Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆபத்தான நிலையில் ஒருவர் ; 4 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

Featured Replies

ஆபத்தான நிலையில் ஒருவர் ; 4 ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாப்புலவு மக்களின் போராட்டம்

 

 

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் அமைந்துள்ள பகுதியில் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது நேற்று இரவும் கொட்டும் பனியிலும் இரவிரவாக இன்று நான்காவது நாளாக தொடர்ந்த வண்ணமுள்ள நிலையில் ஒருவர் மயக்கமுற்று ஆபத்தான நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

16466027_1256462887724948_590846942_o.jp

விமானப்படையினர் வசமுள்ள 30 ஏக்கர் காணியை விடுவிப்பதாக அரச அதிகாரிகள் மக்களுக்கு தெரிவித்தபோதிலும் அது குறித்த தினத்தில் விடுவிக்கப்படவில்லை. இதன்காரணமாக குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள் என 50 க்கும் மேற்பட்ட கேப்பாப்புலவு குடியிருப்புமக்கள் தொடர் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர்.

16466296_1256424021062168_1772294695_o.j

இதேவேளை, உணவு, தண்ணீர் மற்றும் உறக்கமின்றி இப் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளதால் அவர்களுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாகவும் இதனால் ஒருவர் மயக்கமுற்ற நிலையில் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

16466344_1256426991061871_864969487_o.jp

இதையடுத்யடுத்து தொடர்போராட்டமாக இன்று நான்காவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று இரவு சம்பவ இடத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் சென்று மக்களின் நிலைமைகளை நேரடியாக கண்காணித்தனர்.

16466579_1256424044395499_1371822132_o.j

16466666_1256426861061884_1261188271_o.j

16491494_1256423951062175_1998272428_o.j

16491569_1256426837728553_1576050444_o.j

16492241_1256424017728835_147599861_o.jp

16492243_1256423957728841_208612717_o.jp

16522070_1256423984395505_438192458_o.jp

16522504_1256462844391619_627184455_o.jp

Keppapilavu.jpg

Keppapilavu-1.jpg

Keppapilavu2.jpg

http://www.virakesari.lk/

  • தொடங்கியவர்

தொடர்­கி­ற­து ­கேப்­பா­பு­லவு மக்­க­ளின் போராட்டம்

p9-ca64460909880ea9db5bdfe3cee08abc87665fc6.jpg

 

 முகாம்­க­ளை­ ப­லப்­ப­டுத்­தும்­ இ­ரா­ணுவம்
(கே.குமணன்)

முல்­லைத்­தீவு, கேப்­பா­பு­லவு குடி­யி­ருப்பில் இரா­ணுவம் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள தமது சொந்த நிலங்­களை விடு­விக்­க­வேண்டும் என மக்கள் முன்னெ­டுத்­துள்ள கவ­ன­யீர்ப்பு போராட்டம் மூன்­றா­வது நாளாக நேற்றும் தொடர்ந்­தது.

நேற்று முன்­தினம் சம்­பவ இடத்­திற்கு வரு­கை­தந்த முல்­லைத்­தீவு மாவட்ட அர­சாங்க அதிபர் ரூபா­வதி கேதீஸ்­வரன்,மற்றும் கரை­து­றைப்­பற்று

 பிர­தேச செய­லாளர் சி.குண­பாலன் மற்றும் முல்­லைத்­தீவு விமா­னப்­படை தள­பதி ஆகியோர் இந்த பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு கால அவ­கா­சத்தை கோரிய போதிலும் அதனை ஏற்­ப­தற்கு அக்­கி­ராம மக்கள் மறுத்­தி­ருந்த நிலையில் அவர்கள் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

 முல்­லைத்­தீவு மாவட்­டத்தின் கரைத்­து­றைப்­பற்று பிர­தேச செய­லகப் பிரி­வுக்­குட்­பட்ட கேப்­பா­பு­லவு, பிலக்­கு­டி­யி­ருப்பில் விமானப் படை­யி­னரால் விடு­விக்­கப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்ட காணிகள் இன்­னமும் மக்­க­ளிடம் கைய­ளிக்­கப்­ப­டாது இழுத்­த­டிப்பு செய்­யப்­பட்டு வரு­கின்­றது.

 விமா­னப்­ப­டை­யினர் கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருந்த காணி­களை அளந்து கைய­ளிப்­ப­தற்­காக காணி உரி­மை­யா­ளர்­களை கடந்த 31 ஆம் திகதி குறித்த பகு­திக்கு வரு­மாறு கேப்­பா­பு­லவு கிராம சேவை உத்­தி­யோ­கத்தர் அழைப்பு விடுத்­தி­ருந்தார்.

 இதற்­க­மைய மக்கள் அங்கு சென்­றி­ருந்த போதிலும், எந்­த­வொரு அதி­கா­ரியும் காணி­களை அளந்து கைய­ளிப்­ப­தற்கு வரு­கை­த­ராத நிலையில், தமது காணிகள் மீள வழங்­கப்­ப­டு­வது குறித்து உறுதி மொழி வழங்கும் வரை அங்­கி­ருந்து வெளி­யேறப் போவ­தில்லை என தெரி­வித்து மக்கள் போராட்­டத்தில் குதித்­துள்­ளனர்.

 நேற்­று­முன்­தினம் மாலை சம்­பவ இடத்­திற்கு சென்ற வன வளத் திணைக்­கள அதி­கா­ரிகள் குறித்த காணிகள் வன வளத் திணைக்­க­ளத்­திற்கு சொந்­த­மா­னது அல்­ல­வென்­பதை உறு­திப்­ப­டுத்­திய பின்னர் அவற்றை பிர­தேச செய­லா­ள­ரிடம் கைய­ளிப்­ப­தாக குறிப்­பிட்­டி­ருந்­தனர். எனினும் அந்த உறு­தி­மொ­ழி­யையும் ஏற்க மறுத்த பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் அங்­குள்ள இரா­ணுவ முகா­மிற்கு அருகில் கூடாரம் அமைத்து நேற்­று­முன்­தினம் முதல் தொடர் போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர்.

 போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள தமக்கு இரா­ணுவம் தொடர்ச்­சி­யாக அழுத்­தங்­களை பிர­யோ­கித்து வரு­வ­தா­கவும் தெரி­விக்கும் மக்கள் எனினும் எவ்­வா­றான அழுத்­தங்கள் விடுக்­கப்­ப­டினும்,போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள இடத்­தி­லி­ருந்து அக­லப்­போ­வ­தில்லை என்றும் திட்­ட­வட்­ட­மாகக் கூறி வரு­கின்­றனர்

  காணி­வி­டு­விப்பு தொடர்பில் அரச அதி­கா­ரிகள் அனை­வரும் கால அவ­காசம் கோரு­வ­தா­கவும் இவ்­வாறு அவ­காசம் கோரி, தமக்கு பொய், பித்­த­லாட்டம் காட்டி தம்மை ஏமாற்­றலாம் என யாரும் நினைக்க வேண்­டா­மெ­னவும் மக்கள் தெரி­விக்­கின்­றனர்.

 இரா­ணுவம் தமது நிலங்­களை கைய­கப்­ப­டுத்தி அந்த நிலங்­களில் உள்ள வளங்­களை பயன்­ப­டுத்தி வரு­மா­னங்­களை பெற்று வரு­வ­தா­கவும், பாட­சா­லையை கூட விடு­விக்­காத நிலையில் தமது பிள்­ளைகள் தாவா­ரத்தில் ஒதுங்­கி­யி­ருந்து கல்வி கற்­ப­தா­கவும் அவர்கள் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளனர்.தமது உயிர் போனாலும் குறித்த காணியை மீளப் பெற்­றுக்­கொள்ளும் வரை போராட்­டத்தை கைவிட்டு அக­ல­மாட்டோம் என போராட்­டத்தை முன்­னெ­டுத்­து­வ­ரு­கின்­றனர்.

 இந்த நிலையில் நேற்றுக் காலை பெரு­ம­ள­வான விமா­னப்­ப­டை­யினர் இணைந்து விடு­விக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­பட்ட மக்­களின் காணிகள் அடங்­கி­யுள்ள குறித்த விமா­னப்­படை முகாமின் ஒரு­ப­கு­தியின் வேலி­களை பலப்­ப­டுத்தும் வேலை­களை ஆரம்­பித்­தி­ருந்­தனர். இந் நிலையில் அப்­ப­கு­தியில் போராட்­டத்­தி­லீ­டு­பட்­டி­ருந்த மக்­களில் சிலர் விமா­னப்­ப­டை­யி­ன­ருடன் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்­ட­தோடு வீதியில் புரண்டு அழுது தமது எதிர்ப்­பினை காட்­டி­யி­ருந்த நிலையில் விமா­னப்­ப­டை­யினர் வேலி அமைக்கும் பணி­யினை நிறுத்தி அங்­கி­ருந்து விலகி சென்­றனர். இதனால் சிறிது நேரம் குறித்த பகு­தியில் பதற்­ற­மான நிலை காணப்­பட்­டது.

  இதே­வேளை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நேற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் துரைராஜா ரவிகரன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

 இந்த போராட்டத்தில் சிறுவர்கள் ,குழந்தைகள் பெண்கள்,ஆண்கள் முதியவர்கள் என அக்கிராமத்தை சேர்ந்த அனைவரும் இணைந்து இந்த போராட்டத்தில் குதித்துள்ளதோடு தமக்கான உணவுகளை வீதி ஓரத்தில் சமைத்தே உண்டும் வருகின்றனர்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-03#page-1

  • கருத்துக்கள உறவுகள்

விசப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்


கூட்டமைப்பு வந்து  ஆறுதல் கூறி போராட்டத்தை நிற்பாட்டாமல் பார்த்தால் போதும். மக்கள் தம் உரிமைகளை போராடி பெற்றுக்கொள்வார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.