Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்! இளைஞர்களை கட்டி வைத்து தாக்கிய பொது மக்கள் - திருகோணமலையில் பெரும் பதற்றம்

Featured Replies

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் தமிழ் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு அந்த பிரதேசத்தில் தற்போது அமைதியின்மை நிலவுகின்றது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்களை ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து தாக்கியுள்ளதாகவும், அவர்களை கட்டி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிசார் உள்ளிட்ட எவரையும் குறித்த பிரதேசத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கட்டட நிர்மாணப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்களே குறித்த சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மூன்று சிறுமிகளும் வைத்திய பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilwin.com/community/01/147213?ref=recommended1

  • தொடங்கியவர்

தமிழ் சிறுமிகளுக்கு ஏற்பட்ட அவலம்! சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர்கள் கைது

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோகணேசன் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த பகுதியில் முரண்பாடுகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியிடன் கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திருகோணமலை, மூதூர், மல்லிகைத்தீவு பகுதியில் தமிழ் சிறுமிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து லங்காசிறி செய்தி சேவைக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சம்பவத்தில் 10 வயது மதிக்கத்தக்க சிறுமிகளே பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சிறுமிகளை வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கூறியுள்ளேன்.

குறித்த சிறுமிகளின் வைத்திய பரிசோதனை திருகோணமலை வைத்தியசாலையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாக கூறியிருப்பதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் முஸ்லிம் இளைஞர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் உரிய முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

இதேவேளை, குறித்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் அந்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு எடுத்துக்கூறியுள்ளேன்.

அத்துடன், பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகளுக்கு எந்த வகையிலும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதையும் வலியுறுத்தி இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.tamilwin.com/community/01/147226?ref=home-top-trending

  • தொடங்கியவர்
3 சிறுமிகள் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமைக்கு கண்டனம்

image_433a7604a2.jpg

எட்டு வயதுடைய சிறுமிகள் மூவர்; வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைக் கண்டித்து மூதூரில்  இன்று காலை வெவ்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

கிளிவெட்டிப் பாடசாலை, மல்லிகைத்தீவுப்; பாடசாலை மற்றும் மூதூர் கிழக்குப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் பாடசாலைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பெரியவெளிக் கிராமத்திலுள்ள பாடசாலையொன்றில் கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுவரும் தொழிலாளிகள் சிலர்,  நேற்று பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற இந்தச் சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து மேற்படி சந்தேக நபர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த ஒப்பந்தக்காரரைப் பொதுமக்கள் தடுத்து வைத்திருந்ததாகவும் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி உள்ளிட்டோர் பொதுமக்களுடன்  கலந்துரையாடியதை அடுத்து, ஒப்பந்தக்காரர் விடுவிக்கப்பட்டார்.

இதன்போது, அங்கு ஏற்பட்ட பதற்ற நிலைமையைத் தவிர்ப்பதற்காகப் பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.  

எனவே, இந்தச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்தச் சம்பவம் தொடர்பில் சட்ட நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுக்க வேண்டும் எனவும் ஆர்;ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மூதூர் நகரில் இன்று காலை 4 பேரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

image_f948f2ab41.jpg

http://www.tamilmirror.lk/திருகோணமலை/3-சிறுமிகள்-வன்புணர்வுக்கு-உட்படுத்தப்பட்டமைக்கு-கண்டனம்/75-197516

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவே தமிழ் இளைஞ்ர்கள் செய்து இருந்திருந்தால் நிலமை வேறு  நோன்பு என்ற இந்த  மிருகங்கள் செய்த  வேலைக்கு  சங்க அறுக்க வேண்டும் 

திருமலையில் தமிழர் நிலங்கள் முஸ்லிம்களால் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்து வரப் படும் நிலையில் இப்போது இவ்வாறான மிருகத் தனமான செயல்களிலும் சில முஸ்லிம்கள் இறங்கி விட்டார்கள்

பெரி­ய­வெளி சிறு­மியர் துஷ்­பி­ர­யோக சம்­பவம்; ஐவ­ருக்கு விளக்­க­ம­றியல்

(மூதூர், சேனையூர் நிரு­பர்கள்)

மூதூர் பெரி­ய­வெ­ளியில் சிறு­மியர் மூவர் பாலியல் துஷ்பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட சம்­ப­வத்­துடன் தொடர்புபட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் ஏற்­க­னவே நான்கு பேர் கைது­செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை மாலை மேலும் ஒரு­வரை பொலிசார் கைது செய்­துள்­ளனர், 

இதன்­படி இது­வரை ஐவர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­துடன் மேற்­படி ஐவ­ரையும் எதிர்­வரும் 5ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க மூதூர் நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது,

கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை பெரி­ய­வெளி பாட­சா­லையில் அற­நெறிப் பாட­சா­லையை முடித்த பின்னர் அங்கு நின்­றி­ருந்த மூன்று சிறு­மி­க­ளையும் ஆசை­வார்த்தை காட்டி ஏமாற்றி மலக்­கூடம் ஒன்­றுக்கு அழைத்­து­சென்று துஸ்­பி­ர­யோகம் செய்­த­தாக கூறப்­படும் சம்­பவம் அங்கு பெரும் குழப்­ப­க­ர­மான நிலையை தோற்­று­வித்­தி­ருந்­தது,

சம்­பவம் இடம்­பெற்ற மறுநாள் நான்கு பேர் கைதான போதும் தீவிர விசா­ர­ணை­களின் பின்னர் நெருங்­கிய தொடர்­பு­டைய மேலும் ஒரு­வரை பொலிசார் தேடி வந்­தனர். இந்­நி­லையில் செவ்­வா­யன்று மாலை தோப்­பூரைச் சாரந்த மேற்­படி நபர் கைதா­கி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து ஐவ­ரையும் நீதி­மன்றில் ஆஜர் செய்­த­போதே வரும் 5ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு மூதுர் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. மேல­திக விசா­ர­ணை­களை பொலி­சாரும் சிறுவர் நன்­ன­டத்தை திணைக்­கள அதி­கா­ரி­களும் தொடர்ந்து மேற்­கொண்டு வரு­கின்­றனர்.

மூதுார் பெரி­ய­வெளி சம்­ப­வத்­தை­ய­டுத்து நேற்று 3ஆவது நாளா­கவும் மூதுார் தெற்கு பாட­சா­லை­களின் இயக்கம் முடக்­கப்­பட்­டி­ருந்­தது,. மாண­வர்கள் பாட­சா­லைக்கு வருகை தரா­மை­யினால் இந்­நி­லமை ஏற்­பட்­டி­ருந்­த­தாக பாட­சாலை அதி­பர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

மூதுார் தெற்கில் உள்ள பெரி­ய­வெளி, இரு­த­ய­புரம், மணற்­சேனை, மல்­லி­கைத்­தீவு, கிளி­வெட்டி, தங்­க­நகர் போன்ற பல பாட­சா­லை­களின் நட­வ­டிக்­கை­கள முடங்கிக் காணப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது,

இதே­வைளை விஸேட பொலிஸ் குழு­வொன்று நேற்றும் பெரி­ய­வெளி பாட­சாலை நிரு­வாகம் மற்றும் அங்கு ஒப்­பந்த பணி­களில் ஈடு­பட்ட தொழி­லா­ளர்கள், பெற்றோரிடம் தீவிர விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதற்கிடையில் சில பாடசாலைகளில் அனாமதேய சுவரொட்டிகளும் காணப்பட்டன. குற்றவாளிகள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் வரை மாணவ சமூதாயத்தின் போராட்டம் தொடரும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது,

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-06-01#page-1

சிறுமிகள் மூவர் துஸ்பிரயோகம் : ஆர்ப்பாட்டக்காரர்களினால் மகஜர் கையளிப்பு

மூதூர், பகுதியில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தை கண்டித்து கவணயீர்ப்பு பேரணி ஒன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கதிரவெளி விக்கினேஸ்வரா மகா வித்தியாலய மாணவர்கள், மற்றும் கதிரவெளி புச்சாக்கேணி பாழைய மாணவர்கள், பூதூர் கிராமங்களை மக்களும், இளைஞர்களும் இந்த கவனயீப்பு பேரணியை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களினால் வாகரை பொலிஸ் அதிகாரிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 
 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த செயலை முழு நாடும் வன்மையாக கண்டிக்கின்றது.சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதன் மூலம் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும்.

கடந்த காலங்களில் இச்சட்டத்தை சிறப்பான முறையில் செய்திருந்தால் புங்குடுதீவு வித்தியா, தென் இலங்கையை சேர்ந்த சேயா என இப்பட்டியல் நீண்டு சென்றிருக்காது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இந்த வகையில் மணற்சேனை சம்பவத்துடன் தொடர்புடையவர்களை காப்பாற்றுவதற்காக கிழக்கு மாகாணத்தின் அரசியல்வாதிகளும், சட்டத்தரணிகளும் முன் நிற்பது அருவருக்கத்தக்க விடயமாகும்.

குறித்த செயற்பாடானது நிகழ்கின்ற நல்லாட்சியையும், நீதித்துறையையும் கேள்விக் குறியாக்கும் ஏது நிலையை எமக்கு தோற்றுவித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

ஆகவே, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர் கட்சித் தலைவர் உட்பட அனைவரும் கூட்டாக செயற்பட்டு விரைவாகவும் வினைத் திறன்கொண்டதுமான உடனடித் தீர்வை வழங்க வேண்டும்.

தவறும் பட்சத்தில் நாடு முழுவதும் தீவிரமான மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க நேரிடும். இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் இன வன்முறை வெடிப்பதுடன், நல்லாட்சியும் சீர்குழையும்.

இந் நிலை ஏற்படா வண்ணம் உடனடித் தீவை வழங்குமாறு வேண்டுகின்றோம் என அந்த மகஜரில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் மகஜர் கையளிக்கப்பட்டதும் மாணவர்கள் மற்றும் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை, நேற்றைய தினம் (6) வாகரை பால்சேனை மற்றும் வம்மிவட்டவான் பாடசாலை மாணவர்கள் மற்றும் சமூகத்தினால் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/community/01/148266?ref=home-feed

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.