Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

29,30 ஆம் திகதிகளில் காலியில் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு 1.5 பில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்குமென அரசு நம்பிக்கை

வீரகேசரி நாளேடு

இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு எதிர்வரும் 29,30 ஆம் திகதிகளில் காலி மாநகரில் நடைபெறவுள்ளது.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியினை பெற்றுக்கொள்ள முடியுமென அரசாங்கம் எதிர்பார்க்கின்றது என்று நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜயசுந்தர தெரிவித்தார்.இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா,ஜப்பான், நோர்வே,ஜரோப்பிய ஒன்றியம் உட்பட 50 நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்வர். "மகிந்த சிந்தனை புதிய இலங்கைக்கான இலக்கு' என்னும் தொனிப்பொருளிலில் இந்த மாநாடு நடைபெறுகின்றது என்றும் அவர் கூறினார். .

நிதியமைச்சின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற செய்தியõளர் மாநாட்டில் கருத்து தெரிவித்தஅவர் மேலும் கூறியதாவது; காலியில் அமைந்துள்ள லைட் ஹவுஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டிற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குவதோடு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் (கபினட் அமைச்சர்கள்) நிதியமைச்சின் அதிகாரிகளும் மேலும் உயர் மட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்..

  • கருத்துக்கள உறவுகள்

'நிதி உதவிகளை பெறுவதற்காக அரசு உத்தரவாதம் வழங்காது': உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு தொடர்பாக அரசின் நிலைப்பாடு

உதவி வழங்கும் சமூகத்திடமிருந்து நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கம் உறுதி மொழிகள் எதனையும் இம்முறை வழங்கப்போவதில்லை என சிறிலங்காவின் நிதியமைச்சின் செயலாளர் பி.பி.ஜெயசுந்தர திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.

சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் நாடுகள் அமைப்புக்களின் மாநாடு எதிர்வரும் 29 ஆம் நாள் காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்மாநாடு தொடர்பாக நிதியமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

"மகிந்த சிந்தனையின் கீழான அபிவிருத்தித் திட்டங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதுதான் இந்த மாநாட்டின் நோக்கம்" எனவும் தெரிவித்த ஜெயசுந்தர, "நிதி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக உறுதி மொழிகளை வழங்குவது இம்முறை இடம்பெறப் போவதில்லை" எனவும் குறிப்பிட்டார்.

"கொழும்புக்கு வெளியே இந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பமாகும்" எனவும் சுட்டிக்காட்டிய அவர், "ஜேர்மனி சிறிலங்காவுக்கான நிதி உதவிகளை இடைநிறுத்தவில்லை. அந்த நாட்டுடனான உறவுகள் பாதிக்கப்படவில்லை" எனவும் கூறினார்.

ஊடகவியலாளர்களிடம் மேலும் தெரிவித்ததாவது:

"காலி வெளிச்ச வீட்டு விடுதியில் ஜனவரி 29 ஆம் நாள் முதல் இரு நாட்களுக்கு நடைபெறவுள்ள சிறிலங்கா அபிவிருத்தி மன்ற 2007 மாநாட்டை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஆரம்பித்து வைப்பார். சிறிலங்காவுக்கு உதவி வழங்கும் சமூகத்தைச் சேர்ந்த உயர் மட்ட அதிகாரிகளும், முக்கிய அமைச்சர்களும் இதில் கலந்துகொள்வார்கள். 2004 ஆழிப்பேரலை பேரனர்த்தத்தில் மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கிய நகரம் என்பதனால் மாநாட்டை நடத்துவதற்கு காலி நகரம் தெரிவு செய்யப்பட்டது. இவ்வருட மாநாட்டுக்கான கருப்பொருளாக "புதிய இலங்கைக்கான திட்டம்" அமைந்துள்ளது.

"மகிந்த சிந்தனை குறித்த அரசாங்கத்தின் திட்டங்கள், யோசனைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்று முன்வைக்கப்படும். இந்த ஆவணம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது. மாநாட்டில் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஆராயப்படும். மேலும் கடற்கோளுக்குப் பிந்திய காலப்பகுதியில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன என்பது குறித்த மதிப்பீடும் இடம்பெறும். ஆரசாங்கம் பகிரங்கமாக கொள்கைகளை வகுத்துவருகின்றது என்பதற்கு இது சான்றாகும்.

50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூகத்தினரும், அரச சார்பற்ற அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் இம்மாநாட்டில் கலந்துகொள்கின்றார்கள். இம்முறை மாநாட்டில் நாங்கள் நிதி உதவிக்கான உத்தரவாதம் எதனையும் கோரப்போவதில்லை. ஏற்கனவே அது தொடர்பாக திட்டமிடப்பட்டுவிட்டது."

இவ்வாறு ஊடகவியலாளர்களிடம் ஜெயசுந்தர தெரிவித்தார்.

-புதினம்

உறுதி மொழிகளை வழங்கிவிட்டு உதவியைப் பெற்றுக்கொண்டு பின் உறுதிமொழிகளை மறந்து விடுவதுதான் அரசாங்கத்தின் வழக்கம்.

உறுதிமொழி தராவிட்டால் மட்டும் உதவி கிடைக்காமலா போகப் போகிறது.

புலிகள் காத்திருக்கும் கனரக திகதி இதுவாக இருக்குமோ என்று ஒரு ஆய்வு <_<

<_< நான் நினைத்ததடை குறுக்ஸ் சொல்லுரார். அண்மையில கண்காணிப்புக்குழு சொன்னதுதானே நம்ம குஞ்சுகள் பெரும் பாச்சல் ஒன்றுக்கு தாயார்பண்ணிறீனம் எண்டு. அதுதான் வாத்திமாரை போய் கிளாஸ்ரூமுக்கு முன்னால ஒருக்கா போய்விட்டு வர அமெரிக்கா சொல்லியிருக்கும் போல.

வாத்திமாருக்கே தண்ணி காட்டாம நேர்மையாய் நடக்கிற எங்களௌக்கே இப்படி எண்டால் இவன்கள் ஒரு போதும் தாழ்த்தப்பட்ட ஒரு சமூகத்தையோ, அல்லது ஒரு மக்கள் பிரிவினையோ அகிம்ச வழியில போக வைத்து அடம்பிடித்தா அடிக்கவும் பொல்லுக்கொடுக்கிறவன் அல்லது மேற்கத்தய நாடுகளில் உள்ளது போல சோசல்( தமிழ் விளக்கம் அகராதியின் படி பிச்சை) மூலம் காசைகொடுத்து பியர் அடிக்க பழக்கி மனபலத்தையே அழிச்சுப்போடுவான். ஆகவே இதுகளுடன் தம்பி ஏற்கனவே விளங்கினபடியாதான் கண்டபடி கலோ சொல்லாமல் எட்டத்தில வைத்து பாடம் படிப்பிக்கிறார். படிப்பிக்கப்போறார். அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, லண்டன் எண்டு பல துறையில முதல் தரத்தில் பாஸ் பண்ணி சினாவ காளில வைத்த இந்த தமிழன் பின்பு மற்ற இனத்தவனை பி.எச்.டி செய்து சாதனகள் படைக்கிற வம்ச மூளையுள்ள தமிழனுக்கா இவன்கள் கப்பல் ஓட்ட கற்றுக்கொடுப்பது... :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உதவி வழங்கும் சமூக மாநாட்டை முன்னிட்டு தென் பிராந்தியத்தில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள்

[27 - January - 2007] [Font Size - A - A - A]

இலங்கைக்கு உதவி வழங்கும் சமூகத்தின் மாநாடு எதிர்வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் காலியில் நடைபெறவுள்ள நிலையில் தென் பகுதியின் பாதுகாப்பு மிகப்பெருமளவில் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தென் பிராந்தியத்தில் குறிப்பாக காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை பகுதிகள் முற்று முழுதாக அதி உயர் பாதுகாப்பினுள் கொண்டு வரப்பட்டு, முப்படையினரும் 24 மணிநேரமும் முழு உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

காலி நகரில் 29 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த இரு நாள் மாநாட்டுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார்.

இந்த மாநாட்டில், இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சிக்கான இணைத்தலைமை நாடுகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதர்களும் உதவி வழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இதையடுத்தே, ஜனாதிபதியின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டை முழு அளவிலான பாதுகாப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாகவே தென் பகுதி இந்தப் பாதுகாப்பு வளையத்தினுள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அம்பாந்தோட்டை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் உபாலி ஹேவகே கூறுகையில்:

இந்த மாவட்டத்தினுள் விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாகக் கிடைத்த தகவல்களையடுத்து மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விசேட வீதித் தடைகள் போடப்பட்டும் மாவட்டத்தினுள் வரும் அனைத்து வாகனங்களையும் தனி நபர்களையும் தீவிர சோதனைக்குட்படுத்தும் விதத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு, அம்பாந்தோட்டையிலிருந்து அதன் அருகிலுள்ள தங்காலை, திஸ்ஸமகராம, அங்குனுகொலபலச மற்றும் கதிர்காமம் வரை சுமார் 300 வீடுகளை உள்ளடக்கி பாதுகாப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களென்ற சந்தேகத்தின் பேரில் 38 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.