Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"புதிய அரசியலமைப்பை பௌத்த பீடங்கள் முழுமையாக எதிர்க்கும்" அஸ்கிரிய பீடம்

Featured Replies

"புதிய அர­சி­ய­ல­மைப்பை பௌத்த பீடங்கள் முழு­மை­யாக எதிர்க்கும்" அஸ்­கி­ரிய பீடம்

 

 

தேர்தல் திருத்தம் தவிர  அர­சி­ய­ல­மைப்பில் வேறு எந்­த­வொரு திருத்­தமும் செய்­ய­வேண்­டிய அவ­சியம் இல்லை. புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு பெளத்த பீடம்  முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றது என்று   அஸ்­கி­ரிய மகா­நா­யக பீடம் தெரி­வித்­துள்­ளது.  

pikku.jpg

அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் அர­சியல் வாதி­களின் கருத்­துக்­களில் நம்­பிக்கை இல்லை. புதிய அர­சியல் அமைப்பு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக்க தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய  நிலைமை வரும் எனவும் அஸ்­கி­ரிய மகா­நா­யக்க பீடம் குறிப்­பிட்­டுள்­ளது. 

புத்­த­சா­சன அமைச்சின் பிர­தி­நி­திகள் குழு நேற்று முன்­தினம் இரவு அஸ்­கி­ரிய மகா­நா­யக தேரர்­க­ளுடன் சந்­திப்­பொன்றை மேற்­கொண்டு புதிய அர­சியல் அமைப்பில் பெளத்த மத பாது­காப்பு குறித்து கலந்­து­ரை­யாடல் ஒன்றை மேற்­கொண்­டி­ருந்­தனர். இந்த சந்­திப்­பி­லேயே  ஆன­ம­டுவே தம்­ம­தாச அனு­நா­யக தேரர் இதனை வலி­யு­றுத்­தி­யுள்ளார். 

அவர் இதன்­போது மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது 

இந்த நாட்டில் இது­வரை இருந்த அர­சியல் அமைப்பில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை.  எனினும் புதிய அர­சியல் அமைப்பு ஒன்று உரு­வாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி கூறு­மாயின், மாற்றம் வேண்டும் என தெரி­விப்­ப­தாயின்   தேர்தல் முறை­மையில் மாற்­றத்தை கொண்­டு­வர வேண்­டுமே தவிர  வேறு எந்­த­வொரு மாற்­றமும் செய்ய வேண்­டிய அவ­சியம் இல்லை.  

தேர்தல் முறை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வது மற்றும் ஒரு­சில முக்­கிய விட­யங்கள் தவிர்த்து புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்க  பெளத்த மதத் தலை­வர்கள் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்­றனர். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு நாம் முழு­மை­யாக எதிர்ப்பை தெரி­விக்­கின்றோம். ஜனா­தி­பதி முறைமை அவ­சியம். நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை இந்த நாட்டில் இருக்க வேண்டும். மாற்றம் கொண்­டு­வர வேண்டும் என்றால் அது தேர்தல் திருத்­தங்­களில் மாத்­திரம் கொண்­டு­வர வேண்டும். 

எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் புதிய அர­சி­ய­ல­மைப்பு திட்­டத்தை முன்­வைப்­ப­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது. இன்னும் ஒரு மாத காலமே உள்­ளது. இதில் அனை­வ­ரதும் கருத்­துக்கள் எவ்­வாறு உள்­வாங்­கப்­பட்­டன என்­பது தெரி­ய­வில்லை. இந்த நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும் என்றால் நாட்டில் உள்ள சகல மகா­நா­யக தேரர் பீடமும் ஒன்­று­கூடி போரா­ட­வேண்­டிய  நிலைமை வரும். இப்­போது இவர்­களின் பயணம் எவ்­வா­றா­னது என்­பது எமக்கு தெரி­கின்­றது. 

புதிய அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் ஆரம்­பத்தில் மகா­நா­யக தேரர்கள் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். அதேபோல் அர­சாங்­கத்தின் ஒரு­சில விட­யங்கள்  தொடர்பில் கருத்­துக்­களை முன்­வைத்­துள்­ளனர். இந்த விட­யங்­களை நாம் நல்ல எடுத்­துக்­காட்­டாக கொண்டு தொடர்ந்தும் எமது நிலைப்­பாட்டில் இருந்து செயற்­ப­ட­வுள்ளோம். 

புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் ஒவ்­வொரு அர­சியல் வாதி­களும் கூறும் கருத்­துக்கள் மற்றும் ஒவ்­வொரு தலை­வர்­களும் எம்­மிடம் வந்து கூறும் கருத்துக்கள் தொடர்பில் எமக்கு நம்பிக்கை இல்லை. அரசாங்கம் எதைக் கூறினாலும் இந்த நாட்டில் பெளத்த சிங்கள மக்களை பாதிக்கும் நடவடிக்கைகளை எம்மால் வேடிக்கை பார்க்க முடியாது. ஆகவே நாம் தெளிவான நிலைபாட்டில் இருந்து எமது கருத்துக்களை முன்வைத்துவருகின்றோம்  என்றார். 

http://www.virakesari.lk/article/21463

இவர்கள் அனைவரையும் இவர்கள் புறப்பட்டு வந்த வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்புவதே ஒரேவழி!

  • தொடங்கியவர்

புதிய அரசியலமைப்பு தேவையில்லையென மகாநாயக்கர்கள் அதிரடியாக முடிவு

 

 

புதிய அரசியலமைப்பு நாட்டுக்குத் தேவையில்லையென இலங்கையிலுள்ள மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் தீர்மானித்துள்ளனர். 

contitiustion.jpg

மூன்று பௌத்த மத பீடங்களுக்கான மகாநாயக்க தேரர்கள் இன்று மாலை சந்திப்பொன்றை மேற்கொண்டு ஒருமனதாக இந்த முடிவை எடுத்துள்ளதாக, தெரியவந்துள்ளது. 

 

இதேவேளை, நாட்டில் தற்போது புரையோடிப்போயுள்ள சைட்டம் பிரச்சினைக்கு அரசாங்கம் அவசரமாக தீர்வு காணவேண்டுமெனவும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டுள்ளது.

தற்போதுள்ள அரசியலமைப்பை அவ்வாறே தொடர்ந்தும் பேணுவது பொருத்தமானது எனவும்  தேர்தல் முறையை மட்டும் மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் இதன்போது ஏகமனதாக  முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/21493

  • தொடங்கியவர்

இராணுவத்தின் வெற்றிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தவே சர்வதேச சமவாய சட்டமூலம் : பெங்கமுவே நாலக தேரர் 

 

 

(ந.ஜெகதீஸ்)

இராணுவத்தினரின் வெற்றிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்ட மூலமானது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளதென தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

monk-720x4041.jpg

இன்று பாராளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ள குறித்த சட்ட மூலத்திற்கான ஆதரவு வழங்கும் அமைச்சர்கள் அனைவரும் தேசத்துரோகிகள் பட்டியலிலேயே இணைத்துக்கொள்ளப்படுவர்.

 

வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்படுதலில் இருந்து ஆட்களை பாதுகாப்பதற்கான சர்வதேச சமவாய சட்ட மூலமானது இராணுவத்தினரின் வெற்றிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காகவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கொழும்பு கோட்டை  புகையிரத நிலையத்திற்கு முன்பாக சத்தியாக்கிரக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அமைச்சர்களே இராணுவ வெற்றிக்கு உதவிய இராணுவ வீரர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாதீர், அமைச்சர்களே இராணுவ வீரர்களின் சமூக பயணத்திற்கு தடை ஏற்படுத்தாதீர்கள் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்திய வண்ணம் அமர்ந்து குறித்த எதிர்ப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பெங்கமுவே நாலக தேரர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

http://www.virakesari.lk/article/21497

  • தொடங்கியவர்

புதிய அரசியல் அமைப்போ திருத்தமோ நாட்டுக்கு தேவையில்லை

Published by RasmilaD on 2017-07-05 09:47:53

 

புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவதோ  அல்லது அரசியல் அமைப்பு திருத்தம் மேற்கொள்வதோ அவசியம் இல்லை. இப்போது உள்ள அரசியல் அமைப்பில் தேர்தல் முறைமையை மாத்திரம் மாற்றியமைத்தால் போதுமானது என நாட்டின் பிரதான பௌத்த பீடங்களான மல்வத்த,அஸ்கிரிய, ராமாஞ்ய நிக்காய, அமரபுர நிக்காய ஆகிய நான்கு பீடங்களும் கூடி தீர்மானித்துள்ளன. இராணுவ வீரர்களுக்கு எதிராக இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலத்தை உடனடியாக நிறுத்தவேண்டும் எனவும் நான்கு பீடங்களின் ஒன்றிணைந்த நிலைப்பாட்டை நாளை ஜனாதிபதியிடம் முன்வைக்கவுள்ளதாகவும் மகாநாயக்கர்கள் தெரிவுத்துள்ளனர். 

அஸ்கிரிய பீடத்தில் நேற்று பிற்பகல் பிரதான நான்கு பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விசேட சந்திப்பொன்றை மேற்கொண்டனர். நாட்டின் தற்போதைய நிலைமைகள், பெளத்த சிங்கள உரிமைகள் பாதுகாக்கப்படல் மற்றும் பெளத்த விகாரைகள் தொடர்பில் அரசாங்கம் செயற்படும் நகர்வுகள் குறித்தும் புதிய அரசியல் அமைப்பு தொடர்பிலும் மகாநாயக்க தேரர்கள் கூடி முடிவெடுத்துள்ளனர். அவர்களின் தீர்மானம் குறித்து மல்வத்து மாகா பீடத்தின்  அனுசாசகர் ஆனமடுவே  தமம்தத்த தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுவதானது, 

தற்போதைய நிலைமைகள் மிகவும் மோசமான வகையில் அமைந்து வருவதுடன், அரசியல் நடவடிக்கைகளை பெளத்த சிங்கள புனிதத்தை அழிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே இப்போது இருக்கும் அரசியல் அமைப்பில் உள்ள அலகுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து சென்றால் பெளத்த சிங்கள கொள்கைகள் பாதுகாக்கப்படும் அதேநிலையில் ஏனைய  மத நடவடிக்கைகளும் உறுதிப்படுத்தப்பட்டு கொண்டுசெல்லப்படும். மாற்றம் ஒன்று கொண்டுவர வேண்டும் என்றால் அது தேர்தல் முறைமையில் மாத்திரம் கொண்டுவர முடியும். தேர்தல் முறைமையில் மாற்றத்தை கொண்டுவந்து அனைத்து மக்களின் வாக்குரிமைகளையும் பாதுகாக்கும் அதேநிலையில் அநியாயம் இழைக்காத வகையில் கொண்டுசெல்ல தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவர முடியும். 

மேலும் இறுதி யுத்த காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சில முரண்பாட்டு சம்பவங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்தும் இராணுவ வீரர்களை தண்டிக்கும் வகையிலான சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் விதத்தில்  நாளை( இன்று) பாராளுமன்றத்தில் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது. எனினும் இவ்வாறன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக் கூடாது. இராணுவ வீரர்களை தண்டிக்கும் வகையிலான சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் கொண்டுவருவதை உடனடியாக நிறுத்த வேண்டும். 

அதேபோல் நாட்டில் மத இன முரண்பாடுகள் ஏற்படும் சூழ்நிலை ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. அதேபோல் இந்த நாட்டின் புராதன மற்றும் பெளத்த அடையாளங்களும் அழிக்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன. ஆகவே இவ்வாறான நிலைமைகளை நிறுத்தும் வகையில் சரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளது. அதேபோல் புதிய அரசியல் அமைப்பு ஒன்றோ அல்லது அரசியல் அமைப்பு திருத்தம் ஒன்றோ அவசியம் இல்லை. மக்களுக்கு அவசியமான வகையில் சில மாற்றங்களை கொண்டுவர முடியும் ஆனால் முழுமையாக மாற்ற வேண்டாம் என  பிரதான மகாநாயக தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

அதேபோல் நேற்றைய சந்திப்பில் மூன்று பிரதான மாநாயக தேரர்களும் முன்னெடுத்த தீர்மானங்களை நாளை வியாழக்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் என மாகா பீடத்தின்  அனுசாசகர் ஆனமடுவே  தமம்தத்த தேரர் நேற்றைய மகாநாயக தேரர்களுடனான சந்திப்பு குறித்து தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/21504

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் சொறீலங்கா பிரித்தானியர்களிடம் இருந்து சிங்களவர்களிடம் கையளிக்கப்பட்ட காலத்தில் இருந்து இதை தான் செய்து வருகிறார்கள். இவர்களின் அரசியல் புரியாத மாதிரி நடித்துத் தான் சம் சும் மாவை கும்பல்.. இதோ வருகுதோ.. அதோ வருகுது.. என்று தமிழ் மக்களை ஏமாற்றி தம் சுயபோக சுபபோகங்களை அனுபவித்து வருகிறார்கள்.

தமிழ் மக்களுக்கான அரசியல் சமூக பொருண்மிய விடுதலை என்பது.. ஆயுத ரீதியில் அன்றில்...அது சாத்தியப்படாத போது..  சர்வதேச ரீதியான பங்களிப்போடு கிடைத்தால் அன்றி.. சிங்களவனுக்கு எஜமான வேலை செய்தால்.. கிடைக்கும்.. ஹிந்தியனின் காலடியில் வீழ்ந்தால்.. கிடைக்கும் என்பதெல்லாம்.. வெறும் ஏமாற்று வேலைகள். சொறீலங்கா அரசியல் தெரியாதவர்களுக்கு அப்படி படங்காட்டலாம்.

ஆனால்.. தமிழ் மக்களில் எல்லோரும்.. இதற்கு ஏமாறத் தயார் இல்லை. தமிழ் மக்கள் ஓரளவுக்கு சிங்களவனின் அரசியலை விளங்கி வைத்துள்ளனர்.. தற்போதை தமிழரசுக் கட்சி முட்டாள்களை விட. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.