Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் விவாகரத்தும் விளங்காத புனைவுகளும். (சாந்தி நேசக்கரம் )

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மௌனம் பலநேரங்களில் சிறந்த ஆயுதமாகிறது. சிலநேரம் மௌனமே அழிவுமாகிவிடுகிறது. என் மௌனமும் என்பற்றிய தவறான கற்பிதங்களை வளர்க்கவும் என்மீதான பழிகளை நானே ஏற்பது போலான தருணத்தில் என் மௌனம் கலைத்தேன்.


என்வாழ்வில் எவ்வித ஆதரவோ ஆற்றுதலோ தராத சிலருக்கு என்பற்றிய எழுத்து கலாசார உடைப்பாகவும் கட்டாக்காலிக் கருத்தாகவும் இருக்கிறது. பலருக்கு என் தரப்பு நியாயத்தையும் சிலருக்கு கோபத்தையும் கொடுத்திருக்கிறது. இதில் யார் மீதும் வருத்தமில்லை.


சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்லாமல் மௌனித்தலும் தவறென்பதை உணர்கிறேன். அதுவே எனது எழுத்தனாது.
எனக்காக யாராவது இரக்கப்படவோ கண்ணீர் விடவோ அல்லது கைதரவோ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எழுதவில்லை. அப்படி யாரும் கருதவும் வேண்டாம் என்பதை தாழ்மையுடன் வேண்டுகிறேன்.


என்னைநான் ஆற்றுப்படுத்த எடுத்த முடிவாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.


நானும் பத்தோடு பதினொன்றாய் என்னைச்சுற்றிய குறுகிய பரப்பினுள் இருந்திருந்தால் மௌனமாயே இருந்து என்னைக் கொன்றிருப்பேன்.
எனது உலகம் பலவகை மனிதர்களோடானது. எனது பணிகள் பொதுவானவை. என் இயங்குதளம் வேறுபட்டது.


நான் இயங்கும் பொதுவெளியில் நான் போகும் இடமெங்கும் பலரது கேள்விகள் குடைச்சல்கள் அசௌகரியம் தருகிறது. எல்லா இடைஞ்சல்களுக்கும் முற்று வைக்க வேண்டியது நான் என்பதால் என்னை நானே இந்த உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளேன்.


நாளை நான் இறந்து போனால் என்பற்றி புனைவுகள் யாராலும் எழுதப்படக்கூடாது. என்னைப்பற்றிய உண்மைகளை நானே எழுதிவிட்டு போக வேண்டும்.


பலரது மௌனங்கள் அவர்களது மரணத்தின் பின்னால் பலவாறு புனைகதைகளால் நிரம்பியிருக்கிறது. ஆய்வுகளால் அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது. அதேபோல ஒருநிலை எனது மரணத்தின் பின்னர் வேண்டாம்.


தோழி தேவிகா குறிப்பிட்டது போல இலட்சியத் தம்பதிகள் என்று இங்கு யாருமில்லை.


என் வரையில் அவரவர் சுயம் காயப்படாமல் மதிக்கத் தெரியாதவர்களை மோதி மிதித்தல் முகத்தில் உமிழ்தல் தான் சரியான தீர்ப்பு. அதையே நான் செய்திருக்கிறேன்.


இங்கே கருத்திடும் அனைவருக்குமான என் பொதுவான கருத்து இது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற எந்த நியதியும் இல்லை.


நான் தொடர்ந்து என் பணிகளோடு பயணித்துக் கொண்டேயிருப்பேன்.
என்னைப் புரிந்து கொண்டு கருத்துத் தந்த உறவுகள் உங்களுக்கு நன்றிகள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்கும்போது குறிப்பாக பிள்ளைகள் அனுபவித்த சிக்கல்களை வாசிக்கும்போது கண்ணீர் மல்கியது.

உங்களுக்கு இழைக்கப்பட்ட துன்பங்களின் ஏதாவது ஒரு சில   பகுதிகளை எல்லா புலம்பெயர்ந்ந்த  குடும்பங்களிலும் ஆண்களோ , பெண்களோ  அல்லது ஏட்டிக்குப் போட்டியாக இருவருமோ இழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எனினும் ஒட்டுமொத்தமாக இவ்வளவு துயர்களோடு இணைந்து வாழ்வது சாத்தியமில்லை. ஓரளவு சிக்கல் வலுத்தபோது சாத்தியமானால்  நண்பர்களாக பிரிந்திருக்கலாம். அதை மேற்குலகில் வளரும் பிள்ளைகளும் ஏற்றிருப்பார்கள். 

இரு தரப்பிலும் தவறுகள் இருந்திருக்கும்.. ஆனால் உங்கள் பக்கத்தில் பிள்ளைகள் மீதான அக்கறையை மையமாகக்கொண்ட  குடும்பப் பொறுப்புணர்வும் குடும்ப நீதியும் இருக்கிறது.   இப்பதிவில் இன்னொரு பெண்ணின் குறுக்கீடு பற்றிக் குறிப்பிட்டதற்க்கு  அவசியம் இருக்கலாம் ஆனால் அவசியமற்ற ஏனையவர்கள் பற்றிய மேற்கோள்களை மதிப்பீடுகளைத் தவிர்திருக்கவேண்டும்.  

பொதுவாழ்வில் சிறப்புறச் செயல்படுகிறவர் நீங்கள். வன்னியில் தோழன் கவிஞன் தீப செல்வன் போன்றவர்கள் உங்கள் பணிகள் பற்றி சிறப்பாக சொன்னபோது உங்கள் நட்ப்புக்காகப் பெரிதுவந்திருக்கிறேன். எந்த நெருக்கடியிலும் எவ்வளவு கோபத்திலும்  உங்கள் தகுதிக்குத் தாழ்ந்த சொல் பொருள் நிலைக்கு இறங்கிப் போகவேண்டாம். 

என்றும் ஈழமக்கள் நல்வாழ்வுப் பணிசார்ந்தும் எழுத்துச் சார்ந்தும் நீங்கள் தேடிய என்னைப்போன்ற நண்பர்களின் அன்பும் மதிப்பும் உங்களுக்கு துணையிருக்கும். பிள்ளைகளது வெற்றியும் பொதுப்பணிகளும் உங்களைத் துயர்களில் இருந்து விடுவிக்கும். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
அன்பின் சாந்தி அக்கா. யாழ் இணையத்தில் நீங்கள் எழுதிய மணமுறிவு பற்றிய பதிவின் இணைப்பை ஜெயபாலன் அனுப்பினார். இத்தனை நடந்தும் துயரங்களை உடைக்கும் புன்னகையுடன் நம்பிக்கையை விதைக்கும் வார்த்தைகளுடன் எங்கள் சமூகத்தின் துயரத்தை துடைக்கும் ஓர்மத்துடன் இயங்கினீர்கள் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, உங்கள் வாழ்வு என்றைக்குமே ஒளிரும் என்பது புரிகிறது. முரண்பட்டாலும், எங்கள் மக்களின் துயரங்களைத் துடைக்கும் ஒரு காலத்தில் இணைந்து செயற்பட்டோம். இந்த தம்பியின் அன்பும் நம்பிக்கையும் என்றும் இருக்கும்.
12278726_10153463280788801_5409243981407    Theepachelvan Pratheepan                                              சாந்திக்கு  தீபச் செல்வனிடமிருந்து
  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் அக்கா,
உங்களுக்கு தேவைப்படாது ஆனாலும் என் ஆறுதல்கள்.
வரும் காலத்தில் உங்கள் கதையை, ஓர்மத்தை, துணிவை என் குடும்பட்தில் அத்தனை பிள்ளைகளுக்கும் சொல்லுவேன்.
பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.