Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வல்வை படுகொலையின் 27 ஆவது நினைவு (இந்திய இராணுவத்தின் கோர தாண்டவம் வல்வை படுகொலை)

Featured Replies

வல்வை படுகொலையின் 27 ஆவது நினைவு தினம் இன்றாகும்.

வல்வை படுகொலையும், 27 வருடங்களின் பின் பாதிக்கப்பட்டவர் ஒருவரின் நினைவு பதிவும்.

வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவம் புரிந்த அட்டுழியங்கள்!!!

1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2 ஆம் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு, பொலிகண்டி இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்ட இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது.

ஒகஸ்ட் 2 ஆம் திகதி இச் சம்பவம் நடைபெற 3, 4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே, அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை. வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி.

100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.

123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.

வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.

176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

எங்கும் சடலங்கள், அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள், காயமடைந்த, கொல்லப்பட்ட உறவினர்களின் அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் ரண வடுவாக அச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர்.

வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச்செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPH பத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESS பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய

பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை.

வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள், பாலியல் கொடுமைகள், சித்திரவதைகள், வீடழிப்பு, சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.! இது பற்றி வல்வை படுகொலை எனும் நூல் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளிவந்து அவனபடுத்தப்பட்டது குறிபிடக்தக்கது.

இது பற்றி இதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கனடாவிலிருந்து சேது மாதவன் அவர்கள் தனது சமுக வலைத்தளத்தில் 26 வருடங்களின் பின் இன்று இவ்வாறு எழுதியுள்ளார்.

வல்வை படுகொலைகள் நடந்து வருடங்கள் 26 ஓடிவிட்டன. அந்த பயங்கர நாட்களின் பல நிகழ்வுகள் இப்பொழுதும் என்நெஞ்சில் நிற்கின்றன. கலாதேவன், பாபு ஆட்கள் வீட்டில் நின்றபோது தாக்குதல் நடக்கப் போவதாகவும் உடனே வீட்டை விட்டு ஒடுமாறும் கூறிய அவர்கள் எதிர்வீட்டுத் தம்பி தரா ( இப்பொழுது மருத்துவர் சிவபாலன் ) . அந்த அவசர கணத்தில் கலாதேவன் அண்ணா வீட்டார் வீட்டை விட்டு வெளிக்கிடும் முன்னே ஆரம்பித்த யுத்தம். பயத்தில் அவர்களுக்கு உதவாது விட்டுவிட்டு ஓடிய என் கோழைத்தனம். அன்று மினி சினிமா செல்லவிருந்து கடைசி நேரத்தில் மனதை மாத்தி அதற்குப் போகாத நானும் கித்துளும். ஓடு ஓடு என்று ஓடி இன்பருட்டி கிராமத்தில் ஓடும் வழியில் சந்தித்த நண்பர்களுடன் தங்கியது. வழியில் திக்கத்தில் கண்ட புலிகளின் தாக்குதல் அணியினர். கூட ஓடிவந்த நண்பனை துப்பாக்கிக் காயத்துடன் வைத்திய சாலையில் விட்டுவிட்டு ஓடிவந்து வழியில் எங்களுடன் இணைந்த நவநீதன். வேறு வழியில் ஓடி வல்வெட்டியில் புகலிடம் அடைந்திருந்த வேளையில் மட்டுமட்டாக உயிர் தப்பிய என் குடும்பத்தினர்.சந்தியில் இந்தியன் Army விட்டுவிட்டுப்போன உடல்களில் தனது கணவனினது உடலும் இருக்குமோ எனத் தேடிய சிதம்பரநாதன் teacher. அவருடன் சேர்ந்து ஒவ்வொரு உடலாக செக் பண்ணிய என் அம்மா. இவ்வாறு பல சம்பவங்கள் மனதில் நிற்கின்றன.

எல்லாம் முடிந்த பின்னால் பார்த்த பொழுது எம் நண்பர்கள் உறவினர்கள் பலர் எம்மை விட்டுப் போய்விட்டதை அறிந்து கொண்டோம். மதி, செல்வானந்த வேல், ரவி அண்ணா, சங்கர் அண்ணா, புஸ்பா அண்ணாவின் அம்மா, அவரது சகோதரன், ராதன் அண்ணாவின் அப்பா அவரது அண்ணா என பட்டியல் நீண்டு கொண்டே சென்றது. மயிரிழையில் உயிர் தப்பிய பலரது கதைகளும் ஒவ்வொன்றாக எம்மை வந்தடைந்தன. அதை நினைக்கும் பொழுது 26 வருடங்களின் பின்பும் என் உடல் மெல்ல நடுங்குகிறது.

இதன் மூலம் அந்த ஆபத்தான தருணங்களில் எமக்கு அதரவு அளித்து எம்மைப் பாது காத்த வல்வெட்டி, கம்பர்மலை, இமையாணன், திக்கம், பொலிகண்டி, இன்பருட்டி, தொண்டைமானாறு , உடுப்பிட்டி, மயிலியதனை, காட்டுப்புலம், நெல்லியடி, கரணவாய், வதிரி, மந்திகை, பருத்தித்துறை, சக்கோட்டை ஆகிய ஊர்களைச் சேர்ந்த அன்புள்ளம் மிக்க மக்களுக்கு வல்வெட்டித்துறை மக்கள் சார்பாக நன்றி கூறுகிறேன்.

அன்று உயிர் நீத்த எம்மக்கள் அனைவருக்கும் எமது கண்ணீர் அஞ்சலிகள்.

அன்றைய தினத்தில் உயிர் நீத்த இந்திய இராணுவ வீரர்களுக்காக அவர்களது உறவுகளும் இன்றும் அழுது கொண்டிருப்பார்கள் எனும் யதார்த்தம் நெஞ்சை நெருடுகிறது. யுத்தம் ஏற்படுத்தும் வடுக்கள் எப்பொழுதும் ஆழமானவை.

11

12

13

http://ttnnews.com/வல்வை-படுகொலையின்-27-ஆவது-ந/

இந்திய மைலாய் படுகொலை!

IPKF4.jpg

தமிழர் உரிமைப் போராட்டத்தின் திருப்பு முனையாக ஏற்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் (ஜுலை 29.1987) விளைவாக இலங்கைக்கு வந்த இந்தியப் படைகள் (IPKF) ஏற்கனவே திட்டம் இட்டபடி புலிகளிடம் இருந்து 
ஆயுத களைவு என்ற பெயரில் ஒரு முழு யுத்தத்தினையே நடத்தத் தொடங்கின.வேறு வழிவகை அறியா 
விடுதலைப் புலிகளும் மக்கள் ஆதரவினை மட்டும் நம்பி உலகின் நாலாவது பெரிய இராணுவத்தினை எதிர்த்து போர்புரிந்துவெற்றியும் பெற்றனர். 

ஒரு நாளில் யாழ்ப்பாணத்தினைக் கைப்பற்றுவோம் என சொன்ன இந்திய அமைதிப்படையினர் யாழ்பாணத்தினைக் கைப்பற்ற 1 மாதம் எடுத்தது. யாழ்ப்பாணத்தினை கைப்பற்றிய பின்பு ஏனையபகுதிகளையும் கைப்பற்றிய இந்தியப் படைகள் 200 மீட்டருக்கு ஓன்று என்று ரீதியில் முகாம்களை அமைத்தது.புலிகளும் தமது பிரதான முகாம், தலைமை என்பனவற்றை வன்னிக்கு மாற்றிவிட்டு மற்றைய பகுதிகளில் 
தமது குறிப்பிட்டளவு போராளிகளை நிறுத்தியிருந்தனர். தினமும் எதாவது ஒரு பகுதியில் போராளிகளைத்தேடும் இந்திய இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம் பெற்ற வண்ணமே இருக்கும். 

indianarmy.jpg 

இப்படி தான் 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ந் திகதி வல்வெட்டித்துறையில் இருக்கும் ஊரிக்காடு ,பொலிகண்டி 
இராணுவ முகாம்களிலிருந்து புலிகளை அழிக்கும் நோக்குடன் புறப்பட்டனர் இந்தியப் படையினர். இந்த இந்திய இராணுவவீரர்களுக்கு தலைமை தாங்கியது. முறையே மேஜர் சுதர்சன் சிங்,.கப்டன் கோபாலகிருஸ்ன 
மேனன் ,கப்டன் கபூர் என்போராவார்.இவர்களை எதிர் கொண்டு புலிகள் நடத்திய தாக்குதலில் 09 சீக்கிய சிப்பாய்கள் கொல்லப்பட ஆயுதம் தாங்கியபுலிகளை அழிக்க திராணியற்ற இந்திய படைகள் அப்பாவி மக்கள் மீது தனது வெறியாட்டத்தினை வழமை போல தொடங்கியது. 

ஒகஸ்ட் 2 ந் திகதி இச் சம்பவம் நடைபெற 3,4 திகதிகளில் வல்வெட்டித்துறையிலும் அதைச் சூழ உள்ள பகுதிகளிலும் ஊரடங்கு சட்டத்தினை பிரகடனப்படுத்திவிட்டு வெறியாட்டம் ஆடினர். யாருமே வல்வெட்டிதுறைக்குள் போகவே ,அங்கிருந்து தப்பி வரவோ முடியவில்லை.வெறியாட்டம் முடிந்து இந்திய இராணுவம் முகாம்களுக்கு திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்கு சென்று 
பார்த்தவர்களால் நடைபெற்ற கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை. 

 

  • 63 பொதுமக்கள் சுட்டும் ,வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர்.ஆண்,பெண்,முதியோர் வேறுபாடு இன்றி.
  • 100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.
  • 123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.
  • 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.
  • வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது,பல ஆயிரக்கணக்கான நூல்கள்.தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி,நேரு,நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப் பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.
  • 176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

எங்கும் சடலங்கள்,அவல ஓலங்கள், தீக்கொழுந்துகள்,காயமடைந்த ,கொல்லப்பட்ட உறவினர்களின் 
அவலக்குரல்கள். காலங்கள் பல சென்றாலும் இன்றும் வல்வெட்டிதுறை மக்களின் மனங்களில் இரண வடுவாகஅச்சம்பவம் இருந்து வருகிறது. ஒரே குடும்பத்தில் 3 பேர் கூட கொல்லப்பட்டிருந்தனர். வல்வெட்டிதுறையில் நடைபெற்ற இக்கோர தாண்டவம் பற்றி எந்த ஒரு இந்திய ஊடகமும் செய்தி வெளியிடவில்லை. இன்று கூட எத்தனை இந்தியருக்கு இது பற்றி தெரியும் என்பது கேள்விக் குறியே?

முதன் முதலாக லண்டனில் இருந்து வெளிவரும் FINANCIAL TIMES இன் டெல்லி நிருபர் DAVID HOUSEGO நேரில் சென்று பார்த்த பின்பே FINANCIAL TIMES இன் 17.08.89 இதழில் இச் செய்தி வந்தது.

அதன் பின்னரே லண்டனில் இருந்து வெளிவரும் TELEGRAPHபத்திரிகையும் 13.08.89 இல் இச் செய்தியைப் பிரசுரித்திருந்தது. 24.08.89 லேயே இந்தியாவில் இருந்து வெளிவரும் INDIAN EXPRESSபத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.இந்திய அரசானது திட்டமிட்டே இச் செய்திகளை இந்தியாவில் இருட்டடிப்பு செய்தது இதற்கு இந்திய 
பத்திரிகைகள், பிற ஊடகங்கள் யாவும் துணை போயிருந்தன. தமிழர் எனும் காரணத்தினால் இந்திய அரசோ, இலங்கை அரசோ இவர்களுக்கு நீதி வழங்க முன்வரவில்லை. வல்வெட்டித்துறை மட்டுமல்ல ஈழத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு குடிமகனும் இந்திய இராணுவம் புரிந்த கொலைகள், கொள்ளைகள்,பாலியல் கொடுமைகள் 
,சித்திரவதைகள், வீடழிப்பு ,சொத்தழிப்பு போன்றவற்றை சந்தித்தே இருக்கின்றனர். உண்மை சிலருக்கு சுடலாம் ஆனால் இவை என்றும் மறைந்துவிடாது மக்களின் மனங்களில் இருந்தும், வரலாற்றின் பக்கங்களில் இருந்தும்.!


லண்டனில் இருந்து வெளிவரும் the sunday telegraph நாளிதழ் வெளியிட்ட ஆசிரிய தலையங்கம் இதுதான்.என்னால் இதுக்கு சுட்டி கொடுக்க முடியவில்லை

 

.editorial The sunday telegraph 13.08.89


over 50 tamil civilians, including women and children appear to have been murdered in raid on a village by indiantroops who were originally sent to sri lanka to restore peace.so india joins the melancholy list powers which,though democratic and based on the rule of law, have not always prevented a breakdown of moral restraint among their armed forces serving abroad.it is indias My Lai or perhaps it is hear amritsar

from Nehru onwards india's leaders have lectured the world about how to behave but,if anything this massacre is worse than My Lai . then American troopas simply ran amok in the Sri Lankan village, the Indians seem to have been more systematic;the victims being forced to lie down, and then shot in the back. yet India would long have 
had us believe that such horrors are largely perpetrated by western powers with imperialist antecedents.


such horrors accur when troops are cooped up in a situation ahich looks likely to have no solution or end, and have themselves been the victim of terrorist atrocities. post colonial indians, then, are no different from the rest of humanity.the massacre does not mean that India's policical system is any less democratic and legally-based than did My Laiof America's . but we await the naming by New Delhi of the Indian version of Lieutenant gallery, the American officer in command at My Lai,and his punishment


My Lai என்பது என்ன ?

1968 ம் ஆண்டு மார்ச் மாதம் 16 ந் திகதி வியட்நாமில் நிலை கொண்டிருந்த அமெரிக்கப் படைகளின் ஒருபிரிவு வியட்நாமின் குவாங்கை மாகாணத்தில் இருக்கும் மைலாய் கிராமத்தினுள் லெப். வில்லியம் கெலிஎன்னும் அதிகாரியின் கீழ் புகுந்து அப்பாவி வியட்நாமிய மக்கள் பல நூறு பேரை கொன்று குவித்ததுடன் பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டனர். வீடுகள் கொழுத்தப்பட்டன.ஆடு மாடுகள் போல மக்களை ஓட்டி சென்று வயல்வெளிகளில் வைத்து சுட்டுக் கொன்றனர். 4 மணித்தியாலங்களாக நடந்த இந்த வெறியாட்டம் உயர் இராணுவஅதிகாரிகளால் அமெரிக்க மக்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டது.இராணுவ அறிக்கை ஒன்று மைலாயில்நன்கு திட்டமிட்ட ஒரு இராணுவ நடவடிக்கை மூலம் பலநூறு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்று கூறியது.இதைப் பற்றி அறிந்த ஒரு இராணுவவீரன் உயர் அதிகாரிகளுக்கும்,அரசியல் தலைவர்களுக்கு விசாரணை வேண்டி எழுதினான், ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.பின்னர் 1969 ஆண்டு டிசம்பர் மாதம் 03ம் திகதி"லைவ்" பத்திரிகை மேற்படி இராணுவவீரனால் எடுக்கப்பட்ட படங்களை பிரசுரித்த பின்னரே இச் சம்பவம்பற்றி அமெரிக்க மக்களுக்கும் வெளி உலகுக்கும் தெரிய வந்தது. இருந்தும் தமது வீரர்கள் இவ்வாறு 
காட்டுமிராண்டித்தனமாக நடந்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி பல அமெரிக்கர்கள் இதனை நம்ப மறுத்தனர்.

மேலதிக விபரம் தேவைப்படுவோருக்காக.-

யாழ்ப்பாணத்தில் என் பணி - லெப். ஜெனரல் எஸ்.சி பாண்டே

MASSEACRE AT VALVETTITURAI INDIA'S MY LAI - GEORGE FERNANDEZ

 

http://karikaalan.blogspot.com/2004/08/blog-post_05.html

 

வல்வை படுகொலைகள் தொடர்பாக யாழ்பாணத்தில் இருந்து 
வெளிவரும் உதயன் பத்திரிகை 02-08-2004 ல் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது. அதற்கு 
சுட்டி கொடுக்க முடியவில்லை. ஈழநாதனுடைய வலைப்பதிவில் அக் கட்டுரை இடம்பெற்றிருக்கிறது.அங்கு சென்று பார்க்கலாம்.

http://karikaalan.blogspot.com/2004/08/blog-post_05.html

http://www.valvettithurai.org/valvettithurai-massacre-in-1989-6628.html

  • 4 weeks later...
On 4/8/2016 at 3:19 AM, Athavan CH said:

63 பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் கிடத்தி முதுகில் சுடப்பட்டிருந்தனர். ஆண், பெண், முதியோர் வேறுபாடு இன்றி.

100 பேர் அளவில் காயமடைந்திருந்தனர்.

123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன.

45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன.

வல்வை சனசமூக நிலையம் (நூலகம்) தீயிடப்பட்டிருந்தது, பல ஆயிரக்கணக்கான நூல்கள். தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திராகாந்தி போன்ற தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்ப்ட்டு இருந்தன.

176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன.

அமைதிப் படை என்ற பெயரில் இந்தளவு ஆட்டூழியங்கள் உலக வரலாற்றில் என்றும் எங்கும் நடந்ததில்லை.  உலகில் உள்ள காட்டுமிராண்டி இராணுவங்களில் முதன்மையானது ஹிந்திய இராணுவம் தான். இதன் மூலம் ஹிந்தியர்கள் நல்ல நாகரிகமும் நல்ல கலாச்சாரமும் நல்ல பண்பாடும் இல்லாத இனம் என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஹிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, வங்காளம் போன்ற சில பிரதேசங்கள் இருப்பது மகா கொடுமை.

ஹிந்திய இராணுவப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களுக்கு அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய ராஜீவ் காந்தி தலைமை.. பயங்கரவாத போர்க்குற்றவாளிகள் மேற்கொண்ட இனப்படுகொலையில் தம் உயிர்களை காவுகொடுத்த எம் தமிழ் சொந்தங்களுக்கு நினைவஞ்சலி. 

Edited by nedukkalapoovan

வல்வைப் படுகொலை என்ற ஒரு ஆவணப் புத்தகத்தை வல்வை ஆனந்தராஜ் (அப்போதைய பிரஜைகள் குழுவில் இருந்தவர். முன்னாள்  வல்வை நகரசபைத்தலைவர் ) வெளியிட்டிருந்தார். 

இங்கே தேடுகிறேன் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மிக சிறப்பான பதிவு அது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.