Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசப்பற்றாளர் பட்டியலில் இடம்பெற ஜனாதிபதிக்கு 24 மணிநேரம் காலஅவகாசம்'

Featured Replies

யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக இரத்துச் செய்து தேசப்பற்றுள்ளவர்கள் பட்டியலில் தனது பெயரை உள்ளடக்கப் போகிறாரா? அல்லது 5 வருட பூர்த்திக்கு இடமளித்துவிட்டு தேசத்துரோகிகள் பட்டியலில் தனது பெயரைப் பதியப் போகிறாரா? என்பதை ஜனாதிபதி இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் தேசிய பிக்கு முன்னணி உடன்படிக்கையை இரத்துச் செய்யப்படாவிட்டால் நாட்டில் தோன்றும் அமைதியின்மைக்கும் நெருக்கடிகளுக்கும் அரசதலைவரே பொறுப்பேற்க வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐந்து வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி இரத்துச் செய்யவேண்டுமென வலியுறுத்தி கொழும்பு விகாரமகாதேவி பூங்கா முன்றிலில் தேசிய பிக்கு முன்னணி தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அங்கு நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே முன்னணியின் தேசிய அமைப்பாளர் கலவல்கல சந்திராலோக தேரர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டை காட்டிக் கொடுத்த தொன் யுவான் தர்மபால, ரணில் விக்கிரமசிங்க, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவைப் போல தேசத் துரோகியாக மாற விரும்பினால் ஜனாதிபதி மௌனமாக இருக்கலாம். ஆனால், தேசப்பற்றாளன் என்று வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதியப்பட வேண்டும் என்றால் உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டும்.

இதேவேளை, இந்த தேசத் துரோக உடன்படிக்கையை வெற்று வேட்டாக நினைத்து இவர்கள் அறிக்கைகளை விடுகின்றனர். செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர். இதில் ஜாதிக ஹெல உறுமயவும் மெத்தனப் போக்குடன் செயற்படுகிறது. அவர்கள் எமது வர்க்கத்தினராக இருக்கலாம். இச் செயலை செய்யும் அவர்களும் தேசத்துரோகிகளே ஆவார்கள்.

அது மட்டுமல்லாமல் இதற்கு உடந்தையாக சில அரச சார்பற்ற நிறுவனங்களும் செயற்படுகின்றனர். மேலும், இதற்கு சார்பாக செயற்படும் அனைவரும் தேசத்துரோகிகளே.

இனிவரும் மணித்தியாலங்கள் தீர்க்கமானவை. உடன்படிக்கையை இரத்து செய்யாவிட்டால் அமைதியின்மை ஏற்பட்டு நாட்டில் பல நெருக்கடிகள் தோன்றும். அதற்கான பொறுப்பை ஜனாதிபதியே ஏற்க வேண்டும் என்றும் கலவல்கல சந்திராலோக தேரர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் தேசிய பிக்கு முன்னணியின் ஆலோசகர் அத்தங்கனே ரத்னபால தேரர், ஊடகப் பேச்சாளரான வகமுல்லே ரத்ன தேரர், பியதிஸ்ஸ தேரர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

http://www.thinakkural.com/news/2007/2/21/...s_page21834.htm

இந்த தேசப்பற்றாளர் பட்டியல் எங்கே உள்ளது ?

ஜனாதிபதிக்கே 24 மணித்தியால கெடு கொடுக்குமளவிற்கு அதன் முக்கியத்துவம் என்ன ?

இதை வைத்து ஜனாதிபதி என்ன செய்வார் ?

பிக்குகள் விளக்குவார்களா ?

இந்த தேசப்பற்றாளர் பட்டியல் எங்கே உள்ளது ?

ஜனாதிபதிக்கே 24 மணித்தியால கெடு கொடுக்குமளவிற்கு அதன் முக்கியத்துவம் என்ன ?

இதை வைத்து ஜனாதிபதி என்ன செய்வார் ?

பிக்குகள் விளக்குவார்களா ?

லீஸா! உங்களுக்கு தெரியாதா?

இறந்தபின்புதான் நாட்டுப்பற்றாளர் விருது வழங்கி கவுரவிப்பது,அப்ப இவர்கள் நாட்டின் ஜனாதிபதிக்கே கொலைமிரட்டல் விடுத்துள்ளார்கள்.வாழ்க உங்கள் திட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வணக்கம் வணக்கம் மீண்டும் நானே தான்....

நாட்டுப்பற்றாளர் தேசப்பற்றாளர் எல்லாம் நாங்கள் தான் உங்களுக்கு சொல்லித்தரவேனும்..

சரி விடயத்திற்கு வருவோம்..ஜயா இந்த 22ந்திகதி என்ன ஒருகாலமும் இல்லாத அளவுக்கு ரொம்ப அமர்க்களமாக இருக்கு? இந்த புத்த மொட்டைகளாக இருக்கட்டும் ரிஷி போன்ற பரபரப்பாளர்களாக இருக்கட்டும் பெரிசாக போட்டு அலட்டிக்கிறாங்க..அங்குள்ள தழிழ் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு ஒவ்வொரு நிமிடமும் ஏக்கத்துடன் தவிக்கிறாங்க குண்டு போடுகிறானோ என்று ஆகாயத்தை பார்க்கவேனும் பசிக்கிறபோது வயிற்றை பிடிக்கவேனும் பாடசாலைக்கு போன பிள்ளை திரும்பி வருமோ? இப்படி எவ்வளவு ஏக்கங்கள்...ஏனய்யா இதை உங்க பத்திரிகைகளிளை பரபரப்பாக போட்டால் பத்திரிகை வியாபாரம் கெட்டுப்போகுமா?

இந்த மொட்டைகள் சொல்லுகிறமாதிரி ராஜபக்ச புரிந்துனர்வு ஒப்பந்தம் கிழித்தெறிய வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் தலைவர் கடந்தவருட தனது மாவிரர் உரையில் உறுதியாக கூறிவிட்டார் அதாவது இந்த புரிந்துனர்வு ஒப்பந்தத்தை மகிந்தர் ஏற்கெனவே இல்லாதொழித்துவிட்டார்.

அப்படியென்றால் இந்த மொட்டைகள் ஏன் இப்படி போட்டடிக்கிறார்கள்? இதெல்லாம் ஒரு மாயை.. அடுத்தபடியாக சிங்கள மக்களின் உரிமைக்காக தாங்கள் ஏதோ போராடியதாக சரித்திரத்தில் அதாவது சிங்கள சரித்திரத்தில் தங்களின் பெயரையும் சேர்த்துக்கொள்ள வெனுமென்ற ஒரு நட்பாசை..அவ்வளவுதான்...

நடந்தவை நடந்தவை தான்..

நடப்பவை நடப்பவை தான்..

நடக்கப்போகிறவை பாரதூரமானவை.

Edited by Valvai Mainthan

ஆனால் இதற்காக ஜனாதிபதி இவர்களை பழிவாங்க மாட்டார். மாறாக செல்மாக கடிந்து கொள்வார் அவ்வளவுதான். ஏனெனில் இதுவும் மகிந்த சிந்தனை தொடரின் நடுவில் வரும் அத்தியாயம்தான்.

இறுதி அத்தியாயம் உங்களுக்கு தெரிந்தது தானே!

நமக்கும் சிறீ லங்காவின் தேசப்பற்றாளர் பட்டியலில் நமது பெயரை உள்ளடக்க ஆசையாக இருகிறது. ஜனாதிபதி தவிர பொதுஜனங்களிற்கு இப்படி ஒரு சான்ஸ் தந்து பார்க்க மாட்டார்களா? ஹெல்ப் பிளீஸ்! நமக்கு 24 மணிநேரம் கால அவகாசம் எல்லாம் தேவையில்லை, எதையாவது கிழித்தெரியும் வேலை தரப்பட்டால் உடனடியாகவே அதை instant ஆக செய்து முடிக்க தயாராக இருக்கிறோம். அது நாம் போட்டிருக்கும் கோவணமாக இருந்தால் கூட நமக்கு கவலையில்லை! சிறீ லங்காவின் தேசப்பற்றாளர் பட்டியலில் எமது பெயர் வருவதுதான் நமக்கு முக்கியம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கும் சிறீ லங்காவின் தேசப்பற்றாளர் பட்டியலில் நமது பெயரை உள்ளடக்க ஆசையாக இருகிறது. ஜனாதிபதி தவிர பொதுஜனங்களிற்கு இப்படி ஒரு சான்ஸ் தந்து பார்க்க மாட்டார்களா? ஹெல்ப் பிளீஸ்! நமக்கு 24 மணிநேரம் கால அவகாசம் எல்லாம் தேவையில்லை, எதையாவது கிழித்தெரியும் வேலை தரப்பட்டால் உடனடியாகவே அதை instant ஆக செய்து முடிக்க தயாராக இருக்கிறோம். அது நாம் போட்டிருக்கும் கோவணமாக இருந்தால் கூட நமக்கு கவலையில்லை! சிறீ லங்காவின் தேசப்பற்றாளர் பட்டியலில் எமது பெயர் வருவதுதான் நமக்கு முக்கியம்!

<<<

முதலில்..இந்த பிக்குகளூக்கும் அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?!!....அரசையே துறந்து கெளதமர் புத்தரானார்...இவங்கள் என்னண்டா....தமிழனையே அழிக்கவேணும் என்று நிற்கிறாங்கள்.. கன காலம் இல்லை!!....உங்களுக்கு விரைவில் படிப்பிக்கிறம் ....

புத்தம்சரணம் கச்சாமி!!..

அப்ப மகிந்தர் நம்மட பக்கமிருந்தே இவ்வளவு காலமும்

போராடினவர்? இது தெரியாமல் திட்டோ திட்டென்று திட்டிப்

போட்டம்.ஜனாதிபதியையும் காசு கொடுத்து வளைக்கலாம்

என்று இப்ப தெரியுது.

  • கருத்துக்கள உறவுகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்தை 24 மணி நேரத்துக்குள் ரத்துச் செய்யாவிடின் கடும் நடவடிக்கை

24 மணித்தியாலங்களுக்குள் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்துச்செய்யாவிடின் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பிக்கு முன்னணி அறிவித்துள்ளது.

போர்நிறுத்த ஒப்பந்தத்தினை ரத்துச் செய்யுமாறு கோரி தேசிய பிக்கு முன்னணி கடந்த 12ஆம் திகதி முதல் கொழும்பு விகாரமாதேவி பூங்கா வளவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்தி வருகின்றது. நேற்று இங்கு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிக்கு முன்னணியின் அமைப்பாளர் கலேவல்ல சந்திரலோகதேரர் 24 மணி நேரத்துக்குள் ஒப்பந்தத்தை ரத்துச் செய்யாவிடின் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றார்.

தேசத்துரோக பட்டியலில் ஜனாதிபதி சேராத போர்நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார்

-வீரகேசரி

போற போக்கை பார்த்த மகிந்தாவுக்கு அடி விழும் போல?

இவன்கள் பிக்கு மாருக்கும் ஜேவிப்பி காரருக்கும் கடும் போட்டி யார் உண்மையான சிங்கள இனவாதிகள் என்று காட்டுவதுக்கு.

அதுக்கு மகிந்தாவை போட்டு( அவன் கனக்கில் எடுத்தால் தானே)

  • தொடங்கியவர்

இப்ப யாழ்களத்தில் கோவணம் கிழிக்க போட்டி நடக்குது போல கிடக்கு எல்லோருக்கும் வாயில வாற சொல்லு கோவணம்தான் இப்ப

  • கருத்துக்கள உறவுகள்

24 மணி நேர கால அவகாசமும் முடிந்து விட்டது.

மகிந்தா தேசப்பற்றாளர் பட்டியலில் இடம்பெற்றரா இல்லையா?

24 மணி நேர கால அவகாசமும் முடிந்து விட்டது.

மகிந்தா தேசப்பற்றாளர் பட்டியலில் இடம்பெற்றரா இல்லையா?

எல்லாம் ச்சும்மா பிக்கூஸ் விடும் பம்மாத்துக்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.