Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இராக் போர்: " நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன், முழுப் பொறுப்பை ஏற்கிறேன்" - பிளேர்

Featured Replies

இராக் போர்: " நாட்டின் நலன்களை மனதில் கொண்டே முடிவு எடுத்தேன், முழுப் பொறுப்பை ஏற்கிறேன்" - பிளேர்

 

பிரிட்டன் இராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை குறித்து தனது கருத்தை வெளியிட்ட முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், எந்தவொரு விதிவிலக்கு அல்லது சாக்குப்போக்கோ இல்லாமல், தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

டோனி பிளேர்

 "முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்" - டோனி பிளேர்

மேலும் அவர் கூறுகையில், சதாம் ஹுசைனை விலக்குவது தான் சிறந்தது என்று நம்பியதாகத் தெரிவித்தார். "தற்போது மத்திய கிழக்கு அல்லது உலகின் பிற பகுதிகளில் நடக்கும் தீவிரவாததிற்கு இந்த விவகாரம் காரணம் என்று நான் நம்பவில்லை,'' என்றார் பிளேர்.

மேலும் அவர், ''எல்லாவற்றுக்கும் மேலாக, நான் நமது ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இறந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எதிர்காலத் தலைவர்கள் எனது அனுபவத்தில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள்,'' என்றார்.

சில்காட் விசாரணை முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ,ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தனது முடிவு குறித்து, யாரும் உடன்பட்டாலும், உடன்படாவிட்டாலும், அந்த முடிவ தான் நாட்டின் நலன்களை மனதில் வைத்து எடுத்ததாகவே தான் நம்புவதாகத் தெரிவித்தார்.

"எதிர்காலப் பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவேண்டும்"

சில்காட் குழுவின் அறிக்கையில்,டோனி பிளேர் , பிரிட்டனின் கூட்டாளியான அமெரிக்காவுடன் தோளோடு தோள் நிற்கத்தான் இராக்கில் போருக்குச் சென்றார், ஆனால் அமெரிக்காவின் திட்டங்கள் பற்றி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் அவர் வற்புறுத்திக் கேட்டுத் தெளிவு பெறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் டேவிட் கேமரன், எதிர்காலத்துக்கான பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றார். இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் தங்கள் பங்கு பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் கேமரன்.

160706123940_antiwar_512x288_afp_nocredi

 இராக் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் பிளேருக்கு எதிரான பதாகைகளை தாங்கி வருகின்றனர்

பிளேர் மீது மக்கள் கோபம்

ஆனால், இராக் போரில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத்தினர் சிலரது குடும்பத்தினர் பிளேர் எடுத்த முடிவு குறித்து தங்கள் சினத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

போரில் கொல்லப்பட்ட ஒரு சிப்பாயின் சகோதரி பிளேரை ஒரு பயங்கரவாதி என்று வர்ணித்தார்.

வேறு பலர், பிளேர் தங்களை நேருக்கு நேர் பார்த்து ஏன் நாட்டை தவறாக வழிநடத்தினார் என்று விளக்கவேண்டும் என்று கூறினர்.

http://www.bbc.com/tamil/global/2016/07/160706_chilcotblair

  • கருத்துக்கள உறவுகள்

புஷ்ஷினை வால்பிடிப்பதில் கொண்டிருந்த ஆர்வத்தில் பிளேயர் எடுத்த முடிவுகளில்.. ஈராக் ஆக்கிரமிப்பு.. விடுதலைப்புலிகள் மீதான தடை என்பன.. பெரும் மனிதப் பேரிடர்களுக்கும் மீள முடியாத பெரும் மனித அழிவுகளுக்கும் உரிமை இழப்புக்களுக்கும் வழிவகுத்தது.

பிளேயரை.. ஈராக் போரில் சகோதரனை இழந்த ஒரு பிரித்தானியப் பெண்மணி ஊடகங்கள் மத்தியில்.. உலகப் பயங்கரவாதின்னு பிரகடனம் செய்துள்ளார். 

http://www.bbc.co.uk/news/video_and_audio/headlines/36728881

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
பிரிட்டன் இராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை குறித்து தனது கருத்தை வெளியிட்ட முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், எந்தவொரு விதிவிலக்கு அல்லது சாக்குப்போக்கோ இல்லாமல், தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், சதாம் ஹுசைனை விலக்குவது தான் சிறந்தது என்று நம்பியதாகத் தெரிவித்தார்.

பிரிட்டன் இராக் போரில் ஈடுபட்டது தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட சில்காட் குழு அறிக்கை குறித்து தனது கருத்தை வெளியிட்ட முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், எந்தவொரு விதிவிலக்கு அல்லது சாக்குப்போக்கோ இல்லாமல், தான் முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறார். மேலும் அவர் கூறுகையில், சதாம் ஹுசைனை விலக்குவது தான் சிறந்தது என்று நம்பியதாகத் தெரிவித்தார். "தற்போது மத்திய கிழக்கு அல்லது உலகின் பிற பகுதிகளில் நடக்கும் தீவிரவாததிற்கு இந்த விவகாரம் காரணம் என்று நான் நம்பவில்லை,'' என்றார் பிளேர்.

   

மேலும் அவர், ''எல்லாவற்றுக்கும் மேலாக, நான் நமது ராணுவ படையினருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். இறந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்திற்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எதிர்காலத் தலைவர்கள் எனது அனுபவத்தில் இருந்து பாடம் கற்று கொள்வார்கள்,'' என்றார்.சில்காட் விசாரணை முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் பிரதமர் டோனி பிளேர் ,ராணுவ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற தனது முடிவு குறித்து, யாரும் உடன்பட்டாலும், உடன்படாவிட்டாலும், அந்த முடிவ தான் நாட்டின் நலன்களை மனதில் வைத்து எடுத்ததாகவே தான் நம்புவதாகத் தெரிவித்தார்."எதிர்காலப் பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவேண்டும்"சில்காட் குழுவின் அறிக்கையில்,டோனி பிளேர் , பிரிட்டனின் கூட்டாளியான அமெரிக்காவுடன் தோளோடு தோள் நிற்கத்தான் இராக்கில் போருக்குச் சென்றார், ஆனால் அமெரிக்காவின் திட்டங்கள் பற்றி அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷிடம் அவர் வற்புறுத்திக் கேட்டுத் தெளிவு பெறவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது.

இது குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் டேவிட் கேமரன், எதிர்காலத்துக்கான பாடங்கள் கற்றுக்கொள்ளப்படவேண்டும் என்றார். இராக் போருக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் தங்கள் பங்கு பழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் கேமரன்.ஆனால், இராக் போரில் கொல்லப்பட்ட பிரிட்டிஷ் ராணுவத்தினர் சிலரது குடும்பத்தினர் பிளேர் எடுத்த முடிவு குறித்து தங்கள் சினத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.போரில் கொல்லப்பட்ட ஒரு சிப்பாயின் சகோதரி பிளேரை ஒரு பயங்கரவாதி என்று வர்ணித்தார்.வேறு பலர், பிளேர் தங்களை நேருக்கு நேர் பார்த்து ஏன் நாட்டை தவறாக வழிநடத்தினார் என்று விளக்கவேண்டும் என்று கூறினர்.

http://www.seithy.com/breifNews.php?newsID=161016&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6.7.2016 at 5:16 PM, நவீனன் said:

 "முழுப்பொறுப்பையும் ஏற்கிறேன்" - டோனி பிளேர்

ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளையும் தடைசெய்ய இவர்தான் அயராது உழைத்தவர்.

தவறுகள் காலம் போகப்போகத்தான் தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஐரோப்பாவில் விடுதலைப்புலிகளையும் தடைசெய்ய இவர்தான் அயராது உழைத்தவர்.

தவறுகள் காலம் போகப்போகத்தான் தெரியும்.

எவ்வளவு ஒரு ஈனத்தனமான செயலை செய்து விட்டு,
கோட்டும், சூட்டும்.... போட்டுக் கொண்டு நிக்கிறார்.
வேட்டி கட்டுற,  நம்ம  அரசியல் வாதிகளை மிஞ்சி விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.