Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோடரி வெட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் படுகொலை

Featured Replies

கோடரி வெட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் படுகொலை
 
 
கோடரி வெட்டுக்கு இலக்காகி கர்ப்பிணிப் பெண் படுகொலை
ஊர்காவற்றுறை கரம்பன் பகுதியில் கர்ப்பிணி பெண், கோடரி வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
 
7 மாத கர்ப்பிணியான ஞானசேகரம் ஹம்சிகா (வயது 25) என்பவர் மீதே இவ்வாறு கோடாரி வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
ஒரு குழந்தையின் தயான இப் பெண்ணின் வீட்டுக்குள், திருடும் நோக்கோடு இன்று  மதியம் அத்துமீறி நுழைந்த கொள்ளையர்கள், கோடாரியால் கொத்தியுள்ளனர். இரத்த வெள்ளத்தில் இருந்த பெண்ணைக் கண்ட அயலவர்கள்,  உடனடியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு எடுத்து சென்ற போதும் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாக, பொலிஸார் கூறினர். 
 
இவர் அணிந்திருந்த நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேகத்தின் பேரில்  இருவரை கைது செய்துள்ளதாக கூறியுள்ளனர்.

http://www.onlineuthayan.com/news/23068

  • தொடங்கியவர்

கொள்ளையர்களால் 7 மாத கர்ப்பிணி அடித்துக்கொலை ; சந்தேக நபர்கள் பொலிஸாரினால் மடக்கிப் பிடிப்பு ; ஊர்காவற்றுறையில் சம்பவம்

 

 

(ரி. விரூஷன்)

 

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை கரம்பொன் பகுதியில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொள்ளையர்களார் அடித்து, வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியார் தெரிவித்தார்.

16229662_823514861133218_2136307510_o.jp

16231045_823496894468348_370396460_o.jpg

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

16231308_823496561135048_1752982521_o.jp

குறித்த பெண் தனது வீட்டில் தனிமையில் இருந்தபோது கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

16229758_823492841135420_1757578311_o.jp

கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளையில் ஈடுபட முயன்றவேளை, கொள்ளையர்களுக்கும் பெண்ணுக்கும் இடையில் இடம்பெற்ற தாக்குதலில் பெண் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அங்கிருந்து கொள்ளையர்கள் தமது அடையாளம் எதுவும் பொலிஸாரிடம் சிக்கக்கூடாது என்பதற்காக இரத்தக் கறைகளை தண்ணீர் ஊற்றி கழுவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெண்ணின் தாலிக்கொடியையும் அபகரித்து தப்பிச்சென்றுள்ளனர்.

16231359_823492164468821_329315677_o.jpg

இச் சம்பவம் தொடர்பில் அயல் வீட்டார் பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சாதுரியமாக செயல்பட்டு சந்தேக நபர்கள் இருவரை மண்டைதீவு சந்தியில் வைத்து மடக்கிப்பிடித்துள்ளனர்.

16244604_823496644468373_704864802_o.jpg

இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 34 வயதுடைய 7 மாதக் கர்ப்பிணிப் பெண்ணாவார். இந்நிலையில் அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்துள்ளது. 

16244759_823491934468844_1657045656_o.jp

இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் முறுகல் நிலைதோன்றியுள்ளதாகவும் பெரும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் செய்தியார் தெரிவித்தார்.

16245000_823496904468347_915857541_o.jpg

ஊர்காவற்றுறை பொலிஸ்நிலையத்திற்கு முன்னாள் பொதுமக்கள் திரண்டுள்ளதால் தற்போதும் அங்கு பதற்றநிலை நிலவிவருகின்றது.

16251376_823491774468860_2070547920_o.jp

கைதுசெய்யப்பட்ட இருவரையும் யாழ்ப்பாணம் கொண்டு செல்ல முயன்றபோதே பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது.

16251099_823491674468870_1602632742_o.jp

எனினும் குறித்த் சந்தேக நபர்களை பொலிஸார் யாழ்ப்பாணத்திறகு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றர்.

16325713_823492157802155_1833101199_o.jp

இதேவேளை, வெளியிடத்தில் இருந்து இரும்பு வியாபாரத்திற்காக அங்கு வந்த நபர்களே இவ்வாறு குற்றம்புரிந்துள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

16325730_823491697802201_2083390569_o.jp

16326410_823491707802200_274588885_o.jpg

16326376_823492167802154_1376596049_o.jp

http://www.virakesari.lk/article/15765

  • தொடங்கியவர்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் படுகொலை. கண்கண்ட சாட்சியமாக சிறுவன்.

jaff3.jpg

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் கொலையினை நேரில் கண்டதாக பன்னிரண்டு வயது, சிறுவன் காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஊர்காவற்துறை கரம்பெண் பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணே படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

 
இது தொடர்பில் தெரியவருவதாவது ,
 
இளம் குடும்பம். 
 
நெடுந்தீவு பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தினரான இவர்கள் கணவர் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் கடமையாற்றி வருவதனால் , ஊர்காவற்துறை பகுதியில் வாடகைக்கு வீடெடுத்து தங்கி வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் பிள்ளையும் உண்டு.
 
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழமை போன்று மனைவி , பிள்ளைகளை வீட்டில் விட்டு விட்டு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றுக்கு கடமைக்கு சென்று உள்ளார்.
jaff.jpg
தொலைபேசிக்கு பதில் இல்லை.
 
மனைவி கர்ப்பிணியாக இருப்பதனால் , மதிய வேளைகளில் மனைவியுடன் தொலைபேசியில் உரையாடுவதனை வழக்கமாக கொண்டு இருந்துள்ளார். அவ்வாறு இன்றைய தினமும் , மனைவிக்கு தொலைபேசி  அழைப்பினை ஏற்படுத்திய வேளை தொலைபேசிக்கு பதில் இல்லாததால் அயலவர்களுடன் தொடர்பு கொண்டு மனைவி பற்றி விசாரித்து உள்ளார்.
 
 
அதனை அடுத்து அயலவர் வீட்டுக்கு சென்று பார்த்த வேளை அவரது மனைவி இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். அதனை கண்ணுற்ற அயலவர்கள் உடனடியாக கணவருக்கு அறிவித்ததுடன் பொலிசாருக்கும் தகவல்கள் தெரிவித்தனர்.
jaff2.jpg
அடித்தும் , வெட்டியும் படுகொலை செய்துள்ளனர். 
 
குறித்த பெண்ணை படுகொலை செய்த கொலையாளிகள் , பெண்ணின் தலையின் பின்புறத்தில் கட்டையால் பலமாக அடித்துள்ளனர். அத்துடன் கழுத்து பகுதியில் வெட்டியும் உள்ளனர்.
 
தடயங்களை அழிக்க முயற்சி.
jaff4.jpg
 
பெண்ணை படுகொலை செய்யத பின்னர், தடயங்களை அழிக்கும் நோக்குடன் கொலையாளிகள் செயற்பட்டு உள்ளனர். இரத்தகறைகளை கழுவியும் உள்ளனர்.  பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
 
இரும்பு சேகரிக்க வந்தவர்கள் மீதே சந்தேகம். 
jaff5.jpg
கொலையாளிகள் என சந்தேகிக்கபப்டும் நபர்கள் அப்பகுதியில் இரும்பு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர். அதனை அடுத்து காவல்துறையினர் துரித கதியில் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
 
மண்டைதீவு சந்தியில் கொலை சந்தேக நபர்கள் கைது. 
 
ஊர்காவற்துறை – யாழ்ப்பாண வீதியில் மண்டைதீவு சந்தியில் உள்ள காவல்துறை காவலரணில் வைத்து ஊர்காவற்துறையில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியினை வழிமறித்து சோதனை நடத்திய போது முச்சக்கர வண்டியில் இருந்த ஒருவரினது ஆடையில் இரத்த கறை காணப்பட்டது. அத்துடன் அவரது கழுத்து பகுதியிலும் காயம் காணப்பட்டது. அதனை அடுத்து இருவரையும் கைது செய்து ஊர்காவற்துறை காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
jaff5-1.jpg
கொலை சந்தேகநபர்களை தாக்க முற்பட்ட ஊரவர்கள்.
 
அதன் போது ஊர்காவற்துறை காவல் நிலையத்தை முற்றுகையிட்ட ஊரவர்கள் கொலை சந்தேகநபர்களை தாக்க முற்பட்டனர். அதனை அடுத்து சந்தேகநபர்களின் பாதுகாப்பு கருதி , சந்தேகநபர்களை யாழ்.காவல் நிலையத்திற்கு மாற்றுவதற்கு ஊர்காவற்துறை காவல்துறையினர் முயற்சிகளை எடுத்த வேளை அதற்கு ஊரவர்கள் சம்மதிக்காததால் பதட்டம் ஏற்பட்டது.
 
சந்தேகநபர்கள் யாழ் காவல் நிலையத்திற்கு மாற்றம். 
 
அதனை தொடர்ந்து காவல்துறையினர் ஊரவர்களுடன் சமரசம் பேசி சந்தேகநபர்களை யாழ்.காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். யாழ்.காவல் நிலையத்தில் வைத்து ஊர்காவற்துறை காவல்துறையினர் சந்தேக நபர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
jaff6.jpg
 
சந்தேகநபர்களை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை.
 
 
சந்தேக நபர்களை புதன் கிழமை காலை ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.
jaff7.jpg
வாய் பேசமுடியாத சிறுவன் கண்கண்ட சாட்சி. 
 
அதேவேளை இந்த படுகொலை சம்பவத்தை நேரில் பார்த்ததாகவும் சந்தேக நபர்களை அடையாளம் காட்ட முடியும் எனவும் பன்னிரண்டு வயது வாய் பேச முடியாத சிறுவன் ஒருவன்  ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளாா்.
 
குறித்த சிறுவனின் தகவலின் பிரகாரமும் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
jaff8.jpg
படுகொலையுடன் வேறு நபர்களுக்கும் தொடர்பா ? 
 
குறித்த படுகொலை சம்பவத்துடன் இருவர் மாத்திரம் தான் தொடர்பா அல்லது வேறு நபர்களின் தொடர்பும் இருக்கின்றதா ? எனும் கோணத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , தொடர்பு இருப்பின் அவர்களை கைது செய்வதற்காக நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் காவல்துறை தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
jaff9.jpg
கொலை சந்தேக நபர்கள் இருவரும் சகோதரர்கள். 
 
அத்துடன் கைது செய்யபப்ட்ட இரு சந்தேக நபர்களும் சுழிபுரம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

http://globaltamilnews.net/archives/15024

  • கருத்துக்கள உறவுகள்

இவங்களுக்கு இந்த வக்கிர புத்தி எங்கிருந்து வருகிறதோ 
புரியவில்லையே?

  • தொடங்கியவர்

மூளை சிதைவே மரணத்திற்கு காரணம் : 7 மாத கர்ப்பிணிப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிப்பு

 

தலையின் பின்பகுதியில் பலமாக தாக்கப்பட்டதால் மூளை சிதைவடைந்தமையே மரணத்திற்கான காரணமென பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

kayts.jpg

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பகுதியிலுள்ள வீடொன்றில் கொள்ளையிட வந்தவர்களால் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர்  (வயது 27) மிகக் கொடூரமான முறையில் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.

இச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

 

இதையடுத்து சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

 

இந்நிலையில் இன்று வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையில் தலையில் பலமாக தாக்கப்பட்டதையடுத்து மூளை சிதைவடைந்தமையே இறப்பிற்கான பிரதான காரணமெனவும் கழுத்தில் வெட்டுக்காயம் காணப்படுவதாகவும் தோள் மற்றும் முதுகுப்பகுதி எலும்புகள் முறிவடைந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

இதேவேளை, கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அறையில் பொலிஸாரினால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

 

அடையாள அணிவகுப்பிற்காக எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதிவரை சந்தேகநபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/15836

  • கருத்துக்கள உறவுகள்

கொடுமை...இப்படி ஒரு சாவு வேற எந்தப் பெண்ணுக்கும் வர்க் கூடாது...தமிழர்களாய் இருந்து கொண்டு ஒரு கர்ப்பிணியை வெட்டிக் கொல்ல எப்படித் தான் மனம் வந்ததோ:unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.