Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கனடா தம்பதிகளின் திருகுதாளம் அம்பலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீலங்காவிற்கு வருகை கனடா தம்பதியினர் சுமார் 51 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக பொய் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன் பின்னர் குறித்த முறைப்பாட்டின் பிரதியை கனடாவில் ஒப்படைத்து பெருந்தொகை காப்புறுதி பணத்தை பெற முயற்சி செய்ய செயல் தற்போது அம்பலமாகியுள்ளது.

89 பவுண் நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் இது திட்டமிடப்பட்ட பொய் முறைப்பாடு என கொடிகாமம் பொலிஸாரின் இறுதி விசாரணை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 7 ம் திகதி இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தலைமையில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இம்முறைப்பாடு தொடர்பாக 6 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.

விசாரணைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு இறுதி விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் எதிர்வரும் 16 ம் திகதி தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் ஆஜராகுமாறும் கொடிகாமம் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல் எனவும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.canadamirror.com

கனடாவில் காப்புறுதி பெற வரணியில் கொள்ளை நாடகம்!

கனடாவில் காப்புறுதி பெற வரணியில் கொள்ளை நாடகம்!

 

இலங்கையில் இருக்கும்போது சுமார் 51 இலட்சம் பெறுமதியான நகைகள் கொள்ளையிடப்பட்டதாக கனடாவில் காப்புறுதி பெறுவதற்காக வரணிப் பகுதியைச் சேர்ந்த கனடா நாட்டவர்கள் கொள்ளை நாடகமொன்றை முன்னெடுத்துள்ளதாக கொடிகாமம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

கடந்த 7 ஆம் நாள் திங்கட்கிழமை வரணி பகுதியில் உள்ள வீடொன்றில் இரவு 8 மணியளவில் நுழைந்த திருடர்கள் சுமார் 51 லட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றதாக கனடா நாட்டில் இருந்து வந்திருந்த தம்பதிகளால் கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இதன்போது வீட்டிலிருந்த இரண்டு பெண்களில் கனடா நாட்டிலிருந்து வந்திருந்த பெண்ணின் நகைகள் மட்டுமே திருடப்பட்டிருந்ததாகவும் வீட்டிற்குள் நுழைந்த இரண்டு திருடர்கள் கத்தியைக் கழுத்தில் வைத்து அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பாக கொடிகாமம் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

ஐ.பீ. எதிரிசிங்கவினால் முன்னெடுக்கப்பட்ட தொடர்விசாரணையில் ஆறு பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

இதன்மூலம் கனடா நாட்டிலிருந்து வந்த தம்பதிகள் பொய் வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும், கனடா நாட்டில் காப்புறுதி பெறுவதற்காகவே தாம் இவ்வாறு செய்துள்ளதாக விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளதாக அதிகாரி ஐ.பீ.எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பொய் முறைப்பாடு வழங்கிய கனடா நாட்டில் இருந்து வருகை தந்த தம்பதிகளை நீதிமன்றில் எதிர்வரும் 16ஆம் நாள் முன்னிலையாகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் நாட்டுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துகின்ற செயல் எனவும் வெளிநாடுகளில் இருந்து வருகின்றவர்கள் இவ்வாறு பொய் முறைப்பாட்டினை பதிவு செய்து காப்புறுதிப் பணத்தினை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக் கூடாது எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

http://thuliyam.com/?p=76081

 

  • கருத்துக்கள உறவுகள்

நகைகளுக்கு பெரிதாக வெளிநாடுகளில் காப்புறுதி கொடுக்க மாற்றார்களே

இது போலீசாரின் நாடகம் மாதிரித் தெரியுது! வெளிநாடுகளில் இருந்து வருபவர்களிடம் கொள்ளையடிப்பது கோத்தபாய ராஜபக்ச தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அரச பயங்கரவாத நடவடிக்கை.
அது  இருக்க காணாமல் போன நகைகள் எங்கே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.