Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் இயல்புநிலை பாதிப்பு

Featured Replies

வடக்கில் இன்று பூரண ஹர்த்தால் இயல்புநிலை பாதிப்பு

 

 

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக வடகிழக்கில் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெற்றுவருகின்றது.

DCaGUD5UwAABagF.jpg

ஹர்த்தாலை முன்னிட்டு வடமாகாணமெங்கும் கடைகள் பூட்டப்பட்டு பாடசாலைகள், வங்கிகள் அரச தனியார் நிறுவனங்கள் அனைத்தின் செயற்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.

DCaGWNRVwAAXXgx.jpg

இதனால் வடக்கின் இயல்புநிலை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

DCaGYgKV0AEEemz.jpg

குறித்த பொது கடையடைப்புக்கு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20928

  • தொடங்கியவர்

கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிப்பு

Published by Gnanaprabu on 2017-06-16 09:21:40

 

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டிருந்தது.

unnamed__18_.jpg

கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை. மேலும் பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமையினால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

unnamed__17_.jpg

அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாக காணப்பட்டமையும் காணக்கூடியதாக இருந்தது.

unnamed__16_.jpg

unnamed__15_.jpg

unnamed__14_.jpg

unnamed__13_.jpg

unnamed__12_.jpg

unnamed__11_.jpg

unnamed__10_.jpg

unnamed__8_.jpg

http://www.virakesari.lk/article/20925

வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை.

மேலும் பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வரவு மிகவும் குறைவாக காணப்பட்டமையினால் கல்விச் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

அரச திணைக்களங்களிலும் உத்தியோகத்தர்களின் வரவு குறைவாக காணப்பட்டமையும் காணக்கூடியதாக உள்ளது.

இந்த நிலையில் காலையில் பூட்டப்பட்டிருந்த கடைகள் சில தற்போது திறக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/politics/01/149256

  • தொடங்கியவர்

கிளிநொச்சியில் வடக்கு முதல்வருக்கு கடையடைப்பு

 
கிளிநொச்சியில் வடக்கு முதல்வருக்கு கடையடைப்பு
  •  

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சி நகர்ப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன.

பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமை போன்று இடம்பெறவில்லை. பாடசாலைகளுக்கும் மாணவர்களின் வரவு குறைவாக காணப்பட்டது என்று கூறப்படுகின்றது.

 

 

http://uthayandaily.com/story/6964.html

DSC04559.jpg

DSC04561.jpg

IMG_9226.jpg

  • தொடங்கியவர்

விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கடையடைப்பு

 

வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமை தொடர்வதனால், வடபகுதியில் அரசியல் ரீதியான பரபரப்பான நிலைமை ஒன்று உருவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முழுமையான கடையடைப்பு

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.

முன்னதாக முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று வெள்ளிக்கிழமை வடபகுதியில் கடையடைப்பை மேற்கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை வேண்டுகோள் விடுத்திருந்தது.

ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பொதுமக்கள் கூடி ஆர்ப்பாட்டங்களை நடத்தியிருக்கின்றனர்.

அதேவேளை, மன்னார் நகரம் அமைதியாகக் காணப்படுவதுடன் அங்கு வழமை நிலைமை காணப்படுகின்றது

வடமாகாண முதலமைச்சர் தனது அமைச்சரவையைச் சேர்ந்த நான்கு அமைச்சர்களுக்கும் எதிராக முன்வைக்கப்பட்ட ஊழல் தொடர்பான விசாரணைகளின் பின்னர், விசாரணை குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட பரிந்துரைக்கு அமைவாக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த இரண்டு அமைச்சர்களையும் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என கோரியிருந்தார்.

அதேவேளை, குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உரிய சாட்சியங்கள் அளிக்கப்படாத காரணத்தினால் ஏனைய இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விலக்கிக் கொள்வதாகவும், அவர்கள் குற்றமற்றவர்கள் என்றும் விசாரணைக் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

யாழ்ப்பாணத்தில் முழுமையான கடையடைப்பு

 

ஆனால், இந்த இரண்டு அமைச்சர்களுக்கும் எதிரான புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவர்கள் இருவரும் விசாரணைகள் முடியும் வரையில் தமது அமைச்சு பொறுப்புக்களில் இருந்து விலகி விடுமுறையில் இருக்க வேண்டும் என கூறியிருந்தார்.

முதலமைச்சரின் இந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள மறுத்த தமிழரசுக் கட்சியின் மாகாண சபை உறுப்பினர்கள் 15 பேர் முதலமைச்சர் மீது நம்பிக்கை இல்லை என தெரிவிக்கும் தீர்மானம் அடங்கிய கடிதத்தை வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரேயிடம் நேரடியாகக் கையளித்து, அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரியிருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் முழுமையான கடையடைப்பு

இந்தக் கோரிக்கைக்கு தமிழரசுக்கட்சியின் தலைமையும் முழு ஆதரவை வழங்கியிருந்தது.

இதனையடுத்து வடமாகாண சபையின் ஆளும் கட்சியைச் சேர்ந்த வேறு 15 உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முதலமைச்சருக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் கடிதத்தை ஆளுனரிடம் வியாழன்று கையளித்திருந்தனர்.

இந்த நிலையில் முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்தும், எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டு அணிகளாக வடமாகாண சபையின் உறுப்பினர்கள் பிரிந்திருக்கின்றனர்.

வடமாகாண சபையின் குழப்பகரமான நிலைமைக்கு முடிவு காண்பதற்காகத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை என கூட்டமைப்பைச்சேர்ந்த முக்கியஸ்தர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியில் ஒன்றாகிய டெலோவின் தலைமைக்குழு கூடி நிலைமைகளை ஆராய்ந்து, முதலமைச்சருக்குத் தனது ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதேநேரம் முதலமைச்சர் மீது நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்ட கடிதத்தை ஆளுனரிடம் தெரிவித்த விடயத்தில் தமிழரசுக்கட்சி தன்னிச்சையாக நடந்து கொண்டிருப்பதாக டெலோ கட்சியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-40298655

  • தொடங்கியவர்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு போராட்டம்.

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இல்லம் முன்பாக சென்ற போராட்டக்காரர்களுடன் அவர் பேசினார்.

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் செருப்படி என்பது முள்ளிவாய்காலில் விக்கியின் காலை பிடிச்சு சனம் குளறுதுகள் ஏன் என்றதுக்கு சுமத்திர பூச்சு மெழுகல் இருக்கே இன்று எல்லோருக்கும் விளங்கியிருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

காலையில்  ஒரு  நல்ல  செய்தி...

தமிழரசுக்கட்சிக்கு இது புரியுமா????

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.