Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

தூரம் அதிகமில்லை

துயரம் இனியுமில்லை

கைகட்டி நிற்பதனால்..

தமிழன்கை சோரவில்லை

பொறுமையைக் காப்பதனால்

பொறுப்புணர்வு மறையவில்லை..

நூறாண்டு இழப்புகள்

தேடித்தரப்போவதை..

ஓராண்டு இழப்பால்

உருக்குலைத்தல் விவேகமில்லை

தலைவர் வீரத்தை

தரம் பேசும் தகுதி

தரணியில் எவர்க்குமில்லை

உறவைப்பிரிந்த உயிர்

உரம் கண்டதேயொழிய

சோரவில்லை வீரம் மாறவில்லை

மக்கள்வரிப்பணத்தால் மகிந்த

கந்தக அரிவாள் செய்து

தமிழனை அரிவதற்கு..

துணைபோகும்

இனத்துரோகியர்

வாழ்நாட்கள் நீளமில்லை

கீபீர் போட்ட குண்டுகள்

கிண்டிய குழிகளில்

எங்கள் வயலுக்கு நீர்

வார்க்கும்- சிங்களவன்

பறித்த உயிரெல்லாம்

போராளி ஆன்மாவில்

புகுந்து உரம் சேர்க்கும்..

எரிந்த கொட்டில்கள்..

அடுக்குமாடி வீடாகும்

இழந்த தோட்டங்கள்

பசுமைமிக்க வயலாகும்

பேர்வளம் காணும்

திருமலையும் எமதாகும்

மட்டுநகர் மண்ணெல்லாம்..

தமிழ் பாடும் சுகம் காணும்..

பலாலி எம் தளமாகும்..

காங்கேசன்துறையில்-எம்

கப்பல்கள் கரையாடும்

காலம் இன்று கனிகிறதே..

கடுந்துன்பம் மறைகிறதே

சோர்வில்லை சோரவில்லை..

அழவில்லைக்..கோழையில்லை

அரக்கர் அழிய..

அழகான ஈழம் மலர..

சுதந்திரக்காற்றை மட்டும்

சுவாசிக்கும் குழந்தைகள்

இனி ஈழத்தில் ஜனிக்கட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வீரத்தை

தரம் பேசும் தகுதி

தரணியில் எவர்க்குமில்லை

உறவைப்பிரிந்த உயிர்

உரம் கண்டதேயொழிய

சோரவில்லை வீரம் மாறவில்லை

அழகான வரிகள் விகடகவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான கவிதை விகடகவியாரே.

  • தொடங்கியவர்

நன்றி கபி

நன்றி குமாரசாமி அவர்களே..

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் வீரத்தை

தரம் பேசும் தகுதி

தரணியில் எவர்க்குமில்லை அருமையான வரிகள் கவி கலக்கல்

  • தொடங்கியவர்

நன்றி புத்தரே

கிபீர் விமானங்களை கிணறு கிண்டுவதற்கு பயன்படுத்துகின்றார்களா? நல்ல ஐடியா தான்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுகை, மோனையின் அலங்காரத்தை விட, சொற்களின் பொருள் ரீதியிலான அழகான கோர்ப்புத்தான் , கவிதைக்கு உணர்வைப் பாச்சுவதென்பது எனது அபிப்பிராயம்.

இதை விகடகவியின் கவிதை நிரூபிக்கிறது.

விகடகவியின் கவிப்புலமை மேலும் வளர்ச்சி அடைய எனது வாழ்த்துக்கள்.

கவி அருமை விகடகவி அவர்களே பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்

நன்றி கருத்துகள்வழங்கி என்னுணர்வுகளைக் கவுரப்படுத்தியமைக்கு

யதார்த்தமான கவிதை அருமை. பாராட்டுக்கள்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

நன்றி ரசிகை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.