Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா

Featured Replies

சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா

சர்வதேச சமூகம் தன்னிடமுள்ள பலமான சக்தியை உத்வேகத்தோடு பயன்படுத்தாமல் மென்போக்கு நிலையைக் கடைப்பிடிப்பதனாலேயே இலங்கை அரசு அதிகாரத்தனத்துடன் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொள்கின்றது.

இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன்.

இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசிரத்தை போக்கையும் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கின்றார்.

இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்று சர்வதேச சமூகம் திரும்பத் திரும்பக் கூறுகின்றது. ஆனால்இ இராணுவத் தீர்வு முயற்சியில் முனைப்புக்காட்டிஇ வலிந்த படை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் இலங்கை அரசை அப்பாதையிலிருந்து திருப்பிஇ சரியாக வழிநடத்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் அது பின்நிற்கிறது. இது விடயத்தில் தனக்குள்ள பலத்தைப் பயன்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் விருப்பமற்றுள்ளது; அல்லது இயலாத் தன்மையுடன் உள்ளது. மொத்தத்தில் இலங்கை இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் தனக்கு மிகுந்த அக்கறையுள்ளதாகக் காட்டிக்கொள்ளும் சர்வதேச சமூகம்இ மறுபுறத்தில் நிலைமையை சீர்செய்வதற்கு உருப்படியான செயற்பாடு எதையும் மேற்கொள்ளவில்லை. வெறும் அறிக்கைகளை வெளியிடுவதால் தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்துவிடப் போவதுமில்லைஇ இராணுவ முனைப்பில் தீவிரம் காட்டிநிற்கும் இலங்கை அரசு அமைதித் தரப்பின் பக்கம் திரும்பப் போவதுமில்லை. இப்படி யதார்த்தத்தை எடுத்து விளக்கியிருக்கின்றார் தமிழ்ச்செல்வன்.

வெறும் அறிக்கைகளால் பயனில்லை; அதற்கு அப்பால் உருப்படியாக பயனுள்ளதாக வேறு ஏதும் செய்யுங்கள் என்ற சாரப்பட அமைந்த இந்தக் கோரிக்கையை ஒரு முக்கியமான காலகட்டத்தில்தான் சர்வதேச சமூகத்தின் முன்வைத்திருக்கின்றார் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர்.பொருத்தமான நேரத்தில் முன்வைக்கப்பட்ட பொருத்தமான சமிக்ஞை இது.

இலங்கைக்கு உதவும் அமைப்புகளின் முக்கிய மாநாடு நேற்றும்இ இன்றும் காலியில் நடைபெறுகின்றது. இலங்கைக்கு உதவும் சர்வதேச நாணய நிதியம்இ உலக வங்கிஇ ஐ. நா. போன்ற சர்வதேச அமைப்புகள்இ பல்வேறு சர்வதேச வர்த்தக அமைப்புகள்இ முதலீட்டு நிறுவனங்கள்இ சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் என ஐம்பதுக்கும் அதிகமான ஸ்தாபனங்கள் மற்றும் தேசங்களைச் சேர்ந்த இருநூறுக்கும் அதிகமான பிரதிநிதிகளும் இராஜதந்திரிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த இரண்டு நாள் மாநாட்டை நேற்று ஆரம்பித்து வைத்தார்.

இந்த மாநாட்டின் மூலம் பெருமளவு உதவித்திட்டங்களுக்கான உறுதி மொழிகளை சர்வதேச அமைப்புகளிடமிருந்து இலங்கை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என கொழும்பு அரசுத் தலைமை எண்ணுகின்றது.

இந்தப் பின்னணியிலேஇ இலங்கை விடயத்தில் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுங்கள் என்று சர்வதேச சமூகத்தைப் பார்த்துஇ நேற்று இந்த மாநாடு ஆரம்பிக்க இருக்கும் சமயத்தில் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

அமைதி முயற்சிகளில் முழு ஈடுபாட்டுடன் பங்குபற்றாமல்இ இராணுவத்தீர்வு முனைப்புடன் செயற்பட்டால் இலங்கைக்கு உதவிகள் வழங்கப்படமாட்டா என்பதை இருபத்தியைந்து நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியைத் தற்போது வகிக்கும் ஜேர்மனி அறிவித்துவிட்டது. அதன்படி உதவித்திட்டங்களையும் அது நிறுத்தியிருக்கின்றது.

தற்போதைய உதவும் அமைப்புகளின் இருநாள் மாநாட்டின்போதும்இ அதுபோன்று இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அர்த்தமுள்ள நடவடிக்கை எதையாவது சர்வதேச சமூகம் எடுக்கவேண்டும் என்பதே தமிழர்களின் புலிகளின் தரப்புக் கோரிக்கையாக இருக்கின்றது.

அந்த நோக்கோடும்இ அந்தப் பின்னணியிலும்தான் மேற்படி விடயங்களை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் இந்தச் சமயத்தில் சுட்டிக்காட்டியிருக்கின்றா

சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா

சர்வதேசத்தின் ஆதரவு மிக நிச்சயமாக சமாதானம் என்ற போர்வைக்குள் பிடிக்கும் சண்டைக்குத்தான். இதில் உங்களிற்குச் சந்தேகம் வேண்டாம்! உலகத்தில் இன்று நடப்பது இதுவே!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சண்டைக்குத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுற மாதிரிதான் இருக்கு..

சண்டை பிடிக்காம எதிர் அணி எறியும் பிச்சைச்சலுகைகளை எவன் பயந்துபோய் சண்டையை விடுத்து சமாதானம் என்ற தோலை போக்கின்றானோ, எவன் அநியாயத்தை தமது அரசியல் வாழ்க்கைக்காக துறந்து மண்டியிடுகிறானோ.

அப்படியான சண்டையில்லாத சமாதானத்திற்குத்தான் பாழாய்ப்போன கலாசார, நாகரீகத்தில் முன்னேறுகிறோம் என்று கூறிக்கொண்டு இளம் பருவந்தினரிடையே இந்திய எமது குழந்தைகளினை படிப்பில் முந்த வேன்டும் என்று பொதுமக்கள் மத்தியில் பயந்து போய் தன்னை சர்வதேச பொலீ...என்று கூறுவோன் எதிர்பார்ப்பது. :)

வெற்றி மாயையில் சிங்களம் புழுகும் புழுகை கேட்டதால இப்ப சண்டைக்கு ஆதரவு மகிந்த ச்மாதானம் என கதறி அழும் நாள் வருகையில் சமாதானத்துக்கு

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசத்தின் ஆதரவு மிக நிச்சயமாக சமாதானம் என்ற போர்வைக்குள் பிடிக்கும் சண்டைக்குத்தான். இதில் உங்களிற்குச் சந்தேகம் வேண்டாம்! உலகத்தில் இன்று நடப்பது இதுவே!

யாழ் கள எழுத்தாளர்கள் சமாதானத்துக்கா, சண்டைக்கா ஆதரவு?

அல்லது சர்வதேச நாடுகள் போல, சமாதானம் என்ற போர்வையில் நடக்கும் சண்டைக்குத்தான் ஆதரவா?

"சமாதானம்" என்ற பெயரில் ஒருவர் எழுதி வந்தாரே? எங்கே? துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடி விட்டாரா?

சர்வதேசம் தமது பொருளாதார பிராந்திய நலனுக்காக யார் யுத்தத்தில் வெல்கின்றார்கள் என்று கண்ணில் எண்ணெய் விட்டுக் கொண்டு பார்ப்பதும், தமக்கு சார்பானவர் வென்றால் யுத்தத்திற்கும், அதற்கு எதிர்மாறாக நடந்தால் சமாதானத்திற்கும் கச்சை கட்டிக் கொண்டு நடப்பது காலம் காலமாக நடந்து வரும் விடயம் இன்று வரை சாவதேசம் இக் கொள்கையை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டுள்ளது. நாளை கிழக்கு நம் வசமானால் நிச்சயம் சமா.. சமாhh... சமாதானம் தான் சர்வதேசத்தின் உச்சரிப்பாயிருக்கும்.

ஈழத்திலிருந்து

ஜானா

Edited by Janarthanan

யாழ் கள எழுத்தாளர்கள் சமாதானத்துக்கா, சண்டைக்கா ஆதரவு?

அல்லது சர்வதேச நாடுகள் போல, சமாதானம் என்ற போர்வையில் நடக்கும் சண்டைக்குத்தான் ஆதரவா?

"சமாதானம்" என்ற பெயரில் ஒருவர் எழுதி வந்தாரே? எங்கே? துண்டைக்காணோம் துணியை காணோம் என்று ஓடி விட்டாரா?

ஐயா ஜீட்,

ஆடுற மாட்டில ஆடித்தான் பால் கறக்கோணும், பாடுற மாட்டுல பாடித்தான் பால் கறக்கோணும். உலக நடைமுறையுடன் ஒத்துப் போவதே நம்மட பொலிசி, மற்றும் பத்திரிகை தர்மம். இந்த வகையில் எனது ஆதரவு சமாதனம் என்ற போர்வைக்குள் நடக்கும் யுத்தத்திற்கே!

எங்கட ஐயா சமாதானம் தைப்பூசத்திற்கு தலைவர் சங்கரியுடன் சேர்ந்து கொழும்பு கோயில் ஒன்றில் விரதம் பிடிக்கின்றார். சுவாமி தரிசனம் முடிந்தது தலைவர் சங்கரி கையால் பிரசாதம் வாங்கி சாப்பிட்டு விரைவில் களத்திற்கு வருவார். அதுவரை அமைதிகாக்க!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.