Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள்

Featured Replies

ஆவா குழுவின் பின்னணியில் முன்னாள் புலி உறுப்பினர்கள்

 

awa.jpg

யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட முழு வடக்­கை யும் அச்­சு­றுத்தும் 'ஆவா குறூப்' எனும் குழு வின் பின்­ன­ணியில் முன்னாள் தமி­ழீழ விடு­தலைப் புலி உறுப்­பி­னர்­களே உள்­ள­தா­கவும் அவர்­க­ளது ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வா­கவே அக்­குழு செயற்­பட்­டுள்­ள­தா­கவும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு நேற்று கொழும்பு நீதிவான் நீதி­மன்­றுக்கு அறிக்கை சமர்­ப்பித்­தது. 

ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் விசா­ரணை அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார, இந்த விவ­காரம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைதான மூன்று சந்­தேக நபர்­களை கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் ஆஜர் செய்தபின்னரே மேற்­படி விடயம் உள்­ள­டங்­கிய அறிக்­கையை மன்­றுக்கு சமர்­பித்தார்.

தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து  'ஆவா குரூப்' எனும் பெயரில்  ஆயுதக் குழு­வொன்றை உரு­வாக்கி அர­சுக்கு அசெ­ள­க­ரியம் ஏற்­படும் வண்ணம் செயற்­பட்­ட­தாக சந்­தே­கிக்­கப்­படும் மூவரே இவ்­வாறு தம்மால் கைது செய்­யப்பட்­ட­தாக மன்றில் ஆஜ­ரான உப பொலிஸ் பரி­சோ­தகர் நீதிவான் நிஸாந்த பீரிஸின் கவ­னத்­துக்கு கொண்­டு­வந்தார். 

இந் நிலையில் கைதா­ன­வர்­களை பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (1) ஆவது அத்­தி­யா­யத்தின் பிர­காரம் தடுப்புக் காவலில் வைத்து தாம் விசா­ரணை செய்­த­தா­கவும் அதன்­படி குறித்த சட்­டத்தின் 7 (2) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக இன்று ( நேற்று) மன்றில் ஆஜர் செய்து விளக்­க­ம­றி­யலில் வைக்கக் கோரு­வ­தா­கவும் உப பொலிஸ் பரி­சோ­தகர் நீதிவான் நிஸாந்த பீரி­ஸிடம் தெரி­வித்தார்.

இதன்­போது அவர் நீதி­வா­னிடம் தாம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் அறிக்கை ஒன்­றி­னையும் சமர்­பித்தார்.

அவ்­வ­றிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­த­தா­வது,

' தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்க உறுப்­பி­னர்­க­ளுடன் இணைந்து அவர்­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி அவர்­களின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக விடு­தலைப் புலிகள் அமைப்பை மீள உரு­வாக்­கு­வ­தற்கு உதவி ஒத்­தாசை புரியும் முக­மாக  ஆவா எனும் பெயரில் ஆயுதக் குழு உரு­வாக்­கப்பட்­டுள்­ளது. இந்த குழு­வா­னது வடக்கில் கட­மையில் ஈடு­பட்­டுள்ள உளவுத் துறை­யினர் உள்­ளிட்ட பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள், அரச உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் பொது மக்­களை அச்­சு­றுத்தும் வண்ணம் செயற்­ப­டு­கின்­றனர். 

கூர்­மை­யான ஆயு­தங்­களால் வெட்டி காயம் ஏற்­ப­டுத்தும் இந்த குழு அச்­செ­யற்­பாடு ஊடாக மக்­களை பய­மு­றுத்தி அவர்­க­ளது சொத்­துக்­களைக் கொள்­ளை­யி­டுதல் உள்­ளிட்ட சட்ட விரோத செயற்­பா­டு­க­ளையும் முன்­னெ­டுத்­துள்­ளது. இது தொடர்பில் பயங்­க­ர­வாத புல­ன­யவுப் பிரி­வுக்கு விசா­ரணை செய்யும் பொறுப்பு ஒப்­ப­டைக்­கப்பட்ட நிலையில் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 6(1) ஆவது அத்­தி­யா­யத்­துக்கு அமை­வாக விசேட விசா­ர­ணைகள் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது. 

அந்த விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட தக­வல்­க­ளுக்கு அமை­வாக  மூவரை நாம் கடந்த நவம்பர் 5 ஆம் திகதி கைது செய்தோம். கே.கே.எஸ். வீதி, கொக்­குவில் மேற்கு, யாழ்ப்­பாணம் பகு­தியைச் சேர்ந்த குட்டி எனப்­படும் சிவ­லிங்கம் கம­லநாத், யாழ். பண்டத்தரிப்பு பகு­தியைச் சேர்ந்த அரவிந் எனப்­படும் அன்டன் தாய்சஸ் அரவிந் அலக்ஸ், தெந்­தா­தரன் பிருந்­தவன் ஆகியோரே இவ்­வாறு கைது செய்யப்பட்டு கொழும்பு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவு தலை­மை­ய­கத்தில் தடுத்து வைத்து விசா­ரணை செய்­யப்பட்­டனர். அதன்­பின்­ன­ரேயே இன்று (நேற்று) அவர்­களை மன்றில் ஆஜர் செய்­கின்றோம்.

இந்த சந்­தேக நபர்கள் விடு­தலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்­பி­னர்­க­ளுடன் தொடர்­பினை பேணி அவர்­களின் ஆலோ­சனை மற்றும் பங்­க­ளிப்­புக்கு அமை­வாக வடக்கில் ஆவா எனும் பெயரில் அமைப்­பொன்றை உரு­வாக்கி, அந்த அமைப்பின் உறுப்­பினர்­க­ளாக செயற்­பட்டு,  வாள், கத்தி உள்­ளிட்ட அபா­ய­க­ர­மான கூரிய ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உள்­ளாக்கும் வித­மாக  செயற்­பட்­டுள்­ளனர். இதற்­காக உத­வி­யுள்ள இவர்கள்  வடக்கில் கட­மையில் ஈடு­பட்­டி­ருந்த உளவுத்துறை பொலிஸார் மீது தாக்­குதல் நடத்­தி­யமை அவர்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுத்­தமை மற்றும் அந்த பிர­தே­சத்தில் சேவை­யாற்றும்  பொலிஸார் உள்­ளிட்ட அரச உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கு கட­மையைச் செய்ய இடை­யூறு ஏற்­ப­டுத்தியமை, மக்­களை பய­மு­றுத்­தி­யமை, அவர்கள் மீது தாக்­குதல் நடத்­தி­யமை, கூரிய ஆயு­தங்களால் வெட்­டியும் கொத்­தியும் காயம் ஏற்­ப­டுத்­து­கின்றமை போன்ற செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்­ளனர்.

இவற்றின் ஊடாக பொது மக்­க­ளி­­டையே சல­ச­லப்பை ஏற்­ப­டுத்தி அர­சாங்­கத்தை அசெ­ள­க­ரி­யத்­துக்கு உட்­ப­டுத்தும் சட்ட விரோத செயற்­பாட்­டினை சந்­தேக நபர்கள் முன்­னெ­டுத்­துள்­ளனர்.

இந்த சந்­தேக நபர்கள் தொடர்பில் செய்­யப்பட்ட மேல­திக விசா­ர­ணை­களில், ஆவா எனும் குறித்த குழுவில் தற்­போது 30 உறுப்­பி­னர்கள் உள்­ளமை தெரி­ய­வந்­துள்­ளது. இந்த அமைப்பின் உறுப்­பி­ன­ராக இருந்­து­கொண்டு யாழ்ப்­பாணம், சுன்­னாகம் உள்­ளிட்ட பகு­தி­களில் கட­மையில் ஈடு­படும் உளவுத் துறை உத்­தி­யோ­கத்­தர்­களை வாளால் வெட்டி காயம் ஏற்­ப­டுத்­தி­யமை, சுன்­னாகம் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் மீது கூரிய ஆயு­தங்­களால் தாக்­கி­யமை, அப்­பி­ர­தே­சத்தின் வர்த்­த­கர்­க­ளிடம்  கப்பம் பெறுதல், கொள்ளை ஆகிய செயற்­பா­டு­களில் இவர்கள் ஈடு­பட்­டுள்­ள­மை தெரியவந்துள்ளது.

இந்த ஆவா குறூப் எனும் அமைப்பு யாழ்ப்­பாணம் உட்­பட வட பகு­தியில் பொது மக்­க­ளி­டையே இனம் மற்றும் மத ரீதி­யி­லான வேறு­பா­டு­களைத் தூண்டி எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும் வண்ணம் மக்­களை தூண்­டி­யுள்­ளமை விசா­ர­ணை­களில் உறு­தி­யா­கி­யுள்­ளது.

அதனால் இந்த அமைப்பைச் சேர்ந்த ஏனைய உறுப்­பி­னர்­களைக் கைது செய்­வ­தற்கும், அவர்கள் பயன்­ப­டுத்தும் வாள், கத்தி உள்­ளிட்ட கூர்­மை­யான ஆயு­தங்­க­ளுக்கு மேலதிகமாக  புலிகள் அமைப்பினால் வழங்கப்பட்ட ஆயுதங்கள் ஏதும் அவர்களிடம் இருப்பின் அவற்றைக் கைப்பற்றவும் சிறப்பு விசாரணைகள் தொடர்கின்றன.

அதனால் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்கவும் ஏனைய கைதிகளில் இருந்து இவர்களை வேறுபடுத்தி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்குமாறும்  கோருகின்றோம்' என குறிப்பிடப்ப்ட்டிருந்தது.

இதனையடுத்து பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் மன்றில் முன்வைத்த கருத்துக்களை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதிவரை சந்தேக நபர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

Image result for ஆவா குழு

http://www.virakesari.lk/article/13320

  • கருத்துக்கள உறவுகள்

லட்சக்கணக்கான இராணுவம் 3 அல்லது 4 முன்னாள் வி.புலிகளை அடக்க முடியவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்

ஆவாகுழுவை கட்டுப்படுத்த முடியேல்லை, கஞ்சாப்பொதியை தடுக்க தெரியேல்லை பிறகேன் வடபகுதியில நிலை கொண்டிருக்கினம்? இதுகளை வளர்க்கிறதும், பராமரிக்கிறதும் இவர்களே என்பது இதிலிருந்து தெரிகிறது. எங்கட ராசதந்திரியள் எங்க போட்டினம்? தேர்தல் முடிஞச கையோட ராஜபக்சக்களை அள்ளி உள்ளுக்கை போட்டிருந்தால் தப்பி இருப்பினம். அவர்களும் அதைத்தான் எதிர்பார்த்து இருந்தவை,  ஆனால் இவர்கள் விட்ட பிழையையும், இவர்களின்  பெலயீனத்தையும் ராஜபக்சாக்கள்  நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். ஒன்று அவர்கள் வழியிலேயே அரசியலை   தொடரவேண்டும் அல்லது அரசியலை விட்டு ஒதுங்க வேண்டும் என்கின்ற இக்கட்டான  நிலை இப்போ. ஆனால் தமிழர் நிலைதான் கேள்விக்குறி. அவர்கள் பெயரால் பாராளுமன்றம் சென்றவர்களும் கைகொடுக்கப் போவதில்லை. சர்வதேசம் சென்று உண்மை உரைக்கும் காலத்தையும் கடத்திப்போட்டு, எங்களை  சிங்களவனிடம் அடிமாடாய் கையளித்து விட்டார்கள்.

 

 

 

8 hours ago, நவீனன் said:

ஆவா குழு தொடர்பில் சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்கும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழுவின் விசா­ரணை அதி­கா­ரி­யான உப பொலிஸ் பரி­சோ­தகர் புஷ்­ப­கு­மார, இந்த விவ­காரம் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைதான மூன்று சந்­தேக நபர்­களை கொழும்பு மேல­திக நீதிவான் நிஸாந்த பீரிஸ் முன்­னி­லையில் ஆஜர் செய்தபின்னரே மேற்­படி விடயம் உள்­ள­டங்­கிய அறிக்­கையை மன்­றுக்கு சமர்­பித்தார்.

தமிழின அழிப்பில் குறியாக இருக்கும் சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசுகளின் பாதுகாப்புத் துறையை, நீதித்துறையை தமிழர்கள் நம்பவே முடியாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று.  

 

தமிழ் ஈழமே ஈழத்து தமிழர்களுக்கு இருக்கும் சிறந்த தீர்வாக அமையும் என்பதை உண்மையான சிங்கள-பௌத்த குற்றவாளிகளை பாதுகாக்கும் இந்த நிகழ்வுகள் நிரூபித்து வருகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.