Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாம்பார் தென்னிந்திய உணவு இல்லை? அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு!

Featured Replies

சாம்பார் தென்னிந்திய உணவு இல்லை? அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு!

 

தமிழர்களையும் சாம்பாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழகம் என்றாலே இட்லி, சாம்பார்,  சட்னிதான் நினைவுக்கு வரும். பிரிட்டன் மகாராணி முதல் ஆப்பிரிக்கர்கள் வரை தமிழகம் வந்தால், ஒரு முறையாவது சாம்பாரை டேஸ்ட் பார்க்காமல் போக மாட்டார்கள். பல ஹோட்டல்களில் சாம்பாரின் சுவைக்காகவே இட்லி சாப்பிடும் வட இந்தியர்களை, வெளிநாட்டவர்களைப் பார்க்க முடியும். முருங்கைக்காய் சாம்பார், பருப்பு சாம்பார், துவரம் பருப்பு சாம்பார், அவரை சாம்பார் என இப்போது விதவிதமாகச் சமைக்கிறோம்.

சாம்பார் மராட்டிய மன்னர்கள் தமிழகத்துக்கு அளித்த கொடை

சாம்பார் இல்லாத எந்த விஷேச நிகழ்வும் தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவிலேயே நடந்துவிடாது. விருந்திலிருந்து அன்றாட உணவு வரை ஏதாவது ஒரு வடிவத்தில் சாம்பார் இடம்பெற்றிருக்கும். தமிழரின் உணர்வுடன் உயிருடன் கலந்துவிட்ட விஷயம் சாம்பார். இத்தனை காலம் சாம்பார், தமிழர்களின் பாரம்பர்ய சமையல் என்று இறுமாப்புடன் இருந்தோம். இப்போது, அதற்கும் பங்கம் வந்து விட்டது. சாம்பார்கூட மராத்தியர்களின் கண்டுபிடிப்பாம். தமிழகத்துக்கு மராத்தியர்கள் வழங்கிய கொடை என்கிறார்கள். 

தமிழகத்தின் தன்னிகரில்லாத் தலைநகரமாக விளங்கிய நகரம் தஞ்சை, நாயக்கர்களின் பிடியில் இருந்தது. கி.பி.1674 ஆம் ஆண்டு மராத்திய மன்னர் சிவாஜியின் ஒன்று விட்ட சகோதரர் வெங்கோஜி தஞ்சையைக் கைப்பற்றினார். வீர சிவாஜியின் ஆதரவுடன் மராத்தியர்கள் தஞ்சை மண்ணில் நிலை கொண்டனர். வெங்கோஜியைத் தொடர்ந்து, சாஹூஜி -1. சரபோஜி -1 துக்காஜி, பிரதாப்சிங், துக்கோஜி, சரபோஜி-2 ஆகியோர் தஞ்சையை ஆண்டனர். 

இரண்டாம் சரபோஜி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த காலத்தில் (1798 ஆம் ஆண்டு) இந்தியா முழுவதும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது. ஆங்கிலேயர்களை எதிர்க்க சரபோஜி விரும்பவில்லை. அவர்களுடன் நட்பு பாராட்டி அமைதியாக வாழவே விரும்பினார். இவரது காலத்தில், தஞ்சை மண்ணில் கலைகள் செழித்தன. கல்வி பெருகியது. சரபோஜி உணவுப் பிரியரும்கூட. 

தஞ்சை அரண்மனையில் பிராமண சைவ உணவுக்கு ஒரு சமையலறை, அசைவ உணவுக்குத் தனிச் சமையலறை, ஆங்கிலேய உணவுக்கு ஒரு சமையலறை எனத் தனித்தனிச் சமையலறைகள் இருந்துள்ளன. சமையலில் நிபுணத்துவம் பெற்றவர்களைப் பணிக்கு வைத்திருந்தார். தஞ்சை அரண்மனை  சமையற்காரர்கள் சிலர், சென்னை ஜார்ஜ் கோட்டையில் இங்கிலீஸ் சமையலையும் கற்று, அதிலும் மாஸ்டராகத் திகழ்ந்துள்ளனர். அதுபோல், மராத்திய உணவு வகைகளில் திறமை வாய்ந்த இரு சமையற்கலைஞர்களையும் சரபோஜி, ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அரண்மனையில் தயாரிக்கப்படும் விதவிதமான உணவுகளை சமையற்காரர்கள் சொல்லச்சொல்லக் குறிப்பெடுத்து வைக்கும் வழக்கமும் சரபோஜிக்கு இருந்துள்ளது. சரபோஜியின் அரண்மனையில் பணியாற்றிய நாராயண அய்யா, சிம்னு அப்பா, பட்லர் வெங்கட்ஸ்வாமி ஆகியோர் வாய்மொழியாகக் கூறிய விஷயங்கள் கையெழுத்தாகவே ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சமையற்காரர்கள் எந்த உணவைத் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்கள், சமையல் முறை, அவர்களுக்கு வழங்கப்பட்ட சம்பளம், விழாக்காலங்களில் சமைக்கப்பட்ட உணவுகள் முதற்கொண்டு 500 குறிப்புகள்' சரபேந்திர பக்ஷாஸ்திரம் ' என்ற பெயரில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

சரி... சாம்பார் உருவானதாகச் சொல்லப்படும் கதைக்கு வருவோம். கடந்த ( 1684- 1712) காலகட்டத்தில் தஞ்சையை சாஹூஜி ஆண்டு கொண்டிருந்தார். தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன்  இவர். சாஹூஜிக்கு  'அமிதி ' என்ற புளிக்குழம்பு மிகவும் பிடிக்கும். மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள். வழக்கமாக நாம் பயன்படுத்தும் புளியைப் பயன்படுத்தி புளிக்குழம்பை அவர்கள் சமைக்கவில்லை. கோகம் எனப்படும் ஒரு வகைப் புளியையே பயன்படுத்திவந்தனர். மகாராஷ்டிரம், குஜராத்தில்தான் இந்த வகைப் புளி அதிகம் விளைகிறது. ஒருநாள் அரண்மனை போஜன சாலையில், கோகம் இல்லாமல் போய்விட்டது.

அந்தச் சமயத்தில் தமிழகத்தில் விளையும் புளியம்பழத்தை வைத்து, துவரம்பருப்பு, காய்கறி, மசாலா ஆகியவற்றைச் சேர்த்து ஒரு குழம்பு வைத்திருக்கிறார்கள். அதுதான் சாம்பார். மன்னர் சாஹூஜிக்கு சாம்பார் மிகவும் பிடித்துப்போனது. மராட்டிய அரசின் இரண்டாவது மன்னரான ஷாம்பாஜி, (வீரசிவாஜியின் மூத்த மகன்) தஞ்சைக்கு ஒருமுறை விருந்துக்கு வந்துள்ளார். அன்றைய தினத்தில், இந்த வகைக் குழம்பைத் தயாரித்துப் பரிமாறியுள்ளார். விருந்துக்கு வந்த அவருக்கும் சாம்பாரின் சுவை பிடித்துப்போனது. அந்தக் குழம்புக்கு  'ஷாம்பாஜி' பெயரையே சூட்டியதாகக் கூறப்பட்டுள்ளது. இதுதான் சாம்பாருக்கு அடிப்படையாம். இப்படித்தான் சாம்பார் தமிழகத்துக்கு வந்துள்ளது. அதே வேளையில், தமிழகத்துக்கு முன்னரே ஆந்திரத்தில் சாம்பார் சமைக்கப்பட்டதாகவும் சொல்பவர்கள் உண்டு. 

 

பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட போஜன குதூகலம், சரபேந்திர பக்ஷாஸ்திரம் ஆகிய இரு புத்தகங்கள்  மராட்டிய உணவு செய்முறையை விளக்குபவை. இரண்டாம் சரபோஜி காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளன.

http://www.vikatan.com/news/tamilnadu/90339-is-sambar-south-indian-dish.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 minutes ago, நவீனன் said:

சாம்பார் தென்னிந்திய உணவு இல்லை? அதுக்கும் ஒரு வரலாறு இருக்கு!

கெட்டுது போ......ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப கடைசியிலை சாம்பாரிலையும் கையை வைச்சுட்டாங்களே?
இனி ஒடியல் கூழுக்கும் உங்கை ஆரும் உரிமை கோரினாலும் கோருவாங்கள் கண்டியளோ :cool:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

கெட்டுது போ......ஆட்டைக்கடிச்சு மாட்டைக்கடிச்சு இப்ப கடைசியிலை சாம்பாரிலையும் கையை வைச்சுட்டாங்களே?
இனி ஒடியல் கூழுக்கும் உங்கை ஆரும் உரிமை கோரினாலும் கோருவாங்கள் கண்டியளோ :cool:

உங்க பிரிட்டனிலே பங்காளதேசக்காரர் கறி தங்கண்ட என்று சொல்லி, இப்ப நாறிப் போய் நிக்கினம்.

டிக்கா மசாலா, விண்டலோ என்று குளுசை குடுத்து, அதுக்கு மேல வேற என்ன விஷயம் இருக்கு என்று கேட்க, அம்புட்டு தான் என்று கையைப் பிசைந்து, பைனாசியல் டைம் பேப்பர்ல, கறி உண்மையானது அல்ல எண்டு தெரிஞ்சு சனம் சைனீஸ் உணவுகளில் ஆர்வம் செலுத்துகிறார்கள் என்று எழுதிப்போட்டுது.

இவை இப்ப சாம்பார்ல கை வைக்கினம். மராத்திப் பக்கம் போய் கேட்டால், சாம்பாரா, அப்படீன்னா என்ன எண்டுவினம்.  

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.