Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது

138337_4கிளிநொச்சியில் இன்று  செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது,

நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த முன்னாள் கிளிநொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் மூன்று மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் குறித்த முன்னாள் போராளியை ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விலங்கிட்டு கைது செய்து சென்றுள்ளனர்யா

ர் கைது செய்தது? ஏன் கைது செய்யதனர்? எங்கு கொண்டு சென்றுள்ளனர் என்று எவருக்கும் தெரியாது. கைது செய்தவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவும் இல்லை.

எனவே சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் வழங்கியதனையடுத்து உறவினர்கள் உடனடியாக கிளிநொச்சி இரனைமடுவில்  அமைந்துள்ள பிராந்திய பிரதி பொலீஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்களை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளளனர்.  இதனையடுத்து உறவினர்கள் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு சென்று போது அங்கும் குறித்த முன்னாள் போராளியை கைது செய்தது யார் என தங்களுக்கு தெரியாது என்று தெரிவித்த கிளிநொச்சி பொலீஸார் உறவினர்களை வவுனியா பொலீஸ் நிலையத்திற்கு சென்று விசாரிக்குமாறும் சில வேளை வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.

ஒருவரை கைதுசெய்யும் போது அவர் வாழும் பிரதேசத்திற்குரிய பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும் யாரை என்ன காரணத்திற்காக கைது செய்கின்றோம் எங்கு கொண்டு செல்லப் போகின்றோம் என்று அல்லது கைது செய்யப்படுகின்றவரின் உறவினருக்கு தாங்கள் யார் என்தனையும் எதற்காக கைது செய்கின்றோம் என்பதனையும் தெரிவித்து எழுத்து மூலம் அறிவித்திருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறான எவ்வித நடைமுறைகளும் இன்றி இக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இக் கைது சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

http://kilinochchinet.com/news/kilinochchi/11952

வெள்ளைவானில் வந்தவர்களால் முன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது
 
 
வெள்ளைவானில் வந்தவர்களால் முன்னாள் போராளி நடுவீதியில் விலங்கிட்டு கைது
கிளிநொச்சியில் வெள்ளை வானில் வந்தோரால் ஏ9 வீதி 155ஆம் கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
 
நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே இவ்வாறு கைது செய்யப்ப ட்டுள்ளார்.
 
இன்று பிற்பகல் மூன்று மணியளவில் வெள்ளை வான் ஒன்றில் வந்தவர்கள் குறித்த முன்னாள் போராளியை ஏ9 வீதியில் வைத்து பிடித்து கையை பின்புறமாக விலங்கிட்டு கைது செய்து சென்றுள்ளனர்.
 
யார் கைது செய்தது? ஏன் கைது செய்தனர்? எங்கு கொண்டு சென்றுள்ளனர்? என்று எவரு க்கும் தெரியாது. கைது செய்தவர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.
 
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் உறவினர்களுக்கு தகவல் வழங்கியதனையடுத்து உறவி னர்கள் உடனடியாக கிளிநொச்சி இரனைமடுவில் அமைந்துள்ள பிராந்திய பிரதி பொலி ஸ்மா அதிபர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.
 
அங்கு அவர்களை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு செல்லுமாறு கூறியுள்ளளனர். இதனையடுத்து உறவினர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு சென்று போது அங்கும் குறித்த முன்னாள் போராளியை கைது செய்தது யார் என தங்களுக்கு தெரியாது என கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
 
இதேவேளை உறவினர்களை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரிக்குமாறும், சில வேளை வவுனியா பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்திருக்கலாம் என்று கூறியுள்ளனர்.
 
ஒருவரை கைதுசெய்யும் போது அவர் வாழும் பிரதேசத்திற்குரிய பொலீஸ் நிலையத்திற்கு அறிவிக்க வேண்டும் யாரை என்ன காரணத்திற்காக கைது செய்கின்றோம் எங்கு கொண்டு செல்லப் போகின்றோம் என்று அல்லது கைது செய்யப்படுகின்றவரின் உறவினருக்கு தாங்கள் யார் என்தனையும் எதற்காக கைது செய்கின்றோம் என்பதனையும் தெரிவித்து எழுத்து மூலம் அறிவித்திருக்க வேண்டும்
 
ஆனால் அவ்வாறான எவ்வித நடைமுறைகளும் இன்றி இக் கைது மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இக் கைது சம்பவம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

http://onlineuthayan.com/news/16964

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலையாகி 4 வருடம் கழித்து இன்னும் விச ஊசி வேலைசெய்யவில்லையே என்று புதிதாக விச ஊசி ஏற்ற பிடித்துச் சென்றிருக்கலாம். நம்ம அரசியல்வாதிங்க சோத்தை துண்ணுட்டு நல்லா தூங்கிறாப்பல.  நல்லாட்சி அரசின் இந்த அராஜகங்களை தட்டிக்கேட்கவே  மாட்டாங்களா? இவங்கள்ள பலபேர் சட்டம்படிச்சவங்கதானே இதுக்கு என்னதான் முடிவு?

Edited by vanangaamudi

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, vanangaamudi said:

விடுதலையாகி 4 வருடம் கழித்து இன்னும் விச ஊசி வேலைசெய்யவில்லையே என்று புதிதாக விச ஊசி ஏற்ற பிடித்துச் சென்றிருக்கலாம். நம்ம அரசியல்வாதிங்க சோத்தை துண்ணுட்டு நல்லா தூங்கிறாப்பல.  நல்லாட்சி அரசின் இந்த அராஜகங்களை தட்டிக்கேட்கவே  மாட்டாங்களா? இவங்கள்ள பலபேர் சட்டம்படிச்சவங்கதானே இதுக்கு என்னதான் முடிவு?

அவங்க எழும்ப முடியாத்படி நட்க்குது வேலை..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அடியும் கைதும் அழிவும் ஈழத்தமிழனுக்கு கிடைத்த சாபம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.