Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

42வது தேசிய விளையாட்டு விழா நாளை யாழில் ஆரம்பம்..!

Featured Replies

42வது தேசிய விளையாட்டு விழா நாளை யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.

நாளை மாலை 3 மணிக்கு ஆரம்பமாகும் தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் 2ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

நாளை ஆரம்ப நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன், ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண விளையாட்டு துறை அமைச்சர் த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

அத்துடன், விருந்தினர்களாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

எதிர்வரும் 2ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சி தலைவர் இரா.சம்மந்தன், விளையாட்டுதுறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஆகியோரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

 

http://www.tamilwin.com/community/01/119173?ref=home

D0055df.jpg

யாழ்ப்­பாணம் துரை­யப்பா மைதா­னத்தில் முதற்­த­ட­வை­யாக 42ஆவது தேசிய விளை­யாட்டு விழா இன்று கோலா­க­ல­மாக ஆரம்­ப­மா­கின்­றது.

எதிர்­வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரையில் நடை­பெறும் இத் தேசிய விழாவின் ஆரம்ப நிகழ்வு சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரி­யவின் தலை­மையில் இன்று பிற்­பகல் 3 மணிக்கு இடம்­பெ­ற­வுள்­ளது.

இவ்­ ஆரம்ப நிகழ்வில் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், விளை­யாட்­டுத்­துறை பிர­தி­ய­மைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி. விக்கி­னேஸ்­வரன், வட­மா­காண கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தம்­பி­ராஜா குரு­கு­ல­ராஜா உட்­பட முன்னாள் இந்நாள் வீரர்கள் எனப் பலர் கலந்து கொள்­கின்­றனர்.

1967ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட தேசிய விளை­யாட்டு விழா இம்­முறை விளை­யாட்டின் மூலம் ஐக்­கி­யத்­தையும் இன ஒற்­று­மை­யையும் ஏற்­ப­டுத்­துவோம்" என்ற தொனிப்­பொ­ருளில் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க ஆகி­யோரின் கருத்­திட்­டத்­திற்கு அமை­வாக விளை­யாட்­டுத்­துறை அமைச்சு இவ்­வி­ளை­யாட்டு விழாவை முன்­னெ­டுப்­ப­தற்­கு­ரிய அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் பூர்த்தி செய்­துள்­ளது.

தேசிய தீபம்

42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவின் பிர­தான நிகழ்­வான தேசிய தீபத்தை ஏற்றும் வாய்ப்பு இலங்­கையின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீர­ரான சூசைப்­பிள்ளை அந்­த­னிப்­பிள்ளை க்ளிபர்ட்டுக்கும் வலைப்­பந்­தாட்ட அணியின் முன்னாள் தலைவி ஜெயந்தி சோம­சே­கரம் டி சில்­வா­வுக்கும் கிட்­டி­யுள்­ளது.

ஜெயந்தி சோம­சே­கரம்

வலைப்­பந்­தாட்ட வீராங்­க­னை­யாக, தலை­வி­யாக, பயிற்­று­ந­ராக, நிர்­வா­கி­யாக சிறந்த மெய்­வல்­லு­ந­ராக பிர­கா­சித்த இவர் வேம்­படி மகளிர் கல்­லூ­ரியின் பழைய மாண­வி­யாவார்.

இவர் இலங்கை வலை­ப்பந்­தாட்டம் மற்றும் மகளிர் கூடை­பந்­தாட்ட அணி­களில் இடம்­பெற்­றி­ருந்­த­தோடு வலை­ப்பந்­தாட்ட அணிக்கும் தலைமை தாங்­கி­யி­ருந்தார். தற்­போது ஹட்டன் நெஷனல் வங்­கியில் கிளை முகா­மை­யா­ள­ராக கட­மை­யாற்றும் இவர் வர்த்­தக வலைப்­பந்­தாட்ட சங்­கத்தின் தலை­வி­யாக செயற்­பட்டு வரு­கின்றார்.

சூசைப்­பிள்ளை

அந்­த­னிப்­பிள்ளை

யாழ். சென்ட் ஜோன்ஸ் கல்­லூ­ரியின் பழைய மாண­வ­ரான இவர் 1969 ஆம் ஆண்டு இலங்கை பாட­சா­லைகள் அணி­யிலும் 1972 ஆம் ஆண்டு தேசிய அணி­யிலும் இடம்­பெற்­ற­துடன் கல்­லூ­ரியின் அதி உயர் ஜொனியன் ஈகிள் விருதை 1972 ஆம் ஆண்டு முத­லா­ம­வ­ராக வென்­றெ­டுத்­த­வ­ராவார். கலைத்­துறை பட்­ட­தா­ரி­யான இவர் இக்­கல்­லூ­ரியில் உதவி அதி­ப­ரா­கவும் கட­மை­யாற்­றி­யி­ருந்தார்.

கால்­பந்­தாட்டத்தில் யாழ். மாவட்­டத்தில் அதி சிறந்த வீர­ராக விளங்­கிய இவர் சி" பிரிவு பயிற்­றுநர் சான்­றி­த­ழைக்­கொண்­டுள்ளார். தனது கல்­லூரி, மாவட்ட கழ­கங்கள் மற்றும் பல்­க­லைக்­க­ழக அணிகள் என பல­வற்­றுக்கு பயிற்­று­ந­ராக செயற்­பட்ட இவர் யாழ். கால்­பந்­தாட்ட லீக்கின் தலை­வ­ராக பதவி வகித்­தி­ருந்தார். அத்­தோடு முதல்­தர நடு­வ­ரா­கவும் செயற்­பட்­டி­ருந்தார்.

இம்­முறை

இது­வரை 25 வகை­யான விளை­யாட்டுப் போட்­டி­களே நடை­பெற்று வந்­தி­ருந்த நிலையில் இம்­முறை புதி­தாக எட்டு வகை­யான விளை­யாட்டுப் போட்­டிகள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு நடத்­தப்­படவுள்ளன. மெய்­வல்­லுநர் போட்­டி­க­ளுடன் கயி­றி­ழுத்தல், கூடைப்பந் தாட்டம், கடற்­கரை கபடி, கால்­பந்­தாட்டம், உள்­ளிட்­டங்­க­லாக மொத்­த­மாக 33 வகை­யான போட்­டிகள் இம்­முறை இடம்­பெ­ற­வுள்­ள­தோடு 1700 மெய்­வல்­லு­நர்கள் பங்­கு­பற்­ற­வுள்­ளனர். அத்­துடன் 900 உத்­தி­யோ­கத்­தர்­களும் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

பூர்த்தி

இதே­வேளை, 42ஆவது தேசிய விளை­யாட்டு விழாவை நடத்­து­வ­தற்­கான அனைத்து ஏற்­பா­டு­களும் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக 9 மாகா­ணங்­க­ளையும் சேர்ந்த போட்­டி­யா­ளர்கள் தங்­கு­வ­தற்­காக ஐந்து பாட­சா­லை­களில் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன. அதே­போன்று நடு­வர்கள் மற்றும் ஏனைய உத்­தி­யோ­கத்­தர்­களும் களத்தில் செயற்­ப­டு­வ­தற்கு தயா­ரா­க­வி­ருக்­கின்­றனர்.

மேலும் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்தில் அனைத்து தயார்ப்­ப­டுத்­தல்­களும் நிறைவு செய்­யப்­பட்­டுள்­ள­தோடு, கிளி­நொச்சி மாவட்­டத்­திலும் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

நிறைவு விழா

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்ள தேசிய விளை­யாட்டு விழா நிறைவு விழாவில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கினேஸ்­வரன் ஆகியோர் பங்­கேற்­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://www.virakesari.lk/article/11873

42ஆவது தேசிய விளையாட்டுவிழா யாழில் கோலாகல ஆரம்பம்
42ஆவது தேசிய விளையாட்டுவிழா யாழில் கோலாகல ஆரம்பம்
யாழ் துரையப்பா மைதானத்தில் முதற்தடவையாக 42ஆவது தேசிய விளையாட்டு விழா சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கோலாகலமாக ஆரம்பமாகின.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம் திகதி வரை இத் தேசிய விளையாட்டு  விழா  நடைபெறும்  
 
இன்றைய ஆரம்ப நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நல்லிணக்க அமைச்சர்மனோகணேசன்,நாடாளுமன்றஉறுப்பினர்களானசுமந்திரன், மாவை. சேனாதிராசா, சரவணபவன்,அங்கஜன், வடமாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தமபிராஜாகுருகுலராஜா,வடமாகாணஅவைத்தலைவர்சி.வி.கே.சிவஞானம்,வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித்தலைவர் தவராசா,மாகாணசபை உறுப்பினர்களான பரஞ்சோதி ஆர்னோ ல்ட்,மற்றும் வடமாகாணஆளுனர் றெஜினோல்டகுரே உட்பட முன்னாள் இந்நாள் வீரர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
14518583_1149176275195896_774816287_n.jpg
1967ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட தேசிய விளையாட்டு விழா இம்முறை விளையாட்டின் மூலம் ஐக்கியத்தையும் இன ஒற்றுமையையும் ஏற்படுத்துவோம்' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.
14501861_1149206815192842_111068610_n.jpg
42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் பிரதான நிகழ்வான தேசிய தீபத்தை இலங்கையின் முன்னாள் கால்பந்தாட்ட வீரரான சூசைப்பிள்ளை அந்தனிப்பிள்ளை க்ளிபர்ட் வலைப்பந்தா ட்ட அணியின் முன்னாள் தலைவி ஜெயந்தி சோமசேகரம் டி சில்வா ஆகியோர் ஏற்றி வைத்த னர்.
14527625_1149206808526176_4836796_n.jpg
இதுவரை 25 வகையான விளையாட்டுப் போட்டிகளே நடைபெற்று வந்திருந்த நிலையில் இம்முறை புதிதாக எட்டு வகையான விளையாட்டுப் போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டு நடத்தப்படவுள்ளன.
14527528_1149206778526179_1635197526_n.jpg
மெய்வல்லுநர் போட்டிளுடன் கயிறிழுத்தல், கூடைப்பந்தாட்டம், கடற்கரை கபடி, கால்பந்தா ட்டம், உள்ளிட்டங்கலாக மொத்தமாக 33 வகையான போட்டிகள் இம்முறை இடம்பெற வுள்ளதோடு 1700 மெய்வல்லுநர்கள் பங்குபற்றவுள்ளனர். அத்துடன் 900 உத்தியோகத்தர்க ளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
14528200_1149176035195920_1396983276_n.jpg
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள தேசிய விளையாட்டு விழா நிறைவு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.
14542611_1149176188529238_1117292484_n.jpg

http://onlineuthayan.com/news/18293

இண்டைக்கு இரண்டு தடவை போய் பாத்தன் - விளையாட்டை காணவில்லை பேசியே கழுத்தறுக்கிறாங்கள். நாளைக்கு சரிவராது, சனிக்கிழமை பாப்பம்.

42 வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்; விக்னேஸ்வரன் புறக்கணிப்பு

42 வது தேசிய விளையாட்டு விழா யாழில் ஆரம்பம்; விக்னேஸ்வரன் புறக்கணிப்பு

 

42 வது தேசிய விளையாட்டு விழா யாழில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. தேசிய விளையாட்டு விழா முதன்முறையாக யாழில் முன்னெடுக்கப்படுகின்றது.

இவ் விழாவினை விளையாட்டு அமைச்சும், விளையாட்டுத் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

யாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இவ்விளையாட்டு விழாவினை பாராளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது, 9 மாகாண விளையாட்டு வீரர்களும் தமது மாகாண கொடிகளை கைகளில் ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர். அணிவகுப்பு மரியாதையினையும் பிரதம விருந்தினர் உட்பட கௌரவ விருந்தினர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

அதன்பின்னர் வடமாகாண விளையாட்டுத்துறை பொறுப்பாளர்கள் தீபத்தினை ஏந்தியவாறு ஒலிம்பிக் சுடரினை ஏற்றி வைத்தனர்.

விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சகவாழ்வு மற்றும் அரச கருமமொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ம.சுமந்திரன், ஈ.சரணவபவன், மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

இதேவேளை இந்த தேசிய விளையாட்டு விழாவினை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் புறக்கணித்தார்.

நாட்டின் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம், சமத்துவம், ஒருமைப்பாடு என்னும் தொணிப் பொருளில் 42வது தேசிய விளையாட்டு விழா இடம்பெறுகின்றது.

http://tamil.adaderana.lk/news.php?nid=84053

யாழில் கோலாகலமாக ஆரம்பமானது 42 ஆவது தேசிய விளையாட்டு விழா 

Published by Priyatharshan on 2016-09-30 11:23:45

தேசியக் கொடியை ஒலிம்பிக் வீராங்கனை சுசந்திகா ஜயசிங்க ஏந்திவர தேசிய விளையாட்டு விழா தீபத்தை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயந்தி மற்றும் அன்தனிப் பிள்ளை ஆகியோர் ஏற்றிவைக்க யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில கோலாகமாக ஆரம்பமானது 42ஆவது தேசிய விளையாட்டு விழா.

14494831_1639966959635351_89396365476896

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக யாழ். மண்ணில் நடத்தப்படும்  இவ்விழா நேற்று வியாழக்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வு பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமானது. 

அணிவகுப்பு

தேசிய கீதத்தின் பின்னணி இசை ஒலிக்கப்பட்டதைத் தொடர்ந்து வீர வீராங்கனைகளின் அணிவகுப்பு ஆரம்பமானது. மேல்,கிழக்கு, மத்திய, தென், வடமேல், ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடக்கு ஆகிய மாகாணங்களைச் சேர்ந்த வீர வீராங்கனைகள்  அணிவகுத்து வர சபாநாயகர் கருஜயசூரிய 42ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஏட்டினை வாசித்து விழாவை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைப்பதாக அறிவித்தார். 

கொடியேற்றல்

தொடர்ந்து சம்பிரதாய பூர்வமாக ஏழு வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு வண்ண வண்ண பலூன்கள் பறக்கவிடப்பட்டன. வடக்கு வானே வண்ணமயமாக காட்சியளிக்க தேசிய விளையாட்டு விழாவின் உத்தியோக பூர்வ கொடி மேல் மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் வடமாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளரிடம் கையளிக்கவும் அவர் அதை இலங்கை விளையாட்டு அபிவிருத்தி திணைக்களப் பணிப்பாளரிடம் சமர்ப்பித்த பின்னர் ஏற்றி வைக்கப்பட்டது. 

தேசிய தீபம்

அதனைத்தொடர்ந்து தேசிய  தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் வட மாகாணத்தின் முன்னாள் சிரேஷ்ட வீரரான எஸ்.அன்தனிப் பிள்ளை மற்றும் முன்னாள் சிரேஷ்ட வீராங்கனை ஜெயந்தி சோமசுந்தரம் ஆகியோர் தீப்பந்தத்தை ஏந்தியவாறு மைதானத்தை  வலம்வந்து ஜோதியை ஏற்றி வைக்கவும் அனைத்து வீர வீராங்கனைகளும் கரகோஷம் எழுப்பினர். 

எரிய தாமதமான தீபம்

தேசிய தீபம் ஏற்றப்பட்டும் சற்று நேரம் தாமதித்தே எரியத் தொடங்கியது. தொழில்நுட்ப கோளாறின் காரணமாக சற்று தாமதமாகியே எரிய ஆரம்பித்தது. அதனையடுத்து போட்டியில் கலந்து கொள்ளும் வீர வீராங்கனைகள் மற்றும் நடுவர்களின் சத்தியப்பிரமாணம் இடம் பெற்றது.

அதிதிகளின் உரைகளும் கலாசார நிகழ்வும் 

அதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர்களான மனோ கணேசன், தயாசிறி ஜயசேகர, பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹாரீஸ், மாகாண அமைச்சர் குருகுலராஜா ஆகியோரின் முக்கிய உரைகள் இடம்பெற்றன. தொடர்ந்து பாரம்பரிய கலை கலாசார  நிகழ்வுகள் இடம்பெற்றதையடுத்து ஆரம்ப நிகழ்வு செவ்வனே நிறைவடைந்தது. 

இவ்வாரம்ப நிகழ்வில்  தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எச்.எம்.எம்.ஹாரீஸ், வட மாகாண  கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் குருகுலராஜா  பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அங்கஜன் இராமநாதன்,  வடமாகாண தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் உட்பட பலர் பங்கேற்றனர்.

14469440_1639967489635298_18490829481088

14495293_1639967096302004_75955470781804

14519881_1639966999635347_25713884120383

14449850_1639966879635359_84649646550346

14448930_1639967049635342_63817149566664

14446094_1639967452968635_75803015709501

14441224_1639967379635309_29150658474718

14432990_1639966942968686_75380529945208

14358663_1639967432968637_61558037292193

http://www.virakesari.lk/article/11917

  • கருத்துக்கள உறவுகள்

உதுக்கொன்னும் குறைச்சலில்ல. சிங்கப்பூர் கூட ஒலிம்பிக்கில பதக்கம் வெல்லுது.. உந்த நாடு.. பரா ஒலிம்பிக்கில் மட்டும் ஒரு வெண்கலம்..! முன்னேற இடமுள்ளது. :104_point_left:

தேசிய விளையாட்டு விழா ஆரம்ப நிகழ்வில் வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும் விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை என அரச தரப்பு தெரிவித்துள்ளது.


இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக சபாநாயகர் கரு ஜயசூரிய பங்கேற்றிருந்ததுடன் வட மாகாணசபையின் தவிசாளர் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் சிலர்  பங்கேற்றிருந்தனர்.


விக்னேஸ்வரன் இந்த நிகழ்வில் பங்கேற்காமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் நிலவி வரும் முரண்பாட்டினை வெளிக்காட்டுவதாக அமைகிறதென கொழும்புச்செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. 
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/136501/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.