Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாயக்கல்லில் மீண்டும் விகாரை

Featured Replies

மாயக்கல்லில் மீண்டும் விகாரை

 

 

அம்­பாறை இறக்­காமம் பிர­தேச சபைக்­குட்­பட்ட மாணிக்­க­மடு மாயக்­கல்லி மலையை இரண்­டா­வது தட­வை­யா­கவும் ஆக்­கி­ர­மிக்கும் முயற்சி நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. இங்கு விகாரை ஒன்றை அமைப்­ப­தற்கு பௌத்த பிக்­கு­களும் மேலும் சிலரும் முயற்­சி­களை மேற்­கொண்­டனர். எனினும் ஸ்லத்­திற்கு விரைந்த இறக்­காமம் பிர­தேச மக்கள் மேற்­படி விகாரை அமைக்கும் முயற்சி நட­வ­டிக்­கை­க­ளுக்கு கடும் எதிர்ப்­பினை தெரி­வித்­த­துடன் பொலி­ஸாரின் கவ­னத்­துக்கும் கொண்டு வரப்­பட்­டது. இதன்­போது இப்­பி­ர­தே­சத்தில் பதற்ற நிலை குடி கொண்­டி­ருந்­தது. இத­னை­ய­டுத்து பொலிஸார் தலை­யீடு செய்து விகாரை அமைக்கும் பணி­களை தடுத்து நிறுத்­தினர்.

buththa.jpg

இங்கு 150 க்கும் மேற்­பட்ட தமிழ் குடும்­பங்கள் வாழ்ந்­து­வரும் அதே­வேளை மாயக்­கல்வி மலையை சுற்­றி­யுள்ள காணிகள் முஸ்­லிம்­க­ளுக்கு சொந்­த­மா­ன­தாகும். சம்­பவம் தெடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது;

செவ்­வாய்க்­கி­ழமை மாலை இம்  மலை­ய­டி­வா­ரத்­திற்குச் செல்­வ­தற்­கான வீதியும் விகாரை அமைப்­ப­தற்­கான காணி­யி­னையும் கன­ரக வாகனம் கொண்டு பௌத்த பிக்­குகள் சிலரால் பண்­ப­டுத்­தினர். இது தொடர்பில் காணிச் சொந்­தக்­காரர் ஒருவர் தமண பொலிஸில் இது சம்­பந்­த­மாக முறைப்­பாடு செய்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து நேற்று வியா­ழக்­கி­ழமை காலை மலை­ய­டி­வா­ரத்தில் நிர்­மாணப் பணிகள் நடை­பெ­று­வ­தாகக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து பள்­ளி­வாசல் ஒலி­பெ­ருக்கி மூலம் அற­வித்­ததன் பின்னர் உட­ன­டி­யாக பிர­தேச மக்கள் மாயக்­கல்வி மலை­ய­டி­வா­ரத்­திற்கு சென்று பௌத்த தேரர்­க­ளுடன் கடும் வாதப் பிர­தி­வா­தங்கள் நடை­பெற்ற நிலை­யி­லேயே அம்­பாறை பிராந்­திய உதவிப் பொலிஸ் அத்­தி­யட்­சகர் மனோஜ் ரண­கல, தமண பொலிஸ் நிலையப் பொறுப்­ப­தி­காரி அர்ஷ சில்வா ஆகியோர் ஸ்தலத்­திற்கு விஜயம் செய்து நிலையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வந்­தனர்.

அதன் பின்னர் ஒன்­று­கூ­டிய அனை­வரும் இறக்­காமம் பிர­தேச செய­லாளர் காரி­யா­லயம் சென்று செய­லாளர் எம்.எம். நஸீரைச் சந்­தித்து நடந்த விட­யங்­களை ஆக்­ரோ­சத்­துடன் எடுத்துக் கூறினர். சிலை அமைந்­துள்ள இடத்­திற்கு பொலிஸார் செய­லா­ளரை அழைத்­த­போதும் வராத நிலை அறிந்த மக்கள் செய­லா­ள­ருக்கு தங்­க­ளது கண்­ட­னங்­க­ளையும் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, விடயம் அறிந்த கிழக்கு மாகாண சபை உறுப்­பினர் ஆரிப்­சம்­சுதீன், இறக்­காமம் பிர­தேச அபி­வி­ருத்திக் குழு தலைவர் எஸ்.ஐ. மன்சூர், சுகா­தார அமைச்­சி­னது இணைப்புச் செய­லாளர் எம்.எஸ். ஜெமீல் காரி­யப்பர், முன்னாள் பிர­தேச சபை தவி­சாளர் எம்.ஐ. நைஷார் சட்­டத்­த­ரணி பாறூக் ஆகியோர் வருகை தந்து பௌத்த குருக்­க­ளுடன் தமது பிர­தேச மக்­களின் எதிர்ப்­பினை வெளிப்­ப­டுத்­தி­யமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

இவ்­வே­ளையில் வருகை தந்த தொல்­பொருள் திணைக்­கள அதி­கா­ரிகள் தொல்­பொருள் பிர­தேச எல்­லைக்கு வெளியே தனியார் காணியில் நிர்­மாணப் பணிகள் நடை­பெ­று­வதை அனு­ம­திக்க முடி­யாது எனவும் தெரி­வித்தார். எனினும் இதற்­கு­ரிய எல்­லையை சீரான முறையில் வரை­யறை செய்யும் முக­மாக இறக்­காமம் பிர­தேச செய­லா­ளரை ஸ்தலத்தில் நின்ற அம்­பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சர் மனோஜ் ரணகல அழைத்த போது பிரதேச செயலாளர் வருகை தர மறுத்துவிட்டார்.

இதனையடுத்து நீதமன்றத்தின் மூலம் சமரச முடிவுக்கு வரும்வரை சகல நிர்மாணப் பணிகளும் நிறுத்துமாறு உதவிப் பொலிஸ் அத்தியட்சர் பௌத்த பிக்குகளை கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் சுமுக நிலை ஏற்பட்டது.

http://www.virakesari.lk/article/19228

  • தொடங்கியவர்

விகாரை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்
 
21-04-2017 03:59 PM
Comments - 0       Views - 67

article_1492770818-e1.jpg

அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையை அண்டிய பகுதியில் தனியார்க் காணியொன்றில், விகாரைக்கான நிர்மாணப் பணிகள்  தொடங்கப்பட இருந்ததால் அங்கு ஏற்பட்ட முறுகல் நிலையையடுத்து, நிர்மாணப் பணிகள் அனைத்தும் பொலிஸாரினால், இன்று (21) இடை நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை அப்பகுதியில் ஏற்பட்டிருந்த பதற்றநிலையை அடுத்து, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பெருமளவில் அழைக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாயக்கல்லி மலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பௌத்த தேரர்களினால் பலாத்காரமாக புத்தர் சிலை ஒன்று நிறுவப்பட்டது. சிங்களவர் எவரும் வாழாத இப்பகுதியில் இச்சிலை அமைக்கப்பட்டமை தொடர்பில் பலத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டும் அது அகற்றப்படவில்லை.

எனினும், அப்பகுதியில் விகாரை ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தேர்கள் குழுவொன்றினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்ததுடன், இறக்காமம் பிரதேச செயலாளரிடம் விகாரை அமைப்பதற்கான காணிக்குரிய அனுமதியும் கோரப்பட்டிருந்தது.

நேற்றயதினம், அங்குள்ள தனியார்க் காணியில் அத்துமீறி விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தேரர்களினால் முன்னெடுக்கப்பட்ட போது, அப்பகுதி மக்களின் பலத்த எதிர்ப்பு காரணமாக பொலிஸார் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தியிருந்தனர்.

எவ்வாறாயினும், இன்று காலை தொடக்கம் குறித்த இடத்தில் மீண்டும் விகாரை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதனால், அங்கு  திரண்ட மக்கள் தமது எதிர்ப்பபை வெளியிட்டதுடன், பொதுமக்களுக்கும் தேரர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன், முறுகல் நிலையம் தோன்றியது.

இதனைத் தொடர்ந்து, அங்கு மேலதிக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டதுடன், பௌத்த தேரர்களும் மக்கள் பிரதிநிதிகளும் தமண பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டதுடன், மக்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பொலிஸார் உத்தரவிட்டனர்.

அம்பாறை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் நுவன் கே.வெதசிங்க, அம்பாறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மனோஜ் ரணகல, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் போன்றோர் சம்பவ இடத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

article_1492770830-e3.jpg

article_1492770840-e4.jpg

article_1492770849-e5.jpg

article_1492770860-e.jpg

 

- See more at: http://www.tamilmirror.lk/195183/வ-க-ர-ந-ர-ம-ணப-பண-கள-இட-ந-ற-த-தம-#sthash.RBla8nk4.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

மலையில் புத்தர் இருந்து சகல ஐக்கிய இலங்கை மக்களையும் பார்த்து கொள்வார்தானே ...புத்தர் மலையில் இருப்பதால் இவர்களுக்கு என்ன நஸ்டம்?அதென்ன ஐக்கிய இலங்கை வேணும் ஆனால் புத்தர் வேண்டாம் என்று சொல்லுறது....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, putthan said:

மலையில் புத்தர் இருந்து சகல ஐக்கிய இலங்கை மக்களையும் பார்த்து கொள்வார்தானே ...புத்தர் மலையில் இருப்பதால் இவர்களுக்கு என்ன நஸ்டம்?அதென்ன ஐக்கிய இலங்கை வேணும் ஆனால் புத்தர் வேண்டாம் என்று சொல்லுறது....

ஏற்கனவே உள்ள புட்டி மேடெல்லாம் புத்தர் கண்ணை மூடிக்கொண்டிருந்து கண்காணிக்கிறது காணாதே??? :grin:

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

மலையில் புத்தர் இருந்து சகல ஐக்கிய இலங்கை மக்களையும் பார்த்து கொள்வார்தானே ...புத்தர் மலையில் இருப்பதால் இவர்களுக்கு என்ன நஸ்டம்?அதென்ன ஐக்கிய இலங்கை வேணும் ஆனால் புத்தர் வேண்டாம் என்று சொல்லுறது....

 

3 hours ago, குமாரசாமி said:

ஏற்கனவே உள்ள புட்டி மேடெல்லாம் புத்தர் கண்ணை மூடிக்கொண்டிருந்து கண்காணிக்கிறது காணாதே??? :grin:

தமிழர் பிரதேசங்களில் புத்தர் இருப்பதால் முஸ்லீம்கள் ஒன்றும் சொல்வதும் இல்லை அது பற்றி கதைப்பதும் இல்லை அதுவே புத்தர் தமிழனுக்கு செஞ்சது  போதும் என்று லைட்டா சிப்ட்டாகி முஸ்லீம்கள் பக்கம் சாய்ந்து செய்யலாம் என்று எடுக்க பிரச்சினை பண்ணுகிறார்கள் முஸ்லீம்கள் ஆனால் புத்தன்  இருந்து கொண்டே அலுவலை பார்கிறவன் என்று சொல்லலாம்   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.