Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளியலறையினுள் அமானுஷ்யம்..? பாராளுமன்ற உறுப்பினருக்கு நிகழ்ந்த திகில் சம்பவம்..!

Featured Replies

குளியலறையினுள் அமானுஷ்யம்..? பாராளுமன்ற உறுப்பினருக்கு நிகழ்ந்த திகில் சம்பவம்..!

 

 

Nalind_bandara.png

ஐக்கிய தேசியக் கட்சி குருநாகல் மாவட்ட பாராளுமன்ற நலீன் பண்டார விடுதி அறை குளியலறையினுள் விபத்துக்குள்ளாகி மர்மமான முறையில் காயமடைந்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக அவர் தெரிவிக்கையில், 

அன்று விடுதி குளியலறைக்கு சென்றபோது தன்னை யாரோ தள்ளிவிட்டதாகவும் இதனால் தான் கீழே விழுந்து காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும்,

அந்த சம்பவ நேரத்தில் அறை பூட்டியிருந்ததாகவும் தான் மாத்திரமே குறித்த அறையில் இருந்ததாகவும் தெரிவித்தார்.

1905 வருடம் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த விடுதி 1980 முதல் பாராளுமன்ற உறுப்பினர் விடுதியாக பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் இந்த விடுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். எனினும் இப் பெண் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்திற்கு பின்னர், இங்கு பல மர்ம சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக நான் இப்போது அறிந்துகொண்டேன்.

அமானுஷ்மான எதோ ஒன்று தன்னை தள்ளிவிட்டதாகவும் தான் பேய் பிசாசு போன்றவற்றை நம்புவதில்லை எனவும் ஆனால் இவ்வாறு நடந்த பின்னர் தான் குழப்பமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் நளீன் பண்டாரவின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/12260

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் நீங்கள் பேய்,பிசாசுகளை நம்புவதில்லையே பிறகென்ன அமானுஷ்யமாவது அவரைக்காயாவது அதுவும் ஆபிரகாம் கோவூர் வாழ்ந்த தேசத்திலே .....! <_<

10 minutes ago, suvy said:

அதுதான் நீங்கள் பேய்,பிசாசுகளை நம்புவதில்லையே பிறகென்ன அமானுஷ்யமாவது அவரைக்காயாவது அதுவும் ஆபிரகாம் கோவூர் வாழ்ந்த தேசத்திலே .....! <_<

அவன் விசரனை விடுங்கோ.

இந்த சிங்கம் நம்ம யாழ் மத்திய கல்லூரியிலும் படிப்பித்ததாமே - உண்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

அவன் விசரனை விடுங்கோ.

இந்த சிங்கம் நம்ம யாழ் மத்திய கல்லூரியிலும் படிப்பித்ததாமே - உண்மையா?

இந்தக் கேள்வியை அப்படியே நவீனனின் பெஞ்ச்சுக்கு மாற்றி விட்டுள்ளேன்.அவரிடமிருந்து சரியான பதில் எங்கள் இருவருக்கும் கிடைக்கும் என்று நம்புவோம் ....!  tw_blush:

  • தொடங்கியவர்
8 minutes ago, suvy said:

இந்தக் கேள்வியை அப்படியே நவீனனின் பெஞ்ச்சுக்கு மாற்றி விட்டுள்ளேன்.அவரிடமிருந்து சரியான பதில் எங்கள் இருவருக்கும் கிடைக்கும் என்று நம்புவோம் ....!  tw_blush:

எனக்கு தெரியாது..:rolleyes:

 

தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார்.

https://ta.wikipedia.org/wiki/ஆபிரகாம்_கோவூர்

ஆனால் முன்பு இங்கு களத்தில் இருந்த அஜீவன்,  இவர் தனது பெரியப்பா என்று எழுதி இருந்தார்.

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, நவீனன் said:

எனக்கு தெரியாது..:rolleyes:

இவர் யாழ் மத்திய கல்லூரிக்கு 1972/1973/1974 இல் ஒருதடவை வந்திருந்தார். அப்போது இவர் பழைய மத்திய கல்லூரி ஆசிரியர் என அறிமுகப்படுத்தின ஞாபகம் - அப்ப எனக்கு வயது பத்துக்குள்ள - முழுமையான ஞாபகம் இல்லை.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வாசி...! .இவ்வளவு கெதியாய் எமது சந்தேகத்தை நிவர்த்தி செய்ததற்கு மீண்டும் நன்றி...!  tw_blush:

8 minutes ago, vaasi said:

உண்மை தான்

நன்றி வசி - உங்கள் இணைப்பை வாசித்தபோது இதனை பதியாமல் என்னால் இருக்க முடியவில்லை. எவ்வளவு அற்புதமான மனிதர்களை நம் நாடு கொண்டிருந்தது. அதுவும் அதிபர் Cash சொன்ன வசனம் - ரொம்ப அழகு..

002.png

 

சிங்கன் யாழ் மத்திய கல்லூரியை சிப்பிலி ஆட்டிட்டுதான் போயிருக்கிறான்.

மறுபடியும் நன்றி வாசி/வசி 

003.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.