Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளியானது ஆவா தலைவன் விக்டரின் வாக்கு மூலம் : ''நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்''

Featured Replies

வெளியானது ஆவா தலைவன் விக்டரின் வாக்கு மூலம் : ''நானும் மனோஜும் இணைந்தே இரு பொலிஸாரை வெட்டினோம்''

 

 

ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ' தனு ரொக்' என்பவரை வெட்டவே நாம் சென்றோம். அவரது வீட்டில் அவர் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முட்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித்தோம். அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின் தொடர்ந்து திரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம்' என  பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் ஆவா பாதாள உலகக் குழுவின் தலைவன் நிஷா விக்டர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளான்.

 

வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி மேற்பார்வையில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டில் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில்  தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ள விக்டர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களிடமும், ஆவா குழுவின் பின்னணி, அதற்காக நிதிப் பங்களிப்பை வழங்குவோர் குறித்து விரிவாக விசாரணை செய்யப்படுவதாகவும், அக்குழுவின் நோக்கம் குறித்தும் இதன் போது விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இந்நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் மூவரைக் கைதுசெய்ய தொடர்ச்சியாக ஏற்கனவே அமைக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் தேடுதல்களை நடாத்துவதாகவும் அவர்களை விரைவில் கைதுசெய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

 

ஆவா குழுவின் உறுப்பினரும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியவர் என அடையாளம் காணப்பட்டவருமான யாழ். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் போல் என்பவரை மட்டக்குளியில் வைத்து பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் இரு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

 

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட அவரை  கோட்டையில் உள்ள பயங்கரவாத  புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்குழு விசாரணைக்கு உட்படுத்தியது. இதன்போதே ஆவா குழுவை தற்போது வழி நடாத்தும் நிஷா விக்டர் என அறியப்படும் யாழ். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சத்தியவேல் நாதன் நிஷாந்தன் என்பவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனையடுத்தே நேற்று முன்தினம் காலை வேளையில் அவர் இருக்கும் இடத்தை வெளிப்படுத்திக்கொண்ட பயங்கரவாத புலனயவுப்பிரிவினர் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து அவரையும், அவருடன் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வினோத் எனப்படும்  ராஜ்குமார் ஜெயகுமாரையும், மனோஜ் எனப்படும் யாழ். கொக்குவில் கிழக்கை சேர்ந்த குலேந்திரன் மனோஜித்தையும் கைது செய்தனர்.

அத்துடன் யாழில் வைத்து, இணுவில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குகநாத், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த  அர்ஜுனன் பிரசன்ன ஆகியோரையும் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மேற்படி அறுவரிடமும் பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் நடாத்திய விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில், தற்போது இயங்கும் ஆவா குழுவினை விக்டரே வழி நடாத்துவது உறுதியாகியுள்ளதுடன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சில குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 

குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியமை, 2015 ஆம் ஆண்டு கோப்பாயில் வீடொன்றினை சேதப்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு தொடர்பிருப்பது விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது. 

அத்துடன்  2016 ஆம் ஆண்டு பொலிஸ் உளவுப் பிரிவினர் மீது வாள்வெட்டு தககுதல் நடாத்திய சம்பவம் தொடர்பிலும் விக்டர் உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டு சுன்னாகம் பகுதியில் கடை ஒன்றினையும் இவர்கள் சேதப்படுத்தியுள்ளதாக கூறும் பொலிஸார் இந்த ஆண்டு அரசடி பகுதியில் கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பல்கலைக்கழக மாணவன் ஒருவனை வாளால் வெட்டியமை தொடர்பிலும் இந்த குழுவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

 

கடந்த 2016 ஆம் ஆண்டு ஆவா குழுவை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கைதுசெய்த நிலையில் அதன் தலைவனாக செயற்பட்ட தமிழ் சினிமாவில் காட்டப்படுவதைப்போன்ற பாதாள உலகக் குழுக்களை வழி நடத்தி யாழ். மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பொது மக்களை அச்சுறுத்தி பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் ஞானசேகரம் தேவசுதன் எனப்படும் தேவா, நல்லலிங்கம் பிரசன்னா எனப்படும் சன்ன மற்றும் டேனியல் குனசீலன் எனப்படும் பிரகாஷ் ஆகியோர் இந்தியாவுக்கு கடல் மார்க்கமாக தப்பிச் சென்றிருந்தனர். அவர்கள் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் வைத்து கைதும் செய்யப்பட்டிருந்தனர். இந் நிலையிலேயே வெற்றிடமான ஆவா குழு தலைமை பொறுப்பை விக்டர் ஏற்று வழி நடாத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

 

முன்னதாக யாழ்ப்­பாணம் கொக்­குவில் பகு­தியில்  முறைப்­பாடு  ஒன்று தொடர்பில் விசா­ரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்­தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்­குதல் நடத்­திய குழுவின் முக்­கிய உறுப்­பி­னர்கள் எனக் கரு­தப்­படும் நல்லூர் சத்தியானந்தன வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மதூ எனப்படும் சிவராஷா மதுஷன் மற்றும் 23 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயரத்னம் சிவராஜ், 18 வய­து­டைய நல்லூர் வீதி, அர­ச­டியைச் சேர்ந்த நல்லூர் முத்து  என அறி­யப்­படும் யோக­ராசா சதீ­சையும் கோப்பாய் மத்­தியைச் சேர்ந்த 18 வய­து­டைய அருள் சீலன் பெட்ரிக் தினே­ஸ்,  கொக்குவில் மேற்கை சேர்ந்த 18 வயதுடைய  புஷ்பராசா டக்ஷன் ஆகியோரே இதுவரைக் கைது செய்யப்ப்ட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இவர்களில் ஐந்தாவது சந்தேக நபர் யாழ். பிராந்திய பயங்கரவாத புலனய்வுப் பிரிவினராலும் ஏனையோர் சிறப்பு பொலிஸ் குழுவினராலும் கைது செய்யப்பட்டிருந்தனர். இந் நிலையில் தற்போது கைதாகியுள்ள 6 பேருடன் சேர்த்து மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இந் நிலையில் சந்தேக நபர்கள் தொடர்பில் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோ, யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்னாண்டோ ஆகியோரின் கட்டுப்பாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸின் ஆலோசனைக்கு அமைய யாழ். தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான சிறப்புக் குழு தடுப்பில் உள்ள அறுவரிடமும்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

http://www.virakesari.lk/article/22944

  • கருத்துக்கள உறவுகள்

ஆவா குழுவின் தலைவன் வெளியிட்ட தகவல்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் காணப்படும் பதற்றமான சூழ்நிலையின் காரணம் குறித்து ஆவா குழுவின் தலைவன் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஆவா குழுவில் இருந்து என்னுடன் முரண்பட்டுக்கொண்டு வேறு குழுவை உருவாக்கச் சென்ற ' தனு ரொக்' என்பவரை கொலை செய்ய திட்டமிட்டதாக ஆவா குழுவின் தலைவன் நிஷா விக்டர் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

advertisement

தனு ரொக்' என்பவரை வெட்டுவதற்காக சென்றோம். எனினும் அவர் வீட்டில் இருக்கவில்லை. இதனால் நாம் மீள திரும்ப முற்பட்ட போது, பொலிஸார் இருவர் மோட்டார் சைக்கிளில் வருவதை அவதானித்தோம்.

அவர்கள் எம்மை மடக்கிப் பிடிக்கவே வருவதாக எண்ணியே அவர்களை பின் தொடர்ந்து துரத்திச் சென்று வெட்டினோம். நானும் மனோஜும் சேர்ந்தே அவர்களை தொடர்ச்சியாக வெட்டினோம் எனத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிஷா விக்டர் தற்போது விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி மேற்பார்வையில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டில் யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ள சிறப்பு விசாரணைகளிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தடுப்புக்காவலில் எடுக்கப்பட்டுள்ள விக்டர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்களிடமும், ஆவா குழுவின் பின்னணி, அதற்காக நிதிப் பங்களிப்பை வழங்குவோர் குறித்து விரிவாக விசாரணை செய்யப்படுவதாகவும், அக்குழுவின் நோக்கம் குறித்தும் இதன் போது விஷேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ள மேலும் மூவரைக் கைதுசெய்ய தொடர்ச்சியாக ஏற்கனவே அமைக்கப்பட்ட பொலிஸ் குழுக்கள் தேடுதல்களை நடாத்துவதாகவும் அவர்களை விரைவில் கைது செய்ய எதிர்ப்பார்ப்பதாகவும் அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

ஆவா குழுவின் உறுப்பினரும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்தியவர் என அடையாளம் காணப்பட்டவருமான யாழ். கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த சிவசுப்ரமணியம் போல் என்பவரை மட்டக்குளியில் வைத்து பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் இரு நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அவரை கோட்டையில் உள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் சிறப்புக்குழு விசாரணைக்கு உட்படுத்தியது. இதன்போதே ஆவா குழுவை தற்போது வழி நடாத்தும் நிஷா விக்டர் என அறியப்படும் யாழ். திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்த சத்தியவேல் நாதன் நிஷாந்தன் என்பவர் தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே நேற்று முன்தினம் காலை வேளையில் அவர் இருக்கும் இடத்தை வெளிப்படுத்திக்கொண்ட பயங்கரவாத புலனாய்வுப்பிரிவினர் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் வைத்து அவரையும், அவருடன் இருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த வினோத் எனப்படும் ராஜ்குமார் ஜெயகுமாரையும், மனோஜ் எனப்படும் யாழ். கொக்குவில் கிழக்கை சேர்ந்த குலேந்திரன் மனோஜித்தையும் கைது செய்தனர்.

அத்துடன் யாழில் வைத்து, இணுவில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ காந்தன் குகநாத், கொக்குவில் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் பிரசன்ன ஆகியோரையும் கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மேற்படி அறுவரிடமும் பயங்கரவாத புலனயவுப் பிரிவினர் நடாத்திய விசாரணைகளில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில், தற்போது இயங்கும் ஆவா குழுவினை விக்டரே வழி நடாத்துவது உறுதியாகியுள்ளதுடன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சில குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த 2014 ஆம் ஆண்டு சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இருவரை வாளால் வெட்டி காயப்படுத்தியமை, 2015 ஆம் ஆண்டு கோப்பாயில் வீடொன்றினை சேதப்படுத்தியமை தொடர்பில் இவர்களுக்கு தொடர்பிருப்பது விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்

advertisement

அத்துடன் 2016 ஆம் ஆண்டு பொலிஸ் உளவுப் பிரிவினர் மீது வாள்வெட்டு தக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பிலும் விக்டர் உள்ளிட்டோருக்கு தொடர்பிருப்பது உறுதியாகியுள்ளது.

கடந்த ஆண்டு சுன்னாகம் பகுதியில் கடை ஒன்றினையும் இவர்கள் சேதப்படுத்தியுள்ளதாக கூறும் பொலிஸார், இந்தாண்டு அரசடி பகுதியில் கடை ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் பல்கலைக்கழக மாணவன் ஒருவனை வாளால் வெட்டியமை தொடர்பிலும் இந்த குழுவுக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கின்றனர்.

கோப்பாயில் வைத்து பொலிஸார் இருவர் மீது வாள்வெட்டு நடத்தப்பட்டமையால், கடந்த சில வாரங்களாக யாழ் குடாநாடு அமைதி இழந்து காணப்படுகிறது.

குடாநாட்டின் பிரதான ஐந்து நகரங்களை இலக்கு வைத்து பொலிஸார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்காரணமாக 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதுடன், பெருமளவான வாள்கள், கத்திகள் என்பன பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

tamilwin.com

 
  • தொடங்கியவர்

’தனு ரொக்’ என்பவரைக் கொல்வதே திட்டம்; ஆவா குழுத் தலைவர் பரபரப்பு வாக்குமூலம்!

 
 
’தனு ரொக்’ என்பவரைக் கொல்வதே திட்டம்; ஆவா குழுத் தலைவர் பரபரப்பு வாக்குமூலம்!

யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்துவரும் பல்வேறு வாள் வெட்டுச் சம்பவங்களுடன் தமக்குத் தொடர்பிருப்பதாக ஆவா குழுவின் தலைவர் எனப்படும் நிஷா விக்டர் என்பவர் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார். அத்துடன் தமது உள் முரண்பாடுகள் காரணமாகவே பொலிஸார் மீதும் சில பொதுமக்கள் மீதும் வாள்வெட்டுத் தாக்குதல்களை மேற்கொண்டிருப்பதாக தனது பொலிஸ் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த மாத இறுதியில் கோப்பாய் பகுதியில் பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்டார் என்று பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஆவா குழுவில் இருந்து தன்னுடன் முரண்பட்டுக்கொண்டு இன்னொரு குழுவை உருவாக்கச் சென்ற ' தனு ரொக்' என்பவரை கொலை செய்ய திட்டமிட்டதாகவும், இதன்படி அவரைத் தேடி வீட்டுக்குச் சென்றபோது அவர் வீட்டில் இருக்கவில்லை என்றும் இதனால் திரும்பி வரும்போது இரண்டு பொலிஸாரைக் கண்டு அவர்களை வெட்டியதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இவர் மீதான சிறப்பு விசாரணையானது, வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி மேற்பார்வையிலும் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோ மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ஸ்ரெனிஸ்லெஸ் ஆகியோரின் கட்டுப்பாட்டிலும் நடைபெற்று வருகிறது. இதனை யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி ஹேவாவித்தாரண தலைமையிலான பொலிஸ் குழு முன்னெடுத்துள்ளது.

பயங்கரவாத தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்களிடம், ஆவா குழுவின் சகல பின்னணி குறித்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதனோடு தொடர்புபட்ட இன்னும் மூன்றுபேரைக் கைது செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 

மேலும், தற்போது இயங்கும் ஆவா குழுவினை நிஷா விக்டர் என்பவரே வழி நடாத்துவது உறுதியாகியுள்ளதுடன் அவர்களால் முன்னெடுக்கப்பட்ட சில குற்றச் செயல்கள் தொடர்பிலான தகவல்களும் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன. கடந்த 2014 இல் சுன்னாகத்தில் இரண்டுபேரை வாளால் வெட்டியமை, 2015 இல் கோப்பாயில் வீடொன்றினை சேதப்படுத்தியமை, 2016 இல் பொலிஸ் உளவுப் பிரிவினர் மீது வாள்வெட்டு தக்குதல் நடாத்தியமை, சுன்னாகத்தில் கடை ஒன்றினைச் சேதப்படுத்தியமை, நல்லூரில் இந்த ஆண்டு கடையில் வைத்து ஒருவரை வெட்டியமை மற்றும் பல்கலைக்கழக மாணவர் ஒருவரை வாளால் வெட்டியமை உள்ளிட்ட பல குற்றச் செயல்களோடு இவர்களுக்கு தொடர்பிருப்பது விசாரணைகள் ஊடாக தெரியவந்துள்ளது.

ஆவா குழுவின் உறுப்பினர்களைத் தேடி யாழ்ப்பாணக் குடா நாட்டின் முக்கியமான பல நகரங்களிலும் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதால் குடா நாட்டு மக்கள் பதற்றத்துடன் உள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/ava-group-leader

  • கருத்துக்கள உறவுகள்

இனி ஆவா குழு என்ன! எந்தக் குழு எந்தத்திட்டத்தைச் சொன்னாலும்..... அரசின் திட்டம் நிறைவேறிவிட்டது!!.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.