Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மஹிந்தவை சந்தித்தப் பின்னரே பிரச்சினை வந்தது'

Featured Replies

'மஹிந்தவை சந்தித்தப் பின்னரே பிரச்சினை வந்தது'
 
 

article_1479536095-aaaaaa.jpgமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில், மட்டக்களப்பு மங்களாராமய விகாரைக்கு சென்று விகாரதிபதி சுமனரத்தின தேரரை சந்தித்து கலந்துரையாடி வந்தார். இதன்பிறகே மட்டக்களப்பு மங்களராமய விகாதிரபதி தொடர்பான சம்பவம் நிகழ்ந்தது. ஆகவே இந்த இரண்டுக்கும் தொடர்பு உள்ளது  என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் கூறினார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன்  தெரிவித்துள்ளார்.     

தன் பேஸ்புக் பக்க பத்தியில், “மட்டக்களப்பு சுமனரத்தின தேரர்-மஹிந்த-புலிகள்-மைத்திரி-நான்-தமிழ் மக்கள்” என்ற தலைப்பில், இன்று காலை அமைச்சர் கணேசன் மேலும் எழுதியுள்ளதாவது,

கடந்த 10ஆம் திகதி வரவு - செலவுத் திட்டம் சமர்பிக்கப்பட்ட அன்று பிற்பகல் நாடாளுமன்ற உணவு விடுதியில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேநீர் அருந்தியவாறு தனது ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் உரையாடி கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் அங்கு சென்ற என்னிடமும் அவர் உரையாடினார். என்னுடன் அமைச்சர் பழனி திகாம்பரமும் இருந்தார்.

“சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் நீங்கள் உரையாடுவது நன்று. வடக்கு - கிழக்கு மாகாணங்களில் சிங்கள மக்கள் சிறுபான்மையாக வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றியும் நீங்கள் தமிழ் மக்களுக்கு எடுத்து கூற வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இப்போது சிங்கள மக்களை விரட்டியடிக்கும் ஒரு திட்டம் நடைமுறையாகிறது. அது பற்றி நீங்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்று மஹிந்த என்னிடம் கூறினார்.

“வட- கிழக்கில் சிங்களவர்கள் சிறுபான்மையாக  வாழ்வது எனக்கு தெரியும். அவர்களைப் பற்றிய அக்கறை எனக்கு நிச்சயம் இருக்கிறது. அண்மையில் இலங்கை வந்த சிறுபான்மையினர் தொடர்பாக ஐ.நா அறிக்கையாளர் ரீடா ஐசக்கிடம் தென்னிலங்கை சிறுபான்மையினர் போன்று, வட-கிழக்கில் வாழும் சிங்கள சிறுபான்மையினரையும் நீங்கள் சந்தித்தீர்களா என நான் கேட்டேன்” என நான் மஹிந்தவுக்கு பதில் சொன்னேன்.

உண்மையில் இந்நாட்டின் எந்த இடத்திலும் சிங்களவர்கள் மட்டுமே பெரும்பான்மை தமிழ் பேசுபவர்கள் எங்கேயும் சிறுபான்மைதான் என்ற பாரம்பரிய பேரினவாத நிலைப்பாட்டை தளர்த்தி, வட-கிழக்கில் வாழும் சிங்களவர்களை சிறுபான்மை என மஹிந்த ராஜபக்ஷ அடையாளப்படுத்தியுள்ளார். இதை இதற்கு முன் எங்கேயும் அவர் சொன்னதாக நான் அறியவில்லை. இதை அவர் எங்கேயோ சொல்லி அது திரிபுப்படுத்தப்பட்டு, என்னிடம் வந்து சேரவும் இல்லை. இதை அவர் நேரடியாக என்னிடம் கூறினார். எனவே, இது ஒரு முன்னேற்றக்கரமான நிலைப்பாடு என நான் நம்புகிறேன்.

இது ஒருபுறமிருக்க, மட்டக்களப்பு மங்களாராமய விகாரதிபதி சுமனரத்தின தேரர் எப்போதுமே ஒரு குழப்பக்காரர்தான். அவர் புதிதாக குழப்பம் செய்யவில்லை. அவரை மஹிந்த சந்தித்து, தனது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள  உசுப்பி விட்டுள்ளார். இதைதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/186404/-மஹ-ந-தவ-சந-த-த-தப-ப-ன-னர-ப-ரச-ச-ன-வந-தத-#sthash.8DjDClBx.dpuf
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நவீனன் said:

அவரை மஹிந்த சந்தித்து, தனது அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள  உசுப்பி விட்டுள்ளார். இதைதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதிப்படுத்தியுள்ளார்.

இது சில வேளை உன்மையாக இருக்கலாம் ஆனால் அரசாங்கம் நினைத்தால் ஐந்து நிமிடம்  போதும் ஆனால் ??

  • கருத்துக்கள உறவுகள்

பிக்குகளில் கை வைக்க மைத்திரி விரும்பவில்லை. ஏனைய அரசியல்வாதிகளும் அப்படியே.(கொத்தலாவலவை தவிர)

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nunavilan said:

பிக்குகளில் கை வைக்க மைத்திரி விரும்பவில்லை. ஏனைய அரசியல்வாதிகளும் அப்படியே.(கொத்தலாவலவை தவிர)

பிரேமதாசவும் மொட்டயளை அடக்கி வைத்திருந்தார்.

  • தொடங்கியவர்

"மஹிந்­தவை சந்­தித்த பின்­னரே அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் இவ்­வாறு நடந்­து­கொள்­கிறார்" இதற்­கான பின்­னணி என்ன.?

 

 

aaa.jpg

நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இனப்­பி­ரச்­சினை தீர்­வுக்­கான நட­வ­டிக்­கைகள் மற்றும் புதிய அர­சி­ய­ல­மைப்பு முன்­வைக்­கப்­படும் கால­கட்­டத்தில் மட்டு. மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் போன்­ற­வர்கள் அதைக் குழப்பும் வகையில் அடா­வ­டித்­த­னங்­களை மேற்­கொண்டு பொது­மக்­களின் காணி­களில் புத்தர் சிலை­களை வைக்கும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு நாட்டில் இன­மோ­தல்­களை உரு­வாக்கி நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களை முடக்­கும்­வ­கையில் செயற்­பட்டு வரு­கின்­றனர் என்று மட்டு. மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சதா­சிவம் வியா­ழேந்­திரன் வீர­கே­சரி வார­வெ­ளி­யீட்­டுக்கு வழங்­கிய செவ்­வியில் தெரி­வித்தார்.

அவர் வழங்­கிய செவ்வி முழு­மை­யாக கீழே தரப்­ப­டு­கி­றது.

கேள்வி: மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் கடந்த சில காலங்­க­ளாக பட்­டி­ருப்பில் தமி­ழர்கள் பயன்­ப­டுத்தி வந்த மேய்ச்சல் நிலம் மற்றும் செங்­க­ல­டி­யி­லுள்ள தனியார் காணி­யொன்­றையும் ஆக்­கி­ர­மிக்கும் செயற்­பா­டு­களில் ஈடு­பட்­டுள்ளார். இதற்­கான பின்­னணி என்ன?

பதில்: மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரையின் விகா­ரா­தி­பதி அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் தொடர்பில் கடந்த கால விட­யங்­களை நாம் முதலில் எண்­ணிப்­பார்க்­க­வேண்டும்.  இந்தத் தேரர் கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் பெரும் அடா­வ­டித்­த­னங்­க­ளையும் அட்­ட­கா­சங்­க­ளையும் புரிந்­து­வந்­தவர். அந்­த­வே­ளை­களில் இவ­ருக்­கெ­தி­ராக அன்றும் இன்றும் எந்­த­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. இந்த நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மட்­டக்­க­ளப்பு வந்­தி­ருந்த சமயம் மங்­க­ள­ரா­மய விகா­ரைக்கு வர­வில்­லை­யென்ற கார­ணத்­தினால் குறித்த விகா­ரையில் ஜனா­தி­பதி திறப்­ப­தற்­காக எழுப்­பப்­பட்­டி­ருந்த நினை­வுத்­தூ­பியை சுத்­தி­யலால் அடித்து நொருக்கி தகாத வார்த்­தை­களால் திட்டித் தீர்த்­தவர். 

அப்­போதும் அவ­ருக்­கெ­தி­ராக சட்ட நட­ வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. அண்­மையில் கட­மை­யி­லி­ருந்த பெண் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வரை துரத்தித் துரத்தித் தாக்க முயன்ற சம்­பவம் தொடர்­பி­லான காணொளிக் காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் ஊட­கங்­க­ளிலும் வெளி­யா­கின. இச்­சம்­ப­வத்­திற்கு எதி­ரா­கவும் அவர் மீது சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. அதற்கு பின்னர் மின்­சார சபை ஊழி­ய­ரொ­ரு­வ­ருடன் இடம்­பெற்ற பிரச்­சினை தொடர்­பா­கவும் எந்த நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.  இவ்­வ­ளவு சம்­ப­வங்கள் இடம்­பெற்றும் மட்­டக்­க­ளப்பு -– பதுளை வீதியில் அர­ச­ ம­ரத்­த­டியில் அமைந்­தி­ருக்கும் பிள்­ளையார் சிலைக்­க­ருகே புத்தர் சிலை வைக்­கப்­போ­வ­தாக பகி­ரங்­க­மாக அவர் அறிக்கை விட்­டுள்ளார். பாரம்­ப­ரி­ய­மாக அப்­ப­குதி தமிழ் மக்கள் செறிந்­து­வாழும் பிர­தேசம். அந்­தப்­ப­கு­தியில் இவ்­வாறு புத் தர் சிலை வைப்­பது தொடர்பில் முறைப்­பா­ டொன்று பதிவு செய்­த­போது குறித்த காணியில் அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் உள் நுழை­யக்­கூ­டாது, மரங்கள் நாட்­டக்­கூ­டாது, ஆர்ப்­பாட்­டங்கள் செய்ய முடி­யாது மற்றும் வீதியை மறிக்க முடி­யா­தென்று நீதி­வானால் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.  

ஆனால் எந்­தக்­கா­ணியில் தேரரை உள்­நு­ழை­யக்­கூ­டா­தென்று உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டதோ அந்த காணி­யினுள்  அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் அமர்ந்­தி­ருந்தார். 

அப்­போது நான் சென்­றதும், நீதி­மன்ற உத்­த­ரவை வைத்­துக்­கொண்டு ஏன் அவரை வெளி­யேற்­றாமல் இருக்­கின்­றீர்கள் என்று பொலி­ஸா­ரிடம் கேட்டேன். அதே­ச­மயம் தேர­ருக்கு ஆத­ர­வாக பஸ் ஒன்றில் சிங்­கள மக்கள் வரப்­போ­கின்­றார்கள் என்­பதை அறிந்து கொண்டேன். அந்த வேளையில் தமிழ் மக்­களும் அங்கு கூடி­விட்­டனர். விடயம் பார­தூ­ர­மாக செல்­வ­தை­யு­ணர்ந்தேன். அதற்கு பின்னர் பொலி­ஸா­ரிடம் மீண்டும் பேசினேன். ஒரு­வாறு தேரரை அந்தக் காணி­யி­லி­ருந்து வெளி­யேற்­றினோம்.

கிழக்கு மாகா­ணத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­க­ளுக்­கி­டையில் பிணக்­குகள் ஏற்­ப­டு­வ­தற்கு அர­சி­யல்­வா­தி­கள்தான் காரணம். அவர்­க­ளு­டைய அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இன­வாதம் மற்றும் மத­வாத கருத்­துக்­களை பரப்­பி­வந்­தனர். அதே பின்­ன­ணி­யில்தான் இந்த சம்­ப­வத்­தையும் நாம் பார்க்­கிறோம். ஏனென்றால் கடந்த மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சிக்­கா­லத்தில் பொது­ப­ல­சேனா மற்றும் ராவ­ண­ப­லய போன்ற அமைப்­புகள் முஸ்லிம் மக்­க­ளுக்­கெ­தி­ராக கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தன. முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ரான அதே நிலை தற்­போது தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ராக திசை திருப்­பப்­பட்­டுள்­ளது. 

கேள்வி: முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ எப்­போது மட்­டக்­க­ளப்பு வந் தார்? மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரைக்கு சென்­றாரா?

பதில்: இந்தக் குழப்ப நிலை­க­ளுக்கு இரு வாரங்­க­ளுக்கு முன்னர் அவர் மட்­டக்­க­ளப்பு வந்­தி­ருந்தார். இதன்­போது மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரைக்கு அவர் சென்­ற­போது அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரரை சந்­தித்தார். மஹிந்த ராஜபக் ஷவை அம்­பிட்­டியே சும­ண­ரத்ன தேரர் தட­பு­ட­லாக வர­வேற்றார். குறித்த விகா­ரையில் இவர்­க­ளது சந்­திப்பு இடம்­பெற்­றது.

கேள்வி: சும­ண­ரத்ன தேரரின் நட­வ­டிக்­கைகள் சமீ­பத்தில் மட்­டக்­க­ளப்­புக்கு விஜயம் செய்த மஹிந்த ராஜபக் ஷவை சந்­திக்க முதல் எவ்­வா­றி­ருந்­தது சந்­தித்த பின்னர் எவ்­வா­றி­ருக்­கின்­றன? 

பதில்: மஹிந்த ராஜபக் ஷவை சந்­திக்க முன்னர் ஒருநாள் விகா­ரைக்குள் வந்­த­தற்­காக பொலிஸ் அதி­கா­ரி­யொ­ரு­வ­ருடன் பிரச்­சினை ஏற்­ப­டுத்­திக்­கொண்டார். ஆனால் விகா­ரைக்கு வெளியே இவர் யாரு­டனும் பிரச்­சி­னைப்­ப­ட­வில்லை. மஹிந்­தவை சந்­தித்த பின்­னரே அவர்  பொது­இ­டங்­களில் இவ்­வாறு நடந்­து­கொள்­கிறார். அதுவும் தமிழ் மக்­க­ளது காணி­களில் புத்தர் சிலை வைப்­பது போன்ற செயற்­பா­டு­களில் மும்­மு­ர­மாக ஈடு­பட்­டு­வ­ரு­கிறார். இதற்கு மஹிந்த காலத்தில் சலு­கை­களை பெற்­ற­வர்கள் இந்த இன­வாத நட­வ­டிக்­கை­க­ளுக்கு தூப­மிட்­டு­வ­ரு­கி­றார்கள். 

கேள்வி: இவ்­வா­றான நட­வ­டிக்­கைகள் தொடர்ந்தால் நாட்டில் இன­மோ­தல்கள் வெடிக்­கக்­கூடும். அதனால் இப்­பி­ரச்­சி­னையைத் தடுக்க தமி ழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எவ்­வா­றான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது ?

பதில்: மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு ­மன்ற உறுப்­பினர் என்­ற­வ­கையில் இது தொடர்பில் ஜனா­தி­ப­திக் கும் பிர­த­ம­ருக்கும் பொலிஸ் மா அதி­ப­ருக்கும் கடிதம் அனுப்­பி­யுள்ளோம். மற்றும் புத்த சாசன அமைச்­சுக்கும் கடிதம் அனுப்­பி­யுள்ளோம். 

கேள்வி: மட்­டக்­க­ளப்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரொ­ருவர் புத்தர் சிலை வைப்­ பது தொடர்பில் பின்­ன­ணியில் செயற்­ப­டு­கிறார் என அறியக் கிடைத்­ததே?

பதில்: மட்­டக்­க­ளப்பில் மாங்­கேணி பிர­தே­சத்தில் புத்தர் சிலை­யொன்று வைக்­கப்­பட்­டது. பின்னர் நீதி­மன்ற உத்­த­ரவின் பேரில் அச்­சிலை அகற்­றப்­பட்­டது. தற்­போது வடக்கு, கிழக்கில் பல இடங்­களில் புத்தர் சிலைகள் வைப்பதற்கு இடம் தேடிவருகிறார்கள் என அறியமுடிகிறது.

கேள்வி: பௌத்த பிக்குகளை முன்னி லைப்படுத்தி நாட்டில் இனக்கலவரத்தை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்ப்பதற்கு முயற்சிகள் நடைபெறுகின்றன என்று நீங்கள் சந்தேகப்படுகின்றீர்களா?

பதில்: ஆம் நிச்சயமாக சந்தேகப்படுகி றேன். தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டத் தை நோக்கிய பயணத்தில் இவ்வாறான முயற்சிகள் சூடுபிடித்துள்ளன. அதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கிலேயே அதிக மாக இடம்பெறுகின்றன. அதேபோல தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களிடையே முறுகல் நிலையை ஏற்படுத்தும் முயற்சி களும் நடந்து வருகின்றன. இந்த முயற் சிகளை குறித்த தேரர் உள்ளிட்ட இனவாத மதவாத அமைப்பினர் விரைவாகவும் வேகமாகவும் முன்னெடுத்து வருகின்றனர். 

ஆகவே இங்கு இவ்வாறான நடவ டிக்கைகள் சரியாகத் திட்டமிட்டு நடந்து வருகின்றன. அம்பிட்டியே சுமணரத்ன தேரரும் தன்னை யாராவது தாக்க மாட்டார்களா என்ற எண்ணத்திலேயே நடந்து கொள்வதுபோல தெரிகின்றது. 

இதன் மூலம் நாட்டில் பெருங்குழப்பத்தை உண்டுபண்ணுவதே அவரது நோக்கமாக இருக்கலாம். இந்த நேரம் தமிழ்மக்களை அமைதியாக இருக்கும்படி நான் கேட்டுக்கொண்டுள்ளேன். 

http://www.virakesari.lk/article/13659

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.