Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் ஏற்பாட்டில் வடமாகாணக் கல்வி அமைச்சுக்கு எதிராக கிளிநொச்சியில் போராட்டம்?

Featured Replies

இராணுவத்தினரது ஏற்பாட்டில் வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) நாளை கிளிநொச்சி டிப்போச் சந்தியில் போராட்டம் இடம்பெறவுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.

வடமாகாணத்திலுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வடமாகாணக் கல்வி அமைச்சால் மேற்கொண்டு அதற்கான நியதிச் சட்டத்தையும் வடமாகாணக் கல்வி அமைச்சர் த.குருகுலராசா முன்னெடுத்துள்ள நிலையில்,

இராணுவக் கட்டமைப்பின் கீழ் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளை வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் நிர்வாத்தின் கீழ் கொண்டுவருவதை எதிர்த்தும் அவர்களைத் தொடர்ந்தும் இராணுவக் கட்டமைப்பின் கீழ் வைத்திருக்க விடுமாறு கோரியுமே இராணுவத்தினரது ஒழுங்கமைப்பில் நாளை கிளிநொச்சியில் கல்வி அமைச்சருக்கு எதிராக சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

வடமாகாணக் கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டத்திற்கு நாளை வரும்போது சிவில் பாதுகாப்புப் படை முன்பள்ளி ஆசிரியைகளது கணவனையும் அழைத்து வருமாறு போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள போராட்டத்திற்கான அழைப்பையும் அறிவுறுத்தல் நினைவூட்டலையும் இன்றைய தினமும் தொலைபேசியூடாக அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் பொதுமக்களது சிவில் அமைப்புக்களில் தேவையற்ற இராணுவத் தலையீடு தொடர்ந்தும் இருந்து வருகின்றமை குறித்து இம்முறையும் ஜெனீவாவின் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள முன்பள்ளிகளில் இராணுவத் தலையீடு அதிகமாகக் காணப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் வடமாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளில் இராணுவம் தமது ஆமி ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஏதோ கற்பிக்க முற்பட்ட போதும் அதற்குக் கிழம்பிய கடும் எதிர்ப்புக் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

காணாமல் போனோரது உறவினர்கள், சிறையிலுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள், காணிகளிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுமாறு கோரி மற்றும் பட்டதாரிகள் எனப் பலரும் அரசாங்கத்திற்கு எதிராகவே போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.

வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக எவரும் போராடவில்லை வடமாகாணக் கல்வி அமைச்சருக்கும் வடமாகாணசபைக்கும் எதிராக நீங்கள் போராடுங்கள் அதற்கு எங்கள் முழு ஒத்துழைப்பும் ஆதரவும் உண்டு என போராட்டத்தை ஒழுங்கமைத்த இராணுவத்தினரால் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாணக் கல்வி அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்பட வேண்டிய முன்பள்ளிகளை தொடர்ந்தும் இராணுவம் தனது கட்டமைப்பின் கீழ் வைத்திருப்பதற்கான முயற்சியாக நாளை இராணுவத்தினரது ஏற்பாட்டில் சிவில் பாதுகாப்புப் படையினரால் (சி.எஸ்.டி) கல்வி அமைச்சருக்கு எதிரான போராட்டம் நடைபெறவுள்ளது.

http://www.tamilwin.com/community/01/143550?ref=home-feed

  • தொடங்கியவர்
 

படையினர் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் விடுவிக்கப்பட கூடாது! கிளிநொச்சியில் பாரிய போராட்டம்

வடக்கில் படையினர் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை விடுவிக்க வேண்டாம் என வலியுறுத்தி கிளிநொச்சியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் முன்னாள் போராளிகளும் அவர்களின் குடும்பத்தினரும் இணைந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

காணிவிடுவிப்பு தொடர்பில் கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையின் போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அதன்படி, காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது படையினரினரால் நிர்வகிக்கப்படும் பண்ணை காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே, படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் பண்ணை காணிகளை விடுவிக்க வேண்டாம் என வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

இதன்போது படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளை வடக்கு மாகாணசபையின் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வதற்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர்.

இதேவேளை, பண்ணைக் காணிகள் விடுவிக்கப்பட்டால் தமக்கான வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே, தமது எதிர்காலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/143633?ref=home-top-trending

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குள் இருக்கும் புல நாய்களையும், சிவில் இராணுவத்தையும் வெளியே எடுத்துவிட்டால்..... சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களையும், வேறு சில சூழ்நிலைக் கைதிகளும் உள்ளே இருப்பதைக் காணலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.