Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரத்தாகுமா ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்

Featured Replies

gallerye_233842620_1745604.jpg

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில், தினகரன் அணியினர், நேற்று முன் தினம் இரவு துவங்கி, விடிய விடிய பணத்தை வாரி இறைத்தனர். இது குறித்து, தலைமை தேர்தல் அதிகாரியிடம், அரசியல் கட்சிகள் சரமாரி புகார் தெரிவித்துள்ளதால், இடைத்தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

Tamil_News_large_174560420170405233828_318_219.jpg

ஜெயலலிதா மறைவால், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல், ஏப்., 12ல் நடக்க உள்ளது. தி.மு.க.,வில் மருதுகணேஷ்; அ.தி.மு.க., வின் பன்னீர் அணியில், மதுசூதனன்; சசிகலா அணியில், தினகரன் உட்பட, 62 பேர் போட்டி யிடுகின்றனர். அ.தி.மு.க., இரு அணிகளாக களம் காணும் நிலையில், தினகரனுக்கு, தொகுதியில் பலத்த எதிர்ப்பு உள்ளது.

ஆட்சியிலும், கட்சியிலும் ஆதிக்கம் செலுத்த, தேர்தலில், தினகரன் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், தினகரன் தரப்பினர், வெற்றி பெற பகீரத முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக பணம், பொருட்கள் வினியோகத்தில் தீவிரம் காட்டுகின்றனர்.

நேற்று முன் தினம் இரவு, அவர்கள் களத்தில் குதித்தனர். 50 வாக்காளர்களுக்கு ஒருவர் என, தொகுதி முழுவதும், விடிய, விடிய, வீடுகளில் பண பட்டுவாடா செய்தனர். ஓட்டுக்கு 4,000 முதல் 5,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது. வீடுகளில் கொடுக்க முடியாதவர்களுக்கு, அலைபேசியில் பொதுவான ஓரிடத்திற்கு அழைத்து, வினியோகம் செய்தனர்.

இது குறித்த தகவல்கள், பல தரப்பில் இருந்தும்,

பறக்கும் படையினருக்கு வந்தன. அவர்களது தீவிர சோதனையில், கொருக்குப்பேட்டை அஜீஸ் நகரில், ரோட்டில் அனாதையாக கிடந்த, நான்கு பைகள் சிக்கின. அதில், 10 லட்சம் ரூபாய் இருந்தது. தொகுதியின் பல பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, ஐந்து லட்சம் ரூபாய் என, மொத்தம், 15 லட்சம் ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இது தவிர பல பகுதிகளிலும், ஹாட் பாக்ஸ், காமாட்சி விளக்கு, வெள்ளி தட்டு, புடவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

நேதாஜி நகர் பகுதியில், பணபட்டுவாடாவை தடுக்க முயன்ற, தி.மு.க.,வினரை, தினகரன் தரப்பினர் அடித்து விரட்டினர். இதில், தி.மு.க., நிர்வாகிகள் நான்கு பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.இது குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் வழக்கு பதிந்து, தினகரன் தரப்பை சேர்ந்த பிரபு என்பவனை கைது செய்தனர்.

வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்த புகாரை அடுத்து, அரியலுார் சங்கர், கொருக்கு பேட்டை சீனிவாசன், மதுரை பிரபு, சேலம் முத்துலிங்கம், கூடமலை உட்பட, 15 பேரை போலீசார் கைது செய்தனர். பல இடங்களில், பணப் பட்டுவாடாவை தடுக்க முடியாமல், தேர்தல் அதிகாரிகள் திணறினர்.

தி.மு.க., சார்பில், ஆர்.எஸ்.பாரதி; அ.தி.மு.க., பன்னீர் அணி சார்பில், மைத்ரேயன் எம்.பி., - முன்னாள் அமைச்சர் முனுசாமி, பா.ஜ., சார்பில், மாநில தலைவர் தமிழிசை; மார்க் சிஸ்ட் கம்யூ., சார்பில், சவுந்தரராஜன் உள்ளிட்டோர், தலைமை தேர்தல் அதிகாரி, ராஜேஷ் லக்கானியை நேற்று சந்தித்து, பண பட்டுவாடா குறித்து, சரமாரி புகார் அளித்தனர்.

அப்போது, 'ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரன் அணியினர் ஓட்டுக்கு, 4,000 - 5,000 ரூபாய் என, பணத்தை வாரி இறைக்கின்றனர். அதை தடுக்க வேண்டும். தேர்தலை ரத்து செய்ய வேண்டும்; தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தினர். பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மைத்ரேயன் எம்.பி., மற்றும்

 

முன்னாள் அமைச்சர் முனுசாமி கூறுகையில், 'போட்டி, தேர்தல் கமிஷனுக்கும், ஆளுங் கட்சியின் அதிகார வர்க்கத்துக்கும் இடையே தான் நடக்கிறது. பண வினியோகத்தை தடுக்க முடியாமல், தேர்தல் கமிஷன் தோற்றுள்ளது' என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூ., சவுந்தர ராஜன், ''தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்; தேர்தலை ரத்து செய்ய வேண்டும்,'' என்றார். இது போல, பல்வேறு அரசியல் கட்சி தலைவர் களும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என, அறிக்கை மூலம் வலியுறுத்தி உள்ளனர். அடுக்கடுக்காக புகார்கள் குவிவதால், தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

சமூக ஆர்வலர்கள்


கூறுகையில், 'இந்த அளவுக்கு பண வினியோகம் எப்போதும் நடந்தது இல்லை. பிறஅரசியல் கட்சிகள் மட்டுமல்ல; மக்களே திகைப்பில் உள்ளனர். அப்புறம் எப்படி தேர்தல் நியாயமாக நடக்கும். அராஜகம் அதிகரிக்கும் என்பதால், தேர்தலை ரத்து செய்ய, கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
 

பறக்கும் படையினரை 'தெறிக்க' விட்ட மகளிரணி


தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெருவில், ஒரு வீட்டில் பணம் பதுக்கப்பட்டுள் ளது என்ற தகவல், பறக்கும் படையினருக்கு கிடைத்தது. அந்த வீட்டை, துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் முற்றுகையிட்டனர்.

அங்கி ருந்த, தினகரன் அணி மகளிரணியை சேர்ந்த, நான்கு பெண்கள், திடீரென உடைகளை களைந்து, நடிகர் வடிவேலு படத்தின், 'காமெடி' பாணியில், நிர்வாணமாகி, அதிகாரிகளை திக்கு முக்காட வைத்தனர். இதனால், பறக்கும் படையினர், அதிர்ச்சியில் இடத்தை காலி செய்தனர்.

- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1745604

பிறந்தால் தமிழ்  நாட்டில் பிறக்க வேண்டும். நாலு கட்சிகளிடமும் காசை வாங்கி கொண்டு 'நோட்டா' வுக்கு வாக்களித்து வாங்கின பாவத்தை கழுவலாம்

  • தொடங்கியவர்

ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆகுமா?: தேர்தல் கமிஷன் பரிசீலனை

 

ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா, மோதல் என தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி இருக்கும் நிலையில் இடைத்தேர்தல் ரத்தாகுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

 
 
 
 
ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து ஆகுமா?: தேர்தல் கமிஷன் பரிசீலனை
 
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 12-ந்தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 6 நாட்களே இருக்கும் நிலையில் திங்கட்கிழமையுடன் பிரசாரம் ஓய்கிறது.

இதையொட்டி அரசியல் கட்சியினர் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர். தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டி இருக்கிறது.

ஆர்.கே.நகரில் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கும், வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடாவை தடுப்பதற்கும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

பறக்கும் படையினர் தொகுதி முழுவதும் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவ படையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

முறைகேடுகளை தடுப்பதற்காக ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட போலீஸ் அதிகாரிகளும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியர்களும் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இடைத்தேர்தல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு கூடுதல் கமி‌ஷனர் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை போலீஸ் அதிகாரிகளை மாற்றி தேர்தல் ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டது. இதன் காரணமாக ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா தடுக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

கடந்த சில நாட்களாகவே ஆர்.கே.நகர் தொகுதியில் ஆங்காங்கே பணப்பட்டு வாடா செய்யப்பட்டு வந்தது. காமாட்சி விளக்கு, குத்து விளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களும் வினியோகிக்கப்பட்டன. இது தொடர்பாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று அதிகாலை திடீரென வாக்காளர்களுக்கு மொத்தமாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது. தொகுதி முழுவதும் 80 சதவீதம் பேருக்கு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வீதம் கொடுக்கப்பட்டது.
 
201704061146380393_election-commission%2

தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கைகளையும் மீறி ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாக ஓட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரூ. 15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஆர்.கே.நகரில் வன்முறை வெடிக்கும் சூழல் நிலவுவதாலும், பணப்பட்டுவாடா நடைபெறுவதாலும் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

தி.மு.க. சார்பில் பண வினியோகம் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஓ.பி.எஸ். அணி, பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகளும் பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்துவதற்கு தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று குற்றம் சாட்டியுள்ளன.

அதே நேரத்தில் டி.டி.வி. தினகரன், ஆர்.கே.நகரில் தேர்தலை நிறுத்துவதற்கு சதி நடப்பதாக கூறி உள்ளார்.

பணப்பட்டுவாடா, மோதல் என ஆர்.கே.நகர் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டி இருக்கும் நிலையில் அங்கு திட்டமிட்டபடி 12-ந்தேதி தேர்தல் நடைபெறுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் பணப்பட்டுவாடா புகார் காரணமாகவே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தொகுதியிலும் அதுபோன்ற குற்றச்சாட்டுகளே அதிகமாக எழுந்துள்ளன. இதன் காரணமாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தாகுமா? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷன் பரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/04/06114637/1078400/Election-Commission-Counseling-RK-Nagar-election-Will.vpf

  • தொடங்கியவர்

ஆர்.கே. நகர் தேர்தல் ரத்துக்கு திட்டமிடுகிறாரா தினகரன்?!  - டெல்லி வியூகமும் கட்சிகளின் மூர்க்கமும்

தினகரன் பிரசாரம்

ரிவாள் வெட்டு, நள்ளிரவு பண விநியோகம், கலவரம் என ஆர்.கே.நகர்த் தொகுதி, திருமங்கலத்துக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கிறது. 'தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், ஆட்சி அதிகாரத்தை விட்டுக் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கை கோர்த்துவிடுவார்கள் என்ற அச்சம் கார்டனில் உள்ளவர்களுக்கு இருக்கிறது. அதனால்தான் வரலாறு காணாத வகையில் விநியோகத்தை முடித்துள்ளனர்' என்கின்றனர் ஆளும்கட்சி நிர்வாகிகள். 

ஆர்.கே.நகர் தொகுதியில் வெயிலின் வெப்பத்தையும் தாண்டி தகித்துக் கொண்டிருக்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள். ஒற்றைக் காரணம். நேற்று அதிகாலையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பெரும் பணம். வாக்கு ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய் என தினகரன் ஆட்களால் பணம் விநியோகிக்கப் பட்டது. இதுகுறித்து தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியை நேரில் சந்தித்துப் புகார் கூறினார் சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன். பா.ஜ.கவும் தி.மு.கவும் இதே புகார்களை ஆணையரிடம் அளித்துள்ளன. "தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்ற அக்கறை ஆணையத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால், வீதிக்கு இரண்டு தேர்தல் அதிகாரிகளை நியமித்துத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் பண விநியோகத்தில் இறங்கியுள்ளன" எனக் கொந்தளித்தார் பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை. "எதிர்க்கட்சிகளின் புகார் குறித்தெல்லாம் வேட்பாளர் தினகரனுக்கு எந்தக் கவலையும் இல்லை. அவரைப் பொறுத்தவரையில், நல்ல வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

எடப்பாடி பழனிசாமி‘வெற்றி பெற்றால் முன் மாதிரி தொகுதியாக மாற்றுவோம்’ என அனைத்து வேட்பாளர்களும் வாக்குறுதி அளிக்கின்றனர். தினகரன் உண்மையிலேயே செய்து காட்டுவார் என்றுதான் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கிறோம். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, தொகுதி மக்கள் அவரிடம் கொடுத்த விண்ணப்பங்களை எல்லாம் தொகுத்து வைத்திருக்கிறார். தேர்தல் வெற்றிக்குப் பிறகு ஒவ்வொன்றாக நிறைவேற்றுவார். மதுசூதனன் தரப்பில் இருந்து பணத்தை விநியோகித்து வருகிறார்கள். அவர்களை எல்லாம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. தினகரன் மீது வேண்டுமென்றே புகார்களை அள்ளி வீசுகின்றனர். அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையாக இருக்கிறது. தி.மு.க நிர்வாகிகள் தாக்கப்பட்டதன் பின்னணியிலும் தி.மு.க தலைமையின் தூண்டுதல் இருக்கிறது. தேர்தலுக்கு முந்தைய நாட்களில் ரெய்டு நடவடிக்கைகள் தீவிரமாக இருக்கும் என்ற தகவல் வந்ததன் அடிப்படையிலேயே, முன்கூட்டியே விநியோகத்தை முடித்தோம். வாக்காளர்கள் மனம் குளிரும் வகையில் இன்னும் சில விஷயங்களை செய்ய இருக்கிறார் தினகரன்" என்கின்றனர் வடசென்னை அ.தி.மு.க நிர்வாகிகள்.

பன்னீர்செல்வம்ஆனால், ஆர்.கே.நகர் விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய அரசியல் விமர்சகர் ஒருவர், "ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, மத்திய அரசுதான் தமிழக அரசை வழிநடத்திக் கொண்டிருக்கிறது. சசிகலா குடும்பத்தில் இருந்து யாரும் பதவிக்கு வந்துவிடக் கூடாது என்பதில் டெல்லி பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. அதையொட்டித்தான் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார். உத்தரபிரதேச தேர்தல் முடிவுகள் வந்தபோது, மோடியை டெலிபோனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார் எடப்பாடி. தினகரனோ, காங்கிரஸ் கட்சிக்கும் சேர்த்தே வாழ்த்து கூறினார். பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மோடியின் குட்புக்கில் உள்ளனர். 'நாம் சொல்வதை இவர்கள் இருவரும் கேட்பார்கள்' என நம்புகிறார். காங்கிரஸ் தலைமையின் பக்கம் சசிகலா உறவுகள் பாசம் காட்டுவதையும் கவனித்து வருகிறார் பிரதமர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றுவிட்டால், கட்டாயம் முதலமைச்சர் பதவியை நோக்கிக் காய்களை நகர்த்துவார். இதனை கொங்கு மண்டல அ.தி.மு.க சீனியர்கள் விரும்ப மாட்டார்கள். முதலமைச்சர் பதவியை விட்டுத் தரவும் அவர்கள் விரும்பவில்லை. எனவே, தினகரன் தோற்றுப் போவதையே அவர்கள் விரும்புகிறார்கள்.

தேர்தலில் தோல்வி ஏற்பட்டால், 'சசிகலா இமேஜ்தான் காரணம்' என எளிதாகச் சொல்லிவிடுவார்கள். வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தை நோக்கி நகர்ந்தால், 'பன்னீர்செல்வத்துடன் கூட்டு சேருவதற்கு எடப்பாடி முயற்சி செய்வார்' என்ற தகவலும் வலம் வருகிறது. மேலும், இரட்டை இலை சின்னத்தை மீட்க பன்னீர்செல்வமும் எடப்பாடியும் கைகோர்ப்பதற்கான வாய்ப்புகளையும் டெல்லி மேலிடம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது. காரணம். 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வலுவான அணியைக் கட்டமைக்க விரும்புகிறார் மோடி. இந்தநேரத்தில் சசிகலா உறவுகள் ஆட்சியில் இருந்தால், காங்கிரஸ் பக்கம் அவர்கள் கவனம் செல்லும் என்பதையும் அறிந்தே வைத்திருக்கிறார். எனவேதான், ஆர்.கே.நகரில் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த காய் நகர்த்தல்களை அறிந்துதான், வரலாறு காணாத விநியோகத்தின் மூலம் தேர்தலை தடுத்து நிறுத்தத் திட்டமிடுகிறார் தினகரன். தேர்தலை தள்ளிப் போடுவதன் மூலம் மத்திய அரசின் திட்டத்தை முறியடிக்கலாம் என்பதுதான் அவருடைய திட்டம். ஆனால், தேர்தலை நிறுத்தும் முடிவில் மத்திய அரசு இல்லை" என்கிறார் உறுதியாக. 

'தேர்தல் ரத்தாகுமா?' என்ற கேள்வியை சி.பி.எம் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். "எங்கள் கட்சி தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தலில் நிற்பது எங்கள் உரிமை. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம். எங்களுடைய ஜீவாதார உரிமைகளைப் புறம்தள்ளிவிட்டு, தேர்தலை ரத்து செய்வது என்பது சரியானதல்ல. எதற்காக தேர்தலை நிறுத்த வேண்டும்? தவறு செய்தவர்களை தேர்தல் ஆணையம் தண்டிக்கட்டும்” என்றார் கொந்தளிப்புடன். 

http://www.vikatan.com/news/tamilnadu/85579-why-should-election-be-stopped-because-of-dinakaran---tn-parties.html

  • கருத்துக்கள உறவுகள்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.