Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை

Featured Replies

சமஷ்டிக் கனவு நிறைவேறப் போவதில்லை

 

 

(எம்.சி.நஜிமுதீன்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கொள்கையிலிருந்து இன்னும் மாற்றமடையவில்லை. அக்கொள்கையிலிருந்து கூட்டமைப்பு மாற்றமடையாத வரையில் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை என  ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். 

498228280BUP_DFT_DFT-2-54.jpg

இதேவேளை சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்தது. இருந்தபோதிலும் அன்று முதல் இன்று வரை சிங்கள மக்கள் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை. ஆகவே அவர்கள் எதிர்பார்ப்பது போல் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றார்.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

http://www.virakesari.lk/article/14486

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள், அவர்களது ஆயுத போராட்டம் இருக்கும் போது சொன்னதை இப்பவும் சொல்ல முடியாது என்பதையே மைத்திரி புரிந்து கொண்டு, தமிழர்களுக்கு தீர்வு தர மறுத்தால், பின்னர் வருத்தப் பட நேரிடும் என்றார்.

அதன் கருத்து, சிங்களவர் தருவதில்லை தீர்வு. தமிழர் இணங்குவதே தீர்வு.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது ஜாதிக ஹெல உறுமைய இனவாத கட்சி இல்லை என்பதை நிறுவ வேண்டும்(தாங்கள் )

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, நவீனன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இனவாதக் கொள்கையிலிருந்து இன்னும் மாற்றமடையவில்லை. அக்கொள்கையிலிருந்து கூட்டமைப்பு மாற்றமடையாத வரையில் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை என  ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்தார். 

இதேவேளை சமஷ்டிக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்களை முன்னெடுத்தது. இருந்தபோதிலும் அன்று முதல் இன்று வரை சிங்கள மக்கள் சமஷ்டியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாரில்லை. ஆகவே அவர்கள் எதிர்பார்ப்பது போல் சமஷ்டிக் கனவு ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்றார்.

அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெண்டு சொல்லுறியள். அதைத்தான் ஏனெண்டு கேக்கிறம். இதாலை உங்களுக்கு என்ன பிரச்சன?
சிங்கள மக்களை மாதிரி சகல உரிமையளோடையும் தமிழ்மக்கள் ஏன் வாழக்கூடாது?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெண்டு சொல்லுறியள். அதைத்தான் ஏனெண்டு கேக்கிறம். இதாலை உங்களுக்கு என்ன பிரச்சன?
சிங்கள மக்களை மாதிரி சகல உரிமையளோடையும் தமிழ்மக்கள் ஏன் வாழக்கூடாது?

 
 
 
 

2006 ல், சண்டே லீடர் பத்திரிகையில் ஒரு கட்டுரை.இலங்கையில் இருந்து வெளியேறும் ஒரு ராஜதந்திரி, புனை பெயரில் எழுதினார்.

(இது போன்ற கட்டுரைகள் பிரசுரித்தமையினாலேயே எடிட்டர் லசந்த கொல்லப் பட்டார் )

அவர் எழுதினார். சிங்களவர்கள் தமிழர்களுக்கு உரியதை கொடுக்க தயங்கினால், உள்ளதை இழப்பர் (அவர் சொல்ல வந்தது, தமிழரையும், தமிழர் பகுதியையும்). அவ்வாறான நிலை வந்தால், மீண்டும் உனக்கு கேட்டதை தருகிறோம் என்று சொல்லி பழைய நிலைக்கு போக முடியாது. 

கிழக்கு திமோர் போர்த்துக்கல் இடம் இருந்து  சுதந்திரம், அடைந்த உடனே, நெதர்லாந்திடம் இருந்து சுதந்திரம் அடைந்து இருந்த இந்தோனேசியா, ஐரோப்பியர்களுக்கு முன்னர், நாம் இணைந்து இருந்தோம் என்று கூறி, ஆக்கிரமித்துக் கொண்டது.

ஆனால், கிழக்கு திமோர் மக்களை மிக மோசமாக நடத்தியதன் மூலம், அதை, கடைசியில் நிரந்தரமாக இழந்தது.

இலங்கையிலும், அதே நிலைதான். அதையே அவர் சொன்னார்.

ஆனால் புலிகளின் ஆயுதப் போராடடம் இருக்கும் வரை, அரசுக்கு அதை ஒடுக்கும் சாக்கில், தமிழர் உரிமைகளை மறுக்க அல்லது தாமதிக்க முடிந்தது.

இனி அவ்வாறு செய்ய முடியாது எனினும், இந்த இனவாதிகள் தமது கனவுலகில் இருக்கிறார்கள்.

சிங்களவர் தமிழர் உரிமையினை மறுத்துக் கொண்டே தமிழரை இரண்டாவது நிலை குடி மக்களாக வைத்துக் கொண்டே ஆள முடியாது.

அதேவேளை, பெடரல் ஆக இருந்தாலும், ஒத்தை ஆட்சியாக இருந்தாலும் அது தமிழர் அங்கீகாரம் கிடைத்தால் மட்டுமே சர்வேதேச அங்கீகாரம் கிடைக்கும்.

இந்த இரு நிலைப்பாட்டுக்கு கிடையே கவனமாக பயணிக்கும் போதே நமக்கான தீர்வு கிடைக்கும்.

என்ன தீர்வாயினும் குடியொப்பம் கட்டாயம் தேவை. தமிழரோ, சிங்களவரோ ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழர் மறுத்தால், மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கும், சிங்களவர் மறுத்தால், தமிழருக்கான சுஜ நிர்ணய தேர்தலுக்கும் போக வேண்டி வரும். இதை சொல்லியே, சிங்களவர் ஒத்துழைப்பு பெற வேண்டி இருக்கும்.

இவ்வகையில் சம்பந்தன் நகர்வு சரியானது என்றே படுகின்றது. 

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.