Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதித்துறையினை அவமதித்திருக்கும் தேரர்கள் மீது உரிய நடவடிக்கை அவசியம்

Featured Replies

நீதித்­து­றை­யினை அவ­ம­தித்­தி­ருக்கும் தேரர்கள் மீது உரிய நட­வ­டிக்கை அவ­சியம்

 

மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ராமய விகா­ர­ாதி­பதி அம்­பிட்­டிய சுமங்­கல ரத்ன தேரர் மற்றும் பொது­பல சேனாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் ஆகியோர் தலை­மை­யி­லான குழு­வினர் நீதி­மன்ற உத்­த­ர­வையும் மீறி செயற்­பட்­டுள்­ளமை பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. நீதி­மன்ற உத்­த­ரவை மீறி அம்­பிட்­டிய சுமங்­கல தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் மட்­டக்­க­ளப்பில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­மையும் மட்­டக்­க­ளப்­புக்கு செல்ல முயன்ற கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான பொது­ப­ல­சேனா குழு­வி­னரை வெலிக்­கந்­தையில் பொலிஸார் மறித்­த­தை­ய­டுத்து தேரர் நீதி­மன்ற தடை உத்­த­ரவை கிழித்து எறிந்­த­மையும் நீதித்­துறை வட்­டா­ரத்தில் பெரும் அதி­ருப்­தியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இந்த இரு­வரும் நீதி­மன்­றத்தை அவ­ம­தித்­துள்­ள­மை­யினால் இவர்­களை கைது­செய்ய வேண்­டு­மென்ற கோரிக்­கையும் தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. நாட்டில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்த நல்­லாட்சி அர­சாங்­க­மா­னது முயற்­சித்து வரும் நிலையில் இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் ஏற்­ப­டுத்­தும்­ வ­கை­யி­லான இத்­த­கைய தேரர்­களின் நட­வ­டிக்­கை­களை முழு­நா­டுமே கண்­டிக்­க­வேண்டும் என்ற கோரிக்­கையும் தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது.

மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ராமய விகா­ர­ாதி­பதி அம்­பிட்­டியே சுமங்­கல தேரர் அண்­மைக்காலமாக மட்­டக்­க­ளப்பில் இன, மத­வாத செயற்­பா­டு­களில் ஈடு­பட்டு வரு­கின்றார். அண்­மையில் காணி சுவீ­க­ரிப்பை தடுக்க சென்ற கிரா­ம­சே­வகர் உட்­பட அரச அதி­கா­ரிகள் மீது அவர் கடும்­தொ­னியில் கருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்தார். தமிழ் மக்கள் அனை­வரும் புலிகள் என்ற தோர­ணையில் அவ­ரது கருத்து அமைந்­தி­ருந்­தது. இத­னை­விட தனியார் காணி­யொன்­றுக்குள் அத்­து­மீறி பிர­வே­சித்த இவர் அங்கு விகா­ரையை நிறு­வு­வ­தற்கு முயற்­சித்­த­தை­ய­டுத்து அங்கும் பெரும் சர்ச்சை ஏற்­பட்­டி­ருந்­தது. இந்த காணி விவ­கா­ரத்தில் நீதி­மன்றம் தடை உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்த நிலை­யி­லேயே மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ராமய விகா­ரா­தி­பதி அத்­து­மீறி பிர­வேசித்து அட்­ட­காசம் செய்­தி­ருந்தார்.

இவ்­வா­றான நிலையில் மட்­ட­க­ளப்பு மங்­க­ள­ராமய விகா­ரா­தி­ப­திக்கு ஆத­ரவு தெரி­விக்கும் வகையில் பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வினர் நேற்று முன்­தினம் மட்­டக்­க­ளப்­பிற்கு விஜயம் செய்­தி­ருந்­தனர். இவ்­வி­டயம் குறித்து ஒரு வார­கா­லத்­திற்கு முன்­னரே அவர்கள் அறி­வித்தல் விடுத்­தி­ருந்­தனர். மட்­டக்­க­ளப்­புக்கு சென்று மங்­க­ள­ராமய விகா­ர­ாதி­ப­திக்கு ஆத­ர­வாக ஆர்ப்­பாட்­டத்தை மேற்­கொள்­வ­தற்கு இவர்கள் திட்­ட­மிட்­டி­ருந்­தனர்.

பொது­ப­ல­சேனா அமைப்­பினர் இவ்­வாறு திட்­ட­மிட்­ட­தை­ய­டுத்து தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரு­ம­மொ­ழிகள் அமைச்­சரும், தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணேசன் இவ்­வி­டயம் குறித்து பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர ஆகி­யோரின் கவ­னத்­திற்கு கொண்­டு­வந்­தி­ருந்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்­பினர் இவ்­வாறு மட்­டக்­க­ளப்­பிற்கு சென்று ஆர்ப்­பாட்­டங்­களை நடத்த முற்­பட்டால் அங்கு இன­க் க­ல­வர சூழல் ஏற்­ப­டலாம் என்­ப­தனால் இவர்­க­ளது செயற்­பாட்­டிற்கு தடை விதிக்க வேண்­டு­மென்று அமைச்சர் மனோ கணேசன் பிர­த­ம­ரிடம் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

இந்த நிலை­யில்தான் மட்­டக்­க­ளப்பு மங்­க­ளராமய விகா­ர­ாதி­ப­திக்கு ஆத­ரவு தெரி­வித்து பொது­பல சேனா அமைப்­பினர் நேற்று முன்­தினம் வாக­னத்­தொ­ட­ர­ணி­யாக மட்­டக்­க­ளப்பு நோக்கி பய­ண­மா­கினர். இவர்­க­ளது வரு­கையையடுத்து நீதி­மன்­ற­மா­னது தடை உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்­தது. வெறுப்­பு­ணர்வை தூண்டும் சட்­ட­ரீ­தி­யற்ற ஒன்­று­கூடலை தடுக்கும் தடை உத்­த­ரவை ஏறாவூர் சுற்­றுலா நீதிவான் நீதி­மன்றம் வெள்­ளிக்­கிழமை மாலை பிறப்­பித்­தி­ருந்­தது. மட்­டக்­க­ளப்பு பிர­தே­சத்தில் ஆர்ப்­பாட்­டங்­களும் இன­வெறுப்­பு­ணர்­வு­களை தூண்டும் சம்­ப­வங்­களும் இவர்­களின் விஜ­யத்­தினால் ஏற்­படும் என்று கரு­திய பொலிஸார் வெறுப்­பு­ணர்வை தூண்டும் ஒன்­று­கூ­ட­லுக்கு தடை­வி­திக்­கு­மாறு நீதி­மன்றைக் கேட்­டி­ருந்­தனர். இந்த மனுவை ஆராய்ந்த மாவட்ட பதில் நீதி­பதி ஆதம்­லெப்பை மு­ஹமத் முனாஸ் வெறுப்­பு­ணர்வை தூண்டும் சட்­ட­ரீதி­யற்ற ஒன்­று­கூ­டலை தடுக்கும் தடை உத்­த­ரவை பிறப்­பித்­தி­ருந்தார்.

இந்த தடை உத்­த­ர­வுக்­க­மைய கொழும்­லி­ருந்து மட்­டக்­க­ளப்பை நோக்கி வாகனத் தொட­ர­ணி­யாக சென்ற பொது­பல சேனா வின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தலை­மை­யி­லான குழு­வி­னரை பொலிஸார் வெலிக்­கந்தை பகு­தியில் தடுத்து நிறுத்­தி­யி­ருந்­தனர். நீதி­மன்றத் தடை உத்­த­ரவை கல­கொட அத்­தே­ஞான தேர­ரிடம் சமர்ப்­பித்த பொலிஸார் நீதி­மன்ற உத்­த­ர­வுக்­க­மைய மட்­டக்­க­ளப்­பிற்குள் பிர­வே­சிக்க அனு­மதி மறுத்­தனர். இத­னை­ய­டுத்தே கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் நீதி­மன்ற தடை உத்­த­ரவை கிழித்­தெ­றிந்­த­துடன் பொலி­ஸா­ருடன் பெரும் வாக்­கு­வாதத்தில் ஈடு­பட்டார்.

பிர­பா­க­ரனின் புகைப்­ப­டங்­களை எடுத்து சென்­றார்கள். அவர்­க­ளுக்கு எதி­ராக எவ்­வித சட்ட நட­வ­டிக்­கையும் நீங்கள் எடுக்­க­வில்லை. ஆனால் மட்­டக்­க­ளப்­பிற்கு செல்ல விடாமல் எங்­க­ளைத் ­த­டுக்­கின்­றீர்கள். மட்­டக்­க­ளப்பு பௌத்த மக்கள் நான் போதி­பூஜை நடத்த வேண்­டு­மென ஆசைப்­ப­டு­கின்­றார்கள். அதற்­காக நாம் அங்கு செல்­கின்றோம். அது முடிந்­ததும் நாங்கள் அங்­கி­ருந்து வெளி­யே­றி­வி­டுவோம். எங்­க­ளுக்கு வழி­வி­டுங்கள். நாங்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­ப­டப்­பே­வ­தில்லை. அவ்­வாறு எதுவும் நடப்பின் அதனை பொலிஸ் அதி­கா­ரிகள் பார்த்­துக்­கொள்­ளுங்கள். ஆயுதம் ஏந்­திய புலி­களை வீழ்த்தி அவர்­களை நிரா­யு­த­பா­ணி­யாக மாற்­றிய முப்­ப­டை­யி­ன­ருக்கு இதனை செய்ய முடி­யாதா? இது என்ன விளை­யாட்டு என்­பது எமக்குத் தெரியும். இந்த அநி­யா­யத்தை எமக்குச் செய்­ய­வேண்டாம். இது மூளை­யுள்ள அதி­கா­ரி­களின் பிரச்­சி­னை­யல்ல என்­பது எமக்குத் தெரியும். மேலி­டத்­தி­லுள்ள கழு­தை­க­ளுக்கு இது தெரி­யாது என்று கல­கொட அத்­தே­ஞா­ன­சார தேரர் பொலி­ஸா­ருடன் வாக்­கு­வா­தப்­பட்­டுள்ளார்.

நீதி­மன்ற தடை உத்­த­ர­வினை நீங்கள் கொழும்பில் வைத்து தந்­தி­ருக்­கலாம். இல்­லையேல் கட­வத்­தையில் வழங்­கி­யி­ருக்­கலாம். வரக்­கா­பொல, குரு­நாகல், தம்­புள்ளை ஆகிய ஏதா­வது ஒரு இடத்தில் வைத்து தந்­தி­ருக்­கலாம். ஆனால், இவ்­வ­ளவு தூரம் வந்த பின்னர் இந்த உத்­த­ரவை வழங்­கு­வது எந்­த­வ­கையில் நியாயம். இத்­தனை வாக­னங்­க­ளுக்கும் எரி­பொருள் நிரப்­பு­வது நீங்­களா? சிங்­க­ள­வர்­க­ளுக்கு மட்டும் இப்­படி செய்­யா­தீர்கள். எங்­க­ளுடன் பிரச்­சி­னையை ஏற்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டாம் என்ற எச்­ச­ரிக்­கையும் விடுத்­தி­ருந்தார்.

ஆனாலும் பொலிஸார் பொது­ப­ல­சேனா குழு­வி­னரை மட்­டக்­களப்­பிற்குள் பிர­வே­சிக்க அனு­ம­திக்­க­வில்லை. இத­னை­ய­டுத்து வீதி­யையும் புகை­யி­ரத பாதை­யையும் வழி­ம­றித்து இவர்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். பஸ்கள் மற்றும் ரயிலில் ஏறிச்­செல்­வ­தற்கும் இவர்கள் முயற்­சித்­தனர். ஆனால் அதற்கும் பொலிஸார் இட­ம­ளிக்­க­வில்லை.

இந்த நிலையில் பொது­பல சேனா குழு­வி­னரை மட்­டக்­க­ளப்­பிற்குள் பிர­வே­சிக்க பொலிஸார் மறுத்­த­தை­ய­டுத்து மட்­டக்­க­ளப்பு நகரில் மங்­க­ள­ராமய விகா­ராதி­பதி தலை­மையில் ஆர்ப்­பாட்­ட­மொன்று நடத்­தப்­பட்­டது. மட்­டக்­க­ளப்பில் போராட்­டங்கள் நடத்­து­வ­தற்கு நீதி­மன்றம் தடை­வி­தித்­தி­ருந்த நிலை­யிலும் இவர் போராட்டம் நடத்­தி­ய­துடன் இன, மத ­விரோ­தத்தை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான கருத்­துக்­க­ளையும் தெரி­வித்­தி­ருந்தார். இத­னை­யடுத்து அங்கு ஒன்­று­ கூ­டிய தமிழ், முஸ்லிம் இளை­ஞர்கள் இதற்கு எதி­ராக போர்க்­கொடி தூக்­கி­யி­ருந்­தனர். இந்த நிலையில் பொலிஸார் மங்­க­ள­ராமய விகா­ர­ாதி­பதி தலை­மை­யி­லான குழு­வி­னரை சமா­தா­னப்­படுத்தி விகாரைக்குள் அழைத்துச் சென்றனர்.

அரசாங்கமானது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்ற நிலையில் நீதிமன்ற உத்தரவையும் மீறி இந்த தேரர்கள் நடந்துகொண்டுள்ளனர். நீதிமன்ற உத்தரவினை கிழித்தெறியும் அளவிற்கு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் செயற்பட்டிருக்கின்றார்.

தேரர்களது இத்தகைய நடவடிக்கையானது நீதிமன்ற நீதித் துறையை அவமதித்துள்ளதுடன் இன, மத முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் அமைந்துள்ளது. எனவே இந்த விவகாரம் தொடர்பில் நீதித்துறையானது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது இன்றியமையாததாகும். சட்டத்தின் முன் சகலரும் சமமாகும். இதில் பௌத்த பிக்குவாக இருக்கலாம் இந்து மதகுருவாக இருக்கலாம். முஸ்லிம் அல்லது கிறிஸ்தவ மத பெரியார்களாக இருக்கலாம். யாராயினும் நீதிமன்றத்தை அவமதித்தால் அது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே, இந்த விவகாரத்தில் நீதித்துறையானது தனது கடமையை செவ்வனே செய்யவேண்டும் என்பதே சகல தரப்பினரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-12-05#page-4

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நீதித்துறை சரியாக நடந்திருந்தால் எல்லோரும் பயப்பிடுவார்கள், மதிப்பார்கள். அது கடந்த காலத்தில் நடந்த விதம்  கேலிக்குரியது. அதை இனவாதிகள் எப்படியெல்லாம் வளைத்திருந்தார்கள். இந்த இனவாதிகளை அரசாங்கம் அனுமதித்து சர்வதேசத்துக்கு எதையோ சொல்ல முயலுதா? சிங்களமக்கள் இதை எப்படி கையாளுகிறார்கள் என்று ஆழம்பாக்குதா? மஹிந்த காலத்திலும் ஒருசில பிக்குகள் ஆர்ப்பாட்டம் நடத்த வெளிக்கிட்டவை. இன்னோரு பிக்கு கூட்டத்தை அவர்களுக்கு எதிராய் ஏவி அடக்கிப் போட்டார். இந்த அரசாங்கம்   ஏன் தயங்கவேண்டும்? இதை அடக்க முடியாதவர்கள் வேறு எதை சாதிக்கப் போகிறார்கள் என்று எம்மவர் காத்திருக்கினம்? பிக்குகளில் கைவைக்க பயந்தால் எய்தவரை கவனிக்க எல்லாம் தானாக அடங்கும். எங்கட தலைவர்கள் சமாதான தூதுவர் பரிசு எடுப்பதில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இதுகளை கவனிக்க நேரமில்லை. அதுக்குப் பிறகு பிக்குகள் உங்களை தாக்குவதற்கு உடனடிக் காரணம் என்ன? என்ற கேள்வியோட வருவினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.