Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சம்பந்தன் தெரிவித்த கருத்து ஆச்சரியமளிக்கிறது - ரெலோ

Featured Replies

போர்க்குற்றங்கள் தொடர்பான உள்ளக விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்குபற்றல் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமை ப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து ஆச்சரிமளிக்கின்றது.

எனவே இந்த விவகாரத்தில் பங் காளிக் கட்சிகளை உள்ளடக்கிய தான தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் உண்மையான நிலைப்பாட்டை  அறிவிக்க வேண்டியது அவசியம் என ரெலோவின் செயலாளர் நாயகமும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில்,

ஜெனிவா தீர்மானத்தின் அடிப்படையில் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் நிறுவவிருக்கும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகள் பங்குபற்ற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தாது என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்திருப்பதாக வெளி வந்திருக்கும் செய்தி ஆச்சரியமளிக்கிறது.

இச் செய்தி தொடர்பில் உண்மை  என்ன என்பதை தலைவர் சம்பந்தன் மாத்திரமே தெளிவுபடுத்த முடியும்.
ஆனால் ஜெனிவாத் தீர்மானத்தைப் பொறுத்த மட்டில் தமிழர் தரப் பில் எந்தவித விட்டுக் கொடுப்புக்கோ  அல்லது சமரசத்துக்கோ இடமில்லை  என்பதே எமது கட்சியின் உறுதி யான நிலைப்பாடாகும். இந்த விவ காரத்தில் தமிழ்த்  தேசியக் கூட்ட மைப்பின் நிலைப்பாட்டை மீண்டும் ஒருமுறை திட்டவட்டமாக தெரி விக்க வேண்டிய அவசியம் இப்போது  ஏற்பட்டிருக்கிறது என சிறிகாந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள் ளார்.                                        (செ-1)
 

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10884&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு அமைச்சுப் பதவி என்றால் சம்பந்தன் எதையும் விட்டுக்கொடுப்பார். அழிந்தது என்ன அவர் குடும்பமா.. இல்ல அவர் ஊரா.. இல்லைத் தானே. அவருக்கு என்ன பிரச்சனை தமிழ் மக்கள் செத்தால்.. நாசமானால். உதுகளுக்கு வாக்குப் போடும் எம்மவர்களைச் சொல்லனும். :rolleyes:

  • தொடங்கியவர்

அவர் கூறியது இனத்தின் வழமை இவர் கூறியது மகாகொடுமை

10882.jpg

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என அரசாங்கத்தை வலியுறுத்த மாட்டோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தன் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
இச் செவ்வி தமிழ் மக்களை அதிர்ச்சி கொள்ள செய்துள்ளது.

வன்னி பெரு நிலப்பரப்பில் நடந்த மிக கொடூரமான போரும் அதனால் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட உயிர் இழப்புகள், சொத்தழிவுகள், அங்கவீனங்கள் என்ற ஏகப்பட்ட துன்பங்களுமாக தமிழ் மக்களைப்  பேதலிக்க வைத்துக் கொண்டி ருக்கும் இந் நேரத்தில் தமிழ் மக்களின் மன ஆறுதல் என்பது வன்னிப் பெருநிலப்பரப்பில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை நடைபெறும் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமாகவே உள்ளது.

 இருந்தும் போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெறுவதற்கு இலங்கை அரசு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

நான் ஜனாதிபதியாக இருக்கும் வரை சர்வதேச  நீதிபதிகள் இடம்பெறுவதை அனுமதிக்கமாட்டேன் என்று இந் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.

 தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்று ஜனாதிபதிப் பதவிக்கு வந்த மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியபோது தமிழ் மக்களின் நாடி நரம்பெல்லாம் நடுங்கிக்கொண்டது.

அட! எங்கள் வாக்கைப்பெற்று பதவிக்கு வந்தவர் சிங்கள மக்களுக்கு இப்படியொரு வாக்கைக் கொடுக்கிறாரே என்ற மன வேதனையின் வெளிப்பாடே நாடி நரம்புகளின் உதறலாயிற்று.

சரி, முன்னைய சிங்கள ஆட்சியாளர்கள் செய்ததை; இனிமேல் ஆட்சிக்கு வரப்போகிறவர் செய்யப் போவதை; நிகழ்கால ஆட்சியில் இருப்பவர் சொல்கிறார் - செய்கிறார்.

இஃது எல்லாம் வழமை என்று மெளனமாக இருந்தாலும், ஜனாதிபதி மைத்திரியின் வார்த்தைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர் தக்க பதில் கொடுப்பார் என்று தமிழ் மக்கள் நம்பியிருந்தனர்.

ஆனால், போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற வேண்டும் என அரசாங்கத்தை நாம் கேட்கமாட்டோம் என இரா.சம்பந்தர் சிங்கள ஊடகத்திற்கு செவ்வி கொடுத்த செய்தியை அறிந்தபோது, 

ஐயா! அவருடையது இனத்தின் வழமை. இவருடையது மகாகொடுமை என்று சொல்வதைத் தவிர வேறு எதுவும் நமக்குத் தெரியவில்லை.

எதுவாயினும் நான் ஜனாதிபதியாக இருக் கும் வரை போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் இடம்பெற அனுமதிக்க மாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதானது, 

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் அனுமதியைப் பெற்றுக் கூறப்பட்டது என்று அனுமானிப்பதில் எந்தத் தவறும் இல்லை.

இந்த அனுமானத்தின் ஆதாரம்தான் சிங்கள ஊடகத்திற்கு சம்பந்தர் ஐயா வழங்கிய செவ்வி.
என் செய்வோம்! தமிழனே தமிழனுக்கு மாரகனாகி விட்டபோது...    

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10882&ctype=news

இலங்கை அரசுக்கு ஆதரவான தமிழ் அரசியல் தலைமையே இங்குண்டு

 

10875.jpg

இந்த உலகில் மிகக் கொடியது அன்பிலார் உறவு என்பது ஔவையாரின் முடிபு. அன்பிலாரிடம் கெடுதிக் குரியவை அனைத்தும் இருக்கும். இதனாலேயே அன்பிலார் உறவு ஆபத்தானது என்றாயிற்று.

இந்தியாவின் பிரதமராக இருந்த அன்னை இந்திரா காந்தி தன் அலுவலகத்தில் இருந்து வெளியே வருகின்றார். அவரைப் பின்தொடர்ந்து அவரின் மெய்ப்பாதுகாவலர்கள். 

எந்தத் தீங்கும் அன்னை இந்திரா காந்தியை அணுகிவிடக் கூடாது என்பதற்காகவே மெய்ப்பாது காவலர்கள் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 

அந்தோ பரிதாபம். அன்னை இந்திரா காந்தியை நோக்கி கொடிய மெய்ப்பாதுகாவலன் ஒருவன் துப்பாக்கியால் சுடுகின்றான்.

துப்பாக்கி ரவைகள் அன்னையின் இதயத்தைத் துளைக்கின்றன. அந்தப் பேரவலத்திலும் தன்னைச் சுடுபவனை நோக்கி நீ என்ன செய்கிறாய்? என்று அன்னை இந்திரா காந்தி கேட்கிறார். 
அந்தக் கேள்விக்குள் நிறைந்த பொருள் உண்டு. என்னைப் பாதுகாக்க வேண்டிய நீ! செய்வது சரியா? என்பது ஒரு பொருள். 

என்ன செய்வது! எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் அவை எத்தனை பொருள் தந்தாலும் கூட இருந்தவன் குழி பறித்துவிட்டான். அன்னை இந்திரா காந்தியின் உயிர் ஒரு கணப்பொழுதில் பிரிந்து போகின்றது.

பாரத பூமி அழுகண்ணீரில் மிதக்கிறது. இப்போது இது ஒரு சம்பவமாகிப் போயுள்ளது.
ஆனால் இந்தச் சம்பவம் இந்த உலகத்திற்கு ஒரு செய்தியை சொல்கிறது. 

அதாவது அன்பிலாதவன், நேர்மையற்றவன், போக்கிரித்தனமானவன் அருகில் இருப்பான் ஆயின் ஆபத்தானது எப்போதும் மடியில் இருக்கும் என்பது தான்.

 இது இந்திரா காந்தியின் கொலையுடன் நின்று விடப் போவதில்லை.  இந்த உலகம் இருக்கும் வரை அநீ தியானவர்களின் இருப்பும் இருக்கவே செய்கிறது.  

இதற்கு மேலாக விசுவாசமற்றவர்கள், உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்கள் இனப்பற்றில்லாத போதிலும் இனப்பற்றுள்ளவர்கள் போல’ நடிப்பவர்கள் ஓர் இனத்தின் அரசியல் தலைமையில் இருப்பார்களாயின் அந்த இனம் தீராத் துன்பத்தை என்றும் அனுபவிக்கும்.

சேர்ந்திருந்து உன்னுடைய ஆள் நான் என்று கூறிக் கொண்டு எதிரியின் திட்டத்தை அமுலாக்குவதே தன் கடமை என்று செயற்படுவோரை யார்தான் என்ன செய்ய முடியும்?

உண்மையில் இத்தகையதொரு அரசியல் தலைமை எந்த இனத்திற்கு கிடைத்தாலும் அது இந்த இனம்செய்த பாவம் என்று சொல்வதைத் தவிர வேறு எந்த வழியும் இருப்பதாக எமக்குத் தெரியவில்லை.

எது எப்படியாயினும் மக்கள்  என்று விழிப்புணர்வு அடைகிறார்களோ அன்றுதான் பாவப்பட்ட இனம் விடுதலைபெறும். அந்த விடுதலை கிடைப்பதற்கு மேய்ப்பன் அவதரிக்க வேண்டும். 
 இருந்தும் அந்த அவதரிப்பு நம் மண்ணில் இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதால் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரேவழி அரசியல் விழிப்புணர்வு அமைவதுதான்.

அரசியல் விழிப்புணர்வு ஏற்படும்போது எல்லாமும் சரியாகிவிடும் என்பதோடு பல உண்மைகள் வெளிப் படவும் வாய்ப்பாகும் என்பதால் தமிழ் மக்களின் அரசியல் விழிப்பணர்வு மீள்எழுச்சிக்கு மிகவும் கட்டாயமானதாகும்.  

http://www.valampurii.lk/valampurii/content.php?id=10875&ctype=news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சம்பல் கோஷ்டியளின்ரை உண்மைமுகம் தெரிஞ்ச ஆக்களுக்கு அதிர்ச்சியோ ஆத்திரமோ வராது.......அண்டு தொடக்கம்  உதுகளின்ரை விலாங்கு வேலையளை கண்டுகளிச்சவன் எண்டமுறையிலை சொல்லுறன்.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கெதற்கு நீதிமன்றம் ....?
 ...அய்யா இராசதந்திரி  தான் ...2016 இற்கு பிறகு கேட்பதற்கு ஒன்றுமே மிச்சமிருக்காது ...அடியோடை காலி செய்து விட்டிடுவார் என்பதால் தான் 2016 இல் தீர்வு என்று தில்லாய் அறிக்கை விட்டவர் என்பது இப்ப தெரியுதே ....?
இப்ப அய்யாவோட வால்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்படுவதால் எல்லோரும்  கப் சிப் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.