Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நேர்மையற்ற அரசியல்வாதிகளும் ஏமாந்து போகும் தமிழர்களும்

Featured Replies

நேர்மையற்ற அரசியல்வாதிகளும் ஏமாந்து போகும் தமிழர்களும்

 

மக்களின் பிரச்­சினை­ களை மறந்­த­வர்­க­ளாக வட­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் செயற்­பட்டு வரு­கின்­ற­னர். இவர்­கள் ஒரு­வரை­ யொரு­வர் விமர்­சித்து அறிக்­கை­வி­டு­வ­தி­லும், சவால் விடு­ வதி­லும் செல­வ­ழிக்­கின்ற நேரத்­தைத் தமது பிரச்­சினை­ களைத் தீர்ப்­ப­தற்­குச் செல­விட்­டால் என்ன? என்று மக்­கள் கேள்வி எழுப்­பு­கின்­ற­னர்.

அண்­மைய நாள்­க­ளாக வடக்கு மாகா­ண­ச­பையை மையப்­ப­டுத்­திய குழப்­ப­நிலை உரு­வா­கி­யுள்­ளது. முத­ல­மைச்­ச­ருக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் செய­லி­ழக்க வைக்­கப்­பட்­டு­விட்ட போதி­லும், அதன் தாக்­கம் இன்­ன­மும் உண­ரப்­ப­டு­கின்­றது.

முத­ல­மைச்­சர் விக்­னேஸ்­வ­ரன் வடக்கு மாகா­ண­சபை நிர்­வா­கத் தில் தம்மை நிலை நிறுத்­திக் கொள்­வ­தில் ஈடு­பட்டு வரு­கின்­றார். இதற்­காக எதைச் செய்­வ­தற்­கும் அவர் தயா­ராக உள்­ளமை தெளி­ வா­கத் தெரி­கின்­றது.

ஆரம்­பத்­தில் தமி­ழர் நலன் சார்ந்த ஒரு செயற்­பாட்­டா­ள­ரா­கத் தம்­மைக் காட்­டிக் கொண்ட அவர், தற்­போது ஒரு மூன்­றாந்­தர அர­சி­யல்­வா­தி­யா­கத் தம்மை வெளிக்­காட்டி வரு­கின்­றார். ஆரம்­பத்­தில் தாம் தெரி­வித்த கருத்­துக்­க­ளையே மறந்து அவர் செயற்­ப­டு­கின்­றார்.

மகா­ண­சபை ஆளும் தரப்­புக்­குள் பிள­வு­கள் விரி­வ­டை­கின்­றன

மாகா­ண­ச­பை­யின் ஆளும் தரப்பு உறுப்­பி­னர்­க­ளி­டம் எந்த வகை­யி­லா­வது ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்த வேண்­டி­யது முத­ல­மைச்­சர் என்ற வகை­யில் அவ­ரது தலை­யாய கட­மை­யா­கும். ஆனால் முத­ல­மைச் சரின் ஏடா­கூ­ட­மான செயற்­பா­டு­கள், ஆளும் கட்­சிக்­குள் மேன்­மே­லும் பிள­வுக­ளையே ஏற்­ப­டுத்தி வரு­கின்­றன.

புதிய அமைச்­சர்­க­ளின் நிய­ம­னத்­தில்­கூட அவர் நடு­நி­லை­யு­டன் செயற்­ப­ட­வில்லை என்ற குற்­றச்­சாட்­டுக்­கள் கிளம்பியுள்­ளன. தற்­போது அமைச்­சர் பத­வியை ஏற்­றுக் கொண்­டி­ருக்­கும் திரு­மதி அனந்தி சசி­த­ரன் தமிழ் அர­சுக் கட்­சி­யைச் சேர்ந்­த­வர். இவர் கட்சி விரோத நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்­டார் எனக் கூறிக் கட்­சி­யி­னால் ஒழு க் காற்று நட­வ­டிக்­கைக்கு உள்­ளாகி வரு­கின்­றார்.

இது தொடர்­பாக ஆளு­ ந­ருக்­கும் தக­வல் தரப்­பட்­டுள்­ளது. ஆனால் முத­ல­ மைச்ச­ருக்கு எதி­ரா­கக் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தின்­போது அனந்தி அதற்கு எதிர்ப்­புத் தெரி­வித்­த­வர் என்ற ஒரே கார­ணத்­துக்­காக முத­ல­மைச்­ச­ரால் அவ­ருக்கு அமைச்­சர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. அனந்­தி­யும் தமக்கு ஆத­ர­வ­ளித்த கட்­சியை உத­றித் தள்­ளி­விட்டு அமைச்­சர் பத­வி­யு­டன் சங்­க­ம­மா­கி­விட்­டார்.

மக்­க­ளால் புறக்­க­ணிக்­கப்­பட்ட சங்­க­ரி­யரது குள்­ள­ந­ரித்­த­னம்

கடி­தங்­கள் எழுதி எழு­தியே பெரும் சாதனை படைத்­த­வர் வய­தில் மூத்த அர­சி­யல்­வா­தி­யான ஆனந்த சங்­கரி. அவர் அர­சி­ய­லி­லும் வாழ்க்­கை­யி­லும் இறு­திக் கட்­டத்தை எட்டி நிற்­கின்­றார்.

கடந்த மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் போட்­டி­யிட்ட அவர் ஒரு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரா­க­வா­வது தெரிவு செய்­யப்­பட்­டுத் தமது பதவி ஆசைக்­க­னவை நன­வாக்­கிக் கொள்­ள­லா­மென எண்­ணி­யி­ருந்­தார். ஆனால் மக்­கள் அவரை ஏற்­றுக் கொள்­ள­வில்லை. முற்­றா­கவே புறக்­க­ணித்து விட்­ட­னர்.

விடு­த­லைப் புலி­கள் காலத்­தில் இடம்­பெற்ற நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தாம் தோல்வி கண்­ட­துக்­குப் புலி­களே கார­ண­மென இவர் சாடி­னார். புலி­க­ளின் தலை­வர் பிர­பா­க­ர­னை­யும் இவர் குறை­கூ­றத் தவ­ற­வில்லை. இதே­வேளை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­சவை வர­வேற்று உரை­யாற்­றி­ய­வ­ரும் இவ­ரே­தான்.

இத்­த­கைய ஒரு­வர் தான், இன்று தம்­மி­டம் பெய­ர­ள­வில் மட்­டுமே உள்ள தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணி ­யின் தலை­மைப்­பொ­றுப்பை முத­லமைச்­ச­ரி­டம் ஒப்­ப­டைத்து விடு­ வதா­க­வும் முத­ல­மைச்ச­ ரைத் தமி­ழர் தரப்­புக்­குத் தலைமை தாங்­கு­மா­றும் கேட்­டுள்­ளார். இது சாத்­தான் வேதம் ஓதிய கதை­யைத்­தான் நினைவு படுத்து­ கின்­றது. தமது இறு­திக் காலத்­தில் நல்­ல­வற்­றைச் செய்­யாதுவிட்­டா­லும், தீய­வற்­றை­யா­வது எண்­ணிப்­பார்க்­காது இருப்­பதே சங்­கரி ஐயா­வுக்கு நிம்­ம­தி­யான ஆறு­த­லைக் கொடுக்­கும்.

கொதிப்பு அடங்­கிப்­போன சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன்

இதே­வேளை தமது உடன்­பி­றப்­புக்கு அமைச்­சர் பதவி கிடைத்­த­தில் ஈபி­ஆர்­எல்­எப்­வின் தலை­வர் சுரேஸ் பிரே­மச்­சந்­தி­ரன் நிச்­ச­ய­மா­கப் புற­காங்­கி­தம் அடைந்­தி­ருப்­பார். அவ­ரது நீண்ட நாள் கன­வொன்று முத­ல­மைச்­ச­ரின் கரு­ணை­யால் நன­வா­கி­யுள்­ளது.

கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின் போது அவர் மக்­க­ளால் நிரா­க­ரிக்­கப்­பட்­டமை அவ­ரைப் பொறுத்­த­வ­ரை­யில் பெரும் சோகத்தை ஏற்­ப­டுத்தி விட்­டது. அதி­லி­ருந்து விடு­ப­டு­ வ­தற்­குத் தேசி­யப்­பட்­டி­யல் மூல­மா­வது நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பதவி கிடைக்­காதா­ வெனக் காத்­தி­ருந்­தார். அதில்­கூட ஏமாற்­றம் தான் கிடைத்­தது.

அன்­றி­லி­ருந்து கூட்­ட­மைப்­புத் தலைமை மீதும், தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் மீதும் அவர் தீராத வெறுப்பை வெளிக்­காட்டி வரு­கின்­றார். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்தி ­ரனை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யைக் கைவிட்டு மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் போட்­டி­யிட்டு வென்று காட்­டு­மாறு சவால் விடுக்­கின் றார்.

முத­ல­மைச்ச­ ருக்கு ஆத­ர­வா­கத் திரண்ட­ வர்­க­ளின் எண்­ணிக்­கையை அள­வீடு செய்­கின்­றார். உண்­மை­யில் மக்­க­ளுக்­குத் தேவையான விட­யங்­கள் எவ்­வ­ளவோ இருக்க ஒரு கட்­சி­யின் தலை­வ­ரான அவர் அனா­வ­சிய காரி­யங்­க­ளில் பொழு­தைப் போக்­கிக் கொண்­டி­ருந்­தால் 2020 இலும் கூட அவர் மக்­க­ளால் நிரா­ க­ரிக்­கப்­பட்டு விடு­வார் என்­ப­தில் சிறி­த­ள­வும் ஐய­மில்லை.

புதி­தா­கக் கிளம்­பி­யுள்ள பூதத்­தால் கலக்­கம்

இதே­வேளை புதிய பூதம் ஒன்­றும் வடக்கு மாகா­ண­ச­பைக்­குள் புகுந்து கலக்­கத்தை ஏற்­ப­டுத்தி வரு­கின்­றது.

முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ர­வான ஆளும் தரப்பு உறுப்­பி­னர் ஒரு­வர் ஊட­க­வி­ய­லா­ளர் சிவ­ரா­மின் கொலை­யு­டன் தொடர்பு­ பட்­டி­ருந்­த­தாக முதல­ மைச்­சரே தமது கைப்­ப­டக் கடி­தம் ஒன்றை எழு­தி­ய­தாக வெளி­வந்த செய்­தி­தான் அந்­தப் பூதம். இந்­தச் செய்­தி­யில் உண்மை இருக்­கு­மா­னால், அது பார­தூ­ர­மான எதிர் விளைவை ஏற்­ப­டுத்­தக் கூடி­யது.

முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ரவு தெரி­விக்­கின்­றார் என்ற கார­ணத்­துக்­கா­கக் குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்ள ஒரு­வர், மாகாண சபை உறுப்­பி­ன­ரா­கச் செயற்­ப­டு­வதை அனு­ம­திக்க முடி­யாது. முத­ல­மைச்­சர் இவர் தொடர்­பான மேல­திக நட­வ­டிக்­கை­களை இனி­யும் தாம­திக்­காது மேற்­கொள்ள வேண்­டும்.

இவற்­றை­யெல்­லாம் பார்க்­கும்­போது மக்­க­ளின் பிரச்­சி­னை­ க­ளுக்­குத் தீர்வு காண்­ப­தற்கு எமது அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு நேரம் இருக்­காது என்றே எண்­ணத்­தோன்­று­கின்­றது. பணம் பாதா­ளம் வரைக்­கும் பாயும் என்­பார்­கள். ஆனால் அர­சி­யல்­வா­தி ­கள் ஈரேழு உல­கத்­தி­லும் புகுந்து விளை­யாட­ வல்­ல­வர்­கள். ஆனால், தம்மை நம்­பி­யி­ருக்­கும் மக்­களை மட்­டும் எளி­தில் கைவிட்டு விடு­ வார்­கள்.

http://uthayandaily.com/story/10914.html

நேர்மையற்ற அரசியல்வாதிகளில் சரவணபவணும் அடங்கும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது அரசியல்வாதிகளில் அழுக்கு அரசியல்தான் ஈழத்தமிழினத்தின் இந்த நிலைக்கு காரணம்.

நடந்து முடிந்த ஆயுதப்போராட்டம் அல்ல.

ஏனெனில் ஆயுதப்போராட்டத்தில் பாடம்படித்த அரசியல்வாதிகளும் இன்றுவரைக்கும் எதையுமே சாதிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வியாபாரிகளால்புதிய திசைகளைத் தேடவேண்டியநிலையில்  தமிழினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.