Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட சிறி லங்கா கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு

Featured Replies

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஏற்றப்பட்ட தேசியக்கொடி அபகரிப்பு பொலிஸில் முறைப்பாடு

யாழ். பல்கலைக்கழகத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு காலை ஏற்றப்பட்ட இலங்கை தேசியக் கொடி இனந்தெரியாதோரால் அபகரித்துச் செல்லப்பட்டுள்ளது.

இது பற்றி பதில் துணை வேந்தர், யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது. இலங்கையின் 59 ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு யாழ். பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை காலை பதில் துணைவேந்தரால் தேசிய கொடி ஏற்றப்பட்டது

ஏதோ தாலிக்கொடி பறிபோய் விட்டதுபோல் முறைப்பாடு செய்கின்றார்கள். ஆகக்குறந்தது பல்கலைக்கழகத்தின் கொடிக்கம்பம் களவு போயிருந்தால் பொலிஸில் முறையிடுவதில் ஒரு அர்த்தம் உள்ளது. கொடி பறிபோனதற்காக வருந்துவதில் பயனில்லை. யாராவது தேசியத்தில் பற்றுள்ளவர்கள் வேறு எங்காவது ஏற்றுவதற்காக கொடியை களவெடுத்துச் சென்றிருக்கக்கூடும்! அல்லது காற்று கொடியை அறுத்துக் கொண்டுபோய் கொடி எங்காவது பனை, தென்னை மரங்களில் தொங்கிக்கொண்டு இருக்கக்கூடும். பலாலிக்கு அறிவித்து ஹெலி கொப்டர்களின் உதவியுடன் கொடியைத் தேடியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அவனவன் யாழ்ப்பாணத்தில் கோவணத்தை சலவை செய்து கொடியில் காயப்போடுவதற்கு வழியில்லாமல் இருக்கின்றான். இவர்களிற்கு கண்டறியாத கொடியேற்றம் தேவைப்படுகின்றது!

  • தொடங்கியவர்

விசாரணைக்குட்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைகழக துணை வேந்தர்

யாழ்ப்பாணம் பல் கலைக்கழக பதில் துனைவேந்தர் இராணுவ விசாரனைக்கு உட்படுத்தப்பட்டள்ளார். நேற்று திருநெல்வேலியில் அமைந்துள்ள ஊரெழவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் 511 படையணியின் திருநெல்வேலி இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்ட துணைவேந்தர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினமான நேற்று தேசியக் கொடி ஏற்றாமைக்கான காரணத்ததைக் கேட்டு பாரிய விசாரனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பல்கலைக்கழகம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பதில் துனைவேந்தர் மீதான விசாரனை முடிவடைந்த சில மணி நேரத்தில் பல்கலைக்கழகத்திற்கு விரைந்த இராணுவத்தினரே பல்கலைக்கழக வளாகத்தில் அத்து மீறி புகுந்து அடாவடித்தனம் புரிந்து சென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்

எனக்கு ஒன்றும் புரியவில்லை, தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டும் போலிருக்கு.

சும்மா தேசியக் கொடி, தேசியக் கொடியென்று குறிப்பிடுகிறீர்களே.

யாழ் களத்தில் தேசியக் கொடி என்றால் அது தமிழனின் தேசியக் கொடி-

தமிழீழ தேசியக் கொடி.

மாற்றானின் தேசியக் கொடியாயின் அதை குறிப்பிட்டு எழுதுங்கள்,

உதாரணமாக இந்தியத் தேசியக் கொடி, சிறி லங்கா தேசியக் கொடி,

அமெரிக்க தேசியக் கொடி.

காற்றில் அடித்துப் போனது சிறிலங்கா தேசிய கொடியென்றால்

விட்டு விட வேண்டியதுதானே. நான் அதை தமிழீழ

தேசியக் கொடியென்றல்லவா நினைத்துவிட்டேன்.

சிங்களக் கொடி காற்றிலடித்துப் போனாலென்ன கொடிக்கம்பமே

சாய்ந்து வீழ்ந்தாலென்ன.

காக்கா துக்கி கொண்டு போயிருக்கும் :P வடிவா தேடச்சொல்லுங்க .தமிழீழ காகமாய் இருக்கும் அதுதான் சிங்கள கொடியை தூக்கீட்டு போயிட்டுது :P :lol:

காக்கா துக்கி கொண்டு போயிட்டுது எண்டு கேஸை குளோஸ் பண்ணுங்கோ :P அல்லது தமிழீழ கவல்துறையின் உதவியை நாடுங்கோ :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹூல் துணைவேந்தரா வந்தால் போராட்டத்தை மழுங்கடிப்பார் என்று சிலபேர் இங்க துள்ளிக்குதிச்சினம். இப்ப உந்தாள் சிங்கக் கொடியெல்லாம் ஏத்திக்கொண்டு திரியுது. இப்ப உவயள் என்ன சொல்லப்போகினம்?

நிர்ப்பந்தத்தில் ஒத்துளைக்க முனைவதாக காட்டுவதற்கும் கூட்டுச் சேர்ந்து திட்டமிட்டு அதை அமுல்படுத்துவதில் பூரண ஒத்துளைப்பை வழங்குவதற்கும் வித்தியாசம் உண்டு.

ஹூல் துணைவேந்தரா வந்தால் போராட்டத்தை மழுங்கடிப்பார் என்று சிலபேர் இங்க துள்ளிக்குதிச்சினம். இப்ப உந்தாள் சிங்கக் கொடியெல்லாம் ஏத்திக்கொண்டு திரியுது. இப்ப உவயள் என்ன சொல்லப்போகினம்?

கூலிற்கும் தற்போதுள்ள பதில் துணைவேந்தருக்குமிடையே பல வேறுபாடுகள் உள்ளது. கூல் இந்தியாவில் உள்ள சுப்பிரமணியம் சுவாமிபோல் படித்த ஒரு முட்டாள். தமிழீழ விடுதலைப்போரை மழுங்கடிக்கச் செய்வதற்கு நேரடியாகவும், திரைமறைவிலும் காரியங்கள் பல செய்யும் உளவாளி.

ஆனால் இப்போதுள்ள பதில் துணைவேந்தர் சிங்கக்கொடியேற்றியதற்கு சிங்களக் குண்டர்களின் சீண்டுதலும், பயம் மற்றும் சிங்களக் குண்டர்களால் தனக்கு ஏதாவது உயிர் ஆபத்து ஏதாவது வந்துவிடுமோ என்ற பீதியுமே காரணங்கள் ஆகும்!

Edited by மாப்பிளை

  • கருத்துக்கள உறவுகள்

கொடியேற்றியவரை அதை கானவில்லை என்று முறைப்பாடு கொடுத்தார் என்றால்

என்ன நடந்து இருக்கும் என்று ஊகிப்பது கடினமா :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூலிற்கும் தற்போதுள்ள பதில் துணைவேந்தருக்குமிடையே பல வேறுபாடுகள் உள்ளது. கூல் இந்தியாவில் உள்ள சுப்பிரமணியம் சுவாமிபோல் படித்த ஒரு முட்டாள். தமிழீழ விடுதலைப்போரை மழுங்கடிக்கச் செய்வதற்கு நேரடியாகவும், திரைமறைவிலும் காரியங்கள் பல செய்யும் உளவாளி.

ஆனால் இப்போதுள்ள பதில் துணைவேந்தர் சிங்கக்கொடியேற்றியதற்கு சிங்களக் குண்டர்களின் சீண்டுதலும், பயம் மற்றும் சிங்களக் குண்டர்களால் தனக்கு ஏதாவது உயிர் ஆபத்து ஏதாவது வந்துவிடுமோ என்ற பீதியுமே காரணங்கள் ஆகும்!

தெரியும் தெரியும். யாராவது ஒராள் இப்பிடித்தான் பதில் எழுதுவீங்கள் எண்டது தெரிஞ்சுதான் சொன்னனான்.

ஆனால் ஒன்றைச்சொல்லுறன் கேளுங்கோ. இப்போ ஒருவேளை ஹூல் துணைவேந்தரா இருந்து, அவருக்கும் இதே போன்ற இயலாக்கட்டம் ஏற்பட்டு, சிங்கக்கொடியை ஏற்றவேண்டிய நிலை வந்திருந்தால்? நீங்கள் அவருக்குக்காக இப்படிப் பரிந்து பேசியிருப்பீர்களா? உடனே "துரோகி" அதுதான் சிங்கள அரசாங்கத்துக்கு வால் பிடிக்கிறான் எண்டல்லோ சொல்லியிருப்பியள் இல்லயோ? (தயவுசெய்து கொஞ்சம் மனச்சாட்சியை தொட்டு பதில் சொல்லுங்கோ)

உங்கட அரசியல் அபிப்பிராயமெல்லாம் வெறுமனே ஒட்டப்படும் "லேபல்" களிருந்துதான் உற்பத்தியாகிறது என்பது இதிலிருந்து தெள்ளத்தெளிவா வெளிப்படுகிறது இல்லயெண்டிறியளோ?

இங்கே பொருத்தமான ஒரு பழமொழியை கூறிவைக்க விரும்புகிறேன்:

"வேண்டாத பெண்டாட்டியின் கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம்"

Edited by ThamilMahan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொடியேற்றியவரை அதை கானவில்லை என்று முறைப்பாடு கொடுத்தார் என்றால்

என்ன நடந்து இருக்கும் என்று ஊகிப்பது கடினமா :)

அந்த அளவுக்கு சிங்கக்கொடியில அவருக்கு பற்று? அதனால கவலையடைந்து புகார் கொடுத்தார்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கூல் ஒரு சந்தர்ப்பவாதி. கூலின் வருகையினை போராட்டத்தலமை விரும்பவில்லை.

இப்போ ஒருவேளை ஹூல் துணைவேந்தரா இருந்து, அவருக்கும் இதே போன்ற இயலாக்கட்டம் ஏற்பட்டு, சிங்கக்கொடியை ஏற்றவேண்டிய நிலை வந்திருந்தால்? நீங்கள் அவருக்குக்காக இப்படிப் பரிந்து பேசியிருப்பீர்களா?

பேசியிர்ருக்க மாட்டோம். ஏனென்றால் அவர் வந்திருக்க மாட்டார்.

Edited by balapandithar

யாழ் களத்தில் சில அப்புமார் தலையில அல்லது இடுப்பில கட்டிறதிக்கு எடுத்து வந்திருப்பினம் வடிவா பாருங்கோ :) :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ் களத்தில் சில அப்புமார் தலையில அல்லது இடுப்பில கட்டிறதிக்கு எடுத்து வந்திருப்பினம் வடிவா பாருங்கோ :) :P :P

உதென்ன விசர்க்கதை. நான் எடுக்கேல்லை.

நான் கோவணம் கட்டுறதுக்கு சிங்கக்கொடி தான் பாவிக்கிறநான். ஆனால் நான் களவெடுக்கிறதில்லை. என்ரை பேரப்பொடியனைக்கொண்டு கொழும்பிலை இருந்து எடுப்பிக்கிறநான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசியிர்ருக்க மாட்டோம். ஏனென்றால் அவர் வந்திருக்க மாட்டார்.

வர விட்டிருக்க மாட்டியள் என்று தெளிவாச் சொல்லுங்கோ. இதுக்குத்தான் தமிழில ஒரு அழகான சொல்லு இருக்கு "அராஜகம்"

பல்கலைக்கழக செனற் சபையின் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒருவரை உங்கள் அராஜகத்தைப் பிரயோகித்து விரட்டியடித்திருக்கிறீர்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர விட்டிருக்க மாட்டியள் என்று தெளிவாச் சொல்லுங்கோ. இதுக்குத்தான் தமிழில ஒரு அழகான சொல்லு இருக்கு "அராஜகம்"

பல்கலைக்கழக செனற் சபையின் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒருவரை உங்கள் அராஜகத்தைப் பிரயோகித்து விரட்டியடித்திருக்கிறீர்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஹூல் துணைவேந்தரா வந்தால் போராட்டத்தை மழுங்கடிப்பார் என்று சிலபேர் இங்க துள்ளிக்குதிச்சினம். இப்ப உந்தாள் சிங்கக் கொடியெல்லாம் ஏத்திக்கொண்டு திரியுது. இப்ப உவயள் என்ன சொல்லப்போகினம்?

வந்துட்டார் விசுவாசம், வாந்தி இறைக்க.

நடப்பு நிலமைகளோடு கருத்துசுதந்திரம் அங்கே படும் பாடு தெரியாதவர்மாதிரி தன்மேதாவித்தனத்தை கூவிவிக்க வந்துட்டார்.

புலிவஞ்சத்தை விற்பதற்காகவே. உங்கட விசுவாசம் இன்னும் எத்தனை கூல்களுக்கு மாலை, மரியாதை செய்யப் போகிறதோ பார்ப்போம் அதையும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழில ஒரு அழகான சொல்லு இருக்கு "அராஜகம்"

"அராஜகம்" தமிழ்ச்சொல்லா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வர விட்டிருக்க மாட்டியள் என்று தெளிவாச் சொல்லுங்கோ. இதுக்குத்தான் தமிழில ஒரு அழகான சொல்லு இருக்கு "அராஜகம்"

பல்கலைக்கழக செனற் சபையின் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற்று முறைப்படி தெரிவு செய்யப்பட்ட ஒருவரை உங்கள் அராஜகத்தைப் பிரயோகித்து விரட்டியடித்திருக்கிறீர்கள

  • தொடங்கியவர்

ஈழவன்

காக்காவா தூக்கிக் கொண்டு போயிருக்கும்.

எனக்கு செண்பகம் மாதிரித் தெரியுது. ஒருக்கால்

நன்றாகப்பார்த்துச் சொல்லுங்கோ .

  • கருத்துக்கள உறவுகள்

"அராஜகம்" தமிழ்ச்சொல்லா?

தமிழ்ச்சொல் அல்ல. வடமொழி 'ஜ' இதில் இருக்கிறது.

"அராஜகம்" தமிழ்ச்சொல்லா?

அடாவடித்தனம் என்பதை அராஜகம் என்று கூறுகின்றாரோ? ஜெயா டீ.வி பார்ப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள்! :)

ஹூல் துணைவேந்தரா வந்தால் போராட்டத்தை மழுங்கடிப்பார் என்று சிலபேர் இங்க துள்ளிக்குதிச்சினம். இப்ப உந்தாள் சிங்கக் கொடியெல்லாம் ஏத்திக்கொண்டு திரியுது. இப்ப உவயள் என்ன சொல்லப்போகினம்?

அண்ணாத்தை வெளிநாட்டில குந்தியிருந்து கொண்டு விதண்டவாதம் கதைகாதயுங்கோ நீங்கள் ஈழத்தில் இருந்தால் தலைவரின் படத்தை கூட வச்சிருக்க நடுங்கி இருபீர்கல் முற்றிலும் இராணுவச்சூழலில் உள்ளவர் நிர்பந்திக்கப்பட்டால் என்னத்தை செய்ய முடியும் ஏற்றித்தான் ஆக வேண்டும்.அது தற்காப்புக்கானது அதை விடுங்கோ வெளிநாடுகளில அரசியல் அந்தஸ்து கோரும் போது புலிகளை பற்றி இல்லாதது பொலாதது எல்லாம் கூறி எடுத்து சந்தோசமாய்நீங்கள் இருக்கலாம் ஆனால் மற்றவர் களை குற்றம் சாட்டலாம் கண்ணாடியில் ஒருக்கா பாத்திட்டு கதையுங்கோ.

உங்களுக்கு இருக்கும் உயிர்பயம் தான் அவருக்கும் இருக்கும் ஆனால் அவர் துணிச்சலாணவர் இன்னும் யாழில் இருந்து கடைமையாற்றுகிறார்.நான் நினைகிறன் நீங்கள் கூலிலின் பினாமி என அவரின் புத்தகங்களை வாசியுங்கள் எவ்வளவு கேவலமாக எமது கலாச்சாரத்தையும் மக்களையும் இழிவு படுத்தியுள்ளார் என புரியும் அதை விடுத்து கண்ட கண்ட தெரு நாயான கூலுக்கு எல்லாம் வக்களத்து வாங்கி ஒரு சிறந்த மனிதனின் மீது சேறு பூசாதயுங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணாத்தை வெளிநாட்டில குந்தியிருந்து கொண்டு விதண்டவாதம் கதைகாதயுங்கோ நீங்கள் ஈழத்தில் இருந்தால் தலைவரின் படத்தை கூட வச்சிருக்க நடுங்கி இருபீர்கல் முற்றிலும் இராணுவச்சூழலில் உள்ளவர் நிர்பந்திக்கப்பட்டால் என்னத்தை செய்ய முடியும் ஏற்றித்தான் ஆக வேண்டும்.அது தற்காப்புக்கானது அதை விடுங்கோ வெளிநாடுகளில அரசியல் அந்தஸ்து கோரும் போது புலிகளை பற்றி இல்லாதது பொலாதது எல்லாம் கூறி எடுத்து சந்தோசமாய்நீங்கள் இருக்கலாம் ஆனால் மற்றவர் களை குற்றம் சாட்டலாம் கண்ணாடியில் ஒருக்கா பாத்திட்டு கதையுங்கோ.

உங்களுக்கு இருக்கும் உயிர்பயம் தான் அவருக்கும் இருக்கும் ஆனால் அவர் துணிச்சலாணவர் இன்னும் யாழில் இருந்து கடைமையாற்றுகிறார்.நான் நினைகிறன் நீங்கள் கூலிலின் பினாமி என அவரின் புத்தகங்களை வாசியுங்கள் எவ்வளவு கேவலமாக எமது கலாச்சாரத்தையும் மக்களையும் இழிவு படுத்தியுள்ளார் என புரியும் அதை விடுத்து கண்ட கண்ட தெரு நாயான கூலுக்கு எல்லாம் வக்களத்து வாங்கி ஒரு சிறந்த மனிதனின் மீது சேறு பூசாதயுங்கள்

நான் ஒன்றும் அகதி அந்தஸ்து கோரி வெளிநாட்டுக்கு வரவில்லை என்பதையும் ஒரு "பெனி" கூட அகதிக்காசோ வேற வெளிநாட்டு அரசாங்க காசோ பெறவில்லை என்பதையும் முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வெளிநாடு வந்து 'செட்டில்' ஆக என்னென்ன செய்தீர்களோ அதைத்தான் எல்லாரும் செய்திருப்பார்கள் என்று "assume" பண்ணுவது சுத்த முட்டாள்தனம்.

சரி ஒரு கேள்வி கேக்கிறன். அவருக்கு உயிர்பயம் என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் சிறிலங்கா சுதந்திர தினத்தன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாள். அதைவிட திங்கட்கிழமையும் அங்கே லீவு விட்டவங்களாம்(காரணம் சுதந்திர தினம் ஞாயிற்றுக்கிழமையாதலால்). இப்படியிருக்கும் போது பேசாமல் வீட்டில இருக்கிறதுக்குப் பதிலா.... மினக்கெட்டு காற்சட்டையை கொழுவிக்கொண்டு கம்பசுக்குப் போய் கொடியும் ஏத்தியிருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்?

கொஞ்சம் யோசித்துப்பதில் சொல்லுங்கோ. தயவுசெய்து கம்பசுக்கு தொண்டு செய்யவேணுமெண்டு அண்டைக்கு விடுமுறை நாளிலும் அங்க போனவர் எண்டு மழுப்பாதீங்கோ. தொண்டு செய்யிறதை அன்றைக்குமட்டும் தவிர்த்து வேறகிழமைகளில செய்திருக்கலாம்.

Edited by ThamilMahan

நான் ஒன்றும் அகதி அந்தஸ்து கோரி வெளிநாட்டுக்கு வரவில்லை என்பதையும் ஒரு "பெனி" கூட அகதிக்காசோ வேற வெளிநாட்டு அரசாங்க காசோ பெறவில்லை என்பதையும் முதலில் கூறிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் வெளிநாடு வந்து 'செட்டில்' ஆக என்னென்ன செய்தீர்களோ அதைத்தான் எல்லாரும் செய்திருப்பார்கள் என்று "assume" பண்ணுவது சுத்த முட்டாள்தனம்.

கொஞ்சம் யோசித்துப்பதில் சொல்லுங்கோ.

ஐயா தமிழ்மகன்,

சுப்பிரமணியம் சுவாமி மற்றும் கூல் மாதிரியே நீர் கதைப்பதன் காரணம் எனக்கு இப்போது விளங்குகின்றது.

இதற்கு கொஞ்சம் யோசித்துப்பதில் சொல்ல தேவையில்லை! யோசிக்காமலேயே இதை விளங்கிக் கொள்ள முடியும்! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.