Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதக் கருத்துக்களைப் பரப்புகிறார் விக்னேஸ்வரன்! - பொது பலசேனா குற்றச்சாட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்பி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர்   குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் இனவாத கருத்துக்களை பரப்பி வருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

   

பொதுபல சேனா அமைப்பின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், வடக்கிலும் கிழக்கிலும் சிங்களவர்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் பெரும்பான்மையின சிங்கள மக்கள் தொடர்பில் ஏற்றுக்கொள்ள முடியாத தேவையற்ற கதைகளை பரப்பி வருகின்றார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அரசியல் யாப்பு ஒன்று காணப்படுகின்றது. அதனை சிங்கள மக்கள் அல்லது சிங்களத் தலைவர்கள் மாத்திரமா மதித்து நடக்கவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வட மாகாண முதலமைச்சரின் அரசியல் வங்குரோத்து நிலையை அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ச்சியாக அவர் இனவாத கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். வடக்கில் சிங்களவர்களை குடியேற்றினால் அது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகும் என்கிறார். வடக்கிலிருந்து இராணுவத்தை உடனடியாக வெளியேற்ற வேண்டும்.

மொரகஹாகந்த நீர்ப்பாசன திட்டத்தில் நீருக்கான உரிமை வேண்டும். இவ்வாறு பல விடயங்களை கூறிவருகின்றார். நாட்டின் தென்பகுதியையோ அல்லது கொழும்பையோ அறிந்திராத ஒருவரைப்போலவே அவர் கதைக்கின்றார். வடக்கில் உருவாகியிருக்கும் இவ்வாறான இனவாதத்தை தோற்கடிக்க வேண்டும். எனக் குறிப்பிட்டார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=162844&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தேவாரம் பாடுறீளோ....

  • கருத்துக்கள உறவுகள்

இறைவனுக்கும் மக்களுக்கும் இடையே நின்று இறைபக்தியையும், ஆன்மீகத்தையும் மக்களுக்குப் போதிக்கவேண்டியவர் அரசியலில் ஈடுபட்டால் இப்படித்தான் புலம்பமுடியும். 

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து நீங்கள் போட்டிருக்கும் வேஷத்தை கலைத்துவிட்டு நியமாகவே நீங்கள் யாரென்ற உண்மைக்கு மாறுங்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.