்டு, நானும் எனது சக பொறியாளரும் அலுவலகம் திரும்பினோம்..

எனது அலுவலகம் இருந்தது ஐந்தாவது மாடியில்..!

மேல்மாடிக்கு செல்ல, மின்தூக்கியில் நாங்கள் ஏறியவுடன், சில ஆஃப்கானி பட்டான் தொழிலாளிகளும் மின் தூக்கியில் ஏற ஓடிவந்தனர். அது 6 பேர் மட்டுமே செல்லக்கூடிய மின்தூக்கி.. ஆனால் ஏறியதோ எங்களையும் சேர்த்து எட்டுப் பேர். சக பொறியாளர் இந்தியில் அவர்களிடம் சிலரை இறங்கச் சொல்லியும் அவர்கள் "முஸ்கில் நஹி..!" என சிரித்துக்கொண்டே மறுத்துவிட்டனர்.

மின்தூக்கி பாதி தூரம் மேலே சென்றவுடன், இடையில் அதிர்வுடன் நின்றுவிட்டது..மின்சாரமும் போச்சுது..

நானும் சக பொறியாளரும் பலமுறை முயன்றும் கதவு திறக்கவில்லை..ஆனால் உடனிருந்த பட்டான்களோ "அல்லாகு அக்பர்..!" என பலமுறை கூவிக்கொண்ட்டேயிருந்தனர்..

யாரும் உதவிக்கு வரவில்லை..

எனது கைப்பேசியில் அலுவலக உதவியாளரை அழைத்து, பின்னர் அவர் வந்து, அவசரமுறையில் கதவை திறந்தவுடன் மீட்கப்பட்டோம்.. பட்டான்களின் கூப்பாடு மட்டும் ஓயவேயில்லை..!

அலுவலக இயக்குனரிடம் நடந்ததை விவரித்தபோது, அவர் சிரித்துக்கொண்டே சொன்னது "Stay away from Pattaans..!"

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ராசவன்னியன் said:

நானும் சக பொறியாளரும் பலமுறை முயன்றும் கதவு திறக்கவில்லை..ஆனால் உடனிருந்த பட்டான்களோ "அல்லாகு அக்பர்..!" என பலமுறை கூவிக்கொண்ட்டேயிருந்தனர்..

அல்லாகு அக்பர் என்று கத்தினால் கதவு திறக்குமா? அண்டாகாகசம் அபுகாகுகும் திறந்திடு சீசே.. இதுதானே சரியான வாக்கியம்? :unsure: tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, இசைக்கலைஞன் said:

அல்லாகு அக்பர் என்று கத்தினால் கதவு திறக்குமா? அண்டாகாகசம் அபுகாகுகும் திறந்திடு சீசே.. இதுதானே சரியான வாக்கியம்? :unsure: tw_blush:

There you are..! sgentil.gif

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.