Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’

Featured Replies

’ரூ.144 மில்லியனை அனந்தி பொறுப்பேற்க வேண்டும்’
 

" வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன்  ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்" என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்று (21) நடைபெற்றது. இதன் போதே   அவைத்தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "வடமாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாய் பணத்தை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலான செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்தப் பணத்தை மாகாண சபை பெற்று ஒரு வருடம் கடந்த நிலையிலும், இதுவரை அந்த பணத்தில் ஒரு சதம் கூடச் செலவு செய்யப்படாது வடமாகாண பிரதம செயலாளரின் கணக்கில், வங்கியில் வைப்பிலிடப்பட்டு இருக்கிறது.

தற்போது மகளிர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரன் பொறுப்பேற்று உள்ளார். அவராவது இந்தப் பணத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டும்" என அவைத்தலைவர் கோரினார்.

  http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/ரூ-144-மில்லியனை-அனந்தி-பொறுப்பேற்க-வேண்டும்/71-201087

  • தொடங்கியவர்

ஆளுனர் நிதியத்திடம் இருந்து வடமாகாண சபை பெற்ற 14 கோடி 40 இலட்சம் ரூபாவை செலவு செய்யுங்கள் – சீ .வீ .கே.

ஆளுனர் நிதியத்திடம் இருந்து   14 கோடி 40 இலட்சம் ரூபாயை வடமாகாண சபை பெற்று ஒருவருடங்களை கடந்த நிலையிலும் இதுவரை அந்த பணத்தில் ஒரு சதம் கூட செலவழிக்கப்படவில்லை என வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபை கடந்த மூன்று வருடங்கள் 9 மாத கால பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பிலான மீளாய்வு செய்வதற்கான விசேட அமர்வு இன்றைய தினம் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு அவைத்தலைவர் தெரிவித்தார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

வடமாகாண ஆளுனர் நிதிய வைப்பில் இருந்த 14 கோடி 40 இலட்சம் ரூபாய் பணத்தினை மாகாண சபை பெற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்கள் , பெற்றோரை இழந்த பிள்ளைகள் , பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் ஆகியோருக்கு உதவும் வகையிலான செயற்திட்டங்களை முன்னெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இந்த பணத்தினை மாகாண சபை பெற்று ஒரு வருடத்தினை கடந்த நிலையிலும் இதுவரையில் அந்த பணத்தில் ஒரு சதம் கூட செலவு செய்யாமல் வடமாகாண பிரதம செயலாளரின் கணக்கில் வங்கியில் வைப்பிலிடப்பட்டு இருக்கின்றது.

தற்போது மகளீர் விவகார அமைச்சராக அனந்தி சசிதரன் பொறுப்பேற்று உள்ளார். அவராவது இந்த பணத்தினை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் செயர்த்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவைத்தலைவர் கோரினார்.

http://globaltamilnews.net/archives/33659

  • தொடங்கியவர்

வட மாகாணம்: 14 கோடி ரூபா நிதியை யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை

 


வட மாகாணம்: 14 கோடி ரூபா நிதியை யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை
 

வட மாகாண பிரதம செயலாளரின் கீழுள்ள 14 கோடி ரூபா நிதியை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் குறிப்பிட்டார்.

வட மாகாண பிரதம செயலாளரின் கீழ் 14 கோடி 40 இலட்சம் ரூபா உள்ளமை நேற்றைய மாகாண சபை அமர்வின்போது தெரியவந்தது.

உணவு விவசாய ஸ்தாபனத்தினால் (FAO) வழங்கப்பட்ட 14 கோடி 40 இலட்சம் ரூபா நிதி வட மாகாண சபை ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னதாக அப்போதைய வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கீழ் இருந்ததாக வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்தார்.

இந்த நிதி 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வட மாகாண பிரதம செயலாளரின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

கடந்த வருடம் இந்த நிதி செலவீனத்திற்குரிய திட்ட முன்வரைபினை சமர்ப்பிக்குமாறு வட மாகாண சபையிடம் கோரியிருந்த போதிலும், அது கிடைக்கவில்லை என வட மாகாண பிரதம செயலாளர் தெரிவித்தார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நலனுக்கு இந்த நிதியினை வழங்க முன்னுரிமை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சிற்குட்பட்ட விவசாயத் திணைக்களம், கூட்டுறவுத் திணைக்களம், சமூக சேவைத்திணைக்களம் ஆகியவற்றிற்கு இந்த நிதி உணவு விவசாய ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வடமாகாண விவசாய அமைச்சராக இருந்த பொன்னுத்துரை ஐங்கரநேசன் தம் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பதவியை இராஜிமானா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு அமைய விவசாய அமைச்சராக முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொண்டார்.

விவசாய அமைச்சின் கீழிருந்த மூன்று திணைக்களங்களில் ஒன்றான விவசாய திணைக்களம் மாத்திரம் தற்போது முதலமைச்சர் வசமுள்ளது.

ஏனைய இரு திணைக்களங்களான சமூக சேவைகள் மற்றும் கூட்டுறவுத்திணைக்களம் ஆகியன வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரனின் அமைச்சின் கீழுள்ளது.

வட மாகாண பிரதம செயலாளரின் கீழ் உள்ள 14 கோடியே 40 இலட்சம் ரூபா நிதிக்கான திட்ட முன்வரைபினை சமர்ப்பிக்கும் பொறுப்பு தற்போது இரு அமைச்சுக்கள் வசமுள்ளது.

அதற்கமைய, விவசாய திணைக்களத்தினால் 67.5 மில்லியன் ரூபா முன் திட்ட வரைபு நேற்று முன்தினம் பிரதம செயலாளர் செயலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் தெரிவித்தார்.

 

http://newsfirst.lk/tamil/2017/07/வட-மாகாண-பிரதம-செயலாளரின/

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக தமிழர் கும்பங்களில் ஆண்கள் உழைத்தாலும் அதில்வரும் பணம் தாய் பின்னர் தாரமென பெண்களிடமே செல்கிறது. நிதியைப் பொறுத்தவரை அனேகமாகப் பெண்களே குடும்பத் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளனர். பெண்களின்றி குடும்பத்தலைமை தாங்கும் ஆண்களும் முன்னுரிமை பெறவேண்டும். இந்த நிதி இதுவரை முடக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.   

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Paanch said:

அனேகமாக தமிழர் கும்பங்களில் ஆண்கள் உழைத்தாலும் அதில்வரும் பணம் தாய் பின்னர் தாரமென பெண்களிடமே செல்கிறது. நிதியைப் பொறுத்தவரை அனேகமாகப் பெண்களே குடும்பத் தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளனர். பெண்களின்றி குடும்பத்தலைமை தாங்கும் ஆண்களும் முன்னுரிமை பெறவேண்டும். இந்த நிதி இதுவரை முடக்கப்பட்டதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.   

மாறி மாறி கையை காட்டாமல் மக்களுக்கும் ஏதாவது செய்யுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, சுவைப்பிரியன் said:

மாறி மாறி கையை காட்டாமல் மக்களுக்கும் ஏதாவது செய்யுங்கள்.

உங்கள் கருத்துத்தை நான் வரவேற்கிறேன். எதுவும் செய்யாமல் கைகாட்டுபவர்களை உங்கள் கருத்து உறுத்தி நல்லது நடக்கவைக்கட்டும்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.