Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்காணிப்புக் குழுவினர், கிளிநொச்சிக்கு இன்று திடீர் பயணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கண்காணிப்புக் குழுவினர், கிளிநொச்சிக்கு இன்று திடீர் பயணம்

[புதன்கிழமை, 31 சனவரி 2007, 02:09 ஈழம்] [காவலூர் கவிதன்]

காலியில் இடம்பெற்ற சர்வதேச நிதிவழங்கும் நாடுகளின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பையடுத்து, சில முக்கிய தகவல்கள் மற்றும் செய்திகளோடு, சர்வதேச போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் உயர்மட்டப் பிரதிநிதிகள் இன்று கிளிநொச்சி பயணமாகியுள்ளனர்.

அவர்கள் கிளிநொச்சி செல்வதற்கான உலங்குவானூர்தி ஒழுங்குகளை, நேற்று இரவு வரை சிறீலங்கா அரசு வழங்கவில்லை. இருப்பினும் தாங்கள் தரை மார்க்கமாகவாவது கிளிநொச்சி செல்லவுள்ளதாக கண்காணிப்புக் குழுவினர் தெரிவித்திருந்தனர்.

வேறு வழியின்றி, விமானப் பயணத்தை வழங்க சிறீலங்கா அரசு பின்னிரவு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, இடைக்கால தலைவராகப் பணியாற்றிவரும் ஜோண் ஒஸ்க்கார் சோல்நெஸ் தலைமையில், இவர்களது பயணம் இடம்பெற்றுள்ளது.

இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வொன்றை எட்டவேண்டுமென்றும், சிறீலங்கா அரசு இராணுவத் தீர்வை இடைநிறுத்தவேண்டுமென்றும் நிதி வழங்கும் நாடுகள் பொதுவான வேண்டுகொளை விடுத்த போதிலும், சிறீலங்கா அரசின் இராணுவ நகர்வுகளுக்கு தொடர்ந்தும் தங்களது ஒத்துழைப்பு இருக்குமென அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

http://www.eelampage.com/?cn=30662

கடைசி விஜயமாக இருக்குமென்பது எனது ஆய்வு. :P :lol::icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவை இப்பவும் இருக்கினமே.. தெரியாமல் போச்சு..

வரச்சொல்லிக் கூப்பிட்டமாதிரி விழுந்தடித்து ஓடுகிறார்கள்.

என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டு விட்டு

மற்றப்பக்கம் தகவல்களைக் கொடுக்கத்தான்

கண்காணிப்புக் குழுவினர்

இன்று கிளிநொச்சி விஜயம்

ஹெலி வசதி வழங்க அரசு இணக்கம்

இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் இன்று கிளிநொச்சிக்குச் சென்று அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனைச் சந்தித்துக் கலந்துரையாடவிருக்கின்றார்.

கண்காணிப்புக் குழுவின் பிரதித் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து கிளிநொச்சி செல்வதற்கு ஹெலிகொப்டர் வசதியை வழங்க அரசு இணங்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் அதிகரித்திருக்கின்ற நிலையில் இரு தரப்புகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை கேள்விக் குறியாகியிருக்கின்ற சந்தர்ப்பத்தில் கண்காணிப்புக் குழுவின் உயர்மட்டக் குழுவினர் கிளிநொச்சி செல்கின்றமை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகின்றது. (த09)

http://www.sudaroli.com/pages/news/today/17.htm

இந்த முறை தமிழ்ச்செல்வன் சமாதானப் பறவைகளின் முகத்தில் கரியைப் பூசி அனுப்ப வேண்டும்.

வவுனியா வரையே அவர்களுக்கு உலங்கு வானூர்தி வழங்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தரைமார்க்கமாகவே கிளிநொச்சி செல்கின்றனர்.

அவையும் கணகாலம் தோசை சாப்பிட்டு .அதுதான் போய் சாப்பிட்டு பார்த்துக்கொண்டு வருவம் எண்டு வெளிகிட்டினம் போல கிடக்கு

இந்த கண் காணிப்பு குழுவால் எந்த பிரயோசனமும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை, இவர்களை அடித்து விரட்டுங்கப்பா முதலில்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி இந்த கண் காணிப்பு குழு எமக்கு நன்மை தானை செய்யினம்....

அது வேறெண்டுமில்லை கொம்பனிக்கு மீண்டும் வன்னிக்கோழிக்குழம்பு ஞாபகம் வந்திட்டுது போல....கொக் கொக்க கோ...

அது ஒரு தடவை போய்டு வந்து அங்க என்ன நடக்குது என்டு இஞ்ச வந்து சொன்னா இன்னும் கொஞ்சக் காலம் காசில்லாம சுகபோகம் அனுபவிக்கலாம் தானே. உவனுகள் இருந்து என்ன புண்ணியம்??

ஈழத்திலிருந்து

ஜானா

அரசாங்கத்தின் விசேட செய்தியுடன் இன்று கண்காணிப்பு குழு புலிகளைச் சந்திக்கிறது

[31 - January - 2007]

- டிட்டோ குகன் -

போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவினர், இலங்கை அரசின் " விசேட செய்தி" யொன்றுடன் இன்று புதன்கிழமை கிளிநொச்சி செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதை போர் நிறுத்தகண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோபினூர் ஒமர்ஸனும் நேற்று உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம், 30 ஆம் திகதிகளில் ஜெனிவாவில் அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுக்கள் தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து, இரு தரப்புக்களுக்கும் இடையிலான தொடர்பாடல்கள் பெரும்பாலும் ஸ்தம்பிதமடைந்து போயிருந்த நிலையில், அதை புதுப்பிப்பது போல் அரசின் செய்தியொன்றை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவினர் இன்று விடுதலைப் புலிகளிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜெனிவா பேச்சுக்கள் முறிவடைந்ததை அடுத்து, அரசாங்கம் இராணுவ நடவடிக்கைகள் மூலம் கிழக்கில் புலிகள் வசம்மிருந்த வாகரை மற்றும் வெருகல் போன்ற பிரதேசங்களை கைப்பற்றியுள்ளது. இவ்வாறான சூழ்நிலையில், போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் முதல் முறையாக, அதுவும் அரசின் விசேட செய்தியொன்றுடன் புலிகளை சந்திக்கவுள்ளனர்.

இதே நேரம், விடுதலைப் புலிகளுடன் உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தி, தங்களது புதிய நடைமுறைகள் குறித்து விளக்கமளித்து, அவை தொடர்பான அவர்களது யோசனைகளையும் பெற்றுக் கொள்ள கண்காணிப்புக் குழு மிகவும் ஆர்வம் காட்டி வந்தது.

இதன்அடிப்படையில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் இன்று கிளிநொச்சியில் புலிகளை சந்தித்து பேசவுள்ளனர். போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுத் தலைவர் சோல்வ்பேர்க் ஸ்கண்டிநேவிய நாடுகளுக்கிடையில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருப்பதால், இன்று புலிகளை சந்திக்க இருக்கும் கண்காணிப்பு குழுவுக்கு அதன் பதில் தலைவரான ஒஸ்கார் சோல்லனஸ் தலைமை தாங்கவுள்ளார்.

இதேநேரம், விடுதலைப்புலிகளின் தரப்பிலிருந்து அவ் அமைப்பின் சமாதான செயலக பணிப்பாளர் எஸ்.புலித்தேவன் இச் சந்திப்பில் கலந்து கொள்வாரென கண்காணிப்பு குழு பேச்சாளர் ஒமர்ஸன் தெரிவித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி செல்லும் கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் பயணிப்பதற்கு வவுனியா வரை ஹெலிகொப்டர் வழங்க அரசு சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் ஒமர்ஸன் கூறினார்.

இதுவொரு உயர்மட்ட சந்திப்பு. இச் சந்திப்பில் எமது செயலமர்வில் மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கை மாற்றங்கள் குறித்து புலிகளுக்கு எடுத்துக் கூறி அவர்களின் யோசனைகளை பெற்றுக் கொள்வதே எமது நோக்கமாகும். இதே நேரம், அரசாங்கத்தின் செய்தியொன்றையும் விடுதலைப்புலிகளுக்கு எடுத்துச் செல்கிறோம் என்றார்.

நன்றி : தினக்குரல்

உயர்மட்ட சந்திப்பில் கண்காணிப்புக் குழுத் தலைவரும் தமிழ்ச்செல்வனும் கலந்துகொள்ளவில்லையோ ?

:)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.