Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

Featured Replies

அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

 

அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு



அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரிக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவை எனவும் இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் மதிக்கப்பட வேண்டியவை எனவும்  கெரி, ஜனாதிபதியிடம் கூறியுள்ளார்.


இலங்கையில் முக்கியமான பொருளாதார மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதேவேளை, நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி நோக்கி அரசாங்கம் நகர்வதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி எனினும் நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த வடக்கிலும் தெற்கிலும் சில தரப்புக்கள் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.


அனைத்து மக்களின் அபிலாஸைகளையும் பூர்த்தி செய்து அனைத்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136216/language/ta-IN/article.aspx

வடக்கு மக்கள் சொந்த இடங்களுக்குச் செல்ல மறுக்கின்றனர்!

வடக்கிலுள்ள கடும்போக்கு இனவாதக்குழுக்களால் வடபகுதியிலுள்ள குறிப்பிட்டளவான மக்கள் தமது சொந்த இடத்திற்குத் திரும்பிச் செல்ல மறுக்கின்றனர் என சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரியிடம் முறையிட்டுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 71ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்க, நியூயோர்க் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நேற்று (புதன்கிழமை) அமெரிக்க இராஜாங்கச்செயலர் ஜோன் கெரியைச் சந்தித்துப் பேச்சு நடாத்தினார்.

இதன்போது, சிறீலங்காவின் புதிய அரசாங்கம் நல்லிணக்கம் மற்றும் பொருளாதார அபிவிருத்திக்காக முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க இராஜாங்கச் செயலர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு கருத்துத் தெரிவித்த சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, வடக்கிலுள்ள இனவாதக் குழுக்களால் வடக்குப் பகுதியிலுள்ள சிறியளவிலான மக்கள் தமது சொந்த இடத்திற்குச் செல்ல மறுத்து வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று, தெற்கிலுள்ள சில இன குழுக்களும் நல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவித்து வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் கூட்டு அரசாங்கம், எதிர்ப்புகள் இருந்தாலும், நல்லிணக்க செயல்முறைக்கான திட்டங்களை செயற்படுத்துவதில் உறுதியாக இருக்கிறது.’ என்று தெரிவித்துள்ளார்.

http://thuliyam.com/?p=42164

  • தொடங்கியவர்
ஜோன் கெரி- ஜனாதிபதி சந்திப்பு
 
22-09-2016 09:37 AM
Comments - 0       Views - 20

article_1474524880-04.jpg

ஐக்கிய நாடுகள் சபையின் 71ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடருக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் அமெரிக்கஇராஜாங்க செயலாளர் ஜோன் கெரிக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்றது.

article_1474524894-03.jpg

- See more at: http://www.tamilmirror.lk/182426/ஜ-ன-க-ர-ஜன-த-பத-சந-த-ப-ப-#sthash.fm2brcb3.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஜீவன் உங்கள் ஊருக்கு போக மறுக்கிறீர்களா?

4 hours ago, Athavan CH said:

வடக்கிலுள்ள கடும்போக்கு இனவாதக்குழுக்களால்

இவர் தமிழர் காணிகளை அடாத்தாக ஆக்கிரமித்திருக்கும்  சிங்கள-பௌத்த  இராணுவப் பயங்கரவாதிகளைச் சொல்கிறார்!  

4 hours ago, Athavan CH said:

தெற்கிலுள்ள சில இன குழுக்களும்

இவர் தனது இன சிங்கள-பௌத்த  பயங்கரவாதிகளைச் சொல்கிறார்!  

 

 அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோன் கெரி ஏமாந்து போகிறாரா என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க அவர் மேற்கொள்ளும் அணுகுமுறைகளில் இருந்து  தெரிந்துவிடும்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்திச் சனல் ஒன்றீல் பார்த்தென்..இருவரும் கைகுலுக்கியபின்...கெரி இவரது கையை உதறீ விடுவதையும்...மூனுக்கு கைநிட்டிய மங்களாவையும் ,இன்னுமொருவரையும் மூன் கவனிக்காது போவதையும்.....இன்ன நாடகமடா நடக்குது....

2 hours ago, MEERA said:

என்ன ஜீவன் உங்கள் ஊருக்கு போக மறுக்கிறீர்களா?

இன்றும் மாலை 4 மணியிலிருந்து 6:30 வரை அங்குதான் நின்று முள்ளுக்கம்பி வேலிக்குள்ளேயாவது போகலாமா எண்டு பாத்தன், முடியல்ல. ஆனா எனோ தெரியாது பயலுகள் சுட மாட்டாங்கள் என்ற நம்பிக்கை மட்டும் இப்ப வந்திருக்கு.

  • தொடங்கியவர்

 

  • தொடங்கியவர்
சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் இலங்கை-ஜனாதிபதி மைத்திரிக்கு நினைவூட்டினார் ஜோன்ஹெரி
சர்வதேசத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டும் இலங்கை-ஜனாதிபதி மைத்திரிக்கு நினைவூட்டினார் ஜோன்ஹெரி
இலங்கை அரசாங்கம் தனது அனைத்துலக வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று அமெரிக்கா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
 
நேற்று முன்தினம் நியூயோர்க்கில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் ஹெரியை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
 
இந்தச் சந்திப்பின் போதே, சர்வதேசத்துக்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை  அரசாங்கம் நிறைவேற்றும் என்று, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி, ஜனாதிபதியிடம் நம்பிக்கை வெளியிட்டதாக, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
 
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகள் மற்றும் முதலாவது அமெரிக்க இலங்கை பங்காளர் கலந்துரையாடல் குறித்தும், இருநாடுகளின் தலைவர்களும் கலந்துரையாடியுள்ளதாகவும், இந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

http://onlineuthayan.com/news/17991

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.