Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு.!

Featured Replies

ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு கையளிப்பு.!

 

elephant.jpg

ஆனையிறவு புகையிரத நிலையம் நாளை மக்கள் பாவனைக்கு  கையளிக்கப்படவுள்ளது. நாடுபூராகவுமுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இந்தப் புகையிரத நிலையம் புனர்நிர்மானம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள் மத்தியில் வடக்கிற்கும் தெற்கிற்குமிடையிலான தொடர்பினை வலுப்படுத்துவதனை அடிப்படையாகக் கொண்டே இப்புகையிரத நிலையம் பாடசாலைச் சமூகத்தின் ஒத்துழைப்புடன் புனர்நிர்மானிக்கப்பட்டுள்ளது. 

அதற்காக நாட்டிலுள்ள சகல பாடசாலைகளிலும் இரு வாரகாலம் நிதி சேகரிக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த தினங்களில் மாணவர்கள் தமது செலவுக்காக கொண்டு வந்த பணத்தில் நாளொன்றுக்கு தலா இரண்டு ரூபாவை அன்பளிப்பு செய்தனர். அத்துடன் ஆசிரியர்கள் நாள் ஒன்றுக்கு 10 ரூபா அன்பளிப்பு செய்துள்ளனர்.

elephant_pass.jpg

எனவே 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்டுள்ள ஆணையிறவு புகையிரத நிலையத்திற்கு 10.54 மில்லியன் ரூபா நிதி பாடசாலைச் சமூகத்ததால் வழங்கப்பட்டுள்ளது.  ஏனைய நிதியினை கல்வியமைச்சு ஒதுக்கீடு செய்திருந்தது.

ஆகவே இன்று அநுராதபுரத்திலிருந்து பாடசாலை மாணவர்களை அழைத்துச் செல்லும் புகையிரதமும் யாழ்ப்பாணத்திலிருந்து பாடசாலை மாணவர்களை அழைத்து வரும் புகையிரதமும் ஆணையிறவு புகையிரத நிலையத்தில் தரிக்கப்பட்டு மு.ப. 11.58 மணிக்கு புகையிரத நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளன.

1.jpg

இந்நிகழ்வில் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், போக்கவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா உட்பட வடமாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

http://www.virakesari.lk/article/12817

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ஆசிரிய மாணவ சமூகத்திற்கு....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

பாராட்டுக்கள் ஆசிரிய மாணவ சமூகத்திற்கு....!  tw_blush:

சேட்டை கழட்டி முதுகை காட்டவும் ஒரு முத்திரை குத்தி விட tw_blush:

  • தொடங்கியவர்

ஆணையிறவு  புகையிரதநிலையம் திறப்பு

 

 

அன்பின் தரிப்பிடம்  என  கட்டி எழுப்பப்பட்ட ஆணையிறவு புகையிரதநிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

1.jpg

அரச போக்குவரத்து மற்றும் சிவில்  விமான சேவைகள் அமைச்சின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வடக்கு புகையிரத வீதியை மக்களின் உதவியினால் கட்டி எழுப்பப்படும்  வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ள பாடசாலைகளின் ஒவ்வொரு மாணவ மாணவர்களின் சேமிப்பு மற்றும் அர்ப்பணிப்பினாலும்  நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு ரூபா நிதியும்  அவர்களினால் மேற்கொள்ளப்படும் தேசிய நற்பணியினை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆசிரியர்களினால் வழங்கப்பட்ட பத்துரூபா நன்கொடையினையும் சேர்த்து கல்வி அமைச்சின் நிதியுதவியுடன்  அன்பின் தரிப்பிடம்  என  கட்டி எழுப்பப்பட்ட ஆணையிறவு புகையிரதநிலையம், இன்றயதினம் கல்வி, இராஜாங்க அமைச்சர் வி .எஸ் .இராதாகிருஷ்ணன்  மற்றும் போக்குவரத்து  மற்றும் சிவில்  விமான சேவைகள் அமைச்சர்  நிமல் சிறிபால டி சில்வா ஆகியோரின் பங்கேற்புடன் கல்வி அமைச்சர்  அகிலவிராஜ் காரியவம்சம் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

elephant.jpg

unnamed-_13_.jpg

unnamed-_14_.jpg

unnamed__15__copy.jpg

unnamed-_16_.jpg

unnamed-_17_.jpg

unnamed-_18_.jpg

unnamed-_19_.jpg

unnamed-_20_.jpg

unnamed-_21_.jpg

unnamed-_22_.jpg

unnamed-_23_.jpg

http://www.virakesari.lk/article/12851

  • தொடங்கியவர்

ஆனை­யி­றவு புகை­யி­ரத நிலையம்

p16-a3b7857f098e81953b71cfc97d7492d228f3c21b.jpg

 

வடக்கு - தெற்கு உறவுப்பாலத்தின் ஒரு மைல்கல்
எழில் நிறைந்த இலங்கைத் தேசத்தின் வள­மிக்க பிர­தே­சங்­களில் வட புல மண்ணும் ஒன்­றாகும். வள­மிக்க வட­புலம் முப்­பது வருட கால உள்­நாட்டுப் போரினால் அத்­த­னை­யையும் இழந்­தது. இப்­போர்க்­காலத்தின் அவஸ்­தைகள் வடக்கு, கிழக்கு மக்­களை மாத்­தி­ர­மன்றி ஏனைய பிர­தேச மக்­க­ளையும் அவ­லத்­துக்குள் தள்­ளி­யது.

இருப்­பினும், உள்­­நாட்டுப் போர்க்­கால வடுக்­களை அதிகம் சுமந்த மண் வட­புல மண் என்­ப­தையும் மறுக்க முடி­யாது. போர்க்­கா­லங்கள் வட­புல மக்­களை சொல்லொணாத்­து­ய­ரங்­க­ளையும் நெருக்­க­டி­க­ளையும் எதிர்­நோக்கச் செய்­தன. இத்­து­ய­ரங்­களும் நெருக்­க­டி­களும் மீண்டும் இம்­மண்ணில் ஏற்­படக் கூடாது என்­பதே இந்­நாட்டுப் பிர­ஜைகள் அனை­வ­ரி­னதும் அவா­வாகும். இருந்­த­போ­திலும் அவ்­வ­ர­லாற்றை மறக்க முடி­யாத மக்கள் முகம்­கொ­டுத்த பெரும் நெருக்­க­டிதான் அச்­ச­மின்­றியும் சௌக­ரி­ய­மா­கவும் பிர­யா­ணங்­களை முன்­னெ­டுக்க முடி­யாமல் போன­தாகும்.

யுத்தம் நில­விய காலங்­களில் வட­பு­லத்­திற்­கான தரைப்­ப­யணம் முற்­றாக ஸ்தம்­பி­தம­டைந்­தி­ருந்­தது. 1990 முதல் உள்­நாட்டு யுத்தம் நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட 2009 மே மாதம் வரை புகை­யி­ர­தப்­ப­யணம் அல்­லது புகை­யி­ரதப் பாதை என்ன என்­பதைக் கூட அறி­யாத சந்­த­திகள் வட­பு­லத்தில் தோன்­றினர். யுத்தம் நிறை­வுற்று சமா­தான யுகம் தோன்றிய­தை­ய­டுத்து இலங்­கையை, குறிப்­பாக வட­பு­லத்தை அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு அர­சாங்­கத்­தோடு இணைந்து சர்­வ­தே­சமும், அயல் நாடான இந்­தி­யாவும் ஏனைய தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­களும் உத­விக்­கரம் நீட்டத் தொடங்­கி­ன.

அதனால், அம்­மக்­களின் சமூக பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கு ஓர­ளவு தீர்­வுகள் காணப்­பட்டும் நிரந்­தரத் தீர்­வு­களை அடைந்து­ கொள்­வ­தற்­கு­மான முயற்­சி­களும் முன்­னெ­டுக்­கப்­பட்ட நிலை­யில், வட­பு­லத்தின் முக்­கிய போக்­கு­வ­ரத்து தேவை­யான புகை­யி­ரதப் பாதைகளும், புகை­யி­ரத நிலையங்­களும் புன­ர­மைக்­கப்­பட்டு அதன் பய­னாக புகை­யி­ரத சேவைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இந்­நி­லையில், ஆனையிறவுப் புகை­யிரத நிலை­யத்தை புனர்­நிர்­மாணம் செய்யும் பொறுப்பை கல்வி அமைச்சு ஏற்­றுக்­கொண்­டது. அதன்­ நி­மித்தம், 2010ஆம் ஆண்டு இப்­பு­கை­யி­ரத நிலை­யத்தை புன­ர­மைக்கும் பணிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

நல்­லி­ணக்­கத்தின் அடை­யா­ள­மாக, தெற்­கிற்கும் வடக்­கிற்­கு­மி­டை­யி­லான உறவுப் பாலத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­கத்­துடன் அனைத்து அரச பாட­சாலை மாண­வர்­க­ளி­னதும் ஆசி­ரி­யர்­க­ளி­னதும் நிதி நன்­கொ­டையின் மூலம் இப்­பு­ன­ர­மைப்புப் பணிகள் தொடங்­கப்­பட்டு, பல்­வேறு தடங்­கலின் பிற்­பாடு ஆனையிறவுப் புகை­யி­ரத நிலை­ய­மா­னது முழு­மை­யாக அழ­கிய கட்டட வேலைப்­பா­டு­க­ளுடன் கல்வி அமைச்சு மற்றும் தனியார் நிறு­வ­னங்­களின் பங்­க­ளிப்­புடன் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வடக்கு மக்கள் உள்­ளிட்ட இலங்கைத் தேசத்­தி­ன­ருக்கு அன்பின் தரிப்­பிடம் என பரி­சாக அன்­ப­ளிக்­கப்­படும் வைபவம் இன்று 28ஆம் திகதி வெள்ளிக்­கிழமை காலை போக்­கு­வரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறி­பால டி சில்­வாவின் பங்­கேற்­புடன் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வ­சத்தின் தலை­மையில் நடை­பெ­ற­வுள்­ளது.

அரச பாட­சாலை மாணவ, மாண­வி­களின் நல்­லி­ணக்கம், ஐக்­கி­யத்தைக் கட்­டி­யெ­ழுப்­புதல், தேசிய அபி­வி­ருத்­தி­யின்­போது கூட்டு அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டுதல் என்­ப­வற்றைப் பறை­சாற்றும் அடை­யாளச் சின்­ன­மாக நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள இந்த அன்பின் தரிப்­பி­ட­மான ஆனையிறவுப் புகை­யி­ரத நிலையத் திறப்பு விழா­வை­யொட்டி இக்­கட்­டுரை பிர­சு­ரிக்­கப்­ப­டு­கி­றது.

புகை­யிரத சேவை வர­லாற்றில் வட­புலம்

 ஒரு பிர­தே­சத்தின் சமூக, பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு மிக முக்­கி­ய­மா­னது தங்­கு­த­டங்­க­லின்­றிய போக்­கு­வ­ரத்து வச­தி­யாகும். அதிலும், புகை­யி­ரதப் போக்­கு­வ­ரத்து வச­தி­யா­னது இன்­றி­ய­மை­யா­தது. இலங்­கையில் பெரும்­பாலும் தலை­நகர் கொழும்பை மையப்­ப­டுத்­தியே சகல பிர­தான போக்­கு­வரத்து மார்க்­கங்­களும் அமைந்­துள்­ளன. குறிப்­பாக புகை­யி­ரத சேவை­யா­னது கொழும்பு, புறக்­கோட்டை புகை­யி­ரத மத்­திய நிலை­யத்தை மையப்­ப­டுத்­தியே மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

1864ஆம் ஆண்டு இலங்­கையில் புகை­யி­ரத சேவை ஆரம்­பிக்­கப்­பட்­டது. முத­லா­வது ரயில் பாதை கொழும்­புக்கும் அம்­பே­புஸ்­ஸவுக்­கு­மி­டையே நிர்­மாணிக்­கப்­பட்­டது. பொரு­ளா­தார தேவையை நோக்­காகக் கொண்டு தொடங்­கப்­பட்ட புகை­யி­ரத சேவை­யா­னது நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பாக விளங்­கிய தேயிலை மற்றும் கோப்பி என்­ப­வற்றை மலை­ய­கத்­தி­லி­ருந்து கொழும்­புக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்­காக ஆரம்ப காலத்தில் உப­யோ­கப்­பட்­டது.

பல வரு­டங்­க­ளாக உற்­பத்திப் பொருட்­க­ளையும் ஏனைய பொருட்­க­ளையும் கொண்டு செல்­வ­தற்­கான போக்­கு­வ­ரத்து சாத­ன­மாக விளங்­கிய புகை­யி­ர­த­மா­னது, அதி­க­ரித்த மக்கள் சனத்­தொகை கருத்­திற்­கொள்­ளப்­பட்டு பய­ணிகள் போக்­கு­வ­ரத்து சாத­ன­மாக மாறி­யது.

இவ்­வாறு மாறிய புகை­யி­ரத பய­ணத்தை வடக்­கிற்கு விஸ்­த­ரிப்­பதற்­காக மேற்­கத்­திய ஆட்­சி­யா­ளர்கள் நட­வ­டிக்கை எடுத்து அதற்­கான அங்­கீ­கா­ரத்தை 1891ஆம் ஆண்டு வழங்­கினர். வடக்­கிற்­கான ரயில் மார்க்க விஸ்­த­ரிப்புப் பணிகள் 1897ஆம் ஆண்டு குரு­நா­க­லி­லிருந்து ஆரம்­பிக்­கப்­பட்டு கட்­டம் ­கட்­ட­மாக இதற்­கான நட­வ­டிக்­ககைள் மேற்கொள்­ளப்­பட்­டன.

இப்­பா­தையின் விஸ்­த­ரிப்புப் பணிகள் பூர்த்தி செய்­யப்­பட்டு வடக்கு ரயில் மார்க்கத்­தி­னூ­டாக கொழும்­பி­லி­ருந்து காங்­கே­சன்­து­றைக்கு 1905ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் ரயில் பயணம் தொடங்­கப்­பட்­டது.

இவ்­வாறு வடக்­கிற்கு அன்று தொடங்­கிய ரயில் சேவை­யா­னது 1980ஆம் ஆண்டு வரை எவ்­வித இடை­யூறு­க­ளு­மின்றி இடம்­பெற்­றது. தினமும் ஆறா­­யி­ரத்­துக்கு மேற்­பட்ட பய­ணிகள் பல்­வேறு தேவை­களின் நிமித்தம் கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­துக்கும் யாழ்ப்­பா­ணத்­தி­லி­ருந்து கொழும்­புக்கும் தமது பய­ணங்­களை மேற்­கொண்­டனர் என வர­லாறு சுட்­டிக்­காட்­டு­கி­ன்றது.

யாழ்ப்­பா­ணத்­துக்­கான ரயில் சேவை­யென்றால் யாழ்­தேவி என்ற பெயரும் கூடவே மொழி­யப்­படும். அவ்­வாறு மொழி­யப்­படும் யாழ்­தேவி ரயில் சேவை­யா­னது 1956ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அக்­கால அமை­திக்­காற்றை சுவா­சித்­த­வாறு மக்கள் பயணம் செய்த யாழ்­தேவியின் இறுதிப் பயணம் 1990 ஆண்டு ஜூன் மாதத்­துடன் நிறை­வுக்கு வந்­தது.

உள்ளூர் போர்க்­கால சூழலின் பாதிப்­புக்கள் ஏறக்­கு­றைய 20 வரு­டங்கள் ரயில் ஓசையை வட­புல மண் கேட்கச் செய்­யாமல் தடுத்­தி­ருந்­தது. இந்த வர­லா­று­களை மீட்­டி­னாலும் இன்று தொடரும் அமை­தி­யான ரயில் பய­ணங்­களில் மீண்டும் தடங்கல் ஏற்­பட்­டு­வி­டா­தி­ருக்­கவும் இன ­முரண்­பா­டுகள் தலை­தூக்கி அவ­லங்­களை உரு­வாக்­க­ம­லி­ருக்­கவும் சமூ­கங்­க­ளுக்­கிடையில் நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­டவும் ஒவ்­வொரு பிர­ஜையும் தங்­க­ளது பங்­க­ளிப்­புக்­களை வழங்­கு­வது அத்­தி­யா­வ­சி­ய­மாகும்.

ரயில் பாதை புனர்­நிர்­மா­ணமும்

ஆனையிறவு நிலை­யமும்

ஏறக்­கு­றைய 20 வரு­டங்கள் ரயில் பய­ணத்தை அனு­ப­வித்­தி­ராத வட­புல மக்­க­ளுக்­கான ரயில்­பாதை புன­ர­மைப்­புப்­ப­ணிகள் 2009 மே மாதம் யுத்தம் நிறை­வ­டைந்­த­தை­ய­டுத்து 2009 ஜூனில் மேற்­கொள்­ளப்­பட்­டது. இதற்­கேற்ப வட­புல ரயில் மார்க்க புன­ர­மைப்புப் பணி­யா­னது வவு­னி­யா­வி­லி­ருந்து காங்­கே­சன்­துறை வரை மேற்­கொள்­ளு­வ­தற்­கான பல திட்­டங்­களின் அடிப்­ப­டையில் முதற்­கட்­ட­மாக வவு­னி­யா­வி­லி­ருந்து ஓமந்தை வரையும் புன­ர­மைக்­கப்­பட்­டது. அதன் பிற்­பாடு தாண்­டிக்­குளம் வரை புன­ர­மைக்­கப்­பட்டு 2009 ஜூன் மாதம் மீளத் திறக்­கப்­பட்­டது.

அத்­தோடு 2011ஆம் ஆண்டு மே மாதம் ஓமந்தை ரயில் நிலையம் மீண்டும் திறக்­கப்­பட்டு ரயில் சேவைகள் இடம்­பெற்று வந்த நிலையில் 2013 செப்டெம்பர் மாதம் கிளி­நொச்சி புகை­யி­ரத நிலை­யமும் புனர்­நிர்­மாணம் செய்­யப்­பட்டு மீளவும் திறந்து வைக்­கப்­பட்­டது.

அதைத் தொடர்ந்து 2014 மார்ச் மாதம் பளை ரயில் நிலையம் மீளத் திறந்து வைக்­கப்­பட்­ட­துடன், காங்­கே­சன்­துறை ரயில் நிலையம் 2015 ஜன­வ­ரியில் மீண்டும் திறந்து வைக்­கப்­பட்­ட­தா­னது இழந்த வட­பு­லத்­துக்­கான ரயில் மார்க்­கத்தின் புகை­யி­ரத சேவை­யா­னது மீண்டும் உயிர்­பெற்ற உணர்வை மக்­களால் உணர செய்­ததை நிரா­க­ரிக்க முடி­யாது.

இதன் தொட­ரா­கவே வட­பு­லத்­திற்­கான ரயில் மார்க்­கத்தின் எஞ்­சிய ரயில் நிலை­ய­மான ஆனையிறவு ரயில் நிலையம் இன்று கல்வி அமைச்சின் பங்­க­ளிப்­புடன் திறந்து வைக்­கப்­ப­டு­கி­றது.

கல்வி அமைச்சும்

நல்­லி­ணக்க செயற்­பாடும்

எதிர்­கால இலங்­கையை சாந்தி, சமா­தானம், புரிந்­து­ணர்வு, நல்­லி­ணக்கம், விட்­டுக்­கொ­டுப்பு, சமூக ஒரு­மைப்­பாடு கொண்ட வள­மிக்க நாடாக மாற்­று­வ­தற்­கான ஆரோக்­கி­ய­மான சிறந்த சமு­தா­யமொன்றை பாட­சாலை மட்­டத்­தி­லி­ருந்து சிறந்த கல்­வியின் மூலம் கட்­டி­யெ­ழுப்பும் நோக்­குடன் கல்வி அமைச்சு பல்­வேறு செயற்­றிட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றது. இந்­நாட்­டி­லுள்ள ஏறக்­கு­றைய பத்­தா­யிரம் பாட­சா­லை­களில் கல்வி பயிலும் நான்கு மில்­லியன் மாண­வர்­க­ளையும் நாட்டின் நற்­பி­ர­ஜை­க­ளாக மாற்­று­வ­தற்­காக ஏறக்­கு­றைய 250,000 ஆசி­ரி­யர்கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

கல்­வி­யி­னூ­டாக தொடர்­பாடல் மற்றும் ஆளுமை விருத்­தி­யுடன் தொடர்­பான தேர்ச்சிகள், சூழல் மற்றும் வேலை உல­கிற்கு தயார் செய்தல் தொடர்­பான தேர்ச்சிகள், சம­யமும் ஒழு­க­லாறும் தொடர்­பான தேர்ச்சிகள், ஓய்வு நேரத்தைப் பயன்­ப­டுத்­துதல், விளை­யாட்டுப் பற்­றிய தேர்ச்சிகள் மற்றும் கற்­ற­லுக்கு கற்றல் தொடர்­பான தேர்ச்சிகள் போன்ற அடிப்­படைத் தேர்ச்சிகளை மாண­வர்­க­ளி­டத்தில் விருத்தி செய்து சமூ­கத்­திற்கும் நாட்­டுக்கும் பயன்­மிக்க நல்ல பிர­ஜை­களை நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஆசி­ரிய சமூகம் உரு­வாக்கும் என்ற நம்­பிக்­கை­யுடன் கல்வி அமைச்சு அதன் செயற்­றிட்­டங்­களை ஒரு புறம் முன்­னெ­டுத்து வரும் வேளை, சம­கா­லத்தில் மாணவ சமூ­கத்தின் மத்­தியில் சமா­தான சக­வாழ்­வையும், புரிந்­து­ணர்­வையும், நல்­லி­ணக்­கத்­தையும், கூட்டுப் பொறுப்­பையும் கட்­டி­யெ­ழுப்­பவும் செயற்­றிட்­டங்­க­ளையும் மேற்­கொண்டு வரு­கி­றது.

இதன் ஒரு வெளிப்­பா­டா­கவே அன்பின் தரிப்­பிடம் ஆனையிறவு புகை­யி­ரத நிலையம் காணப்­ப­டு­கி­றது. இப்­பு­கை­யிரத நிலைய நிர்­மாணப் பணிச் செயற்­பா­டு­களில் கல்வி அமைச்சின் சமா­தா­ன கல்விப் பிரிவின் பங்­க­ளிப்பு அளப்ப­ரி­யது என்று கூறி­னாலும் தவ­றி­ருக்­காது. இதற்­காக இப்­பிரிவின் உதவிக் கல்விப் பணிப்­பாளர் பி.டப்­ளியூ.ஆர் பத்­தம சாந்த எடுத்த முயற்­சிகள் இங்கு நினைவுகூரத்­தக்­கது.

ஐக்­கி­யத்தைக் கௌர­விக்கும் விரி­வான சமூக நல்­லி­ணக்கம் கொண்ட மானிடப் பண்­பு­கள்­மிக்க அதி­சி­றந்த இலங்­கையின் எதிர்­காலச் சந்­த­தி­யி­னரைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்­காக கல்வி அமைச்­சினால் மேற்­கொள்­ளப்­படும் பணி­களை மிகவும் பயன்­மிக்­க­தாக மாற்­றி­ய­மைத்து பாட­சாலை மாணவ மாண­வி­க­ளினால் தேசத்தைக் கட்­டி­யெ­ழுப்ப பங்­க­ளிப்பு செய்யும் இய­லு­மை­களை யதார்த்த பூர்­வ­மாக்கி, அரச போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வடக்குப் புகை­யி­ரத வீதியை மக்­களின் உத­வி­யினால் கட்­டி­யெ­ழுப்பும் வேலைத்­திட்­டத்தின் கீழ் இலங்கை பாட­சா­லை­களின் மாணவ, மாண­வி­களின் அர்ப்­ப­ணிப்பு மற்றும் சேமிப்பு, நன்­கொ­டை­யாக வழங்­கப்­பட்ட இரண்டு ரூபா நிதியும், அவர்­க­ளினால் மேற்­கொள்ளும் தேசிய நற்­ப­ணி­யினை ஊக்­கு­விக்கும் வகையில் அவர்­களின் ஆசி­ரி­யர்­க­ளினால் வழங்­கப்­பட்ட பத்து ரூபா நன்­கொ­டை­யி­னையும் சேக­ரித்து 1.65 மில்­லியன் ரூபா நிதி உத­வி­யுடன் கல்வி அமைச்சின் நிதி உத­வி­யு­ட­னு­மாக 2.5 மில்லியன் ரூபா நிதி மூலம் அன்பின் தரிப்­பி­ட­மாக இந்த ஆனையிறவு புகை­யி­ரத நிலையம் கட்­டி­யெ­ழுப்பப்­பட்­டுள்­ள­தாக கல்வி அமைச்சு குறிப்­பிட்­டி­ருப்­ப­தையும் சுட்­டிக்­காட்­டு­வது அவசியமாகும்.

நல்லிணக்கமும் கூட்டுப்பொறுப்பு மிக்க வேலைத்திட்டத்தினூடாக வடக்கு – தெற்கு உறவுப் பாலத்திற்காக நிர்மாணிக் கப்பட்டுள்ள இந்த ஆனையிறவு ரயில் பாதை நிர்மாணப் பணியுடன் இந்த நல்லிணக்க செயற்பாடுகள் பல்வேறு விடயங்களிலும் வெவ்வேறு தளங்களிலும் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும்.

சம­கா­லத்தில் வட­பு­லத்தில் நடந்­தேறும் விரும்­பத்­த­காத சம்­ப­வங்கள் மலர்ந்து வரும் நல்­லி­ணக்­கத்தை சிதைக்கும் வகையில் அர­சியல் நலன்­க­ளுக்­காக அல்­லது வியா­பார விருத்­திக்­காக அவற்றை ஊதிப் பெருப்பிக்கும் முயற்­சிகள் ஒரு சில அர­சி­யல்­வா­தி­க­ளி­னாலும் ஊட­கங்­க­ளி­னாலும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­ன்றன. இது எதிர்­கால சமூகம் எதிர்­பார்க்கும் நல்­லி­ணக்­கத்தை சிதைக்கும் நட­வ­டிக்கை என்­பதும் இதற்கு எதி­ராக நல்­லி­ணக்­கத்தை விரும்பும் அத்­தனை உள்­ளங்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வது அவ­சி­ய­மென்­பதைச் சுட்­டிக்­காட்­டு­வது அவ­சி­ய­மாகும்.

ஏனெனில், வளரும் உள்­ளங்கள் எவ்­வித பாகு­பா­டு­மின்றி ஒவ்­வொரு ரூபா­வாகச் சேர்த்தும் சேமித்தும் கட்­டி­யெ­ழுப்­பி­யுள்ள இந்த வடக்கு – தெற்கு உறவுப் பாலத்தின் ஒரு மைல்­கல்­லாக விளங்கும் இந்த ஆனையிறவு புகை­யிரத் நிலை­யத்தின் அழ­க­மைப்­பைப்­போல ஏனைய விட­யங்­க­ளிலும் தேசிய நல்­லி­ணக்கம் ஏற்­ப­டவும் ஏற்­ப­டுத்­தப்­ப­டவும் அதன் மூலம் நிரந்­தர சமா­தானம் உரு­வா­கவும் முன்­னிட்டு உழைப்­பது சகல சமூ­கங்­க­ளையும் சார்ந்த துறைசார்ந்தோரினதும் தார்மீகப் பொறுப்பாகும் என்பதை சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-10-28#page-4

  • கருத்துக்கள உறவுகள்

படங்களில்.... பொட்டு வைத்த,  தமிழ் பெண்கள் ஒருவரையுமே காணவில்லை. 
இதில்... கலந்து கொண்டவர்கள் எல்லோரும்,  சிங்களவர் போல் உள்ளது. :mellow:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்..

ஆனால் ஆனையிறவுக்கு  ஏன் இத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.