Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் சுவை கோலாபுரி மட்டன் கறி! #WeekEndRecipe

Featured Replies

சூப்பர் சுவை கோலாபுரி மட்டன் கறி! #WeekEndRecipe

மட்டன்

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ... வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட், விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான கோலாபுரி மட்டன் கறி. இந்த ஸ்பெஷல் அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலஷ்மி.

தேவையானவை:

மட்டன் - அரை கிலோ
மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 100 கிராம்
இஞ்சி-பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
எண்ணெய் - 30 மில்லி
உப்பு - தேவைக்கேற்ப 

அரைக்க:
முழுமல்லி(தனியா) - 2 டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
வெள்ளை எள் - ஒன்றரை டீஸ்பூன் 
கசகசா - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
கிராம்பு - 2
நறுக்கிய பெரிய வெங்காயம் - 50 கிராம் 
தேங்காய்த்துருவல் - 30 கிராம்

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து, 10 மிலி எண்ணெய் சேர்த்துச் சூடானதும்,  அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வறுத்து, ஆறவைத்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மசாலாவாக மைய அரைத்துக்கொள்ளவும். மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். 

மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்துச் சூடானதும் நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கவும். பின்னர் ஊறவைத்திருக்கும் மட்டனைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.அதனுடன் உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து நன்கு கலந்து வேகவிடவும். தேவைப்பட்டால் சிறிதளவு நீர் தெளித்து எண்ணெய் மசாலாவிலிருந்து பிரிந்து மேலே வரும்வரை வதக்கவும். பின்பு தேவையான அளவு வெந்நீர் சேர்த்து நன்றாக கலக்கிவிட்டு, குழம்பை கொதிக்க விடவும். மட்டன் நன்றாக வெந்து குழம்பு கெட்டியான பதத்துக்கு வந்தவுடன் நறுக்கிய கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

கோலாபுரி மட்டன் கறி, சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு மிகவும் சுவையான காம்பினேஷனாக இருக்கும்.

http://www.vikatan.com/news/health/74992-how-to-make-kolhapuri-mutton.art

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் வாணலி, கடாய் என்றும், இலங்கையில் தாச்சி என்றும் அழைக்கப் படும், (ஆங்கிலத்தில்) pan எனப்படும் பொரியல், வறுவல் செய்ய பயன்படும் பாத்திரம். 

தாச்சி என்பது போர்த்துக்கேய சொல். சிங்களவர்களும் அதேயே பாவிக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

தமிழகத்தில் வாணலி, கடாய் என்றும், இலங்கையில் தாச்சி என்றும் அழைக்கப் படும், (ஆங்கிலத்தில்) pan எனப்படும் பொரியல், வறுவல் செய்ய பயன்படும் பாத்திரம். 

தாச்சி என்பது போர்த்துக்கேய சொல். சிங்களவர்களும் அதேயே பாவிக்கிறார்கள்.

புள்ள தாச்சி என்றும் சொல்றாங்க ஏனுங்கtw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

புள்ள தாச்சி என்றும் சொல்றாங்க ஏனுங்கtw_blush:

தாச்சியினுள் எதுவும் இருப்பதில்லை. தனக்குள் இடப்படுவதை, தேவையான பதத்தில் அல்லது கணத்தில் தரும். 

வாயில்லாத படியால், நெருப்பு தரும்  வலியை சொல்லாது.

அதேபோல் தான் பிள்ளைத் தாச்சியும்.... 

அங்கமெல்லாம் நொந்து புறம் தரும் அதே பண்பினால், அந்தப் பெயர் வந்திருக்கலாம்.

உண்மையில் அது பேச்சுத்தமிழில் மருவிய தூய தமிழ் சொல் என நினைக்கிறேன்.

உதாரணமாக தண்ணீர் - தண்ணி 

புள்ளை (தாங்கிய) தாயி (தாய்) - புள்ளை தாச்சி...  

Portugese: tacho = English: Frying Fan.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.