Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'வன்னி மக்களே- இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிப்பர்': விடுதலைப் புலிகள் ஏடு

Featured Replies

'வன்னி மக்களே- இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிப்பர்': விடுதலைப் புலிகள் ஏடு

[வியாழக்கிழமை, 1 மார்ச் 2007, 16:14 ஈழம்] [கிளிநொச்சியிலிருந்து ந.கிருஸ்ணகுமார்]

"கொடூரமான முற்றுகை போர் முறையுடன் கிழக்கு மாகாணத்தில் தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்று வரும் அதே நேரத்தில் வடக்குப் போர் முனையிலும், வன்னி மாநிலம் மீதும் பெரும் முற்றுகைப் போர் நடவடிக்கையை தொடக்க சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன"

இன்று வியாழக்கிழமை வெளிவந்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' ஏட்டின் முதன்மைச் செய்தியானது மேற்கண்டவாறு தெரிவிக்கின்றது.

அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"மகிந்த ராஐபக்ச முதல் சரத் பொன்சேகா வரை சிங்களத்தின் அரசியல் இராணுவத் தலைவர்கள் தமிழருடனான போரை விரிவாக்கி தீவிரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர்.

தமிழர்களுக்கு எதிராக இனவாதப் போர் கூச்சலிடுவதே இன்று சிங்களத்தின் பிரதான அரசியலாக உள்ளது. ஒரு போர் வெற்றி பற்றிய கற்பனையிலேயே சிங்கள ஊடகங்கள் மிதந்தபடி உள்ளன.

வடபுலப் பெரும் போருக்கு முன்னோடியாக அங்கே வான் தாக்குதல்களை சிங்களப் படைத் தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கிலுள்ள சிங்கள படையணிகளின் தலைமைப் பொறுப்புக்களிலும் தீவிர மாற்றங்கள் செய்யப்பட்டு படைகள் போருக்கு தயார்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மக்களை கொலை செய்து வெறியாட்டம் ஆடிப் புகழ்பெற்ற சிங்களத்தின் இடைநிலைத் தளபதிகளை படையணிகளின் தளபதிகளாக சரத் பொன்சேகா நியமித்து வருகின்றார். 57 ஆவது படையணியென்ற பெயரில் புதிய தாக்குதல் படையணியையும் உருவாக்கியுள்ளார். இது வவுனியாவில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளது.

மகிந்தரின் சீன விஐயமும் ஆயுதக்கொள்வனவுடன் இணைத்துப் பேசப்படுகின்றது. சிங்கள அரசிற்கு ஆயுதங்களை இப்போது வழங்கி வரும் நாடுகளில் சீனா முக்கியமானதாகும். பாகிஸ்தான், ஈரான் நாடுகளில் இருந்தும் அரசு ஆயுத தளபாடங்களை குவித்து வருகின்றது.

கொழும்பில் மகிந்த அரசின் உறுதித்தன்மையும் இப்போது அதிகரித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து பிரிந்து வந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பலத்தின் மகிந்த அரசு அரசியல் உறுதி பெற்றுள்ளது.

சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் உறுதித்தன்மை தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பை போரை தீவிரப்படுத்தப்படுவதற்கு தான் பயன்படுத்துவது சிங்களத்தின் ஒரு வரலாற்று வழமை.

ஜே.ஆர். அரசும், சந்திரிக்கா அரசும் இவ்விதமாக தாம் பெற்ற அரசியல் உறுதித்தன்மையைப் போரில் தீவிரப்படுத்தவே பயன்படுத்தியிருந்தனர். இப்போது மகிந்தரும் அந்த வரலாற்றுத் தடத்திலே பயணிக்கின்றார்.

தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும், அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாக தெரியவில்லை. வன்னி மீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்து வகை தயார்படுத்தல்களையும் செய்து வருகின்றது என்பது தான் உண்மையாகும்.

சிங்கள அரசின் இந்த பெரும் போரை துணிவுடன் எதிர்கொள்வதை தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை.

தமிழரின் படைப் பல அதிகரிப்பும் கடந்த போர்காலங்களைப் போல் தமிழ் மக்களின் வீரச் செயற்பாடுகளும் சிங்களத்தின் போரை முறியடிக்க போதுமானவையாகும். அண்மைய மாதங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் புலிகள் அணியுடன் இணைந்துள்ளனர். ஆட்பலத்தில் புலிகள் இயக்கம் பெரிய வளர்ச்சியை கண்டு வருகின்றது.

'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக' என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டு வருகின்றது. இந்த போராட்ட கோசம் முழுமை அடையும் வகையில் ஓவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையை களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்பு திட்டத்தை முழுமையை அடைய செய்விப்பது தமிழரின் வரலாற்று கடமையாகிவிட்டது.

எதிரியின் 'ஜெயசிக்குறு' ஆக்கிரமிப்புத் திட்டத்தை புலிகள் இயக்கம் முறியடித்து வெற்றி வாகை சூட உறுதுணையாக இருந்த வன்னி மக்களே இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிக்க புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்புக்கள் வழங்க வேண்டும்.

தமிழீழ தனியரசை அமைக்கும் நில மீட்புக்கான போர் வன்னிப் பெருநிலப்பரப்பை உந்துதளமாகக் கொண்டே இயங்கப் போகின்றது.

வரப்போகும் போர் காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர்கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்க தயாராகுவோம்" என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=30941

விடுதலைப்புலிகளின் இதுபோன்ற உத்தியோக பூர்வமான கருத்துக்களை

வைத்துக் கொண்டே ஆய்வாளர்கள் தங்கள் ஊகங்களையும் இணைத்து

தங்களது சொந்த ஆய்வைப் போன்று வெளியிடுகின்றார்கள்.

சென்ற முறை வல்வை மைந்தன் குறிப்பிட்டது

பலருக்கு ஞாபகமிருக்கலாம். வன்னிப் பெருநிலப்பரப்பை ஆக்கிரமிப்பதற்கு

சிங்களப் படைகள் தயாராகிவிட்டன என்பது விடுதலைப்புலிகளின் செய்தி

தான் அதற்கு ஆதாரமே இந்தத் தலைப்பு.

இந்தப்போரினை எதிர்கொள்ள புளிகளும் தமிழர்களும் தயார்

நிலையில் உள்ளார்கள் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேசம் இதுவரை

யில் பார்வையாளராக இருந்ததைப் போலவே இனிமேலும் இருக்கும் நிலையே

உள்ளது. இந்தியா ஒரு சங்கடமான நிலைக்குள் தள்ளப்பட்டு விடும். அரசாங்கம்

வன்னிப் பகுதியை ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சியோடு தொடங்கப் போகும்

போரானது தமிழீழத்தின் திருகோணமலை தவிர்ந்த பெரும் பகுதிகளை விடுவிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவழி கிடைத்தால் நல்லது

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம்

வன்னிப் பகுதியை ஆக்கிரமிக்க எடுக்கும் முயற்சியோடு தொடங்கப் போகும்

போரானது தமிழீழத்தின் திருகோணமலை தவிர்ந்த பெரும் பகுதிகளை விடுவிக்கும்.

நீங்கள் சொல்வது விளங்கவில்லை திருக்கோணமலை விடுவிக்கப் படுமா இல்லையா

திருமலையும் விடுவிக்கப்படும் கந்தப்பு

அங்கதானே இந்தியாவுக்கு அமெரிக்காவுக்கு எல்லாத்துக்கும் கண்.

எனவே அங்கே முதலில் கை வைப்பதைவிடுத்து எனைய பகுதிகளை விடுவித்த பின்னர் இறுதிப் பாய்ச்சலாகவே திருமலை மீது பாயப்படும்.

முதல் மன்னார் யாழ் என்று வந்து பிறகு தான் கிழக்கு மாகாணமாக திரும்பலாம். அப்படி வரேக்க தான் நிலப்பிரதேசங்கள் பெருமளவு கட்டுப்பாட்டில் வரும். உலகமும் அப்பதான் மீண்டும் வரும் கதையுங்கோ சமாதானமா பிரியுங்கோ என்று

'வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக' என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டு வருகின்றது. இந்த போராட்ட கோசம் முழுமை அடையும் வகையில் ஓவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையை களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்பு திட்டத்தை முழுமையை அடைய செய்விப்பது தமிழரின் வரலாற்று கடமையாகிவிட்டது.

15 வருடமாக சொன்னது...

அதுவும் இப்ப தானா.... வன்னியில் என்ன நடக்கிறது...

உண்மைகள் எப்பவும் மெல்ல மெல்ல வெளிவரும்...

அட அந்த வன்னி மக்ககளுக்கே நிலமை இப்படி என்றால்...

:lol: :lol: :lol::lol:

Edited by Netfriend

மகிந்த அரசின் போர் முயற்சியும் தமிழரது தற்காப்பின் அவசியமும்

கொடூரமான முற்றுகைப் போர்முறையுடன், கிழக்கு மாகாணத்தில், தமிழர் நிலங்களை ஆக்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் அதே நேரத்தில்; வடக்குப் போர்முனையிலும் - வன்னி மாநிலம் மீதும் - பெரும் முற்றுகைப்போர் நடவடிக்கையைத் தொடக்கச் சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளன. மகிந்த ராஜபக்ச முதல் - சரத் பொன்சேகா வரை சிங்களத்தின் அரசியல் - இராணுவத் தலைவர்கள் தமிழருடனான போரை விரிவாக்கித் தீவிரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர். தமிழருக்கு எதிராக இனவாதப் போர்க் கூச்சல்தான் இன்று சிங்களத்தின் பிரதான அரசியலாக உள்ளது. ஒரு போர் வெற்றி பற்றிய கற்பனையிலேயே சிங்கள ஊடகங்களும் மிதந்தபடியுள்ளன. வடபுலப் பெரும் போருக்கு முன்னோடியாக அங்கே வான் தாக்குதல்களைச் சிங்களப் படைத்தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கில் உள்ள சிங்களப் படையணிகளின் தலைமைப் பொறுப்புக்களிலும் தீவிர மாற்றங்கள் செய்யப்பட்டு படைகள் போருக்குத் தயார்ப்படுத்தப்படுகின்றது. தமிழ் மக்களைக் கொலைசெய்து வெறியாட்டம் ஆடிப் புகழ்பெற்ற சிங்களத்தின் இடைநிலைத் தளபதிகளைப் படையணிகளின் தளபதிகளாக சரத் பொன்சேகா நியமித்துவருகின்றார். 57 ஆவது படையணி என்ற பெயரில் புதிய தாக்குதல் படையணியையும் உருவாக்கியுள்ளனர். இது வவுனியாவில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளது. மகிந்தரின் சீன விஜயமும் ஆயுதக்கொள்வனவுடன் இணைத்துப் பேசப்படுகின்றது. சிங்கள அரசிற்கு ஆயுதங்களை இப்போது வழங்கிவரும் நாடுகளில் சீனா முக்கியமானதாகும். ........................

http://www.viduthalaipulikal.com/

  • கருத்துக்கள உறவுகள்

PDFல் உள்ளதினால் PDF இல்லாதவர்கள் வாசிக்க முடியாது என்பதினால் இதனை முழுமையாக இணைத்துள்ளேன்.

மகிந்த அரசின் போர் முயற்சியும் தமிழரது தற்காப்பின் அவசியமும்

கொடூரமான முற்றுகைப் போர்முறையுடன், கிழக்கு மாகாணத்தில், தமிழர் நிலங்களை ஆக்க்கிரமிக்கும் இராணுவ நடவடிக்கைகள் நடைபெற்றுவரும் அதே நேரத்த்தில் வடக்குப் போர்முனையிலும் - வன்னி மாநிலம் மீதும் - பெரும் முற்றுகைப் போர் நடவடிக்கையைத் தொடக்கச் சிங்களப் படைகள் முன்தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ள்ளன.

மகிந்த ராஜபக்ச முதல் - சரத் பொன்சேகா வரை சிங்களத்தின் அரசியல் - இராணுவத் தலைவர்கள் தமிழருடனான போரை விரிவாக்கித் தீவிரப்படுத்துவதிலேயே குறியாக உள்ளனர். தமிழருக்கு எதிராக இனவாதப் போர்க் கூச்சல்தான் இன்று சிங்களத்தின் பிரதான அரசியலாக உள்ளது. ஒரு போர் வெற்றி பற்றிய கற்பனையிலேயே சிங்கள ஊடகங்களும் மிதந்த படியுள்ளன.

வடபுலப் பெரும் போருக்கு முன்னோடியாக அங்கே வான் தாக்குதல்களைச் சிங்களப் படைத்தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. வடக்கில் உள்ள சிங்களப் படையணிகளின் தலைமைப் பொறுப்புக்களிலும் தீவிர மாற்றங்கள் செய்யப்பட்டு படைகள் போருக்குத் தயார்ப் படுத்தப்படுகின்றது. தமிழ் மக்களைக் கொலைசெய்து வெறியாட்டம் ஆடிப் புகழ்பெற்ற சிங்களத்தின் இடைநிலைத் தளபதிகளைப் படையணிகளின் தளபதிகளாக சரத் பொன்சேகா நியமித்து வருகின்றார். 57 ஆவது படையணி என்ற பெயரில் புதிய தாக்குதல் படையணியையும் உருவாக்கி யுள்ளனர். இது வவுனியாவில் நிலைகொள்ள வைக்கப்பட்டுள்ளது. மகிந்தரின் சீன விஜயமும் ஆயுதக் கொள்வனவுடன் இணைத்துப் பேசப்படுகின்றது.

சிங்கள அரசிற்கு ஆயுதங்களை இப்போது வழங்கிவரும் நாடுகளில் சீனா முக்கியமானதாகும். பாகிஸ்தான், ஈரான் நாடுகளிலிருந்தும் அரசு ஆயுதத் தளபாடங்களை வாங்கிக் குவித்துவருகின்றது. கொழும்பில் மகிந்த அரசின் உறுதித் தன்மையும் இப்போது அதிகரித்துள்ளது.

ஐ.தே.கா கட்சியிலிருந்து பிரிந்துவந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பலத்தில் மகிந்த அரசு அரசியல் உறுதி பெற்றுள்ளது.

சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் உறுதித்தன்மை தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரை தீவிரப்படுத்துவதற்குத்தான் பயன்படுத்தப்படுவது சிங்களத்தின் ஒரு வரலாற்று வழமை.

ஜே.ஆர் அரசும் சந்திரிக்கா அரசும் இவ்விதமாக தாம்பெற்ற அரசியல் உறுதித் தன்மையைப் போரைத் தீவிரப்படுத்தவே பயன்படுத்தியிருந்தனர். இப்போது மகிந்தரும் அந்த வரலாற்றுத் தடத்திலேயே பயணிக்கின்றார்.

தமிழின அழிப்பு விடயத்தில் உலகின் கண்டனங்களையும் அரசியல் அழுத்தங்களையும் மகிந்த அரசு ஒரு பொருட்டாக மதிப்பதாகத் தெரியவில்லை. வன்னிமீதான ஒரு பெரும் போருக்காக சிங்கள அரசு அனைத்துவகைத் தயார்ப் படுத்தல்களையும் செய்துவருகின்றது என்பதுதான் உண்மையாகும்.

சிங்கள அரசின் இந்தப் பெரும்போரைத் துணிவுடன் எதிர்கொள்வதைத் தவிர தமிழ் மக்களுக்கு மாற்று வழிகள் ஏதுமில்லை.

தமிழரின் படைபல அதிகரிப்பும் கடந்த போர் காலங்களைப்போல் தமிழ் மக்களின் வீரச் செயற்பாடுகளும் சிங்களத்தின் போரை முறியடிக்கப் போதுமானவையாகும்.

அண்மைய மாதங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் புலிகள் அணியுடன் இணைந்துள்ளனர். ஆட்பலத்தில் புலிகள் இயக்கம் பெரிய வளர்ச்சியைக் கண்டுவருகின்றது. "வீட்டுக்கு ஒருவர் நாட்டிற்காக" என்ற போராட்ட கோசம் இன்று தமிழர் படை பலத்திற்கு நம்பிக்கையான அடித்தளமிட்டுவருகின்றது. இந்தப் போராட்ட கோசம் முழுமையடையும் வகையில் ஒவ்வொரு வீடும் ஒரு வீரனை அல்லது வீராங்கனையைக் களம் அனுப்பி இந்த ஆட்பல அதிகரிப்புத் திட்டத்தை முழுமையடையச் செய்விப்பது தமிழரின் வரலாற்றுக் கடமையாகிவிட்டது.

எதிரியின் ஜெயசிக்குறு ஆக்கிரமிப்புத் திட்டத்தைப் புலிகள இயக்கம் முறியடித்து வெற்றிவாகை சூட உறுதுணையாக இருந்த வன்னி வாழ் மக்களே இனிவரப் போகும் பெரும் போரையும் முறியடிக்கப் புலிகள் இயக்கத்திற்கு ஒத்துழைப்புகள் வழங்கவேண்டும்.

தமிழீழத் தனியரசை அமைக்கும் நில மீட்புக்கான போர் வன்னிப் பெருநிலப்பரப்பை உந்துதளமாகக்கொண்டே இயங்கப்போகின்றது.

வரப்போகும் போர்க் காலத்தையும் அதன் நெருக்கடிகளையும் சவாலாக எதிர் கொண்டு போரை வென்று புதிய வரலாறு படைக்கத் தயாராகுவோம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.