Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா யோசிக்கிற இந்த வெயிலுக்க நிண்டு கொண்டு ஒன்றும் இல்லடா எல்லா வீட்டிலையும் கணக்கெடுத்தாச்சு இந்த வீடு மட்டும் தான் கடைசி அதுகென்ன  வா உள்ள போவோம் .போவோம் சரி ஆனால் நீ கனக்க கதைக்கப்படாது ஏண்டா  அந்த Ms; என்ன மோசமான ஆளடா பெயர் கந்தசாமி ஊர் கூப்பிடுவது வெடியன் கந்தசாமி மோசம்மான ஆள்  வாயை துறந்தால் வஞ்சகம் இல்லாமல் பொய் சொல்லுவார்டா மனுசன் அப்படியா வா உள்ள போவோம் ஐயா ஐயா  ... என்டா சத்தத்தை காணல பொறுடா அந்தாள் தூங்கிட்டு இருப்பாரு சரி சரி செருப்பைகழட்டி விடு ஏண்டா அதால அடிப்பாரோ நண்பன் முறைக்கிறான் சரி சரி யாருப்பா அது நான் தான் ஐயா ஜி.எஸ் வந்திருக்கிறன் வணக்கம் வணக்கம் ஜி. எஸ்சா வா தம்பி என்ன ஏதாவது நிவாரணம் கொடுக்க போறியளா அல்லது நிவாரணம் தந்து விட்டோம் என்று சொல்லிகையெழுத்து வேண்டி சுருட்ட போறியளா ( மனதுகுள்ள ம்கும்) ஆரம்பமே நல்லா தொடங்கிட்டுது சரி சரி உள்ள வாங்க வெயில் வேற மண்டைய புளக்குது ஓம் ஐயா சரியான வெயில் இருங்கள் நன்றி ஐயா இது யாரு புது பொடியன் இவரோ இப்ப ஐயா யுத்தம்முடிஞ்ச கையோட அரசாங்கம் ஆட்களைகணக்கெடுக்குது எனக்கு உதவியாளாக இவரை போட்டு இருக்கிறது அரசாங்கம் என்னை மேலையும் கீழேயும் பார்க்கிறார் மனுசன் ஏதோ பிகரைப்பார்ப்பது போல கணக்கெடுத்து என்ன செய்ய போறாங்களாம் அது தெரியாது ஐயா கிராமங்களை அபிவிருத்தி செய்வாங்க மொத்த சனத்தொகையும் அறிந்து கொள்ளவதற்க்காகவும் அப்படியா இவர்ட பெயர் என்ன தீரன் என்று ஜி.எஸ் அறிமுகப்படுத்தினான்  என்னை.

இந்தாங்கோ ஐயா போம் இதை நிரப்பி நாளைக்கு தாங்கோ நீங்கள் நிரப்புவீங்கள்தானே நான் நிரப்புவன் இல்லாட்டா மகளை நிரப்ப சொல்லுங்கோ என்று அந்த படிவங்களை அவரிடம் கொடுத்தேன்.

 

சரி சரி ஊர் சுற்றி களைச்சு போனியள் தேத்தண்ணி ஏதாவது குடிங்களன் ம் புள்ள மது  ... மது ஓம் அப்பா இஞ்சி போட்டு மூன்று  பிளேன்டீ ஊத்து மகள் இஞ்சியில்லப்பா சும்மா ஊத்தவா என்று  ஒரு மதுக்குரல் கேட்டது உள்ளே ஒரு மயில் இருப்பது உள்மனது சொல்லியது ஆனாலும் என்ன ஒளிந்து இருப்பதை பார்க்க துடிக்கும் அடிமனது சரி என்ன நம் கண்கள் காணாமலா போய்விடும் என்ற எண்ணத்துடன் திரும்பி பார்க்கையில் நண்பன் போவோம் என்றான் பொறுங்க தம்பி பிளேன்டி இல்லையென்றால் என்ன தோட்டத்தில் இளநீர் குடிப்போம் என்றார் பக்கத்தில் இருந்த நானோ ஓம் இந்த வெக்கைக்கு இளநீர்தான் சரி அப்ப சரி வாங்கோ என்றார் கொக்குதுரட்டியுடன் தோட்டத்திற்கு நுழைகிறோம்  அப்போது பிள்ள மது கொஞ்சம் சீனியும் தேசிக்காயும் தா பிள்ள என்றார் என் மனதில் உள்ளே இருக்கும் மது வர போகிறாள் அவளைப்பார்க்கலாம் என்று தோன்றினாலும் தேசிக்காயும் சீனியும்  எதற்கு என்ற யோசனை ஓடியது வந்தாள் மது ம் (சொல்ல வேலையில்லை கந்தசாமி பெத்துத்தான் வச்சியிருக்கான் என்ற உள் மனதுகுள்ள ஒரு படம் ஓடியது) . இந்தாங்கோ அப்பா பிடியுங்க நான் பள்ளிக்கு போய் பிள்ளையை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்றாள் ஓடிய படம் எல்லாம் திரை கிழிஞ்சு போனதுபோல நின்றது .

 

எனக்கோ மனக்குழப்பம் வாக்கு பதிவு (வோட்லிஸ்டில்) திருமணமாகவில்லை என்று எழுதியிருக்கிறது ஆனால் பிள்ளையை கூட்டிக்கொண்டு  tu இவள் பள்ளிக்கு போகிறாள் சரி ஐயாட்ட கேட்டு தெரிந்து கொள்வோம் ஐயா என்ன ஐயா நிலத்துல இந்தம் பெரிய குழி அதுவா தம்பி ஆமிக்காரன் இந்த இடங்களை பிடிக்க வரக்குள்ள செல் அடிச்சவன் அந்த செல்களை பிடிச்சு இந்த குழிக்குள்ளதான் போட்ட நான் அது எல்லாம் சேர்ந்து  வெடிச்சதுதான் இந்த குழி என்றார் அந்த குழியோ பயிருக்கு நீர் எடுக்க தோண்டப்பட்டது என நினைக்கிறேன் ஜி எஸ் நண்பன் இதை கேட்டும் கேட்காததுமாக நின்றான் எப்படி பிடிச்ச நீங்கள் அதுவா வீட்ட கிடந்த நெல்லுச்சாக்கை தண்ணில நனைத்து அடிச்ச செல்லை ஒவ்வொன்றாக பிடிச்ச நான் ஆனாலும் ஒவ்வொரு ஷெல்லாக அடிச்சதால பிடிச்சன். ஆனால் பிறகு மல்டி என்ற ஒரு சாமான் இருக்கிரது அதை அடிச்சான் பாரு அது சும்மா மழை பொழியுறாப்போல பொழிஞ்சுது அதை கூரைக்கு மேல ஏறி தாவித்தாவி பிடிக்கைகுள்ள ஓட்டுல  கால் பாடு ஓடு முழுவதும் உடைஞ்சு போச்சுதென்றால் பாருங்கோவன் என்றார் அப்போதுதான் இந்த ஆள்ட பெயர் எனக்கு ஞாபகம் வந்தது அடப்பாவி பொய் கேள்விப்பட்டிருக்கிறேன் அஹா இது அல்லவா உலகமகா பொய் அப்போ நீங்கள் பயங்கரமான ஆள்தான் 

 

ம் அந்த காலத்தில் வேட்டைக்கு ஊர்ல் நான் தான் பேமஸ் ஒரு தோட்டாவுல ரெண்டு மான்களை வேட்டையாடிது நான் தான் அப்படியே இந்த கருமாந்திர பொய்களை கேட்க வேண்டிய நிலையில் நான் எப்படி ஐயா ஒரு தோட்டாவுல அதுவா தம்பி ஒரு நாள் நான் வேட்டைக்கு போனநான் கனநேரம் பத்தைக்குள்ள ஒளிஞ்சு இருந்த நான் ஒரு மானோ மரையோ வரல்ல சரி வீட்ட போவோம் என்று வெளிக்கிடக்குள்ள மலையோரத்துலரெண்டு மானை கண்ட நான் என்னடா ஒன்றை சுடுவமா என்று பார்த்தேன் பிறகு ரெண்டையும் சுடுவோம் என்று சரியாக மலையில் இருந்த விளிம்பை பார்த்து சுட்டநான் தோட்டா போய் விளிம்புல பட்டு இரண்டா பிரிஞ்சு ரெண்டு மானும் சுடு பட்டு கிடந்தது அதை எடுத்து ஊருக்கு கொன்டு வரகுள்ள சனம் எல்லாம் பார்த்திட்டுது அதற்கு பிறகு நான் தான் ஊர் வேட்டைக்காரன் என்றார் . சரி ஐயா போதும் போதும் நம்புறன் ஐயா நம்புறன் ஐயா சரி இந்த சீனியையும் தேசிக்காயயையும் பிடி  என்று சொல்லி விட்டு இளநீர் பருவத்தை விட முத்தின பருவத்தை உடைய இளநீரை பறித்து தந்தார் பின்னர் அதை வெட்டி அதனுள் தேசிப்புளியை புளிந்து விட்டும் சீனியும் விட்டு கலந்து தந்தார் புதுவகையான  இளநீர் அஹா என்ன ருசி  எத்தனை பேர் இப்படி குடித்து இருப்பார்களோ  தாகம் தணிந்தது .

இளநீரில் புது வகையான ஒரு ருசியைக்கண்டேன்

சரி ஐயா உங்கள்ட ஒன்று கேட்கவா என்ன தம்பி கேழு ஐயா உங்கட கள் கல்யாணம் கட்டிட்டாவோ . இல்லை பிறகு எந்தகுழந்தையை கூட்டி வர போகிறா பள்ளிக்கு அதுவா தம்பி அவளுக்கு சாதகம் சரியில்லை கல்யாணம்கட்டுறவன் இருக்க மாட்டானாம் அல்லது இறந்து போய்விடுவானாம் அப்படியா ஓம் இங்க சண்டை நடக்ககுள்ள   வவுனியால இருந்த அவள் வரக்குள்ள அந்த பிள்ளைய கூட்டிக்கொண்டு வந்தா நானும் என்ன சொல்லுற ஒன்றும் சொல்லல யாரோ அநாதை பிள்ளையாம் என்று சொன்னா கேட்டதற்கு . வரும் கல்யாணம் எல்லாம் அந்த சாதகத்தால நின்று போகுது என்றார் மனவருத்தமாக ஐயோ பாவமே என்றேன் நானும் மனுசியும் இவளை நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள்ள அழுறம் தம்பி கவலைப்படாதீங்கோ ஐயா அவக்கு கல்யாணம் நடக்கும் என்று சொல்லி விட்டு சரி ஐயா நாங்கள் வருகிறோம் நாளை உங்கள் மகளிடம் சொல்லி வையுங்கள் அந்த போமை நிரப்பி வைக்க சொல்லி என்று சொல்லி விட்டு  அவர் வீட்டை விட்டு வெளியில் வருகிறோம்

வரும் வழியில் அவளும் அந்த குழந்தையும் வருகிறார்கள் நானும் நண்பனும் இறங்கி கொஞ்சம் கதைக்க வேண்டும் என்றேன் அவளும் மனப்பதட்டத்துடன் என்ன சொல்லுங்க என்றாள் இந்தகுழந்தை பற்றிய விபரங்கள் இவளை எந்த ஆஸ்பத்திரியில் அநாதையாக‌ பெற்ற நீங்கள்  அதற்க்கான சான்று அல்லது எந்த காப்பகத்தில் இருந்து எடுத்த நீங்கள் என்ற எல்லா சான்றுகளும் வேண்டும் அப்பதான் உங்களை இங்கே உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும் என்றேன் . அவளோ எதுவும் பேசாமல் மொனமாக நின்றாள் நானோ இப்படி பேசாமல் இருப்பதால் பல்ன் இல்லை நாளைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகும் போது  உன்மையில் உங்களுக்கு ஜாதக பிரச்சினையா என்று நான் கேட்க அவள்  பதிலோ அப்படியானால் இவள் அப்பன் இந்நேரம் இறந்து இருக்கணுமே என்றாள்.

 

அந்த வார்த்தைக்குள் இருந்த  அர்த்தம் கண்டு கொண்டேன்

 

யாரோ ஒருவன் இவளை ஏமாற்றி சென்று இருக்கிறான் அவன் நினைவாக இவள் அவன் குழந்தையை வளர்க்கிறாள் இன்னொரு கல்யாணம் தேவையில்லாமல் அவள் குடும்பத்தையும் ஏமாற்றியும் ஜாதகத்தை மாற்றி எழுதியும் அந்த குழந்தைக்காக வாழ்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன் இது தெரியாமல் கந்தசாமி தன் சொந்த பேரக்குழந்தையை யாரோ பெற்ற அநாதை போலவே பார்க்கிறார் எப்போ தெரியபோகிறது அவருக்கு இந்த உன்மை

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை

தொடருங்கோ..

 

இப்படியே சில கள விடயங்களும் வெளியில் வரட்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2016 at 0:31 AM, விசுகு said:

நல்ல கதை

தொடருங்கோ..

 

இப்படியே சில கள விடயங்களும் வெளியில் வரட்டும்.

ஊரில பெரியவன் என் கிற கன பேர் உள்ளுக்க  ........................................... அதில் ஒரு பெண் பாதிக்கப்படவள் அவளுக்காக அதை எழுதியது அவ்வளவுதான்  

கருத்துக்கு நன்றி 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாதகத்துக்கு நன்றி முனிவர்

tw_thumbsup:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2016 at 5:40 AM, குமாரசாமி said:

சாதகத்துக்கு நன்றி முனிவர்

tw_thumbsup:

நன்றிங்கண்ணே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.