Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி

Featured Replies


வெள்ளத்தில் மிதக்கும் பொம்மைவெளி
 
 

article_1479796343-pommaiveli-%282%29.jp

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஜே-87 கிராம சேவகர் பிரிவில் உள்ளடங்கும் பொம்மைவெளி கிராம மக்கள், மழை வெள்ளம் காரணமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

மழை வெள்ளம் காரணமாக இப்பிரதேசத்தில் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'நீர் வழிந்தோடுவதற்குரிய முறையான வடிகால் இன்மையே இதற்கு முக்கிய காரணம்' என யாழ். பொம்மைவெளி பள்ளிவாசல் நிர்வாக செயலாளர் எம்.றிஸ்வான், குறிப்பிட்டார்.

மேலும், வெள்ள நீர் பாதிப்புக்குள்ளாக மக்களின் நிலமையை கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்து பார்வையிட்டதாகவும் அவர் கூறினார்.

இப்பிரதேசமானது, வருடாந்தம் மழை, வெள்ளத்தினால் பாதிக்கப்படுவதுடன்;மக்கள் இடம்பெயரும் நிலைமையும் காணப்படுகின்றது.

இம்மக்களுக்க நிம்மதியாக இருக்க ஒழுங்கான வீடமைப்பு வசதி இல்லை. ஒழுங்கான வீதி கிடையாது. மின்சார வசதி இல்லை. நீர் வடிந்தோட ஒழுங்கான வடிகால்கள் இல்லை. சிறுவர்கள் பாடசாலைக்கு செல்வதில் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.

கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குள் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அன்றாட உணவைக்கூட சமைத்து உண்ண முடியாத நிலையில் மக்கள் காணப்படுகின்றனர்.

தற்போது,  வீதி அபிவிருத்தி அதிகார சபையினால், வெள்ள நீர் வடிந்தோடுவதற்காக காக்கைதீவு நாவாந்துறையை இணைக்கும் கடற்கரையோர வீதியில் வாய்க்கால் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

- See more at: http://www.tamilmirror.lk/186648#sthash.sZVgkkI6.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

காக்கைதீவுப் பகுதியில் யாழ் நகரப்பகுதியில் சேரும் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டியதால் வேள்ளநீர் வெளியேறாது ஒரே இடத்தில் தங்கி இப்போ சுற்றுச்சூழலுக்குச் சவால் விடுகின்றது யாழ்நகர்ப்பகுதியில் வாழ்கின்ற படித்த(?) மேல்தட்டு மற்றும் நாகரீகம் தெரிந்த இடைநிலைமக்களாகத் தங்களைக் காண்பிக்கும் இன்னபிறவும் யாழ் பல்கலைக்கழகமும் இதுக்கு எல்லாம் பதில் சொல்லாது.

இது தவிர யாழ்குடாநாட்டுமக்கள் அதுவும் அனேகமாக நகர்ப்பகுதியில் வாழும் பாடசாலைச்சிறார்கள் அதிக உடற்பருமனுடன் காணக்கூடியதாக இருக்கின்றது. காரணம் பாடசாலை பின்பு மாலைநேர ருயூசன் இவைபோன்றவையால் அவர்களது நடமாடும் திறன் குறைவடைந்து உடற்பருமன் அதிகரிக்கின்றது தவிர பாடசாலைக்கும் வீட்டுக்குமான பயணத்துக்கு நடந்துபோவதைத் தவிர்த்து தமது பெற்றோரது இரண்டுசக்கர வாகனங்களையோ அன்றேல் மோட்டர்வாகனங்களிலோதான் பயணம்செய்கிறார்கள்.

  • தொடங்கியவர்
தொடர் மழையால் யாழ் .நகரப்பகுதி , தாழ்நிலப்பகுதி மக்கள் பாதிப்பு
 
தொடர் மழையால் யாழ் .நகரப்பகுதி , தாழ்நிலப்பகுதி மக்கள் பாதிப்பு
தற்போது  தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால் யாழ் நகரம் வெள்ளக்காடாக மாறிவருகின்றது.  யாழ்ப்பாணம் பஸ் நிலை யத்திற்கு அருகிலுள்ள நடைபாதை கடைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. கடைகளிற்குள் வெள்ளம் புகுந்தமையால் வியாபாரம் தடைப்பட்டதுடன் குறித்த பகுதியில் போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டுள்ளது. 
 
அப்பகுதியில் மழை நீர் வடிவதற்காக அமைக்கப்பட்ட வாய்க்கால் குப்பைகள் தேங்கிய நிலையில் அடைக்கப்பட்டு காணப்படு வதால் தேங்கியுள்ள மழை நீர் வடியாமல் உள்ளது. இதனால் அப்பகுதி வியாபாரிகள் பாரிய இடர்பாடுகளை எதிர் நோக்கியுள்ளனர்.
1479798907_unnamed%20%282%29.jpg
குறித்த பாதிப்புக்கள் குறித்து  மாநகர ஆணையாளரிற்கு அறிவித்த போதிலும் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்பட ல்லை . கடந்த வாரம் யாழ் மாநகர சபை சுத்திகரிப்பு தொழிலாளிகள் 9 நாட்களாக மேற்கொண்டிருந்த வேலை நிறுத்தத்தால் குப்பைகள் தேங்கியதாகவும் , வேலை நிறுத்தம் முடிவுற்ற நிலையிலும் குப்பைகள் அகற்றப்படாமையே இதற்கு காரணம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர் . 
 
இதேவேளை பெய்து வரும் கன மழையால் யாழ்.நகரை அண்டிய வசந்தபுரம், நித்தியவெளி, சூரியவெளி மற்றும் பொம்மைவெளி உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க ஆரம்பித்துள்ளன.
1479798921_unnamed%20%283%29.jpg
மழை வெள்ளம் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பலர் இடம்பெயர்ந்துள்ளதுடன், மேலும் பலர் தங்க இடம் அற்ற நிலையில் மழை வெள்ளத்துக்கு மத்தியில் பெரும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
 
1479798939_unnamed.jpg
 
1479798959_unnamed%20%283%29.jpg
22-11-2016%2012.11.19%206.jpg

http://www.onlineuthayan.com/news/20505

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளம் ஒரு மாரியில் இருந்து அடுத்த மாரி வரும்வரை தேங்கி நிக்கிற இடத்துக்குள்ள கடைகளையும் , வீதியின் மடடத்தில் இருந்து இரண்டு மீற்றர் ஆழத்தில் இருக்கும் சுத்தமான  வயல்  காணிக்குள் வீடுகளையும் கட்டிவிட்டால் கடைகளுக்குள்ளும் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகாமல் வேறென்ன செய்யும்....! அது ஒண்டும் செய்யேலாது என்டு கேக்கிறவைக்கும் வடிவாத் தெரியும்.....! tw_anguished:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.