Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பக் பக் புரியாணி

Featured Replies

சிக்கன் புரியாணி

DSCN3736.JPG

தேவையான பொருட்கள்:

பக் ப்க் - 1 கிலோ

பசுமதி அரிசி - 1 கிலோ

வெங்காயம் - 2

தயிர் - 1 கப்

இஞ்சி+உள்ளி(வெள்ளைபூண்டு)) விழுது - 1 தே.க

மஞ்சள் தூள் - 1 தே.க

மிளகாய் தூள் - 1 மே.க

கஸு நட்ஸ் - 15

தேங்காய் பால் - 1 கப்

தேங்காய் தூள் - 1 மே.க

சின்ன சீரகம் -- 1 தே.க

ஏலக்காய் - 3

கராம்பு - கொஞ்சம்

கராம் மசாலா தூள் - 1 தே.க

பே இலைகள் - 5 (அது பேய் அல்ல)

மல்லி தளை - 1 கப்

எண்ணெய்/ வெண்ணெய் (யாரையும் குறிப்பிடவில்லை)

உப்பு தேவைக்கேற்ப(வெட்கம், ரோசம் குறைந்தவர்கள், அதிகமாக சேர்க்கலாம், தப்பில்லை)

செய்முறை:

* இறைச்சியை சுத்தம் செய்து, தயிர், உப்பு, தூள்கள் போட்டு கலக்கி 1 மணித்தியாலத்திற்கு ஊற வைக்கவும்.

1. வெங்காயங்களை சுத்தமாக்கி, நீள வாக்கில் வெட்டி எடுக்கவும்.

2. எரியும் அடுப்பில், ஒரு சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக்கவும்.

3. அதனும் மேற்கூறிய அனைத்து ஸ்பைஸயும் போடலாம். (மல்லிதூள், கராம்பு, ஏலக்க்காய், பே இலை). 2 நிமிடங்களுக்கு நன்றாக கிளறவும். (சட்டி கந்தலாகும் வாய்ப்புகள் அதிகம்)

4. பின்னர் அதனுள் 1 வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

5. அதனுள் ஏற்கனவே நாம் 1மணித்தியாலம் ஊற வைத்த இறைச்சியை போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

6.இப்பொழுது அரிசியை எடுட்த்து அரைப்பதம் வேகும் வரை உப்பு சேர்த்து அவிக்கவும். (ரைஸ்குக்கரில் போட்டால் இலகு)

7. சிறிதளவு நெய்யிலோ/ எண்ணெயிலோ அடுத்த வெங்காயத்தை பொன்னிறமாகக பொறித்தெடுக்கவும். அதே போல கஸு நட்சையும் பொறிக்கவும்.

8. இப்பொழுது 20 நிமிடம் போய் கறி என்று சொல்ல கூடய அளவில் ஒரு உணவு சட்டியில் இருக்க வேண்டும். அதற்கும் தேங்காய் பால் மாவையும், கராம் மசாலாவையும் போட்டு கலக்கி, 2 நிமிடம் கொதிக்கவிட்டு சட்டியை அடுப்பில் இருந்து இறக்கவும்.

* ஒவனை போட்டு 180 ல விட்டுவிடுங்க.அது பாட்டுக்கு கொஞ்ச நேரம் இருக்கட்டும்.

9. ஒரு தட்டையான பாத்திரத்தில் (ஒவனில் வைக்க கூடிய) பாதி சாதத்தை கொட்டி பரப்பவும்.

10. அதன் மேல் கறியில் பாதி, பின்னர் சாதம், பின்னர் கறி & இறுதியாக சாதத்தை கொட்டி பரப்பவும்.

11. அதன் மேல் பொறித்த வெங்காயம், கஸு நட்ஸ், மல்லி இலையை சேர்த்து, தேங்காய் பாலை ஊற்றவும்.

12. ஏற்கனவே போட்ட ஒவனில் 15 நிமிடங்கள் வைத்து எடுக்கவும்.

13.இப்பொழுது நன்றாக கலக்கி அவித்த முட்டையுடன் பரிமாறாலாம். (அல்லது நீங்களே சாப்பிடலாம்.அது உங்க இஸ்டம்)

(கந்தப்பு இந்த ப்ளேட் உங்களுக்கு தான்)

Edited by தூயா

  • கருத்துக்கள உறவுகள்

(கந்தப்பு இந்த ப்ளேட் உங்களுக்கு தான்)

ஏற்கனவே ஊடாங் சம்பல் சாப்பிட்டதினால் சிட்னியில் உள்ள தனியார் வைத்தியர் ஒருவருக்கு நல்ல வருமானம் கிடைச்சுது. மறுபடியுமா?

இருக்கட்டும் அது என்ன பக் பக்

:D

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டுமில்லை சின்னா!

சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஏதும் பிரச்சனை வருமோ எண்டு, நெஞ்சு பக்பக் என்று அடிக்குமாம். எதற்கும் சாப்பிட்டு விட்ட வீட்டிலிருந்து அதிக தூரம் போகாமல் இருப்பது நல்லது :D:D

பக் பக் என்ற பொருள், அதுவும் 1 கிலோ, செய்முறையில் இது பயன்படவே இல்லை.

ஆனால் செய்முறைலிலுள்ள இறைச்சி தேவையான பொருட்களின் பட்டியலில் இல்லை.

கொக் கொக் கொக் ...

2. எரியும் அடுப்பில், ஒரு சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக்கவும்.

ஆகா இது புதிசு கேள்விப்பட்டதேயில்லை

13செய்முறை யப்பா தலைசுத்துது எனக்கு இவளவு பொறுதையில்லை சேத்தை சேறாகவும் கறியை கறியாகவும் போட்டு கபளம் கபளமாய் உருட்டியடைத்தான் தெரியும் என்றாலும் மிக்க நண்றிகள்.பி+கு துயாபேசாமல் ஒரு சாப்பாட்டுக்கடை போடும் வந்து வெட்டுறம்.

Edited by விது

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கன் புரியாணி

(கந்தப்பு இந்த ப்ளேட் உங்களுக்கு தான்)

This post has been edited by தூயா: Today, 05:14 AM

--------------------

ஏன் எங்களுக்கு தந்தால் சாப்பிட மாட்மோமோ :P

Edited by sagevan

  • கருத்துக்கள உறவுகள்

2. எரியும் அடுப்பில், ஒரு சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக்கவும்.

ஆகா இது புதிசு கேள்விப்பட்டதேயில்லை

13செய்முறை யப்பா தலைசுத்துது எனக்கு இவளவு பொறுதையில்லை சேத்தை சேறாகவும் கறியை கறியாகவும் போட்டு கபளம் கபளமாய் உருட்டியடைத்தான் தெரியும் என்றாலும் மிக்க நண்றிகள்.பி+கு துயாபேசாமல் ஒரு சாப்பாட்டுக்கடை போடும் வந்து வெட்டுறம்.

விது சார் செட்டி நாட்டு சாப்பாட்டு கடைக்கு போய் ஒரு பிடி பிடிங்க :huh: சாப்பாடு சுத்த சைவம். சுவை அதிகம்

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கட்டும் அது என்ன பக் பக்

:huh:

அது தான் எனக்கும் பக் பக் என்னுது :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ஆரையோ பழி வாங்குற நோக்கத்திலை விசேசமாய் போட்ட பிளான் எண்டு நினைக்கிறன்.எனக்கு ஒண்டுமாய் தெரியேல்லை.இருந்தாலும் கந்தப்புதான் மாட்டுப்படப்போறார் எண்டு மனம் சொல்லுது.கந்தப்பு கவனமெணை.ஏற்கனவே நிலவு வெளிச்சத்திலை காலத்தை கொண்டு போறீர். B)

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆரையோ பழி வாங்குற நோக்கத்திலை விசேசமாய் போட்ட பிளான் எண்டு நினைக்கிறன்.எனக்கு ஒண்டுமாய் தெரியேல்லை.இருந்தாலும் கந்தப்புதான் மாட்டுப்படப்போறார் எண்டு மனம் சொல்லுது.கந்தப்பு கவனமெணை.ஏற்கனவே நிலவு வெளிச்சத்திலை காலத்தை கொண்டு போறீர். B)

எச்சரிக்கைக்கு நன்றி. அது தான் வருகிற கிழமை எல்லாரையும் மதியம் விருந்துக்கு அழைக்கிறதாக கள உறுப்பினர்கள் மட்டும் பகுதியில் எழுதியிருக்கிறா. ஏற்கனவே முன்பு சாப்பிடப்போய், வைத்தியருக்கு நான் செலவிட்ட செலவில், வைத்தியர் சிட்னியில் ஒரு வீடு கட்டி இருக்கிறார்.

  • தொடங்கியவர்

ஏற்கனவே ஊடாங் சம்பல் சாப்பிட்டதினால் சிட்னியில் உள்ள தனியார் வைத்தியர் ஒருவருக்கு நல்ல வருமானம் கிடைச்சுது. மறுபடியுமா?

கந்தப்பூஉஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ

Edited by தூயா

  • தொடங்கியவர்

அதொண்டுமில்லை சின்னா!

சாப்பிட்ட பிறகு வயிற்றில் ஏதும் பிரச்சனை வருமோ எண்டு, நெஞ்சு பக்பக் என்று அடிக்குமாம். எதற்கும் சாப்பிட்டு விட்ட வீட்டிலிருந்து அதிக தூரம் போகாமல் இருப்பது நல்லது :rolleyes::rolleyes:

என்றாலும் தூய்ஸ் போல அறிவு உங்களுக்கு வரவே வராது சி*5 ;)

பக் பக் என்ற பொருள், அதுவும் 1 கிலோ, செய்முறையில் இது பயன்படவே இல்லை.

ஆனால் செய்முறைலிலுள்ள இறைச்சி தேவையான பொருட்களின் பட்டியலில் இல்லை.

கொக் கொக் கொக் ...

அறிவுகொழுந்துங்க நீங்க ;)

ஹி ஹி ஹி ஹி

Edited by தூயா

இருக்கட்டும் அது என்ன பக் பக்

:rolleyes:

அதாவது நீங்கள் இந்த உணவை உண்ட பின் பக் பக் என சில மணி நேரங்களின் பின் வயிற்றால் அடிக்கக்கூடும். அதனால் தான் இதற்கு பக் பக் புரியாணி என தூயா பெயர் வைத்திருக்ககூடும்! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்றாலும் தூய்ஸ் போல அறிவு உங்களுக்கு வரவே வராது சி*5 ;)

இப்படி என்னை உயர்த்திச் சொல்வதில் எனக்கு நம்பிக்கையே இல்லை.

  • தொடங்கியவர்

2. எரியும் அடுப்பில், ஒரு சட்டியை வைத்து, எண்ணெய் ஊற்றி சிறிது சூடாக்கவும்.

ஆகா இது புதிசு கேள்விப்பட்டதேயில்லை

13செய்முறை யப்பா தலைசுத்துது எனக்கு இவளவு பொறுதையில்லை சேத்தை சேறாகவும் கறியை கறியாகவும் போட்டு கபளம் கபளமாய் உருட்டியடைத்தான் தெரியும் என்றாலும் மிக்க நண்றிகள்.பி+கு துயாபேசாமல் ஒரு சாப்பாட்டுக்கடை போடும் வந்து வெட்டுறம்.

பொறுமை தேவை...ஹி ஹி ஹி ;)

  • தொடங்கியவர்

ஏன் எங்களுக்கு தந்தால் சாப்பிட மாட்மோமோ :P

அது தான் தரல ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் செய்து பார்த்திட்டன்...ரொம்ப நல்லா இருந்திச்சு...நீங்களும் நம்பி செய்யலாம்...

ஆகா ஜெனனி இப்படி அப்பாவியா நீங்க துயாவின் ஆயுதங்கள் எப்போதும் உடனே வேலையை காட்டாது 1 மாதம் கழிந்த பின்னர்தான் வேலையை காட்டும் இந்த புரியாணி துயாவின் சுவையருவி ஆய்வுகூடத்தில் தயாரிக்கப்பட்ட மிக மோசமான உயிரியல் ஆயுதம் இதனை இன்னும் எலிக்கு கூட வசு பரிசோதிக்கவில்லை அதுக்குள்ள இப்படி மோசம் போய்விடீர்களே!!!!!.சரி துயாவின் ஆயுதங்கள் முதலில் சொறி சிரங்கில் ஆரம்பிக்கும் அதுக்கு பிறகு கடுமையான வயிற்று வலி சிக்கின் குனியா சார்ஸ் மற்றும் பறைவைக்காச்சல் போன்ரவை சேர்ந்த ஒரு காச்சல் வரும் அதுக்கு பிறகு உங்களை காவ நோயாளர் காவு வண்டி வரும் சின்னப்பு மற்றும் ரோயல் பமிலி மெம்பர்ஸ் அனுபவிச்சு சொன்னவை இவை சின்னப்பு மற்றும் ரோயல் பமிலி மெம்பர்ஸ் பல்லுவிளக்காமல் குளிக்காமல் இருப்பதால் கிருமிகளுக்கு இவர்களின் உடலில் இருந்து வரும் துர்நாற்றம் தாங்காமல் ஓடியதாக சின்னப்ஸ் பெருமையாக சொன்னவர் எதுக்கும் கவனமாய் இருங்க அல்லது ரோயல் பமிலியில் சேருங்க அல்லது அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளை கடைபிடியுங்க

  • தொடங்கியவர்

சகோதரா ஏன் இந்த கொலை வெறி ? ;)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:angry: என்ன ஈழவன் இப்படி சொல்லுறீங்க? முதலே சொல்லி இருக்கலாம்தானே..... எல்லாம் சமைச்சு சாப்பிட்டா பிறகு சொல்லுறீங்க.... :D

னோ.....எங்க சேர்ந்தாலும் சேருவன் ரோயல் பமில மட்டும் சேர மாட்டன்...

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கட்டும் அது என்ன பக் பக்

:D

பறவை காய்ச்சல் வந்த கோழியை சிட்னியில பக்பக் என்று தான் சொல்லுறவை,கோழி பக் பக் என்று கத்தி கொண்டு விழுந்து செத்திடும் 1 மணித்தியாலத்துகுள்ள சமைத்து சாப்பிட்டால் பிரியாணி நல்லா இருக்கும் 1 மணித்தியாலம் ஒரு நிமிசத்திற்கு பின் சாப்பிட்டால் ஆள் காலி................

நான் சொல்லுறது சரி தானே தூயா

:D :P :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கன நாளாக புதுசா ஒரு சாப்பாட்டையும் கானோம் :D :P

என்ன கன நாளாக புதுசா ஒரு சாப்பாட்டையும் கானோம் :D :P

அதுதான் எனக்கும் பக் பக் எண்டுது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் எனக்கும் பக் பக் எண்டுது.

சாப்பிட்டுப்பாத்தவனெல்லாம் அவசரசிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அந்தரப்படுகிறான்.... :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.