Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல்

Featured Replies

1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல்

1990ல் வடக்கிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான அறிவித்தல்

 

1983 தொடக்கம் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்தக் காணிகளை கைவிட்டவர்கள் அல்லது உயிர் அச்சுறுத்தலின் காரணமாக மிகக் குறைந்த விலையில் காணிகளை விற்றவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்கான விசேட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இச் சட்ட மூலமானது இரண்டு வருடத்திற்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்பதால் இவ்வாறான பாதிப்புக்குள்ளானவர்கள் தங்களது காணிகளை மீளப் பெறுவதற்காக உரிய முறையில் விண்ணப்பித்து சட்ட நடவடிக்கைகளை மிக விரைவாக எடுக்க வேண்டும்.

எனவே மேற்கூறப்பட்ட விபரங்களின் படி பாதிக்கப்பட்டவர்கள் தங்களது காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதில் ஆர்வமும், அக்கறையும் உடையவர்களாயிருப்பின் உங்கள் காணி தொடர்பான விபரங்களை இல : 83, நாவலர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள மக்கள் பணிமனை அலுவலகத்திற்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ இதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்று 15/11/2016க்கு முன்னர் பூரணப்படுத்தி கிடைக்கச் செய்யுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள்.

பாதிக்கப்பட்டவர்களின் தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் இக் காணிகளை மீட்பதற்குரிய இவர்களுக்குரிய சட்ட ஆலோசனைகள் மற்றும் வழி காட்டுதல்கள் வழங்கப்படும்.

எனவே இச் சந்தர்ப்பத்தை பாதிக்கப்பட்ட சகலரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றீர்கள் என வடக்கு முஸ்லிம்களின் உரிமைக்கான அமைப்பின் (NMRO) செயலாளரும், யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்ட மக்கள் பணிமனைத் தலைவருமான மௌலவி பி.ஏ.எஸ் சுப்யான் தெரிவித்துள்ளார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=84785

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அறிவித்தலும் சட்டமூலமும் மன்னார்.. வவுனியா.. யாழ்ப்பாணம்.. முல்லைத்தீவு.. கிளிநொச்சி.. அம்பாறை.. மட்டக்களப்பு.. திருமலை.. புத்தளம்.. கல்முனை.. மூதூர்.. கொழும்பு.. மலையகம் இங்கிருந்து பல்வேறு கட்டங்களில் முஸ்லீம் அடிப்படை மதவாதக் கும்பல்களின் வெறியாட்டம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது காணிகளை இழந்த தமிழ் மக்களுக்கும்.. சிங்கள இன அழிப்பு ஆக்கிரமிப்பின் போது காணிகளை இழந்த தமிழ் மக்களுக்கும் பொருந்தும் வகையில் அமைய வேண்டும்.

காரணம்.. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக ஓடச் செய்யப்பட்டுள்ள நிலையில்.. அவர்களின் காணிகளை அபகரிக்கும் பலத்த உள்நோக்கம் சிலர் கொண்டிருப்பதால்.. 1990/ அல்லது அதற்கு முன் வாழ்ந்திராத காணிகளையும் அடாத்தாகப் பறித்து சட்டபூர்வமாக்கும் ரகசிய வேலைத்திட்டங்கள் இதற்கு அமைய பெருமளவில் நடக்க வாய்ப்பிருப்பதாலும்.. தமிழ் சமூக அமைப்புக்களும்.. தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள புலம்பெயர் அமைப்புக்களும்.. அரசியல் கட்சிகளுக்கும்.. நிர்வாகங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிக் கொள்கிறோம். :104_point_left::107_hand_splayed:

Edited by nedukkalapoovan

4 hours ago, nedukkalapoovan said:

இந்த அறிவித்தலும் சட்டமூலமும் மன்னார்.. வவுனியா.. யாழ்ப்பாணம்.. முல்லைத்தீவு.. கிளிநொச்சி.. அம்பாறை.. மட்டக்களப்பு.. திருமலை.. புத்தளம்.. கல்முனை.. மூதூர்.. கொழும்பு.. மலையகம் இங்கிருந்து பல்வேறு கட்டங்களில் முஸ்லீம் அடிப்படை மதவாதக் கும்பல்களின் வெறியாட்டம் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் போது காணிகளை இழந்த தமிழ் மக்களுக்கும்.. சிங்கள இன அழிப்பு ஆக்கிரமிப்பின் போது காணிகளை இழந்த தமிழ் மக்களுக்கும் பொருந்தும் வகையில் அமைய வேண்டும்.

காரணம்.. பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் நாட்டை விட்டு அகதிகளாக ஓடச் செய்யப்பட்டுள்ள நிலையில்.. அவர்களின் காணிகளை அபகரிக்கும் பலத்த உள்நோக்கம் சிலர் கொண்டிருப்பதால்.. 1990/ அல்லது அதற்கு முன் வாழ்ந்திராத காணிகளையும் அடாத்தாகப் பறித்து சட்டபூர்வமாக்கும் ரகசிய வேலைத்திட்டங்கள் இதற்கு அமைய பெருமளவில் நடக்க வாய்ப்பிருப்பதாலும்.. தமிழ் சமூக அமைப்புக்களும்.. தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ள புலம்பெயர் அமைப்புக்களும்.. அரசியல் கட்சிகளுக்கும்.. நிர்வாகங்களும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிக் கொள்கிறோம். :104_point_left::107_hand_splayed:

இதன் அர்த்தம் என்னவென்றால் வடக்கு மாகாணம் முழுவதும் இஸ்லாமிய மயப்பட்ட போகிறது என்பது தான். இனி இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் முஸ்லிம்கள் வந்து குடியேறப்போகின்றனர்.

தமிழர் கவனம் முழுவதும் மாணவர் மரணம் மீது இருக்க வடக்கு இஸ்லாமியமயப்படப் போகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.